Friday 12 August 2016

ஆவணி அவிட்டம்

வேண்டிய வரங்களை ஒரே நாளில் அருளும்*
ஆவணி மஹா அவிட்டம்(17.8.16 புதன்)
சிம்மத்தில் ராகுவும்,கும்பத்தில் கேதுவும்
இருக்க,(ராகுவுக்கு அருகில் குரு கன்னியில்
இருக்க)அப்போது ராகுவுடன் சூரியனும்,கேதுவ
ுடன் சந்திரனும் வரும் பௌர்ணமிக்கு ஆவணி
மஹா அவிட்டம் என்று பெயர்;120
ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் அரிய அரிதிலும்
அரிதான ஆவணி மஹா அவிட்டம் இது;
சில பத்தாண்டுகளுக்கு முன்பு
வரையிலும்,முன்னோர்களுக்கு தர்ப்பணம் தரும்
போது பித்ருக்கள் உலகத்தில் இருந்து
நேரடியாகவே வந்து தமது பேரன் பேத்திகளிடம்
இருந்து பித்ரு தர்ப்பணத்தை வாங்கிச்
சென்றது நமது தமிழ்நாட்டிலும்
,ராமேஸ்வரத்திலும்,விஜயாபதி
விஸ்வாமித்ர மஹாலிங்கசுவாமி
திருக்கோவிலிலும்,காசியில் கங்கைக்கரையிலும்
சர்வசாதாரணமாக நிகழ்ந்த ஒரு
நிகழ்வாக இருந்து வந்தது;
ராமாயண காலத்தில்(இன்று முதல்
சரியாக 17,50,000 ஆண்டுகளுக்கு முன்பு)
வனவாசத்தில் இருந்த ஸ்ரீராமபிரான்
அட்டவீரட்டத் திருத்தலங்களில் ஒன்றான
கொறுக்கையில் தனது தந்தையான
தசரத மஹாராஜாவுக்கு பித்ரு
தர்ப்பணம் செய்தார்;அப்போது
விண்ணுலகில் இருந்து நேரடியாகவே வந்து
தசரதமஹாராஜா தனது மகன்
ஸ்ரீராமபிரானின் தர்ப்பணத்தை
ஏற்றார்;தனது மாமனாரின் வருகையைப்
பார்க்கக் கூட கூச்சப்பட்ட சீதாபிராட்டி
குடிசைக்குள் சென்று மறைந்து
கொண்டாளாம்;இப்படிச்
சொல்கின்றது கொறுக்கை
வீரட்டானபுராணம்!
அதே போல,இந்த அருள்மிகு
குழல்வாய்மொழி அம்பாள் சமேத
விக்கிரபாண்டீஸ்வரர் ஆலயத்தின்
வாசலில் அமைந்த நதிக்கரையோரத்திலும் கிருத
யுகத்தில் வந்த ஒரு துர்முகி வருடத்தில் வந்த
ஆவணி மஹாஅவிட்டம் நன்னாளில்
தர்ப்பணம் கொடுத்திருக்கின்றார்
ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி!இப்படிக்
கொடுத்ததன் மூலமாக தசரத
மஹாராஜாவுடன் நிறைவடைந்த 71
தலைமுறை முன்னோர்கள் கதி மோட்சம்
அடைந்தார்கள்;இதே போல இந்த துர்முகி
வருடத்தில் வரும் ஆவணி அவிட்ட
நன்னாளில் இங்கே வரும்
ஒவ்வொருவருடைய முன்னோர்களுக்கும்
கதி மோட்சம் கிட்டும்;முன்னோர்களுடைய
சாபங்களும்,பித்ரு தோஷங்களும் விலகும்
என்பது சத்தியம்;
கடந்த 25 ஆண்டுகளில் ராகுவின்
காரகத்துவமான
இணையம்,கணினி,செயற்கைக்
கோள்,கைபேசிகளின் விஸ்வரூப தொழில்
நுட்ப வளர்ச்சியால் ஒழுக்கமாக
வாழ்ந்து வருபவர்களின் மனதில் கூட
மிதமிஞ்சிய கிளுகிளுப்பு அதிகரித்துவிட்டதால்
சுயக் கட்டுப்பாடு குறைந்துவிட்டது
;இதனால்,பலர் முன்னோர்களுக்குத்
தர்ப்பணம் செய்வதைக் கூட ஒரு
சுமையாக நினைக்கத் துவங்கிவிட்டனர்;40
வருடமாக இருந்து வந்த நாத்திகப்பிரச்ச
ாரமும் இதற்குக் காரணமாக
இருந்துள்ளது;
இந்நிலையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
முறையாகச் செய்யாமல்
இருப்பதுதான் இன்று நாம் பல்வேறு
விதங்களில் கஷ்டப்படுவதற்குக் காரணம்
என்பதை நம்மில் பலர் உணரவே இல்லை;இந்த
