Sunday 25 September 2016

பௌர்ணமி மாதம் ஒரு சிறப்பு

பௌர்ணமியும் அதன் சிறப்பும்;-
***************************
பௌர்ணமி மாதத்திற்கு ஒருமுறை வரும்.
அந்நாளில் வீடுகளில் தீபம் வைத்து
வழிபடுவது சிறப்பு. ஒவ்வொரு
மாதத்திற்கும் வரும் பௌர்ணமியில் ஒரு சிறப்பு
அடங்கியுள்ளது. அதை அறிந்து
விரதமிருந்தால் நன்மைகள் வீடு தேடி வரும்.
தமிழ் மாதத்தில் வரும் பௌர்ணமியின் சிறப்பை
இங்கு பார்ப்போம்.
🌖 சித்ரா பௌர்ணமி - சித்ரகுப்தனின்
பிறந்தநாள்.
🌖 வைகாசி பௌர்ணமி - முருகனின்
பிறந்தநாள்.
🌖 ஆனிப் பௌர்ணமி - இறைவனுக்கு கனிகளை
படைக்கும் நாள்.
🌖 ஆடிப் பௌர்ணமி - திருமால்
வழிபாட்டிற்கு உகந்தது.
🌖 ஆவணிப் பௌர்ணமி - ஓணம்,
ரக்ஷாபந்த திருநாள்.
🌖 புரட்டாசி பௌர்ணமி - உமாமகேசுவர
பூஜை உகந்த நாள்.
🌖 ஐப்பசி பௌர்ணமி -
சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம்
நடைப்பெறும்.
🌖 கார்த்திகைப் பௌர்ணமி - திருமால்,
பிரம்மா ஆகியோர் சிவபெருமானின்
அடிமுடி காண முயன்ற நிகழ்வு.
🌖 மார்கழிப் பௌர்ணமி -
சிவபெருமான் நடராஜராக
ஆனந்ததாண்டவம் ஆடிய நாள்.
🌖 தைப் பௌர்ணமி - சிவபெருமானுக்கு
பெருவிழா நடத்தும் நாள்.
🌖 மாசிப் பௌர்ணமி - பிரம்மனின் படைப்பு
தொழில் துவங்கிய நாள்.
🌖 பங்குனிப் பௌர்ணமி -
சிவபெருமான் உமையம்மை திருமண
நாள்.
ஒவ்வொரு மாத பௌர்ணமியின்
சிறப்பையும் அறிந்து பூஜை மற்றும் தீபம்
ஏற்றினால் நன்மைகள் தேடி வரும்.

