Sunday 28 February 2016

மாந்திரீக ரகசியங்கள்

மந்திர தந்திர ரகசியங்கள் (share)
செய்யுங்கள்)
1.ஒரு வளர்பிறை
செவ்வாய்க்கிழமை அன்று
தொடங்கி செவ்வாய்க்கிழமை
தோறும் ஒரு பசுவுக்கு நாட்டு
வாழைப்பழம் வாங்கிக்
கொடுத்துவர வறுமை நீங்கி
செல்வ நிலையில் உயர்வு
உண்டாகும்.
2.தொழில் முடக்கம் நீங்கி தொழில்
விருத்தி அடைய
ஒரு கரும்புள்ளி இல்லாத நல்ல
எலுமிச்சம்பழம் ஒன்று வாங்கி
கடை,அலுவலகம் முழுவதும்
வளாகம் முழுவதும் வெளியில்
நின்று நாகு துண்டாக நறுக்கி
தெற்கு முகமாக நின்று
குங்குமம் தடவித் திசைக்கு
ஒன்றாக எறிந்து விடவும். கடை
அலுவலகம் இவற்றில் இருந்த
தொழில் முடக்கம் நீங்கி தொழில்
சிறப்பாக நடைபெறும்.இதை
செவ்வாய்க்கிழமை அன்று
செய்யவும்.வியாபாரம் இல்லாமல்
அடைத்து வைத்தட கடைகளில்
இதை செய்து பின் கடை திறந்து
வியாபாரம் செய்யத் தொழில்
சிறக்கும்.
3.திருமணத்தடை,வ
றுமை,வேலையின்மை மற்றும்
தோஷம் உள்ளவர்கள் நல்லெண்ணெய்
தேய்த்து மசாஜ் செய்து கொஞ்சம்
பஞ்சகவ்யம் சேர்த்து குளித்து
அருகில் உள்ள ஆலயம் சென்று
அர்ச்சனை செய்து கொள்ள
தோஷங்கள் விரைவில் நீங்கி
நல்வாழ்வு உண்டாகும்.
ஆண்கள் - சனிக்கிழமை
பெண்கள் - வெள்ளிக்கிழமை
4.பொருளாதாரம் உயர:-
ஞாயிற்றுக்கிழமையும் பூசம்
நட்சத்திரமும் கூடிய நாளன்று
அதிகாலையில் நாயுருவிச்
செடிக்கு முறைப்படி காப்புக்
கட்டி சாபநிவர்த்தி செய்து
பிடுங்கி
அதைக் கையில்
வைத்துக்கொண்டே சண்டி
நவாக்ஷரி மந்திரம் 1008 உரு ஜெபம்
செய்து பின்னர் வெள்ளைநிறப்
பட்டு அல்லது பருத்தித் துணியை
மஞ்சள் கலந்த தண்ணீரில் நனைத்து
அந்தத் துணியால் நாயுருவிச்
செடியைச் சுற்றவும். இதைக்
கடை,அலுவலகம், வீடுகளில் வைக்க
பொருளாதார நிலை
உயர்வடையும்.
5.இரவில் கை,கால் ,முகம் கழுவிய
பின்னர் தூங்கினால் துஷ்ட
சக்திகள் தொல்லை
செய்யாது.இரவில் தானாக
விந்தி சக்தி வெளியேறாது.
6.அடிக்கடி ஆபத்துகளைச் சந்தித்து
வருபவர்கள்,அஷ்டமத்துச் சனி
நடப்பவர்கள், அஷ்டமாதிபதி தசை
அல்லது புத்தி நடப்பவர்கள்
மஹாம்ருத்யுஞ்சய மந்திரம்
ஜெபித்து பின் வெளியே
கிளம்பினால் விபத்துகள் இன்றி
வீடு திரும்பலாம்.
7.அரச மரத்தின் அற்புத சக்தி :
1. தீரா நோய் தீர
ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற
நாட்களில் தினமும் மதியம் 12:00
முதல் 1:30 மணிக்குட்பட்ட
வேளையில் அரசமர வேரைத்
தொட்டு வணங்கி வர தீராத
நோய்கள் தீரும்.குறிப்பிட
பகுதியில் பாதிப்பு ,நோய்
இருந்தால் பாதிப்பு / நோய் உள்ள
பகுதியில் வேரைத் தொட்டு
வைக்கவும்.விரைவில் குணம்
கிடைக்கும்.
2.ஞாயிற்றக்கிழமை அன்று மட்டும்
அரச மரத்தைத் தொடக்கூடாது .
3.குறைந்த அல்லது உயர் ரத்த
அழுத்த நோய் உள்ளவர்கள் ,அதிகம்
உணர்ச்சி வசப்படுபவர்கள் இனிப்பு
பண்டம் அல்லது சர்க்கரை கலந்த
நீரை அரச மர வேரில் விட
விரைவில் ரத்த அழுத்த நோய்
பாதிப்பு குறையும்.
4.தினமும் கிழக்கு முகமாக
நின்று அரச மரத்திற்கு நீர் விட்டு
வர பித்ரு தோஷ பாதிப்புகள்
குறையும்.
5.ஆயுள் தோஷம் உள்ளவர்கள்
(அற்பாயுள் ) சனிக்கிழமை
தோறும் அரச மரத்திற்கு நீர் விட்டு
தொட்டு வணங்கி வர ஆயுள்
கூடும்.