சிரமம் நீங்கிட இந்த ஆவணி மஹா
அவிட்டம் வரும் நாளன்று விருதுநகர்
மாவட்டம்,ராஜபாளையம் தாலுக்கா
சோழாபுரம் அருள்மிகு
குழல்வாய்மொழி அம்பாள் சமேத
விக்கிரபாண்டீஸ்வரர் திருக்கோவிலுக்கு வருகை
தரவேண்டும்;
17.8.16 புதன் கிழமை அன்று மாலை 4 மணி
முதல் இரவு 8 மணி வரை முன்னோர்களுக்கு
தர்ப்பணம் செய்வதற்கு ஈடான
பவுர்ணமி சிவாலய பூஜை ஒன்று
நடைபெற இருக்கின்றது;இதில் கலந்து
கொள்வதோடு,சிவாலயத்தில் ஈசனது
அபிஷேகத்திற்குரிய பொருட்களை இந்த
நன்னாளில் சமர்ப்பிப்பதன் மூலமாக
நமது அனைத்துக் குறைகளும் நீங்கிவிடும்;
ஒவ்வொருவரும் ஐந்து கிலோ
பச்சரிசி,ஐந்து கிலோ புழுங்கலரிசி,தாழம்பூ
குங்குமம்,விபூதி,நாகலிங்கப் பூக்கள்,மண்
விளக்குகள் ஐந்து,அபிசேகத்திற்குத் தேவைப்படும்
எண்ணெய் ஒரு லிட்டர்;தேன் ஒரு
லிட்டர்,பஞ்சுத்திரிகள் ஐந்து,தீப்பெட்ட
ி,எலுமிச்சை பழங்கள் குறைந்தது ஐந்து;
மிகுந்த சிரமத்தில் இருப்பவர்கள்(இவைகளில்
எதுவும் வாங்கிக்கொண்டு வர
முடியவில்லையா பரவாயில்லை; சும்மா
வந்தாலும் போதும்) மாலை 4 மணிக்கு
வந்தால் போதும்;
சரியான ஆன்மீக குருவைத்
தேடுபவர்கள்;ஆன்மீகத்தில் அடுத்த நிலைக்குச்
செல்ல முயற்சி செய்பவர்களுக்கு
சரியான வழிகாட்டுதல் கிட்டும்;
வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிட்டும்;
பல ஆண்டுகளாக மழலைச் செல்வம்
கிடைக்காதா என்ற ஏக்கம் நிறைவேறும்;
பூர்வீகச் சொத்துப் பிரச்சினை
இருப்பவர்களுக்கு அது முடிவுக்கு வரும்;
தமது மகன் அல்லது மகளுக்கு சரியான
வாழ்க்கைத் துணை அமையாத என்று
ஏங்குபவர்களுக்கு அந்தக் குறை நீங்கி
சிறப்பான திருமண வாழ்க்கை அமையும்;
தொழிலில் பல ஆண்டுகளாக
இருந்தும் போதுமான வளர்ச்சி இல்லாமல்
தவிப்பவர்களுக்கு இந்த நாள் முதல்
அபாரமான வளர்ச்சியைப் பெற
ஆரம்பிக்கலாம்;
நீண்ட காலமாக இருந்து வரும் கணவன்
மனைவி பிரிவினைகள் முடிவுக்கு வந்துவிடும்;
நீண்டகால கடன் தீரும் வழிமுறைகள் தேடி
வரும்;
சொந்த வீடு அமையாமல்
தவிப்பர்களுக்கு சொந்த வீடு
அமையும்;
பிரிந்திருக்கும் சகோதர சகோதரிகள்,பெற்ற
ோர்கள்+ பிள்ளைகள் மனக்கசப்புகளை மறந்து
மனப்பூர்வமாக ஒன்றிணைவார்கள்;
நமது நியாயமான கோரிக்கைகளை
குழல்வாய்மொழி
அம்பாளிடமும்,விக்கிரபாண்டீஸ்வரரிடமும்
ஒப்படைத்து வரமாக வாங்கித் தருபவர்
யார் தெரியுமா
இங்கே 1000 ஆண்டுகளுக்கு முன்பு
ஜீவசமாதியாகி இருக்கும்
மஹாதேவசித்தகுரு ஆவார்;ஆமாம்!
வழித்தடம்:
1.தமிழ்நாட்டிற்கு வடக்குப் பகுதியில் இருந்து
வருபவர்கள்:-மதுரை மாட்டுத்தாவணி டூ
ராஜபாளையம் புதிய பேருந்து
நிலையம்;அங்கிருந்து சங்கரன் கோவில்
செல்லும் பேருந்தில் சோழாபுரம் என்ற
சிறு கிராமத்தின் பஸ் ஸ்டாப்பில் இறங்கி
வருக!
2.தமிழ்நாட்டிற்கு தெற்குப் பகுதியில்
இருந்து வருபவர்கள்;திருநெல்வேலி டூ
சங்கரன் கோவில் வந்து அங்கிருந்து
ராஜபாளையம் செல்லும் பேருந்தில்
பயணித்து முறம்பு என்ற ஸ்டாப்பில்
இறங்கி ஆட்டோ பிடித்து வடக்கு நோக்கி வருக!
