Saturday 21 October 2017

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர்

4 நிமிடம் இருந்தாலே பிரம்மதோஷம், பில்லி, சூனியம் விலகும் - சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயில்

108 திவ்ய வைணவ தலங்களில் ஒன்றாக திகழ்கிறது சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில். சோளிங்கர் வேலூர் மாவட்டத்தில் உள்ளது. ஒரு “கடிகை நேரம், அதாவது ஒரு நாழிகை- (4 நிமிடங்கள்) மட்டுமே, இந்த திருத்தலத்தில் இருந்தாலே மோட்சம் கிட்டிடுமாம்! அத்தனை பெருமை உடையது “கடிகாசலம்’ என்று அழைக்கப்படும் சோளிங்கர்.

750 அடி உயரத்தில், 1305 படிக்கட்டுகளுடன் கடிகாசலம் எனும் ஒரே மலை குன்றின் மீது 200 அடி நீளம், 150 அடி அகலத்தில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ள இக்கோயிலில் லட்சுமி நரசிம்மர் யோக நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இவருடன் அமிர்தவல்லி தாயாரும் அருளாசி வழங்குகிறார். வடக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் இரண்டு திருச்சுற்றுகள் கொண்டுள்ள அழகிய கோயில்.

பொதுவாக பெருமாள் கோயில்களில் மூலவரின் கருவறையிலேயே, உற்சவ திருமேனிகளையும் வீற்றிருக்கச் செய்வர். ஆனால் சோளிங்கரில் மட்டும் யோக நரசிம்மர், மூலவர் மட்டுமே கிழக்கு நோக்கியபடி, சிம்ம சோஷ்டாக்ருதி விமானத்துடன் கூடிய கருவறையில் சேவை சாதிக்கிறார். மூலவர் யோக நரசிம்மசுவாமி சங்கு சக்ரதாரியாக நான்கு கரங்களுடன், இருகால்களையும் யோகாசனத்தில் மடித்து அமர்ந்தபடி யோகப்பட்டையுடன் காட்சி தருகிறார்.

விசுவாமித்திரர், ஒரு கடிகை நேரம் இம்மலையில் இருந்து இத்தலத்து இறைவனை வழிபட்டு பிரம்மரிஷி பட்டமும் பெற்றதாக வரலாறு உள்ளது. பக்தன் பிரகலாதனுக்கு காட்சி தந்த நரசிம்ம அவதார திருக்கோலத்தை தாங்களும் கண்டு ஆனந்திக்க வேண்டுமென வசிஷ்டர், காசியபர், அத்ரி, ஜமதக்னி, கவுதமர், பாரத்துவாஜர் ஆகிய முனிசிரேஷ்டர்களோடு, விசுவாமித்திரர் இத்திருத்தலத்தில் தவமிருந்தார்.

கடிகாசலத்தில் தவம் மேற்கொண்டிருந்த சப்தரிஷிகளுக்கு காலன், கேயன் எனும் இரு அரக்கர்கள் தொல்லை கொடுத்து வந்தனர். அவர்களை வதம் செய்வதற்காக ஆஞ்சநேயர், எம்பெருமானின் சங்கு சக்கரங்களை வேண்டிப் பெற்று அவற்றின் துணையோடு, அரக்கர்களை அழித்தார். மகரிஷிகள் எழுவரின் தவத்தினை மெச்சிய திருமாலும், திருக்கடிகைக்கு எழுந்தருளி நரசிம்ம மூர்த்தியாகக் காட்சியளித்தார். ஆஞ்சநேயரும் நரசிம்ம அவதாரக் காட்சியைக் கண்டு ஆனந்தத்தோடு, சங்கு சக்கரத்தோடு பெரியமலைக்கு எதிரில் யோக ஆஞ்சநேயராக அமர்ந்துவிட்டார்.

