Sunday 24 July 2016

கன்னிகாதானம்

வயிற்றுப்பசியைப் போக்குகின்ற
அன்னதானமே தானத்தில்
சிறந்தது என்று நடைமுறை
வாழ்வாகவும், தானத்தில்
சிறந்தது நிதானம்தான் என்று
தத்துவரீதியாகவும் நாம் வாதம்
செய்தாலும், இருக்கின்ற
தானங்களிலேயே மிகப்
பெரியதாக,
மகாதானமாக சாஸ்திரம்
குறிப்பிடுவது இந்த
கன்னிகாதானத்தைதான்.
திருமணம் செய்துவைக்கும்போது,
தந்தையானவர் தான் பெற்ற
பெண்ணை மற்றொரு
குடும்பத்தில் பிறந்த ஆண்மகனுக்கு
தானமாக அளித்து அவனிடம்
ஒப்படைக்கும் இந்த நிகழ்வினை
கன்யாதானம் அல்லது
கன்னிகாதானம் என்று
அழைக்கிறார்கள்.
இந்த உலகில் எத்தனையோவிதமான
தானங்கள்
செய்யப்பட்டாலும் அவை
எல்லாவற்றிலும் உயர்ந்தது இந்த
கன்னிகாதானமே என்பதற்கு
இந்த நிகழ்வின்போது
சொல்லப்படுகின்ற
சங்கல்பமும், மந்திரமுமே சாட்சி.
“தசானாம்பூர்வேஷாம்,
தசானாம்பரேஷாம்,
மமஆத்மனஸ்ச ஏகவிம்சதிகுல
உத்தாரண..” என்று அந்த மந்திரம்
நீள்கிறது.
அதாவது, கன்யாதானம்
செய்பவனுக்கு முன்னால்
உள்ள பத்து தலைமுறையும், பின்னால்
வருகின்ற பத்து தலைமுறையும்,
கன்யாதானம் செய்பவனது
தலைமுறையையும் சேர்த்து
ஆகமொத்தம் இருபத்தியோரு
தலைமுறைகளையும் கரைசேர்க்கும் விதமாக
இந்த கன்னிகாதானம் என்று
அழைக்கப்படுகின்ற
மகாதானத்தினை செய்து
கொடுக்கிறேன் என்பது இந்த
மந்திரத்தின் பொருள்.
யோசித்துப் பாருங்கள், எதை ஒன்றை
தானமாகத் தந்தாலும்
அதேபோன்றதொரு
பொருளை நம்மால் மீண்டும்
சம்பாதிக்க இயலும். ஆனால்,
கன்னிகாதானத்தில் அது
இயலுமா?
உனது வம்சவிருத்திக்காக எனது
குலவிளக்கினை உனக்கு தானமாக
அளிக்கிறேன் என்று ஒரு தந்தை
செய்யக்கூடிய
கன்னிகாதானமே உலகில்
அளிக்கப்படுகின்ற தானங்களில்
மிகப்பெரியது என்று சாஸ்திரம்
போற்றுகின்றது. இதன் மூலம் நாம்
தெரிந்து
கொள்ளவேண்டியது என்ன?
ஆண்பிள்ளையைப் பெற்றால்
அந்தப் பிள்ளை செய்கின்ற
கர்மாவின் மூலம் அந்த ஒரு தலைமுறை
மட்டுமே கரையேறும்; ஆனால்,
பெண்பிள்ளையைப் பெற்று,
அவளைக் கண்ணுக்குக் கண்ணாக
வளர்த்து, மற்றொருவனின்
வம்சவிருத்திக்காக அவளை தானம்
செய்து
கொடுப்பதால், அவனது
வம்சத்தில் இருபத்தியோரு தலைமுறைகளும்
கரையேறுகிறது என்றால்
பெண்பிள்ளையைப்
பெற்றவன் புண்ணியம்
செய்தவனாகத்தான்
இருக்கமுடியும் அல்லவா? ஆக,
பெண்பிள்ளையைப்
பெற்றவனைப் பார்த்து ஏளனம்
செய்வதை விடுத்து இருபத்தியோரு
தலைமுறையைக் கரையேற்றும் வாய்ப்பினைப்
பெற்ற இவன் எத்தனை
பெரிய பாக்கியசாலி என்று
போற்றவேண்டும் என்பதையே சாஸ்திரம்
நமக்கு உணர்த்துகிறது.