முறம்பில் இருந்து ஒரு கி.மீ
3.விருதுநகர் மாவட்டத்தில் வசிப்பவர்கள்
மற்றும் அருகில் இருக்கும் ஊர்களில்
வசிப்பவர்கள்;ராஜபாளையம் பழைய பேருந்து
நிலையத்தில் இருந்து முறம்பு வழியாக
செல்லும் டவுண் பஸ்களில் பயணித்து
சோழாபுரம் ஸ்டாப்பில் இறங்கி வருக!
வாகனங்களில் பயணிப்பவர்கள்
ராஜபாளையம் வந்து(சங்கரன்
கோவில்,திருநெல்வேலி சாலையில்
எட்டாவது கி.மீ.தூரத்தில் S வடிவில் ஒரு
பாலம் வரும்;அந்த பாலத்தைக் கடந்ததும்
வந்தடையலாம்)
*கடந்த மாத பவுர்ணமி நாட்களில்
ஏராளமான பக்தர்கள் முதன் முறையாக
இந்த ஆலயத்திற்கு தமிழ்நாடு முழுவதும்
இருந்து வருகை தந்தார்கள்;
அவர்கள் ஒவ்வொருவரும் சித்தர்
மகாதேவசித்தகுருவின் ஆசியையும்,அருள்மிகு
குழல்வாய் மொழி அம்பாள்
சமேத விக்கிரப்பாண்டீஸ்வரர் அவர்களின்
அருளையும் பெற்று வளமொடு
வாழ்ந்து வருகின்றார்கள்;
நாமும் வளம் பெற வருகை தந்து
அருளாசிகள் பெறுவோம்;
(நாள் செய்வதை நல்லவன் கூட
செய்யமாட்டான் என்பது ஜோதிடப்
பழமொழி)

Thursday 4 August 2016

Shri chakram ஸ்ரீசக்ரம் மகிமை

(நான் இருக்கும் இடத்தில் லட்சுமி
கடாட்சம் உண்டு)
ஓம் நமோ பகவதி சர்வ மங்களதாயினி
சர்வயந்த்ர ஸ்வரூபிணி
சர்வமந்திர ஸ்வரூபிணி
சர்வலோக ஜனனீ
சர்வாபீஷ்ட ப்ரதாயினி
மஹா த்ரிபுரசுந்தரி மஹாதேவி
சர்வாபீஷ்ட சாதய சாதய
ஆபதோ நாசய நாசய
சம்பதோப்ராபய ப்ராபய
சஹகுடும்பம் வர்தய வர்தய
அஷ்ட ஐஸ்வர்ய சித்திம் குருகுரு
பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ!
பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ!!
பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ!!!
சகல நன்மைகளைத் தரும் ஸ்ரீ சக்கரம்!
யந்திர ராஜாய வித்மஹே
மகா யந்திராய தீமஹி
தன்னோ யந்திர ப்ரசோதயாத் – என்றும்
மந்திர ராஜாய வித்மஹே
மகா மந்திராய தீமஹி
தன்னோ மந்திர ப்ரசோதயாத் – என்றும்
யந்திரங்களில் எல்லா யந்திரங்களுக்கும்
(கணபதி யந்திரம், முருகன் யந்திரம்
முதலான) தலையாயது ஸ்ரீ சக்ர யந்திரம்,
எனவே யந்திர ராஜம் எனப்பெயர்.
அதுபோல நமது சமய வழிபாடுகளில்
அனைத்து மந்திரங்களுக்கும் ஸ்ரீ வித்யா
மந்திரமே தலையாயது என்பதால் மந்திர
ராஜம் எனும் இவ்வழிபாடு சிறப்பு
பெறுகிறது.
சிதம்பரம் பொன்னம்பலத்தில்
வீற்றிருக்கும் நடராஜர 14 தடவை தனது
டமருகத்தை அடித்து ஒலி எழுப்பினார் .
முதலில் ஒன்பது தடவையும் பின்னர் ஐந்து
தடவையும் மங்கள ஒலி எழுப்பினார்.
ஒன்பது என்பது தேவிக்குரிய நவாக்ஷாரி
ஐந்து என்பது சிவனுக்குரிய பஞ்சாட்சரம்
மேலும் தனது இடப்பாகத்தில் வீற்றிருக்கும்
அன்னைக்குரிய இடது காலால் நடராஜர்
அருள் பாலிக்கிறார்.
சக்திக்குரிய நவாக்ஷரி மந்திரத்தை
முன்னிலைப்படுத்திய நடராஜர், அருள்
பாலிப்பது சக்தியின் மூலமே என்பதைப் போல
இடது காலை தூக்கி ஆனந்த நடனமாடி
அருள்பாலிக்கிறார்.
ஸ்ரீ சக்கர மஹாமேரு என்பது சிவசக்தியின்
ஒன்பது கட்டு அரண்மனை. ஸ்ரீ லலிதா
மஹா திரிபுரசுந்தரியின்
மஹாசாம்ராஜ்யம்.
