Monday 7 March 2016

வடக்கு நோக்கிய சிவன்

தமிழகத்திலுள்ள சிவன் கோவில்கள் கிழக்கு
நோக்கி இருப்பது மரபு. மேற்கு நோக்கியும் சில
சிவன் கோவில்கள் உள்ளன. ஆனால் வடக்கு
நோக்கிய நிலையில் குளித்தலை கடம்பவனநாதர்
மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது. வடக்கு
குபேர திசையைக் குறிக்கும். சிவராத்திரியன்று
கடம்பவன நாதரை தரிசித்தால்
செல்வவளம் பெருகும்.சிவராத
்திரியன்று இரவில் நான்கு கால
அபிஷேகம் உண்டு.
ஆனால் காசியில் வடக்கு நோக்கி சிவன்
கோவில் அமைந்துள்ளது.அதற்கு அடுத்து
குளித்தலையில் மட்டும்தான் வடக்கு திசையில்
சிவன் கோவில் அமைந் துள்ளது. வேறு எங்கும்
இந்த சிறப்பு இல்லை. இக்கோவிலின் மூர்த்தி
கடம்பவனேஸ்வரர். அவர் சுயம்பு
லிங்கமாக வீற்றிருக்கிறார். நாயகி
பால குஜலாம்பாள். 108 சைவ
திருத்தலங்களில் இது இரண்டாம் இடத்தை
பெற்றுள்ளது.
தேவார பாடல் பெற்ற 277
தலங்களில் காவிரி தென்கரையில்
அமைந்துள்ள ஒரே கோயில் இதுவாகும
கடம்பவன நாதேஸ்வரர் கோவில்
திருகடம்பந்துறை குளித்தலை
மூலவர்:கடம்பவனேஸ்வரர்
உற்சவர்:சோமாஸ்கந்தர்
இறைவி: முற்றிலா முலையம்மை
தல விருட்சம்:கடம்ப மரம்
தீர்த்தம்:காவிரி, பிரம்மதீர்த்தம்
பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:கடம்பந்துறை,
குழித்தண்டலை ஊர்:குளித்தலை
மாவட்டம்:கரூர்
மாநிலம்:தமிழ்நாடு
பாடியவர்கள்:
திருநாவுக்கரசர், அருணகிரியார்
தேவாரப்பதிகம்
அரிய நான்மறை ஆறங்கமாய் ஐந்து
புரியன் தேவர்கள் ஏத்த நஞ்சுண்டவன் கரிய
கண்டத்தினான் கடம்பந் துறை உரியவாறு
நினை மடநெஞ்சமே.
திருநாவுக்கரசர

கடம்பவன நாதர் கோவில் காவிரிக் கரையில்
வடக்கு நோக்கி இருக்கிறது. சிவன் கோவில்கள்
எல்லாம் ஒன்று கிழக்கு நோக்கி அல்லது
மேற்கு நோக்கித் தான் அமைந்திருக்கும். கங்கைக்
கரையில் காசி விஸ்வநாதர் கோவில் வடக்கு
நோக்கி இருப்பது போல், காவிரிக் கரையில் வடக்கு
நோக்கி இருக்கும் கோவில் இது ஒன்று தான்.
வடக்கு நோக்கிய 5 நிலை ராஜகோபுரமும்,
கோபுரத்திற்கு வெளியே 16 கால்
மண்டபமும் கொண்டு
இவ்வாலயம் விளங்குகிறது.
5 நிலை கோபுர வாயில் வழியே உள்ளே
நுழைநால் ஒரு நீண்ட மண்டபம் நம்மை
வரவேற்கிறது.

