Sunday 10 April 2016

Srirangam temple best of 7

ஸ்ரீரங்கம் 7இன் சிறப்பு.
1. ஏழு உலகங்களை உள்ளடக்கிய
பொருளில் ஏழு பிரகாரங்களைக்
கொண்டுள்ளது ஸ்ரீரங்கம்
ரங்கநாதர் கோவில்.
2. (1) பெரிய கோவில் (2) பெரிய
பெருமாள் (3) பெரிய
பிராட்டியார் (4) பெரிய கருடன் (5)
பெரியவசரம் (6) பெரிய திருமதில்
(7) பெரிய கோபுரம் இப்படி அனைத்தும்
பெரிய என்ற சொற்களால்
வரும் பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில்.
3. ஸ்ரீரங்கம் ரெங்கனாதருக்கு 7
நாச்சிமார்கள் (1) ஸ்ரீதேவி (2) பூதேவி (3)
துலுக்க நாச்சியார் (4) சேரகுலவல்லி
நாச்சியார் (5) கமலவல்லி நாச்சியார்
(6) கோதை நாச்சியார் (7)
ரெங்கநாச்சியார் ஆகியோர்.
4. ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை
நம்பெருமாள் தங்க குதிரை
வாகனத்தில் எழுந்தருளுவார். (1)
விருப்பன் திருநாள் (2) வசந்த உத்சவம் (3)
விஜயதசமி (4) வேடுபரி (5) பூபதி திருநாள் (6)
பாரிவேட்டை (7) ஆதி பிரம்மோத்சவம்.
5. ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை
நம்பெருமாள் திருக்கோவிலை விட்டு
வெளியே எழுந்தருளுவார். (1) சித்திரை (2)
வைகாசி (3) ஆடி (4) புரட்டாசி (5) தை (6)
மாசி (7) பங்குனி.
6. ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும்
உற்சவத்தில் 7ம் திருநாளன்று வருடத்திற்கு
7 முறை நம்பெருமாள் நெல்லளவு
கண்டருலுவார். (1) சித்திரை(2) வைகாசி (3)
ஆவணி (4) ஐப்பசி (5) தை (6) மாசி (7)
பங்குனி.
7. ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும்
நவராத்ரி உற்சவத்தில் 7ம் திருநாளன்று
ஸ்ரீரெங்க நாச்சியார் திருவடி சேவை
நடைபெறும்.
8. தமிழ் மாதங்களில் ஏழாவது
மாதமான ஐப்பசி மாதத்தில் மட்டும் 30
நாட்களும் தங்க குடத்தில் புனித நீர்
யானை மீது எடுத்து வரப்படும்.
9. ராமபிரானால் பூஜிக்கப்பட்ட
பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில்.
ராமாவதாரம் 7வது அவதாரமாகும்.
10. இராப்பத்து 7ம் திருநாளன்று
நம்பெருமாள் திருகைத்தல சேவை
நடைபெறும்.
11. ஸ்ரீரங்கம் தாயார் சன்னதியில்
வருடத்திற்கு ஏழு உற்சவங்கள்
நடைபெறும். (1) கோடை உத்சவம் (2) வசந்த
உத்சவம் (3) ஜேஷ்டாபிஷேகம்,
திருப்பாவாடை (4) நவராத்ரி (5) ஊஞ்சல்
உத்சவம் (6) அத்யயநோத்சவம் (7) பங்குனி
உத்திரம்.
12. பன்னிரண்டு ஆழ்வார்களும் 7
சன்னதிகளில் எழுந்தருளி இருக்கிறார்கள்.
(1) பொய்கை ஆழ்வார்,
பூதத்தாழ்வார் பேயாழ்வார் (2)
நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார்,
மதுரகவி ஆழ்வார் (3) குலசேகர ஆழ்வார்
(4) திருப்பாணாழ்வார் (5)
தொண்டரடிபொடி
ஆழ்வார் (6) திருமழிசை ஆழ்வார் (7)
பெரியாழ்வார், ஆண்டாள்
13. இராப்பத்து 7ம் திருநாளில்
நம்மாழ்வார் பராங்குச நாயகியான
திருக்கோலத்தில் சேவை சாதிப்பார்.
14. பெரிய பெருமாள் திருமுக
மண்டலம் உள்ள இடமான தென்
திசையில் 7 கோபுரங்கள் உள்ளன. (1)
நாழிகேட்டான் கோபுரம் (2) ஆர்யபடால்
கோபுரம் (3) கார்த்திகை கோபுரம் (4)
ரெங்கா ரெங்கா கோபுரம் (5)
தெற்கு கட்டை கோபுரம்-I (6) தெற்கு
கட்டை கோபுரம்-II (7) ராஜகோபுரம்.