Saturday 23 July 2016

ஓரை ரகசியம்

ஸ்ரீவராகி ஸகாயம்
ஓரை அறிந்து நடப்பவனை . யாரும்
ஜெயிக்க முடியாது என்பது சித்தர்கள்
வாக்கு. அப்படிப் பட்ட ஒரு மகத்தான
விஷயம்
பற்றி நான் பதிகிறேன். இது உங்களுக்கு
அளப்பரிய பலன்கள் தரும்
ஒன்பது கிரகங்களில் ஏழு கிரகங்களுக்கு
மட்டுமே ஓரை உண்டு. ராகு, கேது சாயா
கிரகங்கள் என்பதாலும், அவற்றிற்கு
சுற்றுப்பாதை இல்லாத காரணத்தாலும்
அவற்றிற்கு ஓரை கிடையாது.
பூமத்திய ரேகை, தீர்க்க ரேகை ஆகியவற்றை நமது
முன்னோர்கள் எப்படி உருவாக்கினார்களோ
அதேபோல்தான் ஓரைகளும்
உருவாக்கப்பட்டன. சூரியனின்
சுற்றுப்பாதை, சூரியனுக்கு அருகில் இருக்கக்
கூடிய கிரகங்கள், தொலைவில்
இருக்கக் கூடிய கிரகங்கள், அதனுடைய ஈர்ப்பு
சக்தி, அதன் ஒளிக்கற்றைகள் பூமியை
அடைவதற்கு எடுத்துக்
கொள்ளப்படுவதற்கான கால
நேரம் இதை எல்லாம் அடிப்படையாக
வைத்துதான் நமது முன்னோர்கள் ஓரைகளை
கணக்கிட்டுள்ளனர்.
சூரியன் மற்றும் அதன் அருகே அல்லது
தொலைவில் உள்ள கிரகங்களின்
அமைப்பைக் கொண்டு வானவியல்
அறிஞர்கள் ஓரைகளை உருவாக்கினர்.
இதன்படி வாரத்தின் முதல் நாளான
ஞாயிறன்று முதல் ஓரையை சூரியனுக்கு
அளித்தனர்.அதற்கு அடுத்து சுக்கிரன் ,
அதற்கு அடுத்து புதன் ஓரை , 4வது இடம்
சந்திரனுக்கும், 5வது இடம் சனிக்கும், 6வது
இடம் குருவுக்கும், 7வது இடம்
செவ்வாய்க்கும் வழங்கினர்.
இதற்கு சுற்றுப்பாதை, கிரகங்களின் கதிர்
வீச்சுதான் காரணம்.
இவற்றில் சுக்கிரன் ஓரை, புதன் ஓரை, குரு ஓரை
ஆகிய மூன்றும் நல்ல ஓரைகள் எனப்படுகிறது.
எந்த ஒரு நல்ல காரியம் செய்ய
வேண்டுமென்றாலும் - இந்த ஓரைகளில்
துவங்கலாம்.
ஓரை என்பது சூரிய உதயத்தில் இருந்து
கணக்கிடப்படுகிறது. அந்த நாளின் கிழமை
அதன் முதல் ஓரையாக
கொள்ளப்படுகிறது.
உதாரணமாக ஞாயிறு காலை முதல் ஒரு
மணி நேரம் (6-7 மணி) சூரியனின் ஓரை.
இதையடுத்து 7-8 மணி வரை சுக்கிரன் ஓரை, 8-9
மணி வரை புதன் ஓரை, 9-10 வரை சந்திரன் ஓரை,
10-11 வரை சனி ஓரை, 11-12 மணி வரை குரு ஓரை,
12-1 மணி வரை செவ்வாய் ஓரை.
இதையடுத்து மீண்டும் சூரியன் ஓரை துவங்கும்.
இதேபோல் செவ்வாய்க்கிழமை என்றால்
அன்று காலை 6 முதல் 7 மணி வரை
செவ்வாய் ஒரை, புதன் கிழமை
என்றால் காலை 6-7 மணி வரை புதன் ஓரை,
அதன் பின் ஒவ்வொரு மணி நேரமும்
மேலே கூறப்பட்டுள்ள வரிசைப்படி ஓரை
கணக்கிடப்படும்.
பொதுவாக காலை 6 மணி
என்பதனை சராசரி சூரிய உதய நேரமாகக்
கொண்டுதான் ஓரைகள்
கணக்கிடப்படுகின்றன.6 - 1- 8 - 3
இந்த வரிசையை ஞாபகம்
வைத்துக்கொள்ளுங்கள். காலை 6
மணிக்கு வரும் ஓரை , திரும்பவும் மதியம் 1
மணிக்கும், இரவு 8 மணிக்கும் , பின்பு
அதிகாலை 3 மணிக்கும் வரும்.