சப்த கன்னியர்

சப்தகன்னியர் :
---------------------
1 - பிராம்மி (பிராம்மணி)
2 - மாகேசுவரி
3 - கௌமாரி
4 - வைஷ்ணவி (நாராயணி)
5 - வராகி
6 - இந்திராணி
7 - சாமுண்டி (காளி)
-----------------------
சப்த கன்னிகள் :
-----------------------
பிராம்மி
பிராம்மி படைப்பின் கடவுளான
பிரம்மாவின் அம்சமாவார். இவர்
நான்கு கரங்களை உடையவர்.
அன்னப்பறவையை வாகனமாக
கொண்டவர். வெண்ணிர ஆடை
அணிந்தவராகவும், ஸ்படிக மாலையை
ஆபரணமாக தரித்தவராகவும்
உள்ளார்.
மகேசுவரி
மகேசுவரி என்பவர் மகேசுவரானாகிய
சிவபெருமானின் அம்சமாவார்.
இவர் சிவபெருமானைப் போன்று
முக்கண்ணும், ஐந்து திருமுகமும் உடையவர்.
கரங்களில் பாசம், அங்குசம், மணி, சூலம்,
பரசு என்ற ஐந்து ஆயுதங்களை தரித்தும்,
ரிசபத்தினை வாகனமாக
கொண்டவர்.
கௌமாரி
கௌமாரி என்பவர் கௌமாரனாகிய
முருகனின் அம்சமாவார். இவர் நான்கு
கரங்களையும், பின் இரு கைகளில் வஜ்ரம்
மற்றும் சக்தி ஆயுதங்களையும் தரித்து
காணப்படுகிறார். மயில் பறவையினை
வாகனமாக கொண்டவர்.
சேவல்கொடியினை கைகளில்
தாங்கியிருப்பவர்.
நாராயணி
நாராயணி என்பவர் விஷ்ணு என்று
அழைக்கப்பெறும் திருமாலின்
அம்சமாவார். இவருக்கு வைஷ்ணவி என்ற
மறுபெயருண்டு. இவர் நான்கு
கரங்களையும், பின் இரு கைகளில்
சக்கரத்தினையும், சங்கினையும் தரித்துக்
காணப்படுகிறார்.
வராகி
வராகி திருமாலின் வராக
அம்சமாவார். இவர் வராகமெனும்
பன்றி முகமும், நான்கு கரங்களையும்
உடையவர். பின் இரு கரங்களில்
தண்டத்தினையும், கலப்பையையும்
கொண்டவராவார். இவர் கருப்பு
நிற ஆடையுடுத்தி சிம்மம் வாகனத்தில்
அமர்ந்திருக்கிறார்.
இந்திராணி
இந்திராணி தேவலோகத்து அரசனான
இந்திரனின் அம்சமாவார். நான்கு
கரங்களை கொண்ட இவர், பின் இரு
கரங்களில் சக்தியையும், அம்பினையும்
ஆயுதமாக கொண்டு
காட்சியளிக்கிறார். ரத்தின கிரீடம் தரித்து
வெண் யானை வாகனத்தில்
அமர்ந்திருப்பவர்.
சாமுண்டி
சாமுண்டி என்பவர் ருத்திரனின்
அம்சமாவார். நான்கு கரங்களும்,
மூன்று நேத்திரங்களும், கோரைப்பற்களும், கரு
மேனியும் உடையவர். இவர் புலித்தோல் உடுத்தி
கபால மாலையை அணிந்திருக்கிறார்.
முத்தலைச் சூலம், முண்டம், கத்தி, கபாலம்
ஆகிய ஆயுதங்களை தரித்தும், பிணத்தின் மீது
அமர்ந்தும் காட்சியளிக்கிறார். இவர்
சண்டர் முண்டர் என்ற அரக்கர்களை
அழிப்பதற்காக அவதாரம் எடுத்தார்.