இந்த சாம்ராஜ்யத்தில் கணபதி, முருகன்
முதல் காளி, பைரவர் வரை அனைத்து
தெய்வங்களுக்கும் இடம் உண்டு.
ஸ்ரீ சக்கரத்தை வழிபடும் போது அனைத்து
தெய்வங்களையும் ஒரே இடத்தில்
வழிபாடு செய்யமுடியும். ஸ்ரீ
சக்கரத்தில் வீற்றிருக்கும் தேவி ஸ்ரீ லலிதா
மஹா திரிபுரசுந்தரியின் பெருமை பேசும்
நுல்கள் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் ,
சௌந்தர்யலஹரி, தேவி மகாத்மியம்,
நவரத்தினமாலை, அபிராமி அந்தாதி
போன்றவை.
சௌந்தர்யலஹரியின் இரண்டாவது
பாடலில் ஆதிசங்கரர் பேசும்போது ஸ்ரீ
சக்தியின் திருப்பாதங்களில் இருந்து
விழுகின்ற மண் துகள்களை வைத்து பிரம்மா
பூலோஹம், புவர்லோஹம், ஸுவர்லோஹம்,
மஹர்லோஹம், ஜனலோஹம், தபலோஹம்,
ஸத்யலோஹம் எனும் மேல்லோகங்கள் ஏழையும்,
அதல, விதல, ஸுதல, ரஸாதல, தலாதல,
மகாதல, பாதாளம் எனும் கீழ்லோகங்கள்
ஏழையும் ஸ்ருஷ்டித்தார் என்கிறார்.
ஸ்ரீ மகாதேவியின் பாததூளியால்
ஆதிசேஷன் உருவெடுத்து பிரம்மா
படைத்த பதினான்கு உலகையும் தன்
சிரசினால் தாங்கிகொண்டு
இருக்கிறார்.
ஸ்ரீ ருத்திரனோ தேவியின் பாததூளியை
கையிலெடுத்து “த்ரியம்பக”
மந்திரத்தினால் பஸ்ம
பொடியாக்கி தன் சிரசு முதல்
பாதம் வரை பூசிக்கொண்டார்
பிரம்மனின் சக்தியான சரஸ்வதியும்,
விஷ்ணுவின் சக்தியான லக்ஷ்மியும் ஸ்ரீ
லலிதா மஹா திரிபுரசுந்தரியின் இரு
புறமும் நின்று சாமரம் வீசி பணிவிடை
செய்கிறார்கள்.
தேவி சிவனை அன்பால் நோக்கியபோது வல்லபை
ஸித்தி லட்சுமியுடன் ஸ்ரீகணபதி
தோன்றினார். ஸ்ரீ கணபதியும், ஸ்ரீ
முருகனும் ஸ்ரீ சக்கரத்தில் அன்னையிடம்
பால் அருந்தும் குழந்தைகள் .
ஸ்ரீ சக்ரம் அமைந்திருக்கும் அறையின்
வலப்புறம் மகாகாளியும், இடதுபுறம்
மகா பைரவரும் துவார சக்திகளாக
அன்னைக்கு காவல் புரிகின்றனர்.
நவகிரகங்கள், 27 நட்சத்திரங்கள், 12
இராசிகளும், அன்னையை வலம்
வருகின்றனர்.
இவ்வாறாக அனைத்து
தெய்வங்களுக்கும் தலைமை
பொறுப்பில் வீற்றிருக்கும் மஹா
சாம்ராஜ்ய தாயினி அன்னை ஸ்ரீ
லலிதா மஹா திரிபுரசுந்தரி
அருள்பாலிக்கும் அற்புதமானது ஸ்ரீ சக்ர
மஹாமேரு.
ஸ்ரீ மஹாமேருவை தரிசனம் செய்தால்
அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட
பலன் நமக்கு கிடைக்கும்.
குலதெய்வம் தெரியாதவர்களுக்கு
ஸ்ரீ சக்ர வழிபாடு ஒரு வரப்பிரசாதம்.
ஸ்ரீ சக்ரத்தை வழிபட்டால் குலதெய்வம்
நிறைவடையும், ப்ரசன்னமாகும்.
ஸ்ரீ சக்கரத்திற்கு மேலான யந்திரமோ, ஸ்ரீ
வித்யைக்கு மேலான மந்திரமோ, ஸ்ரீ
லலிதாம்பிகைக்கு மேலான தேவதைகளோ இல்லை
என்பது தனி சிறப்பு.

Wednesday 3 August 2016

செவ்வாய் தோசம் ஓர் அலசல்

செவ்வாய் தோசம் ஒரு
விளக்கம்:
செவ்வாய் கிரகம்
ஒன்பது கிரகங்களில் ஓன்று
.இந்த கிரகம் சூரியனை
போன்று அதிக
வெப்பமான கிரகம் .எனவே
இக்கிரகம் ஜோதிட ரீதியாக
ஒருவரின் ஜாதகத்தில் என்ன
பலனைச் செய்யும்?