*சூரிய ஓரை
சூரியன் ஓரையில் அரசு சம்பந்தப்பட்ட
காரியங்கள், வழக்கு
தொடர்பான விடயங்கள்
மேற்கொள்ள சிறப்பானதாக
இருக்கும். உங்கள் மேலதிகாரிகளை சந்தித்தல்,
போன்ற பெருந்தலைகளை சந்திக்கும்
காரியம் செய்யலாம்.
இந்த நேரத்தில் புதிதாக எந்த
அலுவல்களையோ உடன் பாடுகளையோ
செய்வது நல்லதல்ல, சுபகாரியங்கள்
செய்யயவும் இந்த ஓரை ஏற்றதல்ல.
இந்த ஓரை நடக்கும் நேரத்தில் பொருள்
ஏதேனும் காணாமல் போனால் கிடைப்பது
அரிது. அப்படிக் கிடைக்குமானால் மிகவும்
தாமதித்து அப்பொருளின் நினைவு
மறைந்தபின் கிழக்கு திசையில் கிடைக்கலாம்.இந்
த நேரத்தில் உயில் சாசனம் எழுதலாம்.
*சுக்கிர ஓரை
சகல சுப காரியங்களுக்கு வீடு, நிலம்,
வண்டி வாகனம், ஆடை ஆபரணம்
வாங்கவும் மிகவும் ஏற்றது. குறிப்பாக
பெண்கள் தொடர்பு
கொண்ட சகல காரியங்களிலும்
நன்மை ஏற்படும். விவசாய்த்திற்கும்,
பயணங்கள் செய்யும் நல்லது. இந்த
ஓரையில் காணாமல் போன பொருள்
மேற்கு திசையில் சில நாள்களில் கிடைக்கும்.
*புதன் ஓரை
கல்வி மற்றும் எழுத்துத்
தொடர்பான வேலை
தொடங்குவதற்கும் ஆலோசிப்பதற்கும்
ஏற்ற நேரம். சுப காரியங்கள்
செய்யலாம். நேர்மையான
விஷயங்களைப் பற்றிப் பேசவும்
முடிவெடுக்கவும் இந்த நேர உகந்தது.
பயணங்கள் மேற்கொள்ளவும்
செய்யலாம்.இந்த ஓரையில்
காணாமல் போகும் பொருள்
விரைவில் அதிக சிரமமின்றி கிடைத்து விடும்.
*சந்திர ஓரை
வளர்பிறை காலத்தில் சந்திரன் ஓரையும்
நல்ல ஓரையாகவே கருதப்படுகிறது.
இந்த ஓரைகளில் திருமணம், சீமந்தம்,
குழந்தைகளுக்கு மொட்டையடித்து காது
குத்துதல், பெண் பார்ப்பது,
பதவியேற்பது, வேலைக்கு விண்ணப்பிப்பது,
வங்கி கணக்கு துவங்குதல் ஆகியற்றைச்
செய்யலாம். இந்த ஓரை காலத்தில்
எல்லா சுபகாரியங்களையும்
செய்யலாம்.குறிப்பாக
பெண்கள் தொடர்பு
கொண்ட காரியங்களையும் மிகவும்
ஏற்றது. வியாபார விஷயமாகவோ
அல்லது புனித யாத்திரையாகவோ பயணம்
செய்ய ஏற்றது.பிறரைச் சந்தித்துப் பேசவும்
செய்யலாம். இந்த ஓரையில்
எந்தப்பொருள் காணாமல்
போனாலும் கிடைக்காது.
*சனி ஓரை
இதில் சனி ஓரை ஒரு சில காரியங்களுக்கு
நன்றான பலனைத் தரும். கடனை
அடைப்பதற்கு ஏற்ற ஓரையாக சனி ஓரை
கருதப்படுகிறது.
உதாரணமாக சனி ஓர யில் ஒருவர் தனது
கடனை அடைத்தால், அவர் மீண்டும் கடன்
வாங்குவதற்கான சூழல் ஏற்படாது என
ஜோதிட நூல்கள் கூறுகின்றன. இதேபோல் பழைய
பாக்கி/கணக்குகளை தீர்ப்பது, ஊழ்வினை
(பூர்வ ஜென்மப் பாவம்) தீர்ப்பது,
பாத யாத்திரை , நடைபயணம் துவங்குவது,
மரக்கன்று நடுதல், விருட்சங்கள் அமைத்தல்,
அணைக்கட்டு நிர்மாணிக்கும் பணிகளை
துவக்குவது போன்றவற்றிற்கு சனி ஓரை
சிறப்பானது.