இம்மலையின் அருகே எதிர்திசையில் 350 அடி உயரத்தில், 406 படிக்கட்டுகள் கொண்ட, சிறிய மலையின் மீது ஆஞ்சநேயர் தியான நிலையில் அமர்ந்தபடி பக்தர்களின் குறைகளை நிவர்த்தி செய்து வருகிறார். ஆண்டு முழுவதும் கண் மூடிய நிலையில் தியானத்தில் இருக்கும் யோக நரசிம்மர், கார்த்திகை மாதத்தில் மட்டும் கண் திறந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பதாகவும்  ஐதீகம்.

உற்சவர் பக்தோசித பெருமாள், சுதாவல்லி, அமிர்தவல்லி எனும் தனது இருதேவியருடன், மலை அடிவாரத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் தனிக்கோயில் கொண்டுள்ளார். அங்கு அமிர்தவல்லித் தாயார் தனித்தனி சன்னதி கொண்டுள்ளார். அமிர்த தீர்த்தம், பிரம்மதீர்த்தம் ஆகியவை பக்ேதாசித பெருமாள் கோயில் அருகில் உள்ளன.

பில்லி, சூனியம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பிரம்மதீர்த்தத்தில் நீராடி மலைமீது அமர்ந்து அருள்பாலிக்கும் யோகநரசிம்மரையும், யோக ஆஞ்சநேயரையும் வணங்கினால் நோய்கள் நீங்கப் பெறலாம் என்பது நம்பிக்கை. தொட்டாச்சாரியார் ஆண்டுதோறும், காஞ்சிபுரம் சென்று வரதராஜப்பெருமாளை சேவித்து வருவதை வழக்கமாகக் கொண்டவர். வயது மூப்பு காரணமாக அவரால் காஞ்சிபுரம் வரை பயணிக்க முடியவில்லை.

ஒருநாள் இங்குள்ள தக்கான் குளக்கரையில் அமர்ந்தபடி, காஞ்சி வரதராஜப்பெருமாளையும், அவரது கருடசேவையையும் பற்றி சிந்தித்தபடி இருந்தார். அப்போது கருடவாகனத்தில் வரதராஜப்பெருமாள் தக்கான் குளக்கரையில் தொட்டாச்சாரியாருக்கு காட்சி தந்தார். இன்றும் காஞ்சிபுரம் வரதராஜர் பிரம்மோற்சவத்தின் 3ம் நாள், பெருமாள் கருட வாகனத்தில் சோளிங்கர் தக்கான் குளத்திற்கு எழுந்தருளுகிறார். இந்தக்குளத்தில் நீராடினால், பிரம்மதோஷம் கூட நீங்கும் என்பது ஐதீகம்.

இக்கோயில் சென்னையிலிருந்து 100கிமீ தொலைவிலும், வேலூரிலிருந்து 54 கிலோ மீட்டர் தொலைவிலும், அரக்கோணத்திலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவிலும், திருத்தணியில் இருந்து 27 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. சென்னையிலிருந்து ரயிலில் வருபவர்கள், அரக்கோணம் சென்று அங்கிருந்து பஸ் மூலம் சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலை சென்றடையலாம்.

*திருகடிகை ( சோளிங்கர்)  "ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருவடிகளே சரணம் "*

Saturday 14 October 2017

அர்ச்சனைக்கு எளிதான விநாயகரின் 16 நாமங்கள

ஓம் சுமுகாய நமஹா.

ஓம் ஏக தந்தாய நமஹா.

ஓம் கபிலாய நமஹா.

ஓம் கஜ கர்ணிகாய நமஹா.

ஓம் லம்போதராய நமஹா.

ஓம் விகடாய நமஹா.

ஓம் விக்ன ராஜாய நமஹா.

ஓம் கணாதிபாய நமஹா.

ஓம் தூம கேதவே நமஹா.

ஓம் கணாத் யக்ஷாய நமஹா.

ஓம் பால சந்த்ராய நமஹா.

ஓம் கஜானனாய நமஹா.

ஓம் வக்ர துண்டாய நமஹா.

ஓம் சூர்பகர்ணாய நமஹா.

ஓம் ஹேரம்பாய நமஹா.

ஓம் ஸ்கந்த பூர்வஜாய நமஹா.