15. ஏழு உற்சவத்தில் குறிப்பிட்ட
மண்டபங்களை தவிர மற்ற மண்டபங்களுக்கு
பெருமாள் எழுந்தருள மாட்டார். (1)
வசந்த உத்சவம் (2) சங்கராந்தி (3)
பாரிவேட்டை (4) அத்யயநோத்சவம் (5)
பவித்ரா உத்சவம் (6) உஞ்சல் உத்சவம்
(7) கோடை உத்சவம்.
16. ஏழு சேவைகள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே
கண்டுகளிக்கும் சேவைகளாகும். (1)
பூச்சாண்டி சேவை (2) கற்பூர படியேற்ற சேவை (3)
மோகினி அலங்காரம், ரத்னங்கி சேவை (4)
வெள்ளி கருடன் மற்றும் குதிரை
வாஹனம் (5) உறையூர், ஸ்ரீரங்கம் மற்றும்
ராமநவமி சேர்த்தி சேவை (6) தாயார் திருவடி
சேவை (7) ஜாலி சாலி அலங்காரம்.
17. திருக்கோயில் வளாகத்தில் உள்ள ஏழு
மண்டபங்களில் நம்பெருமாள் ஒரு
நாள் மட்டுமே எழுந்தருள்வார். (1)
நவராத்ரி மண்டபம் (2) கருத்துரை மண்டபம்
(3) சங்கராந்தி மண்டபம் (4) பாரிவேட்டை
மண்டபம் (5) சேஷராயர் மண்டபம் (6)
சேர்த்தி மண்டபம் (7) பண்டாரம்
ஆஸ்தான மண்டபம்
18. திருக்கோவிலில் உள்ள ஏழு
பிரகாரங்களிலும் பெருமாளின் ஏழு
திருவடிகள் உள்ளன.
19. ஏழு பிரகாரங்களிலும் ஏழு திருமதில்கள்
அமையப்பெற்றுள்ளன.
20. திருக்கோயில் வளாகத்தில் ஏழு
ஆச்சார்யர்களுக்கு தனி சன்னதி உள்ளது.
(1) ராமானுஜர் (2) பிள்ளை
லோகாச்சாரியார் (3) திருக்கச்சி நம்பி (4)
கூரத்தாழ்வான் (5) வேதாந்த தேசிகர் (6)
நாதமுனி (7) பெரியவாச்சான்
பிள்ளை
21. சந்திர புஷ்கரிணியில் ஆறு முறையும்,
கொள்ளிடத்தில் ஒருமுறையும்
இப்படியாக ஏழு முறை சின்ன
பெருமாள் தீர்த்தவாரி
கண்டருள்வார். (1) விருப்பன் திருநாள்,
சித்திரை மாதம் (2) வசந்த உற்சவம் வைகாசி
மாதம், (3) பவித்ரோத்சவம் ஆவணி மாதம்,
(4) ஊஞ்சல் உற்சவம் ஐப்பசி மாதம், (5)
அத்யயன உற்சவம் மார்கழி மாதம், (6)
பூபதி திருநாள் தை மாதம், (7)
பிரம்மோத்சவம். பங்குனி மாதம்.
22. நம்பெருமாள் மூன்று முறை
எழுந்தருளும் வாகனங்கள் (1) யானை
வாஹனம் - தை, மாசி, சித்திரை (2) தங்க
கருடன் வாஹனம் - தை, பங்குனி சித்திரை (3)
ஆளும் பல்லக்கு - தை, பங்குனி சித்திரை (4)
இரட்டை பிரபை - தை, மாசி, சித்திரை (5) சேஷ
வாஹனம் - தை, பங்குனி, சித்திரை (6)
ஹனுமந்த வாஹனம் - தை, மாசி, சித்திரை
(7) ஹம்ச வாஹனம் - தை, மாசி, சித்திரை
23. மாசி மாதம் நடைபெறும்
திருப்பள்ளியோடம் திருவிழாவில்
நம்பெருமாள் ஏழு வாகனங்களில்
மட்டும் உலா வருவார்.
24. கற்பக விருட்சம், ஹனுமந்த
வாஹனம், சேஷ வாஹனம், சிம்ம
வாஹனம், ஒற்றை பிரபை ஆகிய இந்த ஐந்து
வாகனங்கள் தங்கத்திலும் யாளி
வாஹனம், இரட்டை பிரபை ஆகிய இந்த
இரண்டு வாகனங்கள் வெள்ளியிலும் -
ஆகிய ஏழு வாகனங்களை தவிர மற்ற
அனைத்து வாகனங்கள் வெள்ளி
மற்றும் தங்கத்திலும் உள்ளன.
25. மற்ற கோவில்களில் காண முடியாதவை
(1) தச மூர்த்தி (2) நெய் கிணறு (3)
மூன்று தாயார்கள் ஒரே சன்னதியில் (4) 21
கோபுரங்கள் (5) நெற்களஞ்சியம் (6)
தன்வந்தரி (7) நான்கு திசைகளிலும் ராமர்
சன்னதி
கொடுக்கப்பட்டுள்ள 25ல் 2 மற்றும்
5 இரண்டையும் கூட்டினால் வருவது 7.
பூலோக வைகுண்டத்தில் அரங்கனை தரிசிக்க
வாரீர்.
காரியங்கள் அனைத்தும் கைகூடும்