மேஷம்,விருசிகம்
ராசியில் செவ்வாய்
ஆட்சி,உச்சம் அமைப்பு
உள்ள யாராயினும்,
செந்நிறம்
கொண்டவர்களாக
இருப்பார்கள்.உஷ்ணமான
உடல் நிலை
உள்ளவர்கள்,முன் கோபி.
ஒரு சாதகத்தில் செவ்வாய்
1,2,4,7,8,12 –இல் இருந்தால்
தோசம் என்று சொல்ல
படுகிறது. இதில்
லக்னம்,ராசி,சுக்கிரன்
இம்மூன்று
கிரகங்களுக்கும் பார்க்கப்பட
வேண்டும் என்று சாத்திரம்
படைத்த நமது
முன்னோர்களின்
பிரமானம்,அல்லது கருத்து.
செவ்வாய்
நெருப்பின் தன்மை
கொண்டது .எனவே
செவ்வாய் 2-ம் இடத்தில்
இருந்தால், ஏழாம்
பார்வையாக 8-ஆம் இடத்தை
பார்க்கப்படும் .8-ஆம் இடம்
என்பது மனிதருடைய
உந்திகமல ஸ்தனமாகும்
.இந்த உந்திக்கமலத்தில்
இருந்துதான் ஒருவருக்கு
ஆரோக்கியமும்
,ஆரோக்கிய குறைவும்
எற்படுகிறது.
· செவ்வாய் 8-ல்
இருந்தாலும், 2-ல் இருந்து
8-ஆம் இடத்தைப்
பார்த்தாலும்,உடம்பில் அதிக
உஷ்ணம் உண்டாகி அதிக
உடல் உறவில்
ஈடுபடவைக்கும்.அதனால்
தானும் கெட்டு
கணவனுக்கோ
,மனைவிக்கோ இந்த உஷ்ணம்
(உடலுறவு மூலம்) பரவி
ஆரோக்கியத்திற்கும்
,ஆயுளுக்கும் கெடுதல்
உண்டாக்கும்.
· அடுத்து 7-ஆம் இடம் மர்ம
ஸ்தானம் என்பது, இந்த
ஸ்தானத்தை பார்த்தாலும்,
அதில் இருந்தாலும்
உஷ்ணதோசம் ஏற்பட
வாய்ப்புள்ளது, என்று
கருதி 7-ஆம் இட
செவ்வாயும் தோசம்
செய்யும் என்றார்கள்.
· 4-ஆம் இடச் செவ்வாய் 4-ஆம்
பார்வையாக 7-ஆம்
இடத்தைப் பார்ப்பதால்
தோஷம் என்றார்கள் .4-ஆம்
இடம் என்பது உடல்
சுகஸ்தானம் ,ஆகவே
உஷ்ணம் ஏற்பட வாய்புள்ளது
.அதனால் செவ்வாய் 4-ஆம்
இடத்தில் இருப்பதும் குற்றம்
என்றாகிறது.
· செவ்வாய் 12-ஆம் இடத்தில்
இருந்தாலும் தோசம் என்று
கூறியது. ஏனெனில், 12-
ஆம் இடம் என்பது
போகஸ்தானம் என்பதால்
இதுவும் மர்ம ஸ்தானத்
தன்மை உடையது .12- ல்
இருக்கும் செவ்வாய் 7ஆம்
இடத்தை பார்க்கும்
என்பதால் தோசம் என்று
கூறபடுகிறது .
மேலே
சொல்லிய 1, 2, 4, 7, 8, 12 -இல்
செவ்வாய் தோசம் என்று
கூறியதின்
உட்கருத்து.மேலே உள்ள
இடங்களில் இருக்கும்
செவ்வாய் உடம்பில் அதிக
உஷ்ணத்தை உண்டாக்கும்
தன்மை உடையது .அதனால்
இத்தோசம் இருவருக்கும்
இருந்தால் நல்லது என்றனர்.
இருவருக்கும்
இத்தோஷம் இருப்பின்
இருவருடைய உடல்
அமைப்பின் தன்மையில் சம
அளவான உஷ்ணமோ
அல்லது ஆணுக்குச் சற்று
அதிக உஷ்ணம் இருப்பது,
பெண்ணுக்கு அதை விட
சற்று குறைவான உஷ்ணம்
இருப்பது ,ஒருவரை ஒருவர்
கெடுக்க இயலாது என்ற
கருத்தில் செவ்வாய்
தோஷத்திற்கு செவ்வாய்
வேண்டும் என்ற கருத்தைக்
சொன்னார்கள் .
இந்த செவ்வாய்
தோசம் பெரும்பாலும்
நிவர்த்தி அடைவதற்கு
நிறைய
வாய்புள்ளது.செவ்வாய்
தோசம் இருந்து கீழேயுள்ள
காரணங்களால் நிவர்த்தி
அடைந்திருந்தால்
,செவ்வாய் தோசம்
நிவர்த்தியாகிறது.