இம்மண்டபத்தில் கொடிமரம்,
பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம்.
வெளிப் பிரகாரத்தின் வடமேற்குப்
பகுதியில் இறைவி முற்றிலா முலையம்மை சந்நிதி
கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அடுத்த
வாயிலைக் கடந்து சென்றால்
இறைவன் கருவறையை அடையலாம். இறைவன்
கடம்பவன நாதர் லிங்கத் திருவுருவுக்குப்
பின்னால் சப்த கன்னியர் உருவச் சிலைகள்
இருக்கின்றன. சப்தகன்னிகைகளின்
பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தியான தலம்
இதுவாதலின், மூலவர் பின்னால்
சப்தகன்னிகைகளின் உருவங்கள் கல்லில்
பிம்பமாகச் செதுக்கப்பட்டுள்ளன.
உள் பிராகாரத்தில் விநாயகர்,
சுப்பிரமணியர், நலக்கிரகங்கள்,
ஜேஷ்டாதேவி, நால்வர், 63 மூவருடைய மூல,
உற்சவத் திருமேனிகள், விஸ்வநாதர்,
கஜலட்சுமி ஆகிய சந்நிதிகள் உள்ளன.
இக்கோவிலில் இரண்டு சோமஸ்கந்த மூர்த்திகள்,
இரண்டு நடராஜர் மூர்த்திகள்
இருக்கின்றன. ஒரு நடராஜ மூர்த்தியின்
காலடியில் முயலகன் இருக்க,
மற்றொன்றில் இல்லை. தலவிருட்சம்
கடம்ப மரம். தீர்த்தம் காவிரி நதி.
கண்ணுவ முனிவரும், தேவர்களும் இத்தலத்து
இறைவனை பூசித்துப் பேறு பெற்றுள்ளனர்.
கண்ணுவ முனிவருக்கு இறைவன் கடம்ப
மரத்தில் காட்சி தந்த தலம். பிரம்மா,
மகாவிஷ்ணு, முருகர், ச்பதகன்னியர்கள்,
அகத்தியர் ஆகியோர் இத்தலத்து இறைவனை
வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.
தல வரலாறு
தூம்ரலோசனன் என்ற அசுரன் தரும்
துன்பங்களிலிருந்து தங்களைக்
காப்பாற்றும்படி தேவர்கள் அம்பிகையிடம்
முறையிட்டனர். அவர்களுக்காக அம்பாள்
துர்க்கை வடிவம் எடுத்து அசுரனை அழிக்கச்
சென்றாள். அசுரன் தான்
பெற்றிருந்த வரத்தினால் துர்க்கையுடன்
தொடர்ந்து சமபலத்துடன் மோத,
துர்க்கையின் பலம் குறைந்தது. எனவே
சப்தகன்னிகளை அனுப்பி அசுரனுடன் போர்
புரியச் செய்தாள். அவர்களை எதிர்க்க
முடியாத அசுரன் அவர்களிடமிருந்து தப்பி
வனத்திற்குள் ஓடினான். அங்கு
கார்த்தியாயன மகரிஷியின்
ஆசிரமத்திற்குள் அசுரம் ஒளிந்து
கொள்ள, அங்கு வந்த சப்த
கன்னியர்களும் ஆசிரமத்திற்குள்
சென்றனர். அங்கு முனிவர் தவத்தில்
இருந்ததைக் கண்ட அவர்கள், தூம்ரலோசனன்
தான் முனிவர் போல உருமாறி
அமர்ந்திருப்பதாக கருதி, முனிவரை அழித்து
விட்டனர். இதனால், அவர்களுக்கு
பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. அவர்கள்
தங்களது தோஷம் நீங்க அருளும்படி அம்பாளை
வேண்டினர். அம்பாளின் கூற்றுப்படி
இத்தலத்தில் சிவனை வேண்டிக்
கொண்டு சாப விமோசனம்
பெற சப்தகன்னிகள் இங்கு வந்து
தவமிருந்தனர். சிவன் அவர்களுக்கு கடம்ப
மரத்தில் காட்சி தந்து சாபவிமோசனம்
கொடுத்தார். அசுரனை அழித்தால்
தங்களுக்கு மீண்டும் தோஷம் ஏற்படும் அன்று
கருதிய சப்தகன்னியர், அசுரனை அழித்து
தங்களைக் காக்கும்படி இறைவனிடர்
முறையிட்டனர். சிவபெருமானும் அசுரனை
அழித்தார். இத்தலத்தில் சப்தகன்னியர்களு
க்கு இறைவன் பாதுகாப்பாக
இருப்பதாக ஐதீகம்.
இத்தலம் அருணகிரிநாதர் பாடல்
பெற்ற ஒரு திருப்புகழ் தலம். இங்கு
முருகப்பெருமான் ஆறு திருமுகமும்
பன்னிரு திருக்கரங்களும் கொண்டு
வள்ளி தெய்வானையுடன் கிழக்கு நோக்கி
நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
உற்சவர் ஒரு திருமுகத்துடன் மயில் மீதமர்ந்து
காட்சி தருகிறார். திருப்பகழில் ஒரு பாடல்
உள்ளது.
திருவிழா
மாசியில் 13 நாட்கள் பிரம்மோற்ஸவம்,
தைப்பூசம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி,
பங்குனி உத்திரம்.
தல சிறப்பு
இங்குள்ள சிவன் வடக்கு நோக்கிய
சுயம்புலிங்கமாக இருப்பது சிறப்பாகும்.