Friday 8 April 2016

வராஹி வழிபாடும் பலன்களும்

வராஹி அம்மன் வழிபாடு!
நீதிமன்ற வழக்குகள், நிலத்தகராறு
பிரச்சினைகள் சுமுகமாகும். தீராத நோயால்
அவதிப்படுபவர்கள் ஞாயிற்றுக்கிழமையிலும்,
மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்
திங்கட்கிழமையிலும், வழக்கு, பூமி
சம்பந்தமான பிரச்சினைகள் உள்ளவர்கள்
செவ்வாய்க் கிழமையிலும், கடன்
தொல்லைகளில் அவதிப்படுபவர்கள்
புதன்கிழமையிலும் வழிபட நலன் கிடைக்கும்.
குழந்தைவரம், கல்வியில் தேர்ச்சி பெற்று
வெற்றி பெற வியாழக்கிழமையிலும்
வழிபடலாம். வெள்ளிக்கிழமைஅன்று
வழிபட்டால் பில்லி, சூனியம், ஏவல், தோஷம்
நீங்கும். சனிக்கிழமையன்று வழிபட்டால்
நினைத்த காரியம் கைகூடி
வெற்றிபெறும். மாதத்தில் வருகிற
வளர்பிறை, தேய்பிறை, பஞ்சமி திதியிலும் விரதம்
இருந்து வழிபட்டால் நல்லது.
வராஹி அம்மனை 16 முறை வலம் வந்து
நெய்தீபம் ஏற்றி ஒருமனதோடு தர்ம
சிந்தனையில் வழிபட்டால் எல்லா
வகையிலும் வெற்றி கிட்டும்