ஓம் மஹா கணாதிபதயே நமஹா.

ஞானசுரப்பி & நெற்றிக்கண்

தெரிந்து கொள்ள வேண்டியவை நெற்றிக் கண் - ஞானசுரபி. ~~தியான_ரகசியம்.

~~~~~~🍁🍃Pineal Gland🍁🍃~~~~~~

மனித இனம் இழந்து கொண்டு இருக்கும் ஒரு சக்தியே இந்த Pine Gland . சித்தர்கள் , யோகிகள் அந்த காலத்தில் அடைந்த யோகத்தை ஏன் இன்று மனிதனால் அடைய முடியவில்லை ? என்றாவது யோசித்து_உள்ளீர்களா.?

அன்று சித்தர்கள் செய்த விடயங்களையே இன்று வரை ஆச்சரியமாக அமானுடமாக பேசிக்கொண்டு இருக்கிறோம் .ஏன் இன்று நம்மால் அந்த நிலையை அடைய முடியவில்லை ?

Pineal Gland இந்த சுரபி மனிதனின் நெற்றி பொட்டு மத்தியில் மூளையின் உள்ளே உள்ள சிறு பாகம் .இந்த சுரபியை தான் சிவனின் நெற்றி கண்ணாகவும் , புத்தினின் ஞானமாகவும் மற்றும் பல புராணங்களில் மறைமுகமாக கூறி உள்ளனர் .  உணவுகட்டுபாடு , தியானம் , மனதை ஒரு நிலை படுத்துதல் , முச்சு பயிற்சி போன்றவற்றை கைபற்றிவந்தால் இந்த சுரபி தானாக வேலை செய்ய துவங்கும் .. உடம்பில் உள்ள மற்ற சக்கரங்களும் இதனுடன் இணைந்தே உள்ளது .. ஆங்கிலத்தில் இதை "Soul Seed "என்று அழைப்பார்கள் அதாவது ஆன்மாவின் விதை . இந்த pineal gland உறுப்பின் முலமே நாம் நமது ஆன்மாவை அடைய முடியும் (Energy Body ). சுருக்கமாக சொல்ல போனால் மதங்கள் அனைத்தும் நாம் தான் கடவுள் என்ற பெரிய உண்மையை மறைக்க உருவாக்கப் பட்டவையே .

சித்தர்கள்_உணவு_உண்ணாமல்_பருகாமல் உயிர்வாழ்ந்ததின் ரகசியம் பிரபஞ்ச ஷக்தி .. இந்த பிரபஞ்ச ஷக்தி நாம் துங்கும் பொழுது நம் உச்சன் தலை மூலம் இறங்கி நம் உடல் முழுவதும் பரவும் .. இது போதிய அளவில் நம்மால் பெற முடியாததாலே தான் நாம் வேறு உணவுகளை நாடி செல்கிறோம் . இந்த பிரபஞ்ச சக்தியை அதிக அளவில் அடையும் வழி தான் தியானம்.🍁🍃

நாம் நமது ஆன்மாவில் இருந்து இந்த உலகிற்கு இந்த உடலில் ஒரு அனுபவத்திற்க்காக வந்துள்ளோம் . நமது உண்மையான உடல் நினைவுகள் அனைத்தும் அந்த ஆன்மாவிலேயே உள்ளது .இந்த Pineal GLand மட்டுமே நமது திட உடலுக்கும் ஆன்மாவிற்கும் உள்ள ஒரு வழி பாலம் என்று கூட சொல்லலாம் .. இந்த பாலம் சிதைக்க பட்டால் ?🍁🍃

இந்த Pineal Gland மூலம் தான் நம்மால் அடுத்த பரிணாமத்தை அடையமுடியும் (உண்மையான மேம்பட்ட பரிணாமம் என்று கூட சொல்லலாம் ). இது தான் மனித குலத்தின் குறிக்கோளை அடைய ஒரே வழி .🍁🍃