கருவறையில் லிங்கத்திற்கு பின்புறத்தில்
சப்தகன்னியர்கள் இருப்பது தனி சிறப்பு.
இங்குள்ள விநாயகர் அனுக்ஞை விநாயகர்.
இங்குள்ள விமானம் திரிதளம்.
ராஜகோபுரம் 5 நிலைகளைக்
கொண்டது. சிவன் வடக்கு நோக்கி
இருப்பதால், கோஷ்டத்தின் பின்புறத்தில்
தெட்சிணாமூர்த்தி தெற்கு
பார்த்தபடி இருக்கிறார். வழக்கமாக
தெற்கு நோக்கி இருக்கும் சண்டிகேஸ்வரர்
மேற்கு முகமாகவும், வடக்கு பார்த்திருக்கும்
பிரம்மா கிழக்கு முகமாகவும்
இருக்கின்றனர். பிரகாரத்தில் உள்ள
நவக்கிரக சன்னதியின் மேலே முருகன் வள்ளி,
தெய்வானையுடன் இருக்கிறார்.
செவ்வாய் தோஷத்தால்
பாதிக்கப்பட்டவர்கள் செவ்வாய்க்கு
அதிபதியான முருகனையும், நவக்கிரகத்தில்
செவ்வாயையும் வழிபடுகின்றனர். அருகே
சனீஸ்வரருக்கு தனிச்சன்னதி இருக்கிறது.
பிரார்த்தனை
பெண்கள் இங்கு
வேண்டிக்கொண்டால்,
அவர்களுக்கு சிவன் துணையாக இருந்து
காப்பார் என்பது நம்பிக்கை.
பொதுவாக பெண்கள்
தங்களது அனைத்துக் குறைகளும் தீர இங்கு
வேண்டிக்கொள்கிறார்கள்.
நேர்த்திக்கடன்
சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாணம்
செய்து வைத்து நேர்த்திக்கடன்கள்
நிறைவேற்றுகிறார்கள்.
தலபெருமை
கருவறையில் சப்தகன்னிகள்
கருவறையில் லிங்கத்திற்கு பின்புறத்தில்
சப்தகன்னியர்கள் இருக்கின்றனர். சிவன்
சாபவிமோசனம் கொடுத்தபோது,
சப்தகன்னியர்கள் மீண்டும் தூம்ரலோசனனை
அழித்தால் தோஷம் பிடிக்குமே! என அஞ்சி,
அசுரனை எதிர்க்க முன்வரவில்லை. எனவே,
அசுரனை அழித்து தங்களை காக்கும்படி
சிவனிடம் வேண்டிக்கொண்டனர்.
சிவன் அவர்களுக்கு பாதுகாப்பாக
இருந்து, அசுரனையும் அழித்தார். இவர்
இத்தலத்தில் சப்தகன்னிகளுக்கு
பாதுகாவலராக இருப்பதாக ஐதீகம்.
இங்கு சுவாமிக்கு நேர்பின்புறத்தில் இருக்கும்
சாமுண்டியை, துர்க்கையாக
வழிபடுகின்றனர். எனவே, துர்க்கைக்கு சன்னதி
இல்லை. பெண்கள் துர்க்கைக்குரிய
வழிபாட்டை சிவன் சன்னதி முன்பாகவே
செய்வது விசேஷம்.
ராகுகால வேளையில் இவளுக்கும்,
சிவனுக்கும் விசேஷ பூஜைகளும் நடக்கிறது.
காலையில் வணங்கவேண்டிய சிவன்:
இக்கோயிலில் சிவன் சுயம்புவாக, வாமதேவ
முகமாக (வடக்கு திசையை நோக்கி) இருக்கிறார்.
கோமுகம் வலது புறமாக திரும்பி இருக்கிறது.
கோயிலுக்கு எதிரே அகண்டகாவிரி ஓடுகிறது.
சப்தகன்னிகளுக்கு சிவன், தைப்பூசத்தன்று
காட்சி கொடுத்ததாக ஐதீகம்.
எனவே, அந்நாளில் இவர் காவிரியில்,
அம்பாளுடன் எழுந்தருள்கிறார். இவருடன்
சுற்றுப்பகுதியில் உள்ள 7 சிவன்களும்
எழுந்தருள்கின்றனர். அன்று ஒரே நாளில் 8
சிவன்களையும் தரிசிக்கலாம். இத்தலத்தில்
ஐப்பசி முதல்கட்ட துலாஸ்நானம்
விசேஷமாக கொண்டாடப்படுகிற
து. ""காலைக்கடம்பர், மதியம்
சொக்கர் (ரத்தினகிரி), மாலை
ஈங்கோய்நாதர் (ஈங்கோய்மலை)'' என்ற
வரிசையில் வழிபடுவது குறைவிலாத பலன்கள்
கிடைக்கும் என்கின்றனர். அதன்படி, இவரை
காலை வேளையில் வழிபட்டால் காசியில்
வழிபட்ட பலன்கள் கிடைக்கும் என்பது
நம்பிக்கை. இத்தலத்திற்கு
"தெட்சிணகாசி' என்றொரு
பெயரும் உண்டு.
அகத்தியர், கண்ணுவ முனிவர் ஆகியோர்
சுவாமியை வழிபட்டுள்ளனர். அம்பாள்
முற்றிலாமுலையம்மை தனிச்சன்னதியில்
கிழக்கு பார்த்தபடி இருக்கிறாள்.
இச்சன்னதிக்கு முன்புறம் "பரமநாதர்'
காவல் தெய்வமாக இருக்கிறார்.
இவர் தனது வலது கையை நெற்றி மேல்
வைத்து, மரியாதை செய்தபடி
வித்தியாசமான கோலத்தில் இருக்கிறார்.
இவருக்கு தேன் அபிஷேகம் செய்து,
பாசிப்பருப்பு பாயசம் படைத்து
வழிபடுகிறார்கள். இவ்வாறு
செய்வதால் அவர்கள் குடும்பத்திற்கு
சுவாமி பாதுகாப்பாக இருப்பார் என
நம்புகிறார்கள