Wednesday 6 April 2016

வாஸ்து குறிப்புகள்

வாஸ்து குறிப்புகள்
1, வீட்டு மனை சதுரமாகவோ அல்லது
செவ்வக வடிவிலோ அமைய வேண்டும்.
2, வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு
பகுதிகளில் பால்கனி அமையலாம்.
3, மழைநீர் ஈசானிய மூலை வலியாக
வெளியேற வேண்டும்.
4, ஈசானிய மூலை நீண்டு இருப்பது மிகவும்
நல்லது.
5, வீட்டிக்கு தெற்கு, தென்மேற்கு,
மேற்கு திசையில் மலை, குன்று இருப்பது நல்லது.
6, வீட்டுக்கு வடக்கு, வடகிழக்கு, கிழக்கு
திசையில் ஓடை, கால்வாய், ஏரி, ஆறு
இருப்பது நல்லது.
7, மனையில் வீடு கட்டும்போது வடக்கு, வடகிழக்கு,
கிழக்கு பகுதியில்
கிணறு அல்லது பம்ப் அமைத்து நீர் எடுத்து
பயன்படுத்த வேண்டும்.
8, வீட்டின் மத்தியிலும் மற்ற திசைகளில்
அமையும் கினறு, பம்ப் தீய பலன்களைத் தரும்.
9, வீட்டின் தெற்கும், மேற்க்கும் குறைந்த
இடமும், வடக்கு, கிழக்கில்
அதிக இடமும் விட்டு கட்ட வேண்டும்.
10,வீடுகட்ட கடைக்கால் தோண்டும்போது முதலில்
ஈசானியத்தில்
ஆரம்பித்து கடைசியில் தென்மேற்கே தோண்டி
முடிக்க வேண்டும்.
11, வீடு கட்டுமானப் பணியின் போது முதலில்
தென்மேற்கில் ஆரம்
பித்து ஈசானியத்தில் முடிக்க வேண்டும்.
12, தென்மேற்கு மூலை 90 டிகிரி சரியாக
இருக்க வேண்டும்.
13, வீட்டின் தெற்கு, மேற்கு,
தென்மேற்கு உயர்ந்தும் வடக்கு, கிழக்கு,
வடகிழக்குப் பகுதி தாழ்ந்தும் இருக்க
வேண்டும்.
14, பஞ்சபூதாஅற்றல் கிடைக்கு ஈசானிய
மூலை காலியாக இருக்க
வேண்டும். மாலையில் விளக்கேற்ற
சுபிட்சமுண்டாகும்.
15, வீட்டின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் அதிக
கதவுகள், ஜன்னல்கள்
அமையவேண்டும்.
16, வீட்டிற்கு ஜன்னல், கதவுகள்
இரட்டைப்படையில் இருப்பதே நல்லது.
17, கழிவுநீர் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி
செல்ல வேண்டும்.
18, தென்மேற்கு அல்லது வடமேற்கு
மூலையில் நீர் உபயோகத்
தொட்டி அமைய வேண்டும்,
19, கழிப்பிடம் தெற்கு அல்லது வடக்கு
நோக்கி அமருமாறு அமைய வேண்டும்.
20, செப்டிக்டேங்க் வடமேற்கு அல்லது
தென்கிழக்கே காம்பவுண்டு
சுவரை தொடாமல் கட்ட வேண்டும்.
21, அலமாரிகள் தெற்கு அல்லது மேற்கு
பகுதியில் அமைவது நல்லது.
22, வீடு மற்றும் காம்பவுண்டின் வடகிழக்கு
மூலை வளைவாக இருக்க
கூடாது.
23, மாடிப்படி தென்மேற்கு அல்லது
வடமேற்கு மூலையில் அமைய
வேண்டும்.
24, வீட்டிற்கு தெற்க்கு மேற்கு உயர்ந்து
இருக்க வேண்டும்.
25, வடகிழக்கில் குடிநீர் குழாய் இருத்தல்
வேண்டும்.
26, ஈசானிய மூலையில் மண் அமைத்து
அருகம்புல், துளசி வளர்பது
நல்லது. உயரமான துளசி மாடம்
கட்டக்கூடாது.