என்ன_ஆயிற்று_இன்றைய_மனிதனின் Pineal Gland ?உலக அரசுகள் ( அதன் பின்னிருக்கும் இல்லுமினாட்டி )நமது உணவு பொருள்களில் நஞ்சை கலந்தது இந்த pineal gland ஐ முடக்க பார்க்கின்றன .. இந்த Pineal GLand இன் எதிரி FLuride என்னும் வேதி பொருள் .. உடலில் எந்த இடத்தில் நீங்க Fluride இருந்து கொன்டாலும்  இந்த pinealgland அதை ஈர்த்துகொள்ளும் .. பிறகு Pineal Gland இதனால் பாதிக்கப்படும் . இந்த FLuride அமெரிக்கனாட்டின் குடி தண்ணீரில் பரவலாக கலக்கபடுகிறது , நாம் பயன் படுத்து பல பொருள்களில் மறைமுகமாக கலக்கப்பட்டு அதை சிதைவுற செய்கிறார்கள் குறிப்பாக நமது பற்பசையில் (toothpaste ) இல் இது அதிக அளவுகளில்  கலக்க படுகிறது .

DMT  - Dimethyltryptamine

இது உலகின் அனைத்து நாடுகளிலும் தடை செய்யப்பட்ட ஒரு போதைப்பொருள் .. அதுவும் அமெரிக்க நாட்டில் Class -1 ரக போதை பொருள் .. இதை பயன்படுத்தினால் பேச்சே கிடையாது உங்களை கைது செய்து விடுவார்கள் .. அவ்வளவு பெரிய போதை பொருளா என்று எண்ணாதீர்கள் ..
 
இந்த வேதி பொருள் உலகில் உள்ள எல்லா உயிரினங்களிலும் உள்ளது முக்கியமாக தாவரங்கள் . ஆழ்ந்த தியானத்தின் பொழுது நமது Pineal gland சுரக்கும் ஒரு வேதி பொருளே இந்த DMT . ~~~~??????~~~~~

ஆம் இயல்பாக சுரக்க வேண்டிய திறனை இல்லுமினடிகள் சூழ்ச்சியால் உணவு பொருள்களின் மூலம் குறைத்து விட்டார்கள் .

அதே போல் நமது பாரம்பரிய தானியங்களையும் அழித்து மரபணு மாற்றப்பட்ட விதிகளையும் , காய் கனிகளையும் அளித்து பசுமை புரச்சி என்ற பெயரில் தாவரங்கள் மூலம் நமக்கு வரவேண்டிய Dimethyltryptamine யை தடுத்து விட்டார்கள் .

எனவே இன்னும் 2,3 தலை முறைகளுக்கே இந்த PIneal gland மனித இனத்திற்கு ஓரளவு செயல்திறனுடன் இருக்கும் . அதன் பின் வரும் மனித இனத்துக்கு appendix சதை போல தேவை ஆற்ற பொருளாகி விடும் .

இந்த DMT யை தயார் செய்து உட்கொண்டால் என்ன நடக்கும் ?

அமெரிக்க பழங்குடியினர் அதிலும் Shamans (பேய் ஓட்டுபவர்கள்) வேறு உயர்நிலை உயிர்களிடம் தொடர்பு கொள்ள பயன்படுத்தி உள்ளனர் .

இந்த DMT யை சிலருக்கு கொடுத்து ஆராய்ச்சிகள் நடத்த பட்டது அவர்கள் அனைவரும் ஒரே வகையான அனுபவத்தை அடைந்ததாக கூறுகிறார்கள் .

வேறு ஒரு உயிரினங்களை கண்டோம் , ஒரு சிலர் புத்தர் ,மற்றும் சில கடவுள்களை கண்டதாகவும் கூறி உள்ளனர்  அது போதை என்று ஒதுக்கி விட முடியாது . யோசித்து பாருங்கள் அந்த காலத்தில் சித்தர்கள் கடும் தவத்தின் முலமே கடவுள்களை உணர்ந்துள்ளனர் .கடும் தவம் இந்த வேதி பொருளை தான் மூலையில் உற்பத்தி செய்கிறது .

இந்த DMT தொட்டாசினுங்கியின் வேர்களில் அதிக அளவில் உள்ளது .

இந்த_அறிய_உறுப்பை_கொண்ட_கடைசி தலைமுறை நாமாக கூட இருக்கலாம் ..