இதை விடுத்து
சிலர், மேல்
எழுந்தவாரியாகப்
பார்த்தவுடன் 1,2,4,7,8,12 -இல்
செவ்வாய் இருந்தாலே
தோசம் தான் என்று
சொல்லுவதில் தவறுகள்
ஏற்பட வாய்ப்புள்ளது
.பொதுவாக அகரம் என்று
சொல்லபடுகின்ற ஒரு
மனிதனின் உடல் அமைப்பு
(ஆண்,பெண்)பார்த்தல்
சாமுத்திரிக லக்ஷணம்
மரபுப்படி விகாரம்
அடையாமல் இருந்தாலே
செவ்வாய் தோஷம் இல்லை
எனலாம் .விகாரம் பெற்று
இருந்தால் அதை செவ்வாய்
தோச ஆய்வுக்கு
உட்படுத்தலாம்
.அதனால்தான் இன்றளவும்
மாப்பிள்ளை அல்லது பெண்
பார்க்கும் படலம்
நடைபெறுகிறது.
செவ்வாய் தோச நிவர்த்தி
:
1. செவ்வாய் தனது சொந்த
வீடான மேஷம் ,விருச்சிகம்
ராசியில் ஆட்சிபெற்று
அல்லது மகரத்தில் உச்சம்
பெற்று இருந்தால் தோசம்
இல்லை.
2. சிம்மம் (அ) கடக லக்னத்தில்
ஜனனம்
ஆனவர்களுக்கு,செவ்வாய்
எங்கு இருந்தாலும் தோசம்
கிடையாது.
3. தனுசு,மீன ராசியில்
இருந்தாலும் தோசம்
கிடையாது.
4. குரு,சனி இவர்களுடன்
இருந்தோ(அ) பார்க்கப்
பட்டாலோ தோசம்
கிடையாது.
5. சூரியன்,சந்திரன்
பார்த்தால் தோசம் இல்லை.
6. ஆட்சி,உச்ச நிலையில்
இருந்தால் தோஷமில்லை
என்பதன் அடிப்படைக்
காரணம் என்ன என்பதை
நோக்குமிடத்து, கிரகங்கள்
பாபியாயினும்,
தன்னுடைய
சுபஷேத்திரத்தில்
இருக்கும்போது
பாபதன்மை குறைந்து,
சுபதன்மை
கூடிவிடுவதால் நற்செயல்
புரியும் வாய்ப்புகள்
அதிகம்.எனவே இது தோசம்
இல்லை என்று கூறினர்.
7. குரு பவான் வீடாகிய
தனுசு ,மீனம் இவற்றில்
செவ்வாய் இருந்தால்
தோசமில்லை என்பதின்
காரணம், குருவின் வீடு
நல்ல குளிர்ச்சி
பொருந்திய இடமாகும்
.செவ்வாய் உஷ்ணதன்மை
உடைய கிரகம் .அது
குளிர்ச்சியான இடத்தில்
இருக்கும்போது
உஷ்ணதன்மை மாறிவிடும்
என்பதால் தோச நிவர்த்தி
என்று கூறினர்.
8. அதுபோல குரு
பார்த்தாலும் தோசம்
இல்லை என்ற
கருத்தும்,குளிர்ச்சியான
கிரகம் என்றதால் ஏற்பட்டது
.ரிஷபம்,கன்னி என்ற
இரண்டு ராசிகளும் நீர்
தன்மை உடையது .இந்த
வீடுகளில் செவ்வாய்
இருந்தாலும் தோசம்
நிவர்த்தி ஆகிறது .
9. மகரமும் நீர் ராசி
என்பதால்,செவ்வாய் தோசம்
நிவர்த்தி ஆகிறது.
10. மேஷம் ,விருச்சிகம்
ராசியில் பிறந்தவர்களுக்கு
தோசம் இல்லை, காரணம்
லக்னாதிபதியாக வரும்
கிரகம் சாதகருக்கு
நன்மைதான் செய்வார்
என்பதால் தோசம் இல்லை.
11. மேலும் சூரியன்-
சந்திரன்
இரண்டும்,செவ்வாய்
இருக்கும் இடத்தை
பார்த்தால் தோசம்
இல்லை.காரணம்
சூரியனும்-
சந்திரனும்,இறைவன்-
இறைவி என்று
கருதப்படுகிறது.
12. குரு,சுக்கிரன்,புதன்
இவர்களால் நீக்க இயலாத
தோசத்தையும் சூரியன் -
சந்திரன் இவர்களால் நீக்க
முடியும் .எனவே
செவ்வாய்,சூரியன் -
சந்திரன் பார்வை
பெறுவது தோச நிவர்த்தி
ஆகிறது.