*குரு ஓரை
எல்லாவகை சுப காரியங்களுக்கு மிகவும்
ஏற்ற நேரம், வியாபாரம், விவசாயம்
செய்ய நல்லது. ஆடை ஆபரணப்
பொருள்கள் வாங்கவும், வீடு மனை
வாங்கவோ,விற்கவோ ஏற்றது.எதுவும்
சட்டத்திற்கும் நியாயத்திற்கும் புறம்பான
காரியமாக இருக்கக்கூடாது.
கப்பற்பயணம் செய்வதற்கு இந்த ஓரை
சிலாக்கிய்மானது அல்ல. இந்த நேரத்தில்
காணாமல் போனபொருள்களைப்
பற்றி வெளியில் சொன்னாலே
போதும் . உடனே கிடைத்து விடும்.
*செவ்வாய் ஓரை
செவ்வாய் ஓரை நிலம் வாங்குவது,
விற்பது, அக்ரிமென்ட் போடுவது, சகோதர/
பங்காளி பிரச்சனைகள், சொத்து
பிரித்தல், உயில் எழுதுவது, ரத்த தானம்,
உறுப்பு தானம், மருத்துவ உதவிகள்
செய்வது இவற்றையெல்லாம்
மேற்கொள்ளலாம். இந்த ஓரையில்
ஆயுதப் பிரயோகத்தை துவங்கினால் சக்தி
வாய்ந்ததாக இருக்கும். செவ்வாய்
அழிவுக்கு உரிய கிரகம் . அதிகாரத்தை
பிரயோகம் செய்து ஒன்றை கட்டுக்குள்
கொண்டு வரக் கூடியது
செவ்வாய். எந்தவித நல்ல
காரியங்களும் செய்ய உகந்த
நேரமல்ல. இருப்பினும் தெய்வீகத்
தொடர்பான விஷய்ங்களையோ,
சண்டை சச்சரவுக்கான் விஷயங்களையோ
பற்றிய் பேசலாம். இருப்பினும் இந்த ஓரையை
தவிர்ப்பது நல்லது. இந்த ஓரை நேரத்தில்
பொருள்கள் காணாமல்
போனால் உடனே முயன்றால் தெற்கு
திசையில் கிடைத்துவிடும்.தாமதித்தால்
கிடைக்காது.
ஒரு சிறந்த ஜோதிடராக நீங்கள் ஓரை
சம்பந்தமாக தெரிந்து
கொள்ள வேண்டிய ஒரு விஷயமும்
உண்டு. நவ கிரகங்களில் -
ஒன்றுக்கொன்று கடும் பகை
கிரகங்களும் உண்டு. அல்லவா ? அதையும்
நீங்கள் மனதில் கொண்டு , ஓரை
தேர்ந்தெடுங்கள். என்னதான் குரு ஓரை
சுப ஓரை என்றாலும், வெள்ளிக் கிழமை -
குரு ஓரை தேர்ந்தெடுக்க வேண்டாம்.
சரி, நிஜமாகவே இந்த ஓரையின்
செயல்பாடு அறிய - நீங்களே ஒரு சில
விஷயங்களில் , துவங்கிப் பாருங்கள்.
வியந்து போவீர்கள். மனித வாழ்வில்
ஓரைகளின் பங்களிப்பு முக்கியமானது. நம்மை
அறியாமலேயே ஓரைகளின் கதிர்வீச்சை உணர
முடியும். அதை உணர்ந்து நடந்தால் நலம்
பெறுவீர்கள்.
குறிப்பாக கணவன் , மனைவி ஏதாவது
வாக்குவாதம் செய்யத்
துவங்கினால் , செவ்வாய் அல்லது
சனி ஓரை வந்தால், அடக்கி வாசியுங்கள்.
அது மிகப் பெரிய சண்டையாகிவிடும்.
கணவன் . மனைவி என்றில்லை. மற்றவருக்கும்
பொருந்தும். ஆதலால் ,
காலத்தின் இந்த ரகசிய கணக்கு -
நீங்களும் தெரிந்து வைத்திருப்பதில்
தவறில்லை...
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஓரை பார்த்து
செய்யும் காரியங்கள் - மிக மோசமான
தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு
அரு மருந்தாக அமையும்..

நட்சத்திரங்களின் கணம் பற்றிய ஒர் உண்மை


நட்சத்திரங்களுக்கு தேவம், மனுஷம்,
ராஜஸம என மூன்று வித கணங்கள்
உண்டு. இவை மனித மனதின் சுபாவத்தை
குறிப்பவை அல்ல. சந்திரன் சரீரத்தை
குறிப்பிடுபவர். சந்திரன் நின்ற நட்சத்திர
கணத்தின்படி ஒருவரின் தேக குணம் அமையும்.
தேவ கணத்தில் பிறந்தோரின் தேகம்
மென்மையாகவும் தன்மையுமாக
விக்கிரகம் போல் பாதுகாக்கப்பட வேண்டும்.