மீடியா வில் காட்டப்படும் பல என்ன சிதரல்களை தவிர்த்து தியானத்தை கடை பிடித்து, இயற்க்கை உணவுகளை உண்டால் நாமும் அந்த நிலையை அடையலாம்.

🍁🍃 சித்தர்கள் ஞானிகள் நமக்கு முன்னோடிகளே. இதன் வழியே பின் பற்றி நம் தாத்தா பாட்டி சொல்லும் மருந்தும்....

Lord shiva namavali

*சைவ முழக்கம்*

மெய்யன்பர்களே திருக்கோவிலில் வழிபாடு செய்வதற்கு முன்பு பரம்பொருளின் ( சிவபெருமானின்) நாமாவளி சொல்ல வேண்டும் சொல்லிய பின் வழிபாடு தொடங்கலாம்

நாமாவளியைப் பற்றிப் பார்ப்போம்

1. அரகர நம பார்வதி பதயே அரகர மகாதேவா

2. தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

3. ஏகம்பத்துறை யெந்தாய் போற்றி
பாகம் பெண்ணுருவானாய் போற்றி

4. அண்ணாமலையெம் அண்ணா போற்றி
கண்ணார் அமுதக் கடலே போற்றி

5. ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
சீரார் திருவையாறா போற்றி

6. பராய்த்துறை மேவிய பரனே போற்றி
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி

7. குற்றாலத்தெங் கூத்தா போற்றி
கோகழி மேவிய கோவே போற்றி

8. அருளிட வேண்டும் அம்மான் போற்றி
இருள் கெட அருளும் இறைவா போற்றி

9. ஆடக மதுரை அரசே போற்றி
கூடல் இலங்குரு மணி போற்றி

10. தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்று எனக்கு ஆர் அமுது ஆளாய் போற்றி

11. அருமையில் எளிய அழகே போற்றி
கருமுகில் ஆகிய கண்ணே போற்றி

12. மண்ணிய திருஅருள் மலையே போற்றி
சென்னியில் வைத்த சேவக போற்றி

13. காவாய்க் கனகதிரளே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி

இந்த போற்றி துதிகளை சொல்லி வழிப்பாட்டை நிறைவு செய்ய வேண்டும் மெய்யன்பர்களே

திருச்சிற்றம்பலம்

தலயாத்திரை செல்லும் போதும் வழிபாடு செய்யும் போதும் இந்த சிவ நாமத்தை சொல்லலாம் இது மேலும் சிவனடியார்களுக்கு புத்துணர்ச்சி வரும் மெய்யன்பர்களே

1. சிவாய நம ஓம் சிவாய நம ஓம்
சிவாய நம ஓம் சிவாய நம ஓம்

2. அண்ணாமலை சிவ சிவாய நம ஓம்
அருணாசல சிவ சிவாய நம ஓம்

3. ஆலங்காடா சிவாய நம ஓம்
ஆரூர் அரசே சிவாய நம ஓம்

4. இன்னம்பர் ஈசா சிவாய நம ஓம்
இன்றெனக் அருள்வாய் சிவாய நம ஓம்

5. ஈங்கோய் மலையாய் சிவாய நம ஓம்
ஈங்கெழுந்தருள்வாய் சிவாய நம ஓம்

6. உண்ணாமுலை சிவ சிவாய நம ஓம்
உண்மைப்பொருளே சிவாய நம ஓம்

7. ஊனம் ஒன்றில்லாய் சிவாய நம ஓம்
ஊழி ஏழானாய் சிவாய நம ஓம்

8. எழுத்தறி நாதரே சிவாய நம ஓம்
என்றும் இளையாய் சிவாய நம ஓம்

9. ஏகம்பம் மேயாய் சிவாய நம ஓம்
