Saturday 2 May 2020

female sensitive place

தெய்வீகப்‌ பகுதி

பெண்ணின்‌ புனித குகையின்‌ கூரையில்‌ உள்ள புனிதப்‌ பயைம்‌ பொறுத்த வரை, பெண்ணுக்குப்‌ பெண்‌ அதனுடைய இருப்பிடம்‌ மாறியிருக்கலாம்‌.

மேலும்‌, ஒரே பெண்ணிடமே கூட அடிக்கடி இடம்‌ மாறுவதாகவும்‌ இருக்கலாம்‌.

அதனால்‌, குறிப்பிட்ட ஒரே இடத்தில்‌ தான்‌ அது எப்போதும்‌ இருக்கும்‌ என்று கூற முடியாது.

ஆனால்‌, ஒரு தகவலை உறுதியாகச்‌ சொல்லலாம்‌. புனித குகையின்‌ கூரையின்‌ முதல்‌ மூன்று அங்குலத்திற்குள்‌ தான்‌ இருக்கும்‌. அதில்‌ மாற்றமிருக்காது.

அதனால்‌ தான்‌ அந்தப்‌ பகுதியை தெய்வீகப்‌ பகுதி என்று ஞானிகள்‌ குறிப்பிடுகிறார்கள்‌. இந்த நூல்‌ அந்தப்‌ பகுதியை பிரம்மஸ்தானம்‌ என்று குறிப்பிடுகிறது.

இந்தப்‌ தெய்வீகப்‌ பகுதி தான்‌ பெண்ணின்‌ பால்‌ சார்ந்த ஏக்கங்கள்‌, ஏமாற்றங்கள்‌, நிராசைகள்‌ அனைத்தும்‌ அடங்கிக்‌ கிடக்கும்‌ பகுதியாகும்‌.

அதாவது ஒரு நபர்‌ உரிய வேளைக்கு உணவருந்தா விட்டால்‌, அவருடைய இரைப்பையின்‌ உயிரணுக்கள்‌ தான்‌ முதலில்‌ பாதிக்கப்படும்‌.

அதேபோல, பாலின்ப ஆற்றாமையால்‌ ஒரு பெண்‌ தாக்கப்‌ படும்‌ போது இந்த தெய்வீகப்‌ பகுதியில்‌ தான்‌ அந்த வருத்தங்கள்‌ சேமிக்கப்‌ படுகின்றன.

இப்போது நிகழ்ந்த பேரின்பப்‌ பிரளயத்தில்‌ அவையெல்லாம்‌ அடித்துச்‌ செல்லப்‌ பட்டு விடும்‌. பெண்ணின்‌ மனம்‌ அன்றலர்ந்த மலரைப்‌ போல்‌ பெண்மைக்‌ குணங்களின்‌ பிறப்பிடமாக மாறிப்‌ போகும்‌.

சில வினாடிகள்‌ மனமற்ற நிலையைப்‌ பெண்‌ அனுபவிக்கிறாள்‌. மனம்‌ தன்‌ சிந்தனையை முழுமையாக நிறுத்தி விடுகிறது.

வருடக்‌ கணக்கில்‌ குளிக்காமலிருந்த ஒரு நபர்‌ ஒரு அற்புதமான குளியலைப்‌ பெறும்‌ போது உடலுக்குக்‌ கிடைக்கக்கூடிய புத்துணர்வைப்‌ போன்ற புத்துணர்வை பெண்ணின்‌ மனமும்‌, உடலில்‌ வாழும்‌ ஒவ்வொரு உயிரணுவும்‌ பெறுகிறது.

உணர்வற்ற நிலையில்‌ அமிழ்ந்து கிடந்த சக்தியனைத்தும்‌ உயிர்‌ பெற்று உடல்‌ முழுதும்‌ பரவும்‌ போது உடலின்‌ ஒவ்வொரு உயிரணுவும்‌ குதூகலமடைகிறது.

எலும்புகளில்‌ வாழக்கூடிய உயிரணுக்கள்‌ கூட பேருவகை கொள்கின்றன. அதனால்‌, பின்னாட்களில்‌ வரக்கூடிய மூட்டு வலியும்‌, எலும்புறுக்கி நோயும்‌ கூட தடுக்கப்‌ படுகிறது.

தெய்வீக சக்தி உடல்‌ முழுவதும்‌ பரவுகிறது. பெண்‌ பேரானந்ததை அனுபவித்துக்‌ கொண்டிருப்பாள்‌. அதன்‌ விளைவாய்‌, இந்த இன்பத்தை நல்கிய ஆணின்‌ மார்பில்‌ பெண்‌ நிபந்தனையின்றி சரணடைந்திருப்பாள்‌. இது தான்‌ இயற்கை.

ஆண்மை நிரம்பிய ஆணிடம்‌ பெண்‌ சரணடைவது என்பது ஒரு இயற்கையான நிகழ்வு. அனைத்து உயிரினங்களிடமும்‌ காணப்படும்‌ பொதுப்‌ பண்பு. ஆகவே, மனித இனத்துக்கும்‌ இந்த விதி பொருந்தும்‌.

ஆதிக்கத்தின்‌ முன்‌ ஏற்படக்‌ கூடிய சரணாகதி கபட நாடகம்‌. ஆனால்‌, இது இன்பத்தால்‌ விளைந்த அன்பால்‌ உருவான சரணாகதி. இத்தகைய சரணாகதி தான்‌ உண்மையான சரணாகதி. இவ்வாறு அன்பால்‌ உருவான சரணாகதியானது, உயிரைக்‌ கூட தியாகம்‌ செய்யத்‌ தயாராக இருக்கும்‌.