Monday 5 September 2016

ஆன்மிகத்தில் ஒளிந்திருக்கும் உண்மைகள்


முன்னோர்கள் சொல்லியிருக்கும்
ஆன்மிக அறிவுரை ஒவ்வொன்றுக்கும்
பின்னால் ஆயிரம் ஆண்டுக் கால
அனுபவம் மட்டுமல்ல; அறிவியலும்
கலந்திருக்கிறது.
அவற்றை ஆராய்ந்து பார்த்தால், நம்
முன்னோர்களின் மதிநுட்பம் உங்களை வியக்க
வைக்கும். ஒரு சோற்றுப் பதமாக கீழே சில
உதாரணங்கள்...
1. விசேஷ வீட்டில் வாழை மரம், மாவிலைத்
தோரணங்கள் கட்ட வேண்டும்.
மங்களகரமான விசேஷ நாட்களில் கூடும்
மக்கள் கூட்டங்களில் வெளிப்படும்
மூச்சுக்காற்றில் கார்பன் -டை- ஆக்ஸைடு
மற்றும் வியர்வை நெடி அதிகமாக
இருக்கும்.
இதனால் கூட்டத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட
வாய்ப்புண்டு.
மாசுபட்ட காற்றைத் தூய்மைப்படுத்தி,
ஆக்சிஜன் நிரம்பிய நல்ல காற்றாக
மாற்றி வழங்குபவைதான் வாழை மரமும்,
மாவிலையும்.
அதனால்தான், இவற்றை விசேஷ
நாட்களில் கட்டச்
சொன்னார்கள் முன்னோர்கள்.
2. ஏகாதசி விரதம் இருப்பவர்கள் ,விரதம்
முடிக்கும்போது அகத்திக் கீரை சாப்பிட வேண்டும்!
பொதுவாக, மாதத்துக்கு
ஒருமுறையாவது, மென்று விழுங்கும் திட
ஆகாரங்களை உட்கொள்ளாமல்
இருந்து, இரைப்பைக்கும் குடலுக்கும் குறைவான
வேலை கொடுப்பது உடலுக்கு மிகவும்
நல்லது.
அதே நேரம், திட உணவை
உட்கொள்ளாமல் இருப்பதால்,
சிலருக்கு வயிற்றில் இருக்கும்
அமிலங்களால் பாதிப்பு ஏற்பட்டு,
புண்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
அதனைத் தடுக்க அகத்திக்கீரை அருமருந்து.
எனவேதான், ஏகாதசி விரதம் முடிக்கையில்
அகத்திக்கீரையைச் சாப்பிடச்
சொன்னார்கள்.
தவிர, அகத்திக்கீரையில் இரும்புச் சத்து
அதிகம்.
விரதம் இருந்து களைத்துப் போன உடலுக்கு அது
எனர்ஜி கொடுக்கும்.
3. வெள்ளி, செவ்வாய் வீடு
முழுக்கச் சாம்பிராணிப் புகை போடவேண்டும்.
பொதுவாக வீட்டில்
உற்பத்தியாகும் பூச்சித்தொல்லை,
கொசுத் தொல்லை நீங்க
நாம் செய்யும் இயற்கையான
வழிமுறையே இது.
சாம்பிராணி மணம் பல்வேறு விதமான
பூச்சிகளையும், கொசுக்களையும்
எதிர்க்கும் வல்லமை கொண்டது.
4. வாசலில் உள்ள நிலைப்படியில் மஞ்சள்
தடவ வேண்டும்.
மஞ்சள் மிக நல்ல கிருமிநாசினி.
வெளியில் வெவ்வேறு கிருமிகள்
உள்ள இடங்களுக்குச் சென்று திரும்பும்
நம் கால்கள் முதலில் மிதிப்பது, நம்
வாசல் நிலைப்படியைத்தான்.
அங்கு மஞ்சள் தடவப்பட்டிருந்தால், அது
கிருமிகளை உள்ளே வரவிடாமல் தடுத்து, நோய்த்
தொற்றுகளைத் தவிர்க்க
வழிவகுக்கும்.
5. இடி இடிக்கும்போது, அர்ஜுனா…அர்ஜுனா
என்று சத்தமாகச் சொல்லுங்கள்.
இடிச் சத்தம் பலமாக ஒலிக்கும்போது அது
செவிப்பறையைத் தாக்கிக் கிழிக்கும்
அபாயம் உண்டு.
அர்ஜுனா என்று கத்தும்போது வாய்
அகலமாகத் திறப்பதால், ஒலியானது
இரண்டு பக்கமாகவும் சென்று,
செவிப்பறை கிழிவது, காது
அடைத்துக்கொள்வது போன்ற
பிரச்னைகளிலிருந்து நம்மைக் காக்கிறது.
6. நகத்தைக் கடித்தால் தரித்திரம்!
நகத்தைக் கடிக்கும்போது, நகத்தின் இடுக்குகளில்
உள்ள அழுக்குகள் வயிற்றுக்குச் சென்று
நோய்த்தொற்றை உருவாக்கும்.
நகத் துணுக்குகளை விழுங்கி, அதனால்
உபாதைகள் ஏற்படவும் வாய்ப்புண்டு.
அதனால்தான், நகம் கடிப்பதைத்
தரித்திரம் என்றார்கள் பெரியோர்.
7. உச்சி வெயில்ல கிணத்தை எட்டிப்
பார்க்கக் கூடாது.
உச்சிவெயில் படும் நேரங்களில், சூரியஒளி
நேரடியாக கிணற்றில் விழுகிறது.
இதனால், திடீரென வேதிவினை
நடைபெற்று, கிணற்றுக்குள் விஷவாயு
உண்டாகலாம்.
அத்தருணம்,கிணற்றில் எட்டிப்
பார்ப்பதால், மயக்கம் உண்டாகவோ,
அதன் காரணமாக கிணற்றுக்குள் தவறி
விழவோ வாய்ப்புண்டு.
8. வடக்கே தலை வைத்துப் படுக்கக் கூடாது.
நம் புவியின் மையப்பகுதியில் இருக்கும்
காந்தவிசையானது வடக்கு –
தெற்காகத்தான் இயங்குகிறது.
எனவே, வடதிசையில் தலை வைத்துப் படுக்கும்போது ,
காந்தவிசையால் நமது மூளையின்
செயல்திறன் திறன் குறைய
வாய்ப்புள்ளது.
9. கோயிலை விட, உயரமாக வீடு கட்டக்
கூடாது.
பலத்த இடி இடிக்கும் கோயில் கோபுரங்களின்
உச்சியில் அமைக்கப்பட்டிருக்கும் கலசங்கள்,
அந்த மின் அதிர்ச்சியை உள்வாங்கி, தரைக்குக்
கடத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
இதனால், அந்தக் கோபுரத்துக்கோ சுற்றிலும்
உள்ள வீடுகளுக்கோ எந்த பாதிப்பும்
ஏற்படாமல் தவிர்க்கப்படுகிறது.
எனவேதான், இன்றைய இடிதாங்கி
அறிவியல் வசதி இல்லாத அக்காலத்தில்,
கோயிலை விட உயரமாகக் கட்டடம்
கட்டவேண்டாம் என்று சொல்லி
வைத்தார்கள் முன்னோர்கள்.
10. வீட்டு வாசலில் முருங்கை மரம் வைத்தால்
வீட்டுக்கு ஆகாது.
மரங்களில் மிகவும் அடர்த்தியில்லாத
மென்மையான கிளைகளைக்
கொண்ட மரம் முருங்கை.
அதனால், வீட்டில் இருக்கும் குழந்தைகள்
விளையாட்டாக அதில் ஏறி
விளையாடினால், கிளை முறிந்து குழந்தைகள்
கீழே விழுந்து காயம் பட்டுக்கொள்ள
வாய்ப்புண்டு.
மேலும், கம்பளிப்பூச்சிகளின் புகலிடம் முருங்கை
என்பதால், வீட்டுக்குள்ளும் கம்பளிப்பூச்சிக
ள் அதிகம் பரவும்.