ராஜஸ கணத்தில் பிறந்தோரின் தேகம் வலுப்
பெற்றதாக அமைவதோடு
எதையும் தாங்குவதாக அமையும்.
மனுஷ கணத்தில் பிறந்தவர் தேகம் இவ்விரு
தன்மைகளும் உடையதாய் அமையும். மாறும்
தன்மை உடையது. அன்றைய நடசத்திரத்துக்கு
ஏற்ற தன்மையாக தேகம் உருமாறும்.
ராஜஸ கணத்தில் பிறந்தவர் தேகம்
எவ்வளவு வதைத்தாலும் தாங்கும்.
ஆனால் தேவ கணத்தில் பிறந்தவர் தேகம்
சீக்கிரம் ஓய்வை தேடும்.
ராஜஸ கணத்தில் பிறந்தவருக்கு
நாள்பட்ட போதை வஸ்து பழக்கங்கள் கூட
பெரும் பாதிப்பை தருவதில்லை.
ஆனால் தேவ கணத்தார் தேகம் சிறு
உணவு மாறுபாட்டைக் கூட தாங்காது.
போதை பக்கம் தலை வைக்கக்கூடாது.
மனுஷ கணத்தார் இரண்டும்
கலந்தவர்கள். உதாரணமாக ராஜஸ
கண நாளில் இவர்களுக்கு
ஒத்துக்கொள்ளும் அசைவம் தேவ கண
நாளில் ஒத்துக்கொள்ளாது.
திருமண பொருத்தத்தில் இது எவ்வித
முக்கியத்துவம் என்று புரிந்திருக்கும்.
ஜோதிடத்தின் திசை போன்ற சகலத்திற்கும் இதனை
புகுத்திப் பார்க்க சரீர ஆரோக்கியம் பற்றிய
உண்மை விளங்கும்.

Friday 22 July 2016

சக்தி பீடங்கள் 51

*சக்தி பீடங்கள்.சிவ பெருமான்
சக்தியின் உடலை தூக்கி நடனம் ஆடி உடலை 51
பாகங்களாக துண்டுகளாக அகண்ட
பாரதத்தில் வீழ்ந்த இடங்களே சக்தி
பீடங்கள்!இதோ 51 சக்தி பீடங்கள்.*
*1 மூகாம்பிகை-கொல்லூர்-
(அர்த்தநாரி பீடம்), கர்நாடகா*
*2. காமாட்சி-காஞ்சிபுரம்-(காமகோடி
பீடம்), தமிழ்நாடு*
*3. மீனாட்சி-மதுரை-(மந்திரிணி பீடம்),
தமிழ்நாடு*
*4. விசாலாட்சி-காசி- (மணிகர்ணிகா
பீடம்), உ.பி.*
*5. சங்கரி-மகாகாளம்- (மகோத்பலா
பீடம்), ம.பி.*
*6. பர்வதவர்த்தினி-ராமேஸ்வரம்(சேது பீடம்),
தமிழ்நாடு*
*7. அகிலாண்டேஸ்வரி-திருவானைக்கா
(ஞானபீடம்), தமிழ்நாடு*
*8. அபீதகுஜாம்பாள்-திருவண்ணாமலை
(அருணை பீடம்), தமிழ்நாடு*
*9. கமலாம்பாள்-திருவாரூர்(கமலை
பீடம்), தமிழ்நாடு*
*10. பகவதி-கன்னியாகுமரி(குமரி பீடம்),
தமிழ்நாடு*
*11. மகாகாளி-உஜ்ஜையினி-(ருத்ராணி
பீடம்), ம.பி.*
*12. மங்களாம்பிகை-கும்பகோணம்-(விஷ்ணு
சக்தி பீடம்), தமிழ்நாடு*
*13. வைஷ்ணவி-ஜம்மு-(வைஷ்ணவி பீடம்),
காஷ்மீர்*
*14. நந்தா தேவி-விந்தியாசலம்-
(விந்தியா பீடம்), மிர்ஜாப்பூர்*
*15. பிரம்மராம்பாள்-ஸ்ரீ சைலம்-(சைல
பீடம்), ஆந்திரா*
*16. மார்க்கதாயினி-ருத்ரகோடி-(ருத்ரசக்தி
பீடம்), இமாசலபிரதேஷ்.*
*17. ஞானாம்பிகை-காளஹஸ்தி-(ஞான
பீடம்), ஆந்திரா*
*18. காமாக்யா-கவுகாத்தி-(காமகிரி
பீடம்) அஸ்ஸாம்*
*19. சம்புநாதேஸ்வரி-ஸ்ரீநகர்-
(ஜ்வாலாமுகி பீடம்) காஷ்மீர்*