Friday 26 February 2016

கனவு காணும் பலன்கள் dreams yogam

1,)சந்திரனை,சூரியன்
பிடிப்பதாகக் கனவு கண்டால்-
யோகம் தரும்
2,)பழமரங்கள்,மலைப்பிரதேசம்
இவைகளில்-யோகமாகும்
3,)மரங்கள் பழங்கள் அதிகமாக இருக்க
மாமரம்,புளியமரம் பாக்குமரம்
தென்னைமரம் இவற்றில் காய்களும்
நிறைந்திருக்க-செல்வம் சேரும்
4,)எதிலும் ஏறுவதாகக் கனவு
கண்டால்-உயர்நிலை பெறுவார்கள்
5,)ஆற்றுநீரை, கடல் அலையைப்
பிடிப்பதாகக் கனவு கண்டால்-
செல்வம் சேரும்
6,)பெற்றோர்,நண்பர்களை,மக்களைப்
பிடிப்பதாக கனவு கண்டால்-புகழ்
பெறுவார்கள்
7,)மதுகுடிப்பதா
கவும்,தாசிகளுடன் உறவு
கொள்வதாகவும் கனவு கண்டால்-
மகிழ்ச்சியான காலமாகும்
8,)வெள்ளைப் பட்டு அணிந்த
அழகான பெண்ணைக் கண்டால்-
செல்வம் சேரும்
9,)அருவருப்பான மனிதர்கள்,காகம்
,மீன்,இரத்தம்,விலைமாதர்
இவர்களைக் கனவில் கண்டால்-
செல்வம் சேரும்
10,)இளம் பெண்,மாலை அணிந்து
வெள்ளை உடை
அணிந்து,வாசனைப்
பொருட்களை படுக்கையில்
அணிந்து,அமர்ந்திருந்தால்-புகழ்
பெறும் காலம்
11,)இளம் பெண் தாமரை மலர் ஏந்தி
வருவதைப் பார்த்தால்-அதிர்ஷ்டம்
வரும் காலம்
12,)காளைமாடு அரசன்,
பசு,குதிரை,பிடிப்பதாகக்
இவைகளைப் கண்டால்-மேன்மை
பெறும் குடும்பம்13,)சேவல்,தரும்
ஆபத்து மிருகங்கள்,பெரிய
மரம்,பறவை தங்கநிற இவைகளைப்
பிடிப்பதாகக் கண்டால்-பெறும்
காலம் அதிர்ஷ்டம்
14,)அரசனுடன் இருப்பதாகவும்
தேவர்களுடன் பேசுவதாகவும்
கண்டால்-உயர்வடையும்
நிலையைத் தரும்
15,) வீடு கட்டுவதாகவும்,மரம்
நடுவதாகவும், பண்ணை
அமைப்பதாகவும் கண்டால் கனவு-
புகழ்பெறுவார்கள்
16,)மலர்.தாமரை,
வெள்ளைப்,பூமாலை,ஆபரணம்
இவைகளைப் பெறுவதாகக்
கண்டால்-பெறும்புகழ்பெருவார்
17,)மாம்பழம்,பச
ு சாணம்,இவைகளைக் கண்டால்-
பெறும் காலம் அதிர்ஷ்டம்
18,)பனங்கள் குடிப்பதாகக் கண்டால்
கனவு-பெறலாம் லாபம்
19,)காளையை ஓட்டிச்
செல்வதாகவும் காரில் தனியாக
ஓட்டிச் செல்வதாகவும்
குதிரையைச்
செலுத்துவதாகவும் கண்டால்-
பெறும் அதிர்ஷ்ட காலமாகும்
20,)மிருகங்களுடன்
சண்டையிடுவதாகக் கண்டால்
அதிர்ஷ்டமான காலமாகும்
21,)பால் குடிப்பதாகக் கண்டால்-
சேரும் செல்வம்
22,)பாம்பு கடித்து இரத்தம்
வருவதாகவும் நாய்கடித்து
இரத்தம் வருவதாகவும் கண்டால்-
கனவு அதிர்ஷ்டம் கூடிவரும்
காலமாகும்
23,)வெள்ளைநிறப் பாம்பு கையில்
கடிப்பதாகக் கண்டால்-சேரும்
செல்வம் ஒரு மாதத்திற்குள்
24,)துண்டிக்கப்பட தலை இரத்தம்
கொட்டுவதாகக் கண்டால்-சேரும்
செல்வபெறுக்கு
25,)இளமைக் காலம்
முதுயாவதாகக் கனவு கண்டால்-
அதாவது கிழவராவதாக கண்டால்
நீண்ட ஆயுள் தரும் வரும்
விபத்தால் ஆபத்து நீங்கிவிடும்
26,)திருக்கோவிலை அலங்காரம்
செய்வதாகக் கனவு கண்டால்-
காத்திருக்கிறது நல்ல அதிர்ஷ்டம்
27,)வெள்ளை பசு,வெள்ளை
ஆடை,இவைகளைக் கண்டால்-
நிச்சயம் வெற்றி
28,)வீடு எரிவதாகவும் தானியம்
சேமிப்பதை கண்டால்-செல்வம்
சேரும்
29,)தங்கச்சிலையாக-தான்
மாறுவதாகக் கண்டால் கண்டம்
விலகிவிடும் புகழ்சேரும்
30,)சாதம்,பழவகைகள்,
ஆறு,கடல்,தயிர்,பால்,நெய்,மாங்க
னி,சீனிவெல்லம்,பாயசம்,தண்ணீர்க
்குடம், சாமரம்,இரத்தம்.சமைத்த
மாமிசம்,இவைகளைக் கையில்
பிடித்தாலும் சுவைத்தாலும்
வேதம் ஓதுவதைக் கேட்டாலும்-
செல்வம் சேரும்
31,)தெய்வம்,குரு,சாது,இஷ்ட
தெய்வம்,நல்வார்தை இவர்களுடன்
பேசுவதாகவும்,பாம்பு,
கடிப்பதாகவும் பூச்சிகடிப்பதாக
வும்,பெண்களுடன்
பேசுவதாகவும் கனவு கண்டால்-
விளையும் நன்மை விரைவில்
32,)பணம்,சாதம்,வெற்றிலை,பாக்கு
,தானியம், இவைகளைப்
பெறுவதாகவும்,சாதத்தை
உண்பதாகவும்,தான் பால்
அபிஷேகம்,செய்யப்படு வதாகவும்
கனவு கண்டால்-விரைவில் லாபம்
பெறுவார்கள்
33,)பிணைக்கைதியாக
ஆக்கப்படுவதாகக் தான்
கட்டுப்படுவதாக, கண்டால்-
தேறிவரும் உடல்நலம