27, ஆட்டுக்கல், அம்மி, தெற்கு, மேற்கு,
தென்மேற்கு,தென்கிழக்கு
பகுதிகளில் அமைக்கலாம். வடகிழக்கு
பகுதிகளில் அமைக்க கூடாது.
28, .பிரிட்ஜ் கிரைண்டர் போன்ற மின்சாதனப்
பொருள்கள் அறையின்
தென்கிழக்கில் அமைக்கலாம்.
29, ஈசானிய மூலையில் குப்பை கூளங்களை
குவித்தல் கூடாது.
30, அக்னி மூலையில் படுக்கை அறை கூடாது.
31, தெற்கு பார்த்து சமைக்காதீர்.
மருத்துவ செலவுகளுக்கு வழி கோலும்.
32, உண்ணல் படித்தல் கிழக்கு நோக்கி
இருப்பதுதான் நல்லது.
33, வடக்கே தலை வைத்து படுக்கை அமைப்பது
கூடாது.
34, ஈசானிய மூலையில் மாடிப்படி கூடாது.
35, வீட்டின் வடக்கே, கிழக்கே உயராமாக
வளரும் நிழல் தரும்
மரங்கள் வள்ர்க்ககூடாது.
36, வீட்டின் தெற்கு அல்லது மேற்கே
உள்ள உயரமான மரங்களை
வெட்டக் கூடாது.
37, ஈசானிய மூலையில் சமையல் அறை கூடாது.
38, வீட்டின் வடகிழக்கில் நீர்தேக்கத்
தொட்டி அமைக்கக் கூடாது.
39, வீட்டின் வடகிழக்கு தென்மேற்கு
மூலையில் கழிவறை மற்றும்
செப்டிக்டேங்க் அமைக்க கூடாது.
40, வீட்டுத் திண்ணைகள் வடக்கேயும்
கிழக்கேயும் உயரமாக அமைக்க
கூடாது.
41, வடக்கு, கிழக்கு காம்பவுண்டு
சுவரின்மேல் பூந்தொட்டி வைக்கக்
கூடாது.
42, வீட்டின் தென்மேற்கு மூலையில்
மெயின்கேட், போர்டிகோ
தலைவாசல் மற்றும் கிணறு
அமைந்திருந்தால் வேதனைகளும்
சோதனைகளுமே வரும்.
43, வாசலுக்கு எதிரே கிணறோ, குழியோ
இருக்கலாகாது.
44, வீட்டின் வடக்கு, கிழக்கு பகுதியில் உள்ள
காலி மனை நிலங்களை
வாங்கலாம்.
45, வீட்டின் தெற்கு, மேற்கு பகுதியில்
உள்ள காலிமனை நிலங்களை
இனமாகக்கூட வாங்கி சேர்க்ககூடாது.
46, ஒரு வீட்டினை இருவருக்கு பங்கிட்டு
பாகப்பிரிவினைச் செய்ய கூடாது.
47, ஒரே மனையில் 2 வீடுகள் கட்ட
விரும்பினால் முதலில் தெற்கு
அல்லது மேற்கு பகுதியில் கட்ட வேண்டும்
பிறகுதான் வடக்கு
அல்லது கிழக்கிலுள்ள காலி மனையில் வீடு
கட்டலாம்.
48, ஒரே மனையில் 2 வீடுகள் கட்டினால்
தெற்கிலுள்ள வீட்டை
விட வடக்கில் உள்ள வீடு தாழ்வாகவும்,
மேற்கில் உள்ள வீட்டை
விட கிழக்கில் உள்ள வீடு தாழ்வாகவும்
இருக்கவேண்டும்.
49, ஒரு வீட்டு மனையின் எதிரே ஒரு தெரு
முடிவதையே தெருக்குத்து
அல்லது வீதிசூலம் எனலாம், வடக்கு
ஈசானிய தெருக்குத்தும்
கிழக்கு ஈசானிய தெருக்குத்தும்
வீட்டிற்கு நன்மை தருவனவாம்.
50, தெற்கு அக்னி மூலைத் தெருகுத்து
வியபாரத்திற்கு ஏற்றது.
51, மேற்கு வாயு மூலைத் தெருக்குத்து சட்ட
நுணுக்கங்களுக்கு ஏற்றது.
52, வடக்கு வாயு மூலை தெருக்குத்து
பிரச்சினைகள் தரும். கிழக்கு
அக்னி மூலை தெருக்குத்து பிரச்சனைகள்
தரும்.மேற்கு நைருதி