ஏடகத்துறைவாய் சிவாய நம ஓம்

10. ஐந்தெழுத்து உருவாய் சிவாய நம ஓம்
ஐயாறு மேயாய் சிவாய நம ஓம்

11. ஒற்றியூர் உள்ளாய் சிவாய நம ஓம்
ஒண்பொருளே சிவ சிவாய நம ஓம்

12. ஓண காந்தேஸ்வர சிவாய நம ஓம்
ஓலம் அடிகேள் சிவாய நம ஓம்

13. சிவாய நம ஓம் அபாயம் யாவும் போம்
அபாயம் யாவும் போம் உபாயம் அறிவோம்

14. உபாயம் அறிவோம் உள்ளம் அது தெளிவோம்
உள்ளமது தெளிவோம் சிவாய நம ஓம்

15. சிவ சிவ என்போம் சிவகதி பெறுவோம்
அர அர என்போம் அவன் தாள் பணிவோம்.

இந்த சிவ நாமாவளியை நாள் தோறும் வழிப்பாட்டில் சேர்த்துக் கொள்வோம் சிவயின்பம் பெறுவோம்....

திருச்சிற்றம்பலம்.

Thursday 12 October 2017

அக்னிஹோத்ரம்

எனக்குள் சில நாட்களாகவே ஒரு நெருடல். “ஏன் இப்படி புதிய புதிய நோய்கள் அவதாரம் எடுக்கின்றன?” என்று. அப்போது போபால் விஷவாயு சம்பவமும், அதிலிருந்து ஒரு குடும்பம் தப்பித்ததும்  பத்திரிகைகளில் வெளியாகி இருந்த செய்தி நினைவுக்கு வந்தது. வேதம்,  இதிகாசம், புராணம் இதிலெல்லாம் நம்பிக்கை கொள்வது அல்லது விட்டுவிடுவது என்பது தனிமனித விஷயம்.

ஆனால், சில பழமையான நூல்களில் சொல்லப்பட்டுள்ள சில பாரம்பரிய நம்பிக்கைகள் அது ஆன்மீகம் என்பதை விட அறிவியலாக இருந்திருக்கிறது என்பதை அது நினைவுபடுத்தியது. போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்லை. இதற்கு காரணம் யாகமல்ல. யாகத்தில் போடப்பட்ட பொருட்களும் அதிலிருந்த வெளிக்கிளம்பிய அனலும், மெல்லிய புகையும் தான் நச்சுப்புகையை அந்த வீட்டிற்குள் வரவிடாமல் தடுத்து நிறுத்தியதும் தான் காரணம்!

இப்படி கொடுமையான விஷவாயுவை கூட முறியடிக்கும் சக்தி இந்த யாகத்திற்கு இருந்திருக்கிறது என்றால் இந்த ஈ, எலி, பன்றி, பறவை, கொசுக் காய்ச்சல்களை பரப்ப சுற்றுப்புற காற்றில் அலைந்து திரியும் கிருமிகளை அழிக்க முடியாமலா இருக்கும்? அதற்கும் பதில் சொல்லியிருக்கிறது அதர்வணம். சுற்றுப்புறக் காற்றில் உள்ள நோய்க் கிருமிகளையும், அசுத்தஙகளையும் நீக்கும் யாகத்தீக்கு ‘அக்னிஹோத்ரம்’ என்று பெயரிட்டிருக்கிறார்கள்.

நல்ல சுற்றுப்புறத்தை ஐந்து எளிமையான அடிப்படையான மூலாதரமான விதிகளின் படி வேள்வித் “தீ” மூலம் உண்டாக்கலாம் என்கிறது சில பழங்கால வேதங்கள். அதில் ஒன்று தான் அக்னிஹோத்ரம். அதாவது வேள்வித்தீயின் மூலம் சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்தலாம் என்கிறது வேதங்கள்.

இந்த அக்னிஹோத்ரம் பற்றி ‘இன்ஸ்டிடியூட் பார் ஸ்டெடீஸ் இன் வேதிக் சையின்ஸ்’ என்ற நிறுவனம் வெளியிட்ட ஒரு கையேட்டில் காணப்பட்ட தகவல்கள் உங்கள் பார்வைக்கு….