Thursday 25 February 2016

மரண அறிகுறி death symptoms

அறிகுறி 1
எப்போது ஒருவரது சருமத்தின் நிறமானது
வெளிர் மஞ்சளாகவோ அல்லது
வெள்ளையாகவோ அல்லது லேசான
சிவப்பாக மாற ஆரம்பித்தால், அது
அவர் இன்னும் 6 மாத காலத்தில் உயிரை
விடப் போகிறார் என்று அர்த்தமாம்.
அறிகுறி 2
எப்போது ஒருவனால் அவனது பிம்பத்தை
எதிரொலியை தண்ணீரிலோ அல்லது
கண்ணாடியிலோ தெளிவாக காண
முடியவில்லையோ, அத்தகையவர்களும் ஆறு
மாதத்தில் இறக்கப் போகிறார் என்பதை
வெளிப்படுத்துமாம்.
அறிகுறி 3
எப்பொழுது ஒருவனுக்கு பார்க்கும்
அனைத்தும் கருப்பாக தெரிய
ஆரம்பிக்கிறதோ, அவர்களும் இறப்பை சந்திக்கப்
போகிறார் என்று அர்த்தம்.
அறிகுறி 4
ஒருவரது இடது கை மட்டும் ஒரு வாரத்திற்கு
மேல் துடிக்கவோ அல்லது நடுங்க ஆரம்பிக்கிறதோ,
அவர்கள் ஒரு மாதத்திற்கு மேல் உயிருடன்
இருக்கப் போவதில்லை என்று அர்த்தமாம்.
அறிகுறி 5
ஒருவரின் உணர்ச்சிமிக்க உறுப்புக்கள்
இறுக்கமடைந்து கல் போன்று மாறுகிறதோ,
அவர்களும் இன்னும் கொஞ்ச
மாதத்தில் இறக்கப் போகிறார் என்று
அர்த்தமாம்.
அறிகுறி 6
நிலா, சூரியன் அல்லது நெருப்பின்
ஒளியை சரியாக காணமுடியவில்லையோ,
அத்தகையவர்களும் விரைவில் மரணத்தை
சந்திக்கப் போகிறார் என்று அர்த்தம்.
அறிகுறி 7
எப்போது ஒருவரின் நாக்கு வீக்கமடைந்து,
ஈறுகளில் சீழ் கட்ட ஆரம்பிக்கிறதோ, அவர்கள்
இவ்வுலகில் நீண்ட நாட்கள் வாழப்
போவதில்லை என்று அர்த்தம்.
அறிகுறி 8
ஒருவரால் வானத்தில் உள்ள போல்
நட்சத்திரங்களை காண முடியவில்லையோ,
அவரும் ஆறு மாதத்தில் இறக்கப் போகிறார்
என்று அர்த்தம்.
அறிகுறி 9
சூரியன், நிலா மற்றும் வானத்தை
பார்க்கும் போது, அவை சிவப்பாக தெரிய
ஆரம்பித்தால், அத்தகையவர்களும் விரைவில்
மரணத்தை சந்திக்கப் போகிறார் என்று
அர்த்தமாம்.
அறிகுறி 10
ஒருவரின் கனவில் ஆந்தையோ, வெற்றிடமோ
அல்லது கிராமம் அழிவது போன்றோ
வந்தால், அவரும் மரணத்தை நெருங்கிக்
கொண்டிருக்கிறார் என்று
அர்த்தமாகும்.