*20. அபிராமி-திருக்கடையூர்-(கால பீடம்),
தமிழ்நாடு*
*21. பகவதி-கொடுங்கலூர்-
(மகாசக்தி பீடம்), கேரளா*
*22. மகாலட்சுமி-கோலாப்பூர்-(கரவீரபீடம்)
மகாராஷ்டிரம்*
*23. ஸ்தாணுபிரியை-குரு÷க்ஷத்ரம்-(உப
தேசபீடம்)ஹரியானா*
*24. மகாகாளி-திருவாலங்காடு-(காளி
பீடம்) தமிழ்நாடு*
*25. பிரதான காளி-
கொல்கத்தா-(உத்ர சக்தி பீடம்)
மேற்கு வங்காளம்*
*26. பைரவி-பூரி- (பைரவி பீடம்) ஒரிசா*
*27. மாணிக்காம்பாள்-
திராக்ஷõராமா-(மாணிக்க பீடம்)
ஆந்திரா*
*28. அம்பாஜி-துவாரகை-, பத்ரகாளி-
(சக்தி பீடம்) குஜராத்*
*29. பராசக்தி-திருக்குற்றாலம்-(பராச
க்தி பீடம்), தமிழ்நாடு*
*30. முக்தி நாயகி-ஹஸ்தினாபுரம்
(ஜெயந்தி பீடம்) ஹரியானா*
*31. லலிதா-ஈங்கோய் மலை,குளித்தலை(ச
ாயா பீடம்) தமிழ்நாடு*
*32. காயத்ரி-ஆஜ்மீர் அருகில் புஷ்கரம்-
(காயத்ரிபீடம்) ராஜஸ்தான்*
*33. சந்திரபாகா-சோமநாதம்-
(பிரபாஸா பீடம்) குஜராத்*
*34. விமலை, உலகநாயகி-பாபநாசம்
(விமலை பீடம்), தமிழ்நாடு*
*35. காந்திமதி-திருநெல்வேலி-(காந்தி
பீடம்), தமிழ்நாடு*
*36. பிரம்மவித்யா-திருவெண்காடு-
(பிரணவ பீடம்), தமிழ்நாடு*
*37. தர்மசம்வர்த்தினி-திருவையாறு-(தர்ம
பீடம்), தமிழ்நாடு*
*38. திரிபுரசுந்தரி-திருவொற்றியூர்-
(இஷீபீடம்), தமிழ்நாடு*
*39. மகிஷமர்த்தினி-தேவிபட்டினம்-(வீரசக்தி
பீடம்), தமிழ்நாடு*
*40. நாகுலேஸ்வரி-நாகுலம் -
(உட்டியாணபீடம்) இமாசல பிரதேசம்*
*41. திரிபுர மாலினி-கூர்ஜரம் அருகில்
ஜாலந்திரம் (ஜாலந்திர பீடம்) பஞ்சாப்*
*42. திரியம்பக தேவி-திரியம்பகம்-
(திரிகோணபீடம்) மகாராஷ்டிரம்*
*43. சாமுண்டீஸ்வரி-மைசூர்-(சம்பப்பிரத
பீடம்) கர்நாடகா*
*44. ஸ்ரீலலிதா-பிரயாகை-(பிரயாகை
பீடம்) இமாசலப்பிரதேசம்*
*45. நீலாம்பிகை-சிம்லா-(சியாமள பீடம்)
இமாசலப்பிரதேசம்*
*46. பவானி-துளஜாபுரம்-(உத்பலா
பீடம்) மகாராஷ்டிரா*
*47. பவானி பசுபதி-காட்மாண்ட்-(சக்தி
பீடம்) நேபாளம்*
*48. மந்த்ரிணி-கயை- (திரிவேணிபீடம்) பீகார்*
*49. பத்ரகர்ணி-கோகர்ணம்- (கர்ணபீடம்)
கர்நாடகா*
*50. விரஜை ஸ்தம்பேஸ்வரி-ஹஜ்பூர்-
(விரஜாபீடம்) உ.பி.*
*51. தாட்சாயிணி-மானஸரோவர்-
(தியாகபீடம்) திபெத்.*

Wednesday 20 July 2016

ருத்திராட்சம் மகிமைகள்

ருத்திரன் என்ற பெயரில் இருந்து வந்ததே
ருத்திராட்சம் ஆகும். சிவபெருமானின்
முக்கண்களிலிருந்தும் தெறித்த
ஆனந்தக் கண்ணீர் சொட்டுகளே
ருத்திராட்சங்களாகின. மொத்தம்
முப்பத்தெட்டு விதமான
ருத்திராட்சங்கள் தோன்றின.