Monday 1 August 2016

வைத்தியநாத சுவாமி-சிவகாமி அம்பாள்

விருதுநகர் மாவட்டத்தின் மிகப்பெரிய
சைவத்தலம் இத்திருத்தலத்தில் தான்
சிவனின் 24 திருவிளையாடல்கள்
நடைபெற்றது. வைத்தியநாதசுவாமியை
வழிபட்டால் தீராத வயிற்று வலிதீர்ந்து
போகும், அத்துடன் சுகப்பிரசவம் நிச்சயம்
நடக்கும். ஒவ்வொரு ஆண்டும்
புரட்டாசி மற்றும் பங்குனி
மாதப்பிறப்பன்று காலை சூரியனின்
கதிர்கள் மூலவரின் மீது பட்டு சூரிய பூஜை
சிறப்பாக நடக்கும்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4
மணி முதல் இரவு8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு சிவகாமி அம்பாள் உடனுறை
வைத்தியநாதசுவாமி திருக்கோயில்,
மடவார்வளாகம் , ஸ்ரீவில்லிபுத்தூர்,
விருதுநகர் மாவட்டம்.
போன்:
+91-4563-261 262
பொது தகவல்:
ஒரு முறை மன்னர் திருமலை நாயக்கருக்கு
தீராத வயிற்று வலி உண்டானது. வயிற்று
வலி நோய் தீர்ப்பதில் வல்லவர் வைத்தியநாதர்
என்பதை கேள்விப்பட்ட திருமலை நாயக்கர்
தந்தத்தினால் ஆன பல்லக்கில் இங்கு
வந்து தங்கி 48 நாட்கள் விரதமிருந்து
வயிற்று வலி நீங்க பெற்றார்.
இதனால் தான் வந்த தந்த பல்லக்கை
வைத்திய நாதருக்கே தந்து விட்டு மதுரைக்கு
நடந்தே சென்றதாக கூறப்படுகிறது.
அத்துடன் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில்
உள்ள "திருமண மண்டபம்' போலவே தன்
வயிற்று வலியை தீர்த்த மடவார் வளாகம்
வைத்தியநாதருக்கும் பெரிய நாடக
சாலை எனப்படும் மண்டபம் அமைத்தார்.
வைத்தியநாதரை விட்டு செல்ல திருமலை
நாயக்கருக்கு விருப்பமில்லை. இங்கேயே
தங்கினாலும் தன் அரசியல் பணி தடை படும்
என்று கருதிய மன்னர், தினம் தோறும்
வைத்தியநாதருக்கு உச்சி கால பூஜை நடந்த
பின்னரே உணவு உண்ணும் பழக்கத்தை
மேற்கொண்டார். போக்குவரத்து,
வாகன, தந்தி, தொலைபேசி
இல்லாத அந்தக்காலத்தில்
மடவார்வளாக வைத்திய நாத சுவாமி
கோயிலில் உச்சி கால பூஜை நிறைவேறியதை
தெரிந்து கொள்வதற்காக,
ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மதுரை செல்லும்
ரோட்டில் ஆங்காங்கே கல் மண்டபங்களை
அமைத்து அவற்றில் இருந்து பூஜை நேரத்தில் முரசு
(நகரா) முழங்கச்செய்து அந்த ஒலி
மதுரையை எட்டியவுடன், மன்னர் வைத்தியநாதரை
வணங்கி வழிபாடு செய்த பின் தான்
மதிய உணவே சாப்பிடும் பழக்கத்தை
மேற்கொண்டார். இதற்கு
சான்றாக இன்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை
நெடுஞ்சாலையில் பல
கல்மண்டபங்கள் உள்ளதை காணலாம்.
பிரார்த்தனை
வயிற்று வலி தீர்க்கும் வைத்தியநாதர்
என்பதால் வயிறு சம்பந்தமான நோய்கள்
மற்றும் கர்ப்பசம்பந்தமான நோய்களுக்கு
வேண்டிக்கொள்கிறார்கள்.
சுகப்பிரசவம் நிச்சயம் நடக்கும் என்பதால்
சிவனையும், அம்மனையும் அர்ச்சனை செய்து
வேண்டிக்கொள்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
தங்களது கோரிக்கை நிறைவேறியவுடன் சிவனுக்கும்
அம்பாளுக்கும் அபிஷேகம், ஆராதனை
செய்து வஸ்திரம் சாற்றி நேர்த்திக்கடன்
செலுத்துகின்றனர்.