Wednesday 24 February 2016

இந்து தர்மம் அறியலாம் வாங்க

- இந்து
தர்ம சாஸ்திரம்...
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
'''''''''''''''''''''''''''''''''''''''''''''"""""""
§ இடது கையால் ஆசனம் போட்டால் ஆயுள்
குறைவு; இடது கையால் எண்ணெய்
தேய்த்துக் கொண்டால் புத்திர
நாசம்; இடது கையால் சாப்பாடு போட்டுக்
கொண்டால் செல்வம்
அழியும்; இடது கையால் படுக்கையை போட்டால்
இருப்பிடம் சேதமாகும்.
ஜோதிடர், குரு, நோயாளி, கர்ப்பிணி, மருத்துவர்,
சந்நியாசி முதலியவர்களுக்கு, அவர்களுடைய
ஆபத்துக் காலத்தில் கண்டிப்பாக உதவ
வேண்டும். இது மிகவும் புண்ணியம்.
§ சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த
நிலையிலிருந்தால், அவர்களுக்கு உதவ
வேண்டும்.
§ அண்ணியை தினசரி வணங்க வேண்டும்.
§ பசு, தேர், நெய்குடம், அரச மரம்,
வில்வம், அரசுடன் சேர்ந்த வேம்பு இவைகள்
எதிரில் குறுக்கிட்டால், வலது புறம் சுற்றி
செல்ல வேண்டும்.
§ குடும்பஸ்தன் ஒரு ஆடை மட்டும் அணிந்து
உணவு உட்கொள்ள கூடாது. ஒரு
கையை தரையில் ஊன்றி சாப்பிடக் கூடாது.
துணியில்லாமல் குளிக்கக் கூடாது.
சூரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக்
கூடாது.
§ கன்றுக் குட்டியின் கயிறை தாண்டக்
கூடாது. மழை பெய்யும் போது ஓடக்
கூடாது. தண்ணீரில் தன் உருவத்தை
பார்க்கக் கூடாது.
§ நெருப்பை வாயால் ஊதக் கூடாது.
§ கிழக்கு, மேற்கு முகமாக உட்கார்ந்து
மலஜலம் கழிக்கக் கூடாது.
§ எதிர்பாராத விதத்திலோ, தவறு என்று
தெரியாமலோ, பெண்கள் கற்பை
இழந்து விட்டால், புண்ணிய நதியில், 18
முறை மூழ்கிக் குளித்தால் தோஷம் நீங்கும்.
§ திருமணம் ஆகாமலே ஒரு
பெண்ணுடன் வாழ்பவனை
சுபகாரியங்களில் முன்னிறுத்தக் கூடாது.
§ சாப்பிடும் போது, முதலில் இனிப்பு, உவர்ப்பு,
புளிப்பு, கசப்பு பதார்த்தங்களை வரிசையாக
சாப்பிட்டு, பின் நீர் அருந்த வேண்டும்.
§ சாப்பிடும் போது தவிர, மற்ற நேரத்தில் இடது
கையால் தண்ணீர் அருந்தக் கூடாது.
§ கோவணமின்றி, வீட்டின் நிலைப்படியை
தாண்டக் கூடாது.
§ இருட்டில் சாப்பிடக் கூடாது. சாப்பிடும்
போது விளக்கு அணைந்து விட்டால், சூரியனை
தியானம் செய்து, மீண்டும் விளக்கேற்றி
விட்டு சாப்பிட வேண்டும்.
§ சாப்பிட்டவுடன் குடும்பஸ்தன்
வெற்றிலை போட வேண்டும். வெற்றிலை
நுனியில் பாவமும், முனையில் நோயும், நரம்பில்
புத்திக் குறைவும் உள்ளதால் இவற்றை கிள்ளி
எறிந்து விட வேண்டும்.
§ சுண்ணாம்பு தடவாமல்
வெற்றிலையை வெறுமனேயோ,
வெறும் பாக்கை மட்டுமோ போடக் கூடாது.
வெற்றிலையின் பின்பக்கம் தான்
சுண்ணாம்பு தடவ வேண்டும்.
§ (அறிவுரை) மனைவி, கணவனுக்கு
வெற்றிலை மடித்துக்
கொடுக்கலாமே தவிர, கணவன்,
மனைவிக்கும், மகன், தாய்க்கும், பெண்,