மூலை தெருக்குத்தும் பிரச்சனைகள் தரும்.
53, ஒரு மனைக்கு வடக்கிலும் கிழக்கிலும் பாதை
இருந்தாலும்,
4 திசைகளிலும் பாதை இருந்தாலும்
சிறப்புடையது.
54, வீடு கட்ட ஆரம்பிக்கும் முன் அல்லது
செப்பனிட ஆரம்பிக்கும்
முன் சரியான நேரத்தில் அருகம்புல், துளசி
கொண்டு மனையின்
ஈசானியத்தில் வாஸ்து பூஜை [ பூமி
பூஜை ]செய்தல் மிக நல்லது.
55, வீட்டை செப்பனிடம் முன் வாஸ்து
நிபுணர்களைக் கொண்டு தீர
நிதானமாக ஆராய்ந்த பின் பழுது
பார்க்கும் பணியை வேகமாகவும்
கவனமாகவும் செய்து முடிக்க
வேண்டும்.
56, வீடு பழுது பார்க்கும் பணிகளை
மெதுவாகச் செய்தாலும்
பரவாயில்லை பாதியில் நிறுத்தவேக்
கூடாது.
57, முறையான கணக்குகளுடன்
செய்யபட்ட பிரமிடுகளை வீட்டில்
உபயோகப்படுத்தி மூப்பினை அகற்றலாம்.
மேலும், மன உலைச்
சல், பல்வேறு பிரச்சனைகளை நீக்கி நிம்மதியாக
நம்மை
வாழவும் வைக்கின்றது.
58, வீட்டில் தினந்தோறும் சூரியோதம் சூரியன்
மறைவு நேரத்தில்
செய்யப்படும் அக்னி ஹோத்திரம்
சுற்றுப்புரச் சூழலை பாதுகாத்து
ஆரோக்கியமான வாழ்வு அமையவும்
உதவும். வீட்டில் நாமே
செய்யும் யாகமே அக்னி ஹோத்திரம்.
59, வீட்டில் தலைவாசல் அமைக்கும் போது
கட்டிடத்தின் முன்பக்கத்
தினை அளந்து அதை 9 சம பாகங்களாக்கி 4,
5, 6 வது பாகங்களில்
தகுதியான இடத்தில் தலைவாசல்
அமைக்கலாம்.
60 வீட்டின் தென் மேற்கு சேமிப்பு அறை ,
படுக்கை அறை, பீரோ, பெட்டி
வைக்கவும்,
61, வீட்டின் தெற்கில் படுக்கை அறை
இருப்பது நல்லது.
62, வீட்டின் தென்கிழக்கில்தான்
சமையல் கிழக்கே பார்த்து சமைக்கும்
படியாக இருத்தல் வேண்டும்.
63, வீட்டின் கிழக்கில்தான் குளியல் அறை
அமைத்தல் வேண்டும்.
64, வீட்டில் சாப்பிடுமிடம் மேற்கிலும்
சாப்பிடும்போது கிழக்கு திசை
பார்த்து சாப்பிட வேண்டும்.
65, வீட்டின் வட மேற்கில்தான் தானியக்
கிடங்கு இருத்தல் வேண்டும்.
66, வீட்டின் வடக்கில்தான் பணம் வரவு
வைத்தல் எடுத்தல்வேண்டும்.
67, வீட்டின் வடகிழக்கு திசையில்தான்
இறைவழிபாடு/ தியானம் செய்தல்
உயர்வானது.
68, வீட்டின் ந்டுவில் சந்திப்புக் கூடம் இருத்தல்
வேண்டும்.
69, வீட்டின் உள்ளே சூரிய ஒளி விழுதல் மிகமிக
உயர்வானது.
70, எதிர்வீட்டின் தலைவாசலுக்கு எதிரில் நம்
வீட்டு தலைவாசல் இருக்கவே கூடாது.
71, தினமும் பூஜையறையில் தெய்வ
பிரார்த்தனை செய்தல் வேண்டும்
விளக்கு ஏற்ற வேண்டும். நறுமண பத்தி
உபயோகப்படுத்துங்கள்.
72, தலைவாசல், கடைவாசல் நேர் எதிரில்
சூரிய ஒளி படிமிடமான
முற்றத்தில் துளசி மடம் அமைத்து வழிபடல்
நல்லது.
73, வீட்டின் முன்புறம் பூச்செடிகளும்,
பின்புறம் பலன் தரும் மரங்களும்
இருப்பது மிக மிக நல்லது.