மேற்கண்ட பிரளயத்திலே பங்கேற்ற ஆணும்‌ தனது இணையை விடக்‌ கூடுதலாகவே சரணடைந்திருப்பான்‌.

அதனால்‌ அங்கே இருவர்‌ இருக்க மாட்டார்கள்‌. இரு உடல்கள்‌ இருக்கும்‌. ஆனால்‌, இருவருடைய சக்தியும்‌ ஒன்றாகி, அவர்களுக்கிடையே அசைக்க முடியாத ஆழமான அன்பை உருவாக்கியிருக்கும்‌.

அந்த தெய்வீக அன்பின்‌ காரணமாக, அவர்கள்‌ இருவருடைய மூளை யிலும்‌, சட்டம்‌ பேசுகிற, உரிமை கோருகிற, ஆதிக்கம்‌ செலுத்துகிற, குற்றம்‌ காண்கிற பகுதி முழுமையாக அழிக்கப்‌ பட்டு விடும்‌.

மேற்கண்ட பிரம்மஸ்தான பூஜையைப்‌ பற்றி சமஸ்கிரத நூல்களின்‌ வாயிலாக அறிந்து கொண்ட மேற்கத்திய மருத்துவர்கள்‌, இந்த பூஜையை நடத்தி, பெண்ணின்‌ ஹிஸ்டீரியா (வக்கிர சிந்தனை) நோயைக்‌ குணப்‌ படுத்தும்‌ முறையை இருநூறு ஆண்டுகளுக்கும்‌ மேலாகப்‌ பின்பற்றியிருக்கிறார்கள்‌.

ஆனால்‌, பெண்ணின்‌ உடலில்‌ உச்ச கட்ட இன்பத்தை உருவாக்கும்‌ அதிர்வியந்திரங்களும்‌, மின்னணு ஆணுறுப்புகளும்‌ வழக்கத்திற்கு வந்த பின்‌, அந்த மருத்துவ முறைக்கு அங்கே அவசியமற்ற நிலை உருவாகி விட்டது ஏனெனில்‌, ஒவ்வொரு பெண்ணிடமும்‌ அவளுக்குரிய இன்பத்தை வழங்கும்‌ இயந்திரம்‌ இப்போது அவளுடைய கைப்‌ பைக்குள்ளேயே இருக்கிறது.

அவ்வாறு இயந்திரங்களைப்‌ பயன்படுத்தத்‌ தொடங்கியதால்‌ தான்‌ - அங்கே - அன்பு காணாமற்‌ போய்விட்டது.

பாலின்பம்‌ அன்பை உருவாக்கக்‌ கூடியது. ஆனால்‌, விஞ்ஞானத்தால்‌ உருவாகின்ற பாலின்பத்திற்கு அன்பை உருவாக்கும்‌ சக்தி கிடையாது.

இந்தப்‌ பூஜையைத்‌ தொடங்கும்‌ முன்‌ விரல்‌ நகங்கள்‌ சுத்தமாக அழுந்த வெட்டப்‌ பட்டிருக்க வேண்டும்‌.

அல்லது ௧ரு உருவாக்கத்தைக்‌ கண்டு பிடிக்க புனித குகைக்குள்‌ கையை நுழைத்துப்‌ பார்க்கும்‌ போது, மருத்துவர்கள்‌ பயன் படுத்துகிற கையுறையை ஒன்றுக்கு இரண்டாக அணிந்து கொள்ளலாம்‌.

இல்லாவிட்டால்‌, உட்புறத்திலே காயப்‌ படுத்தி விடும்‌. அல்லது எரிச்சலை, வலியை உருவாக்கி விடும்‌. அதனால்‌ இன்பம்‌ ஏற்படாமல்‌ போய்விடக்‌ கூடும்‌.

புனிதப்‌ புள்ளியைப்‌ பற்றிய இனியொரு தகவல்‌ என்னவென்றால்‌, சில பெண்களுக்கு புனிதப்‌ புள்ளியை வெறுமனே அழுத்தித்‌ தளர்த்தும்‌ முறை பிடிக்கும்‌.

சிலருக்கு அதன்‌ மீது விரலால்‌ வட்டமிடுவது பிடிக்கும்‌.

சிலருக்கு அதன்‌ மீது தேய்ப்பது தான்‌ பிடிக்கும்‌.

சிலருக்கு “இங்கே வா” என அழைப்பதைப்‌ போல, விரலை அதன்‌ மீது அசைப்பது பிடிக்கும்‌.

ஆகவே, எது பிடித்திருக்கிறது என்பதைத்‌ தெரிந்து கொண்டு செயலாற்றுவது இன்பத்தை நிகழ்த்த மிகவும்‌ உதவிகரமாக இருக்கும்‌.

இதற்கான சூத்திரம்‌. போகப்‌ பொருளாக மட்டுமே மனைவியைப்‌ பயன்படுத்திக்‌ கொண்டிருக்கும்‌ வரை, மனைவியின்‌ உடலில்‌ உள்ள தெய்வீகப்‌ பகுதியைக்‌ கணவனால்‌ தீண்ட முடியாது. பெண்ணின்‌ தெய்வீகப்‌ பகுதி தீண்டப்‌ படாத வரை, அவளுடைய மனதில்‌ தோன்றும்‌ வக்கிர சிந்தனையைத்‌ தடுக்க முடியாது. வக்கிர சிந்தனையின்‌ விளைவு தான்‌ பிடாரித்தனம்‌. ஆகவே பிடாரித்தனத்தையும்‌ போக்க முடியாது.

Source: Tantra Book Pages 430-432