தந்தைக்கும் மடித்துத் தரக் கூடாது.
§ குரு, ஜோதிடர், வைத்தியர், சகோதரி, ஆலயம்
இங்கேயெல்லாம் செல்லும் போது
வெறுங்கையுடன் செல்லக் கூடாது.
§ தலையையோ, உடம்பையோ வலக்கையினால் மட்டும்
சொறிய வேண்டும். இரண்டு
கைகளாலும் சொறியக் கூடாது.
§ இரு கைகளாலும் தலைக்கு எண்ணெய்
தேய்க்க கூடாது. வலது உள்ளங்கையில்
எண்ணெய் ஊற்றி தலையில் தேய்க்க
வேண்டும்.
§ தலைவாசலுக்கு நேரே கட்டில் போட்டோ, தரையிலோ
படுக்கக் கூடாது.
§ வானவில்லை பிறருக்கு காட்டக் கூடாது.
§ மயிர், சாம்பல், எலும்பு, மண்டையோடு, பஞ்சு,
உமி, ஒட்டாஞ்சில்லி இவற்றின் மீது நிற்கக்
கூடாது
§ பேசும் போது துரும்பைக் கிள்ளிப் போடக் கூடாது.
§ ஈரக்காலுடன் படுக்கக் கூடாது.
§ வடக்கிலும், கோணத் திசைகளிலும் தலை வைத்து
படுக்கக் கூடாது. நடக்கும் போது முடியை
உலர்த்த கூடாது.
§ ஒரு காலால், இன்னொரு
காலை தேய்த்துக் கழுவக் கூடாது.
§ (அறிவுரை) தீயுள்ள பொருட்களை தரை
மேல் போட்டு காலால் தேய்க்கக் கூடாது.
பூமாதேவியின் சாபம் ஏற்பட்டு, பூமி, மனை
கிடைக்காமல் போய் விடும்.
§ பகைவன், அவனது நண்பர்கள், கள்வன்,
கெட்டவன், பிறர் மனைவி இவர்களுடன்
உறவு கொள்ளக் கூடாது
§ பெற்ற தாய் சாபம்,
செய்நன்றி கொல்லுதல், பிறன்
மனைவி கூடுதல் இவை மூன்றுமே
பிராயச்சித்தமேயில்லாமல் அனுபவித்தே
தீர வேண்டிய பாவங்கள்.
§ (அறிவுரை) அங்கஹீனர்கள், ஆறு விரல்
உடையவர்கள், கல்வியில்லாதவர்கள்,
முதியோர், வறுமையிலுள்ளவர்கள் இவர்களது
குறையை குத்திக் காட்டிப் பேசக் கூடாது
§ ரிஷி, குரு, ஜோதிடர், புரோகிதர், குடும்ப வைத்தியர்,
மகான்கள், கெட்ட ஸ்திரியின் நடத்தை
இவர்களைப் பற்றி வீண் ஆராய்ச்சியில்
ஈடுபடவோ, அவர்களிடம் உள்ள தவறுகளை
விளம்பரப்படுத்துவதோ கூடாது.
§ பிறர் தரித்த உடைகள், செருப்பு, மாலை,
படுக்கை இவற்றை நாம் உபயோகிக்கக் கூடாது.
§ பிணப்புகை, இளவெயில், தீபநிழல் இவை
நம் மீது படக் கூடாது.
§ (அறிவுரை) பசுமாட்டை காலால் உதைப்பது,
அடிப்பது, தீனி போடாமலிருப்பது பாவம்
§ பசு மாட்டை, "கோமாதா வாக எண்ணி,
சகல தேவர்களையும் திருப்திப்பட வைப்பதற்கு,
அம்மாட்டுக்கு, புல், தவிடு, தண்ணீர்,
புண்ணாக்கு, அகத்திக்கீரை
கொடுப்பது புண்ணியம்.
§ தூங்குபவரை திடீரென்று எழுப்பக்
கூடாது; தூங்குபவரை உற்றுப் பார்க்கக்
கூடாது.
§ பகலில் உறங்குவது, உடலுறவு
கொள்வது கூடாது.
§ தலை, முகம் இவற்றின் முடியை காரணம்
இல்லாமல் வளர்க்கக் கூடாது.
§ அண்ணன் - தம்பி; அக்காள் - தங்கை;
ஆசிரியர் - மாணவர்; கணவர் - மனைவி;
குழந்தை- தாய்; பசு - கன்று இவர்களுக்கு
இடையில் செல்லக் கூடாது.
§ வீட்டுக்குள் நுழையும் போது, தலைவாசல்
வழியாகத் தான் நுழைய வேண்டும்.
§ நம்மை ஒருவர் கேட்காதவரையில், நாம்
அவருக்கு ஆலோசனை கூறக் கூடாது...