Sunday 3 April 2016

ஏரல் சேர்மன் அருணாச்சலசுவாமிகள்

திருச்செந்தூர் அருகில் மேலப் புதுக்குடி
கிராமத்தில் 1880 அப்டோபர் 2ம் நாள்
ராமசாமி நாடார், சிவணைந்த
அம்மையார் அவர்களுக்கு சேர்மன்
அருணாசல சுவாமி பிறந்தார் . அருகில்
உள்ள கிராமத்தில் ஆரம்பக் கல்வி
பயின்றார். சிறுவயதிலேயே யோகக்கலை
பயின்றார். பின் திருவைகுண்டம் தாலுகா
ஏரல் மாநகரில் ஆரம்பக்கல்வி
பயின்றார். அங்கும் அவர் மவுன விரதம்
இருந்து பக்தி மார்க்கத்தை கடைப்பிடித்து
வந்ததால் நாளடைவில் பிரபலமானார்.
அவரைக் காண பொது மக்கள்
திரள ஆரம்பித்தனர். அப்படி தன்னைக்
காண வரும் மக்களுக்கும், நோய்
வாய்ப்பட்டவர்களுக்கும் வைத்திய
தொழில் செய்து வந்த தனது
குடும்பத்தின் பரம்பரை வழக்கப்படி சலக
நோய்களையும் குணப்படுத்தினார்.சாதி மதம்
பாராமல் அனைத்து சமூக மக்களுக்கும்
தொண்டாற்றினார் அருனாசல
சுவாமிகள்.
அவரது நீதியும் நேர்மையும் அவருக்கு மிகுந்த
செல்வாக்கை ஏற்படுத்திக்
கொடுத்தது.
பொதுமக்களின் வேண்டுகோளுக்கிண
ங்க 1906 செப்டம்பர் மாதம் 5ந்தேதி
முதல் 1908 ஜூலை மாதம் 27ந்தேதி வரை ஏரல்
பஞ்சாயத்து போர்டு சேர்மனாகப்
பணியாற்றினார். அதாவது அவரது 26ம்
வயதிலேயே சேர்மனானார். இப்பணியை
சிறப்பாக செய்ததால் சேர்மன் என்ற
பெயர் பெற்றார். சேர்மன்
சுவாமி ஒரு நாள் தன் இளைய சகோதரர்
கருத்தபாண்டி நாடாரை அருகில் அமர்த்தி
பல ஆசிகள் கூறி நான் ஒரு வாரத்தில்
(கலக வருடம் 1083ம் ஆண்டு) 1908 ஆண்டு
ஆடி மாதம் 13ந்தேதி (ஜூலை மாதம் 28ம்
தேதி) செவ்வாய்கிழமை ஆடி
அமாவாசை அன்று பகல் 12 மணிக்கு
இறைவன் திருவருடியில் சரணடைவேன் என்று
கூறினார்.
ஏரலுக்கு தென்மேற்கில் இயற்கை எழில்
கொஞ்சும் தாமரபரணி ஆற்றின்
கரையோரம் ஆலமரத்தின் அருகில் என்னை
சமாதி செய்ய வேண்டும். சமாதி
குழியில் என்னை வைத்து காத்திருங்கள். அந்த
நேரத்தில் மேலே கருடன் மூன்று முறை வட்டமிடும்.
கருடனின் நிழல் என் மேல் விழும்போது சமாதி
குழியை மண்ணும் மலர்களுமாக சேர்ந்து
மூடிவிடுங்கள் என்று கூறினார்.
சேர்மன் சுவாமிகள் சமாதி ஆகும் போது
வயது 28! திருமணம் ஆகாமலேயே சமாதி
ஆனார். அவர் சொன்ன
வாக்கின்படியே நடந்தது. அன்று முதல்
வற்றாத தாமிரபரணி ஆற்றின் வலது
கரையில் ஆலமரத்தின் ஓரமாக சமாதி
கொண்டார். இங்கு அவரை த்ரிசிக்க
வரும் பக்தர்களுக்கு மண்ணும், தண்ணீரும்
திருமருந்தாக கொடுக்கப்படுகிறது.
அருணாசல சுவாமியை வழிபட வரும்
பக்தர்கள் தாமிரபரணி ஆற்றில் குளித்து
விட்டு ஈரஉடையோடு வலம் வந்து,
கொண்டு வரும் புனித நீரை
லிங்கத்துக்கு அபிஷேகமாக ஊற்றுகின்ற
வழக்கத்தை கொண்டிருந்தனர்.
இதனால் மண்ணால் செய்த
லிங்கம் கரைந்து விடுமென்று கருதி
கல்லில் லிங்கம் செய்து வைக்க வேண்டும்
என் பக்தர்கள் நினைத்தார்கள். ஆனால்
மண்ணால் செய்து வைத்த லிங்கம்
புனித நீரை ஊற்ற ஊற்ற கரைவதற்கு
பதிலாக வளர்ந்து கொண்டு
வருவதாக ஐதீகம் உண்டு.
இதனால் இன்றும் மண்லிங்கமே
மூலஸ்தானமாக விளங்குகிறது. இது
சுயம்பாக அமைந்த லிங்கமாகும். ஏரல்
சேர்மன் அருணாசல சுவாமிகள் தன்னை
நாடி வரும் பக்தர்களின் குறைகளை தீர்த்து
அருளாசி வழங்கி வருகிறார் என்கிற
நம்பிக்கையில் இக்கோயிலுக்கு அதிகமான
பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
குறிப்பாக மன நோயால்
பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து தங்கி
குணமடைந்து செல்கிறார்கள்.

Saturday 2 April 2016

பஞ்சமுக திருஷ்டி பரிகாரம்

பஞ்ச முக திருஷ்டி பரிகாரம்
பசுஞ்சாணத்தில் மட்டும் செய்யப்பட்ட
ஒரு விரட்டியை எடுத்து அதில் கற்பூரம்,
தேங்காய் நார், அடுப்புக்கரி வைத்து அக்னியை
எழுப்ப வேண்டும் பிறகு காய்ந்த சிகப்பு
மிளகாய், உப்பு, மிளகு,வீதியில் நம் கால்
பட்ட மண், விட்டில் பெருக்கிய குப்பையில்
உள்ள மண், ஜந்தையும் வலது உள்ளங்கையில்
வைத்துக் கொண்டு.கணவன், மனைவி,
பிள்ளைகளை .அமர வைத்து.வயதில் பெரியோர்
வலது கையால், வலது பக்கம் மூன்று முறையும்
இடது பக்கம் மூன்று முறையும் சுற்ற வேண்டும்
பிறகு நெருப்பு எழுப்பப் பட்டுள்ள
விரட்டியின் மேல் போட்டு விட வேண்டும் பிறகு
அந்த விரட்டியை நெருப்புடன் முச்சந்தியில்
வைத்து விட வேண்டும் இதன் மூலம் அனைத்து
வித கண் திருஷ்டியும் விலகும் மிகவும் சக்தி
வாய்ந்த மூறை நன்றி: தொடர்புக்கு:
தன்வர்ஷன்:9176644121