எண்ணெய்க் குளிப்பு!


எண்ணெய்யை சாதாரணமாக பலர்
நினைத்துள்ளனர் தண்ணீரைப் போல். அரபு
நாடுகள் இன்று தலை நிமிர்ந்து நிற்க
காரணம் எண்ணெய்.
ஞாயிறு குளித்தால் வடிவமும் அழகும்
போய்விடும்.
திங்கள் குளித்தால் அதிகப்
பொருள் சேரும்.
செவ்வாய் குளித்தால் துன்பம் வரும்
புதன் குளித்தால் மிக புத்தி வந்திடும்.
வியாழன் குளித்தால் உயரறிவு போய்விடும்.
வெள்ளி குளித்தால் செல்வம்
மிகும்.
சனி குளித்தால் ஆயுள் அதிகமாகும்.
* மேற்கண்டவை யாவும் பெண்களுக்கு.
ஆண்கள் சனி , புதன் எண்ணெய்
தேய்த்து குளிப்பது நல்லது
* ஆண்களுக்கு, திங்கட் கிழமை
எண்ணெய் தேய்த்து குளித்தால் முடக்கு
வாதம் வரும்
செவ்வாய் கிழமை எண்ணெய்
தேய்த்து குளித்தால் முதுகு பாலை நோய் வரும்.
விழாயக்கிழமை எண்ணெய் தேய்த்து
குளித்தால் கால் குடைச்சல் வரும்.
வெள்ளிகிழமை எண்ணெய் தேய்த்து
குளித்தால் முட வாதம் வரும்.
[ இதனை.'' அறப்பளீகர சதகம் '' கூறுகிறது.]
* இனி எண்ணெய் தேய்த்து குளிக்க
முயலும் - அல்லது நினைக்கும் இணைய
அன்பர்கள் தனக்கு தேவையான - தனக்கு
வேண்டிய நாட்களை தேர்தெடுத்துக்
கொள்ளவும்.
எண்ணெய் தேய்த்து குளிப்பதால்
ஏற்படும் பலன் இணைய அன்பர்கள் பலரும்
அறிந்திருப்பதால் அதனை தவிர்த்துவிட்டேன்.
நம் முன்னோர்கள் சனியையும், புதனையும் ஏன்
தேர்தெடுத்தார்கள். மற்ற
செல்வங்களை விட
அறிவினையும், உடல் நலத்தினைத்தான்
உயர்வாக நினைத்தார்கள் -
மதித்தார்கள்.
எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது
குளிர்ந்த நீரில் குளிக்கக் கூடாது.
வெதுவெதுப்பான
சுடுநீரில்தான் குளிக்கவேண்டும்.