நவகிரக பரிகாரங்கள் பலன்கள்

நமது வாழ்க்கைப் பாதை நன்கு
அமையவும், நம்மை நல்ல முறையில் வழிநடத்திச்
செல்லவும் நவகிரக நாயகர்கள்
உதவுகின்றனர். ஒவ்வொரு
கிரகத்துக்கும் தொடர்புடையவராக
ஒவ்வொரு கடவுள் உள்ளார்.
சூரியனுக்கு சிவனும், சந்திரனுக்கு
பார்வதியும், செவ்வாய்க்கு
முருகனும், புதனுக்கு வி~;ணுவும், குருவுக்கு
தட்சிணாமூர்த்தியும், சுக்கிரனுக்கு
லட்சுமியும், சனிக்கு சனீஸ்வரரும்,
ராகுவுக்கு துர்க்கையும், கேதுவுக்கு
விநாயகரும் வழிபடு
தெய்வங்களாகின்றனர். இதுபோலவே
நவகிரக பூஜை, மிருத்யுஞ்சய ஜெபம்,
லட்சுமி பூஜை உள்பட பல்வேறு யாகங்களும்
நடத்தப்படுகின்றன.
இவை தவிர, நவகிரக தோசம் போக்கும் சில
பொதுவான வழிமுறைகளும்
உள்ளன. இவ்வழிமுறைகள் எளிதானதும்
எல்லாராலும் கடைப்பிடிக்கக்
கூடியதுமாகும். அவற்றை இங்கு காண்போம்.
*காய்ச்சாத பசும்பாலை ஏதேனும் ஒரு
கோவிலுக்கு 15 நாட்கள் கொடுத்தல்:
வெள்ளி டம்ளர்களை நீர் அருந்தப்
பயன்படுத்துதல் சுக்கிரனை பலப்படுத்தும்.
*நீலம் மற்றும் பச்சை ஆடைகளை தவிர்த்தல்
சனி, புதன் பாதிப்பிலிருந்து விலக்கும்.
*தினமும் நெற்றியில் மஞ்சள் திலகம்
அணிதல் குருவருள் கிடைக்க வழி
செய்யும்.
*கண் தெரியாதவர்களுக்கு
இனிப்புகள் வழங்குதல் சனியை ப்ரீத்தி
அடையச் செய்யும்.
*கைப்பிடி அரிசியை நதி அல்லது ஏரியில் போடவும்.
இது சந்திரனின் பலத்தை கூட்டும்.
*தோலில் செய்த மணிபர்சில் பணம்
வைக்க வேண்டாம். சனி
கெட்டிருப்பவர்களின் கெடு
பலனைக் குறைக்கும்;.
* வாகனத்தை எப்போதும் நல்ல நிலையில்
சீராக வைத்திருக்க வேண்டும். சனி பலம்
நன்றாக அமையும். (ஜாதகத்தில் சனி
கெட்டு, அவரது தசை நடந்தால்
வாகனத்தில் அதிக பராமரிப்பு
செலவு ஏற்படும் என்பது உங்களுக்குத்
தெரிந்திருக்கும்.)
*வீட்டில் சூரியனுக்குரிய யாகங்கள்
செய்வதும் தினமும் சூரியனுக்கு நீர்
படைப்பதும் சூரிய பலத்தை அதிகரிக்கச்
செய்யும்.
*தினமும் சரஸ்வதி மந்திரம் ஜெபிப்பது
புதன் பலத்தைக் கூட்டும்: பிள்ளைகளின் கல்வியை
மேம்படுத்தும்.
*வியாழக்கிழமைகளில் கோவில்களில் லட்டு
வழங்குவது குரு பலத்தை அதிகரிக்கும்.
அதுபோல் வியாழக்கிழமைகளில் பூண்டு,
வெங்காயம் தவிர்ப்பது நல்லது.
*பசுவின் கோமியத்தை வீட்டில் அவ்வப்போது
தெளித்தால், வீட்டிலுள்ள பீடைகள்
அகலும்.
*16 நாட்கள் கோவிலில் கொள்ளு
தானம் செய்வது கேது ப்ரீத்திக்கு
உகந்தது.
*பையில் சிறிய வெள்ளிக்கட்டி