தலபெருமை:
மதுரையை சேர்ந்த வணிகர்கள் கேரளா
சென்று மிளகு வாங்கி வந்து
அதற்கென கடமை செலுத்தாமல்
ஏமாற்றி, மிளகை உளுந்தென
பொய் சொல்லி மதுரை
சென்று பார்த்த போது மிளகு எல்லாம்
உளுந்தாக இருந்தது. அவர்கள் மதுரை
சொக்கநாதரிடம் சென்று
முறையிட்டபோது, அவர் வைத்தியநாதரை
வணங்கினால் அருள் புரிவோம் என்று
கூறினார். அதன்படியே நடக்கவும்
செய்தது.இந்த வைத்தியநாத சுவாமி
இத்தலத்தில்,சூரியன் பூசித்தது, துருவாசர்
பூசித்தது, ஞான உபதேசம் பெற்றது,
முனிவர் இருவர் பூசித்தது, திருநடனம் புரிந்தது,
பிரம்ம தேவன் பூசித்தது, அக்கினி சன்மன்
பூசித்தது, பாசதரன் முக்தி பெற்றது,
வெண்குட்டம் தீர்ந்தது, அகத்தியர்
பூசித்தது, அகத்தியர் மேன்மை பெற்றது,
படிக்காசு வைத்தது, காசு வாசி வாங்கி
கொடுத்தது, சந்திரன் சய நோய்
தீர்த்தது, ஆ முகமானது- ஆ முகம் தீர்ந்தது,
மிளகு பயறானது, பயறு மிளகானது,
மட்குடம் பொற்குடமானது,
வாணன் தலை வெடித்தது, தாதன்
கண் பறித்தது, வணிகன் பொன்
மடிப்பையை தந்தது, பாவையருக்கு திரவியம்
கொடுத்தது, வலையனுக்கு கண்
கொடுத்தது, பிரகசேனன் முக்தி
பெற்றது போன்ற 24 திருவிளையாடல்களை
நிகழ்த்தியுள்ளார். இத்தல இறைவனை
பிரம்மன், இந்திரன், தேவர்கள், சூரியன்,
சந்திரன், துருவாசர், அகத்தியர் ஆகியோர்
வழிபட்டதாலும், இங்கு வந்து
வழிபடுபவர்களுக்கு சிவன் வீடு பேற்றை
அருளுவதாலும் இத்தலம் கைலாயத்திற்கு
சமமாக கருதப்படுகிறது. ஆடல்
பாடல்களில் வல்லவரான இருவர்
இத்தல நாயகன் முன் ஆடிப்பாடி
இறைவனை மகிழ்வித்ததால், இறைவனும்
மகிழ்ந்து அவர்களுக்கு பொன்,
பொருள் தந்து வீடு கட்டித்தர
ஆணையிட்டார். அன்று முதல் இந்த இடம்
மடவார் வளாகம் என அழைக்கப்பட்டது.
(மடவார்- பெண்கள், வளாகம்-
இடம்).
தல வரலாறு:
முன் காலத்தில் புனல்வேலி என்னும்
பகுதியில் ஏழை சிவபக்தன் தன் மனைவியுடன்
நாள் தோறும் சிறப்பாக சிவ பூஜை
செய்து வந்தான். இவனது மனைவிக்கு
பேறுகால நேரம் வந்ததும் தன் தாய்க்கு
சொல்லி அனுப்பினாள்.
ஆனால் பத்து மாதம் முடிவடைந்ததும்
தாய் வரவில்லை. எனவே தானே தன் தாய்
இருக்குமிடத்திற்கு சென்றாள்.
சிறிது தூரம் சென்றதும் அவளுக்கு பிரசவ
வலி ஏற்பட்டது. சிவ பக்தையான அவள்,
ஈசனே! காப்பாற்று என அழுது
புலம்பினாள். இந்த அழு குரலைக்கேட்ட,
தாயும் தந்தையுமான ஈசன் கர்ப்பிணியின்
தாயாக மாறி சிறிதும் வலி ஏற்படாமல்
சிறப்பாக பிரசவம் பார்த்தார். அப்போது
அந்த பெண்ணுக்கு தாகம் ஏற்பட்டது.
தாகத்திற்கு தண்ணீர் கொடுக்க
தன் விரல் நுனியால் பூமியை கீற, அதிலிருந்து
நீர் பீறிட்டு வந்தது. இந்த நீரே உனக்கு மருந்து
என்று கூறியவுடன் அந்தப்பெண்ணும்
நீரை பருகினாள். இது வரை தனக்கு பிரசவம்
பார்த்தது வைத்தியநாதர் தான் என்பது
அந்தப்பெண்ணுக்கு தெரியாது.
இந்த சம்பவம் எல்லாம் முடிந்த பின் அந்த
பெண்ணின் உண்மையான தாய்
வந்து சேர்ந்தாள். அதற்குள் பிரசவம் முடிந்து
விட்டதை ஆச்சரியத்துடன் தன் மகளிடம் கேட்ட
போது, வைத்தியநாதப்பெருமான், அன்னை
சிவகாமியுடன் விடை வாகனத்தில் காட்சி
தந்தார்.
அத்துடன், ""பெண்ணே உனது
தவத்தினால் தான் யாமே உனக்கு
பிரசவம் பார்த்தோம். இந்த தீர்த்தம் உனது
தாகம் தீர்த்து காயம் தீர்க்கவும் பயன்
பட்டதால் இன்று முதல் இந்த தீர்த்தம்
"காயக்குடி ஆறு' என அழைக்கப்படும். இதில்
மூழ்கி எழுந்து என்னை வழிபடுபவர்கள்
எல்லா பயமும் நீங்கி சுகபோக வாழ்வை
அடைவர்'' என்று அருளினார்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:
ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி
மற்றும் பங்குனி மாதப்பிறப்பன்று காலை
சூரியனின் கதிர்கள் மூலவரின் மீது பட்டு சூரிய
பூஜை சிறப்பாக நடக்கும்.