Friday 1 April 2016

கௌரவர்கள் 100

பாண்டவர்கள் ஐவர் நாம் நன்கு
அறிவோம்.... அதுப்போல் கௌரவர்கள் நூறு பேர் :
1 துரியோதனன்- Duryodhana
2 துச்சாதனன்- Dussahana
3 துசாகன்- Dussalan
4 ஜலகந்தன் - Jalagandha
5 சமன் - Saman
6 சகன் - Sahan
7 விந்தன் - Vindhan
8 அனுவிந்தன் - Anuvindha
9 துர்தர்சனன்- Durdharsha
10 சுபாகு - Subaahu
11 துஷ்பிரதர்ஷனன் - Dushpradharsha
12 துர்மர்ஷனன் - Durmarshana
13 துர்முகன் - Durmukha
14 துஷ்கரன் - Dushkarna
15 காஞ்சநத்வாஜா - Kaanchanadhwaja
16 விகர்ணன்- Vikarna
17 சலன்- Saalan
18 சத்வன் - Sathwa
19 சுலோசனன் - Sulochana
20 சித்ரன் - Chithra
21 உபசித்ரன் - Upachithra
22 சித்ராட்சதன் - Chithraaksha
23 சாருசித்ரன்- Chaaruchithra
24 சரசனன் - Saraasana
25 துர்மதன் -Durmada
26 துர்விகன் - Durvigaaha
27 விவித்சு - Vivilsu
28 விக்தனன் - Vikatinanda
29 உர்ணநாபன் - Oornanaabha
30 சுநாபன்- Sunaabha
31 நந்தன் - Nanda
32 உபநந்தன் - Upananda
33 சித்திரபாணன்- Chithrabaana
34 அயோபாகன் - Ayobaahu
35 சித்திரவர்மன்- Chithravarma
36 சுவர்மன் - Suvarma
37 துர்விமோசன்- Durvimocha
38 மகாபாரு- Mahaabaahu
39 சித்திராங்கன் - Chithraamga
40 சித்திரகுண்டாலன் -Chithrakundala
41 பிம்வேகன் - Bheemavega
42 பிமவிக்ர - Bheemavikra
43 பாலகி - Vaalaky
44 பாலவரதன்- Belavardhana
45 உக்ரயுதன் - Ugraayudha
46 சுசேனன் - Sushena
47 குந்தாதரன்- Kundhaadhara
48 மகோதரன்- Mahodara
49 சித்ரயுதன் - Chithraayudha
50 நிஷாங்கி - Nishamgy
51 பஷி- Paasy
52 விருதகரன் - Vrindaaraka
53 திரிதவர்மன் - Dridhavarma
54 திரிதட்சத்ரன் - Dridhakshathra
55 சோமகீர்த்தி - Somakeerthy
56 அனுதரன் - Anthudaran
57 திரிதசந்தன் - Dridhasandha
58 ஜராசங்கன்- Jaraasandha
59 சத்தியசந்தன் - Sathyasandha
60 சதஸ் - Sadaas
61 சுவாகன் - Suvaak
62 உக்ரச்ரவன் - Ugrasravas
63 உக்ரசேனன் - Ugrasena
64 சேனானி - Senaany
65 துஷ்பரஜை- Dushparaaja
66 அபராஜிதன் - Aparaajitha
67 குண்டசை - Kundhasaai
68 விசாலாட்சன் - Visaalaaksha
69 துராதரன் - Duraadhara
70 திரிதஹஸ்தன் - Dridhahastha
71 சுகஸ்தன் - Suhastha
72 வத்வேகன்- Vaathavega
73 சுவர்ச்சன் - Suvarcha
74 ஆடியகேது - Aadithyakethu
75 பாவசி - Bahwaasy
76 நகாதத்தன் - Naagadatha
77 அமப்ரமாதி - Amapramaadhy
78 கவசி - Kavachy
79 கிராதன்- Kradhana
80 சுவீர்யவ - Suveeryava
81 குண்டபேடி - Kundhabhedy
82 தனுர்தரன் - Dhanurdhara
83 பீமபாலா - Bheemabala
84 வீரபாகு- Veerabaahu
85 அலோலுபன் - Alolupan
86 அபயன்- Abhaya
87 உக்ராசாய் - Ugrasaai
88 திரிடரதச்ரயன் -Dhridharathaasraya
89 அனாக்ருஷ்யன்-Anaadhrushya
90 குந்தபேதி - Kundhy
91 விரவி - Viraavy
92 சித்திரகுண்டலகன் - Chithrakundhala
93 தீர்தகாமாவு - Dhridhakarmaavu
94 பிரமாதி - Pramadhan
95 வீர்யவான் - Viraavy
96 தீர்கரோமன் - Deerkharoma
97 தீர்கபூ- Dheerkhabaahu
98 மகாபாகு - Mahabaahu
99 குந்தாசி - Kundhaasy
100 விரஜசன்- Virajass