முருகன் சிறப்பு
சூரபத்மனை வதம் செய்த தோஷம் நீங்க
முருகன் இங்கு சுவாமியை வழிபட்டுள்ளார்.
இவர் பிரகாரத்தில் ஆறுமுகங்களுடன்
சுப்பிரமணியராக வள்ளி,
தெய்வானையுடன் தனிச்சன்னதியில்
இருக்கிறார். "ஆறுபடைகளிலும் இருக்கும்
முருகனைப் போன்ற அமைப்புடையவர்' என்ற
பொருளில் இவரைக்குறித்து
அருணகிரியார் பதிகம் பாடியுள்ளார்.
இவரது சன்னதிக்கு நேர் எதிரே, சிவன் கருவறை
கோஷ்டத்தில் லிங்கோத்பவர் இருக்கிறார்.
இவருக்கு இருபுறமும் மகாவிஷ்ணு,
பிரம்மா ஆகியோர் வணங்கியபடி
இருக்கின்றனர். இக்கோயிலில் நடராஜர்
சன்னதியில் இரண்டு நடராஜர்கள்
இருக்கின்றனர். இவர்களில் ஒருவரது
பாதத்தின் கீழ் முயலகன் இல்லை. இவரது
தலையில் பிறைச்சந்திரன் இருக்கிறார்.
சிறப்பம்சம்
அதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள சிவன்
வடக்கு நோக்கிய சுயம்புலிங்கமாக இருப்பது
சிறப்பாகும். கருவறையில் லிங்கத்திற்கு
பின்புறத்தில் சப்தகன்னியர்கள் இருப்பது
தனி சிறப்பு.
திறந்திருக்கும் நேரம்
காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 5
மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி
அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயில்,
குளித்தலை - 639 104. கரூர் மாவட்டம். போன்:
0091- 4323 - 225 228
கடம்பர்கோயில் என இக்காலம் வழங்கப்
பெறும் இத்தலம், கரூர் மாவட்டத்தில்
குளித்தலைத் தொடர்வண்டி
நிலையத்திற்கு வடமேற்கே 2. கி. மீ.
தொலைவில் உள்ளது.
கண்ணுவமுனிவர்க்கும் தேவர்களுக்கும்
இறைவர் கடம்பவனத்தில் தோன்றி,
காட்சியருளிய இடம் இதுவாம். (பதிகம்
ஒன்று.)

No comments:

Post a Comment