வலது கண்ணிலிருந்து மஞ்சள் நிற
ருத்திராட்சங்கள் பன்னிரண்டும்இ இடது
கண்ணில் இருந்து பதினாறு
வெண்ணிற ருத்திராட்சங்களும்
தோன்றின. நெற்றிக் கண்ணிலிருந்து
கருப்பு வண்ணத்தில் பத்து ருத்திராட்சங்கள்
வெளிப்பட்டன.
ஒரு முகம் முதல் 16 முகம் வரை
கொண்ட பதினாறு வகை
ருத்திராட்சங்கள் உண்டு. ருத்திராட்சத்தின்
மேல் உள்ள கோட்டின் எண்ணிக்கையைக்
கொண்டு ருத்திராட்சம் எத்தனை
முகம் கொண்டது என்பதை
அறியலாம்.
சாணைக்கல்லில் உரைத்தால் மஞ்சளாக
தங்கம்போல் பிரகாசிப்பதும்இ நல்ல
வர்ணமுள்ளதுமான ருத்திராட்சம்இ த
ண்ணீரில் போட்டால் மூழ்குவதும்இ இரு
செப்புத் தகட்டுக்கு இடையில் வைத்து சோதனை
செய்தால் சுற்றக்கூடியது மான
ருத்திராட்சம் ஆகியவை மிகவும்
விசேஷமானவை.
ருத்ராட்சம் அணிவது பற்றி ஸ்ரீமத் தேவி
பாகவதம்கூறுவது யாதெனில். 🌷 🌷
🌷
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
¤¤¤¤¤
எவ்வித மந்திரங்களை உச்சரிக்காதவனும
்,எவ்வித யாகங்களைச்
செய்யாதவனும் கூட ருத்ராட்ச
மணிகளை வெறுமனே
தொடுவதன்மூலம் தன் பாவங்கள்
அனைத்திலிருந்தும் விடுபட்டு மறுபிறவியில்
ருத்ரனாகவே அவதரிக்கிறான்.
ருத்ராட்சத்தை அணிபவனும்,வழிபடுபவனும்
சம்சார பந்தங்களிலிருந்து
விடுபட்டு,தொடரவிருக்கும் அனேக கோடி
பிறப்புகளிலிருந்தும் விடுபடுகிறான்.
ருத்ராட்சம் அணிந்த ஒருவனுக்கு
உணவும்,உடையும் தருபவனும்,ருத்ராட்சம்
அணிந்த சிவனடியார்களின் பாதங்களைக்
கழுவிய நீரை தீர்த்தமாக
ஏற்றுக்கொள்பவனும்
அனைத்துப்பாவங்களிலிருந்தும்
விடுபட்டு,சிவலோகத்தை அடைகிறான்.
நம்பிக்கையோடும்,நம்பிக்கையில்லாமலும்
ருத்ராட்சத்தை அணிந்துகொள்பவன்
ருத்ர அம்சத்தைப் பெறுகிறான்.
ருத்ராட்சத்தின் மகிமையை என்னாலும்
விளக்கிக் கூற முடியாது என்று
சிவபெருமான் தேவிக்கு உரைத்ததாக
ஸ்ரீமத் தேவிபாகவதம் கூறுகிறது.
அனைத்துவித ஸ்தோத்திரங்களை உச்சரிப்பதன்
மூலமும்,விரதங்களை அனுசரிப்பதன் மூலமும்
அடைகின்ற பலனை,ஒருவன் ருத்ராட்சத்தை
அணிந்து கொள்வதன் மூலம்
பெறுவான்.
ருத்ராட்ச மாலையை அணிந்தவருக்கு ஒருவன்
உணவு அளிப்பானாகில்,அவனது 21
தலைமுறை மக்களும் பாவங்களிலிருந்து
விடுபட்டு ருத்ரலோகத்தை அடைவார்கள்.
சண்டாளனாகப் பிறந்தவனும்,ருத
்ராட்சத்தோடு தொடர்பு
கொள்வானாயின் அவனது
பாவங்கள் அவனை விட்டு விலகி ஓடிவிடும்.
கள் உண்பவனும்,மாமிசம்
உண்பவனுமாகிய பாவியின் தலையில்
ருத்ராட்சம் படுமேயானால் அவனது
பாவங்கள் அனைத்தும் விலகும்.