வைத்திருப்பதும்; கையில் வெள்ளி வளையம்
அணிவதும் சுக்கிரனுக்கு நல்லது.
*அனுமனை அனுதினமும் வணங்கினால்
சனியினால் ஏற்படும் சங்கடங்கள்
அகலும்.
*சர்க்கரை, கடலைப் பருப்பு, நெய், அரிசி
ஆகியவற்றை மாதப்பிறப்பன்று
தானமளித்தால், வீட்டில்
அன்னபூரணியின் கடாட்சம் கிட்டும்.
*இரவில் ஒரு கைப்பிடியளவு பச்சைப் பயிறை
நீரிலிட்டு, மறுநாள் அதனை புறாக்களுக்கு
உணவாக அளித்தால் புதனால்
ஏற்படும் தோசம் நீங்கும்.
*வெள்ளிக்கிழமைகளில் பசுக்களுக்கு புல்
அளித்தால் சுக்கிரனின் அனுக்கிரகம்
கிடைக்கும்.
*இரவில் படுக்கையில், தலை அருகே கீரை இலைகள்
கொஞ்சத்தை வைத்திருந்து, அதனை
மறுநாள் ஒரு பசுமாட்டிற்குக்
கொடுக்கவும். இவ்வாறு மூன்று
செவ்வாய்க்கிழமைகள்
கொடுக்கவும்.
செவ்வாயினால்
உண்டாகும் தோசம் நீங்கும். ஆடுகளுக்கு
உணவளித்தலும் நன்று .
மேற்கண்டவை எல்லாமே எளிதான –
எல்லாரும் செய்யக்கூடிய
பரிகாரங்கள். வசதி உள்ளவர்கள் ஹோமம்
போன்ற சற்று செலவுள்ள
பரிகாரங்களைச் செய்யலாம்.
அனைத்து கிரக தோசத்திற்கும் நவகிரக ஹோமம்
நல்லது. பாலாரிஷ்ட தோசம், அற்ப ஆயுள்
தோசம் போன்றவற்றுக்கு ஆயுள்ஹோமம் சிறந்தது.
விபத்தை ஏற்படுத்தும் கிரக அமைப்புகள்,
கண்டக தோசம் போன்றவற்றை நிவர்த்தி
செய்ய மிருத்யுஞ்சய ஹோமம் சிறந்தது.
எதிரிகள் தொல்லை, செய்வினை
தொல்லைகள் உள்ளவர்கள்.
சுதர்சன ஹோமம் அல்லது மிருத்யுஞ்சய
ஹோமம் செய்தல் நல்லது. இதே
ஹோமங்களை மாரக தசாபுக்திகள்
நடக்கும்போதும் செய்தால், நல்ல
பலன் கிடைக்கும்.
ஏழரைச் சனி நடக்கும்போது நவகிரக ஹேமமும்,
கணபதி ஹோமமும் நடத்தினால் ஏழரைச்
சனியினால் ஏற்படும் தடைகள் மட்டுப்படும்.
திருமணத் தடை நீங்க சுயம்வரகலா
பார்வதி ஹோமம் செய்யலாம்.
எதிரிகளை வெல்லவும்,அரசியல்
வெற்றிக்காகவும் சண்டி ஹோமம்
செய்வர்.
வெள்ளிக்கிழமைகளில் கோ பூஜை
செய்வது மகாலட்சுமியின் கடாட்சம்
பெருக வழி செய்யும்.
மேற்கண்ட யாகங்களை – ஹோமங்களை
சொந்த செலவில் நடத்த
முடியாதவர்கள், பொது இடங்கள்,
கோவில்களில் நடக்கும்போது அதில்
கலந்துகொண்டு புண்ணியம்
பெறலாம்.
விஷ்ணுவை மட்டுமே வணங்கும்
வைஷ்ணவர்கள், சூரியனை வணங்க
ராமரையும் சந்திரனை வணங்க
கிருஷ்ணரையும், செவ்வாயை வணங்க
நரசிம்மரையும், புதனுக்கு
வேங்கடாசலபதியையும், குருவுக்கு
வாமனரையும், சுக்கிரனுக்கு லட்சுமியையும்,
சனிக்கு கூர்ம அவதாரத்தையும், ராகுவுக்கு
வராகரையும், கேதுவுக்கு மத்ஸய என்ற மீன்
அவதாரத்தையும் வணங்கவும்.