ருத்ராட்சமாலையை ஒருவன் வெறுமனே
கையில் பிடித்திருந்தாலும், நான்கு
வேதங்களையும்,சாஸ்திரங்களையும்,
உபநிடதங்களையும் கற்றறிந்தவனைவிட சிறப்பு
பெறுவான்.அனைத்துக் கல்வி
வேள்விகளும் அவன் வசமாகின்றன.பல
புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய
பலனைவிட அதிக பலனைப் பெறுகிறான்.
ஒருவன் மரணம் அடையும் தருவாயில்
ருத்ராட்சத்தை தரித்துக்
கொண்டிருப்பானாகில்,அவன்
இறந்தபின் ருத்ர லோகத்தை அடைகிறான்.
பிறப்பால் ஒருவன் பிராமணனோ அல்லது
சண்டாளனோ அல்லது மிலேச்சனோ;
உண்ணக்கூடாததை உண்பவனோ
யாராகிலும் அவன் ருத்ராட்சத்தை
அணிவானாகில் அவன் ருத்ரனுக்கு
இணையாகிறான்.
ருத்ராட்சத்தைத் தலையில் தரிப்பவன் கோடி
புண்ணியங்களைப்
பெறுவான்.காதுகளில் அணிபவன்
பத்துகோடிப் புண்ணியங்களைப்
பெறுகிறான்;கழுத்தில் அணிபவன்
நூறுகோடிப் புண்ணியங்களைப்
பெறுகிறான்;பூணூலில் அணிபவன்
ஆயிரம் கோடிப் புண்ணியங்களைப்
பெறுகிறான்;கைகளில் அணிபவன்
லட்சம் கோடிப் புண்ணியத்தைப்
பெறுகிறான்; இடுப்பில் அணிபவன்
மோட்சத்தை அடைகிறான்.
ருத்ராட்சத்தை அணிந்தவாறு , வேத
நியமங்களை ஒருவன் கடைபிடிப்பானாகில்
அவன் பெறும் பலன்களை அளவிட
முடியாது;
கழுத்தில் ருத்ராட்ச மாலையை அணிந்தவன்
இந்த உலகத்தளைகளிலிருந்து விடுபடுகிறான்.
ருத்ராட்சத்தை உடலில் அணியாவிட்டாலும்
,அதைப் பூஜிப்பவனும் கூட சிவலோகம்
சென்றடைந்து சிவனைப் போலவே
வணங்கப்படுகிறான்.
ருத்ராட்சம் அணிந்தவன்
சிவபெருமானைப் போலவே முப்பத்துமுக்கோடி
தேவர்களாலும் வணங்கப்படுகிறான்.
ருத்ராட்சத்தைத் தலையில் தரித்து ஒருவன்
நீராடுவான் எனில்,ருத்ராட்சத்தைத்
தொட்ட நீர் அவன் உடலைத்
தீண்டுமாயின்,அது கங்கையில்
நீராடியதைவிட அதிகப்புண்ணியப்
பலன்களைத் தரும்.
மனிதன் மட்டுமல்ல;ஓரறிவுள்ள
பிராணிகள் முதல் ஐந்தறிவுள்ள உயிர்கள்
வரை ருத்ராட்சத்தோடு சம்பந்தம்
பெற்றால்,அவை அனைத்தும்
மறுபிறவியில் சிவலோகத்தை அடைந்தே
தீரும்.பல்வேறு யுகங்களில் நாயும்,கழுதையும
்,கோழியும், ருத்ராட்சத்தோடு தொடர்பு
பெற்றதால் அவை சிவலோகம்
சென்றடைந்தன.மறு ஜன்மத்தில் சிறந்த
சிவ பக்தர்களாகப் பிறந்தன.
இந்த கலியுகத்தில்,ருத்ராட்சத்தை
அணிவதற்கு மிகுந்த மனவலிமை
தேவைப்படுகிறது.ருத்ராட்சம் அணிவதை
கிண்டல் செய்யவும்,தேவையில்லாமல்
மிரட்டவுமே நம்மைச் சுற்றியுள்ளவர்கள்
தயாராக இருக்கின்றார்கள
்.ஆனால்,பல நூறுபிறவிகளில் பல கோடி
புண்ணியம் செய்தால் மட்டுமே இந்த
பிறவியில் ருத்ராட்சம் அணியும் பாக்கியம்
நமக்குக் கிட்டும்.பெண்கள் மாத
விலக்கு நாட்களிலும் ருத்ராட்சம்
அணிந்திருக்கலாம்;தாம்பத்தியம்
இதற்குத் தடை அல்ல;
ஆனால்,ருத்ராட்ச மாலையாக
அணிபவர்களுக்குத்தான் ஏராளமான
சிவநெறிகள் பின்பற்ற வேண்டியிருக்கிற
து.இதை பலர் புரிந்துகொள்ள
வேண்டும்.