காற்றில் ஒரு ஊசி மருந்து
*****************************

“நம் உடலில் நோயை உண்டாக்கும் நச்சுக்கிருமிகளை அறவே ஒழிக்க முடியாது. ஆனால் அவற்றிலிருந்து நம்மை தற்காத்து கொள்ள வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொள்கிறோம். அதுபோல் நம்மை சுற்றி காற்றில் உலாவும் அசுததங்களை நம்மால் களைய முடியாத நிலையில் அவற்றின் தீய வினைகளிலிருந்து நம்மை காத்துக்கொளள முடியும்.

உடலில் ஊசி போடுவது போல சுற்றுப்புறக்காற்றில் செலுத்தப்படும் ஒரு ஊசி தான் அக்னி ஹோத்ரம். இந்த அக்னி ஹோத்ரத்தால் நமது சுற்றுப்புறம் மட்டுமல்ல. யாகத்தீயில் இருந்து வரும் மணம் நமது மனதையும் அமைதிப்படுத்துகிறது.

அக்னி ஹோத்ரம் என்பது….
*****************************

இயற்கை சமன்பாட்டிற்கும் மனித வாழ்வின் முன்னேற்றத்திற்கும் அவசியமாக இருந்து ஜீவராசிகளின் சீர் பிரமாணத்திற்காக சூரியோதத்திலும் சூரிய அஸ்தமனத்திலும் செய்யப்படும் யாகத்தின் அடிப்படையிலான செயல்முறை.

சுற்றுப்புறக் காற்று தான் நமது நாசி வழியாக இழுக்கப்பட்டு உடலை உயிரோட்டமுடன் வைக்கிறது. இந்த சுற்றுப்புறக் காற்றுக்கு உயர்ந்த குணமளிக்கும் சக்தியை கொடுக்கும் ஒரு செயல்.

அக்னி ஹோத்ரம் செய்ய அடிப்படை தேவைகள்
************************************************

1. நிச்சயமான நேரங்கள்

2. தீ (அக்னி) பசுஞ்சாண விரட்டியால் உண்டாக்கப்படுவது.

3. குறிப்பிட்ட அளவுடைய பிரமிட் தோற்றம் கொண்ட செப்பு பாத்திரம்.

4. சுத்தமான பசுநெய் தடவப்பட்ட முனை முறியாத பச்சரிசி

5. மந்திரங்கள்.

இதில் நிச்சயமான நேரங்கள் என்பது, இயற்கையின் தாளகதியான சூரிய உதயம் மற்றும் சூரிய அத்தமனம்.

(சூரியோதத்தின் பல நெருப்புகள், ஒளி அலைகள், மின்சாரங்கள், ஈதர்கள் மற்றும் நுட்பமான சக்திகள் எல்லா வழிகளிலும் பரவி பாய்கின்றன. தீவிரமான இந்த ஒளி வெள்ளம் பரவசத்தை ஏற்படுத்தி சுறுசுறுப்பை உண்டாக்குகின்றது. மேலும் அது பாயும் வழியில் உள்ள எல்லாவற்றையும் சுத்தப்படுத்தி உயிர்ப்பிக்கின்றது. சூரிய அத்தமனத்தில் ஒளிவெள்ள அதிர்வுகள் மறைகின்றன. அப்பொழுது நோய்க்கிருமிகள் பெருகி அழிக்கும் சக்தியாக செயல்படும். எனவே அக்னிஹோத்ரம் செய்தால் சுற்றுப்புறக்காற்றில் கிருமிகளின் பெருக்கத்தை தடுக்கும்)

அக்னி (தீ) மற்றும் பிரமிட் பாத்திரம்
**************************************

பிரமிட் உருவ (பிரமிட் என்ற வடிவத்தை பற்றி ஆய்வு செய்த லண்டனை சேர்ந்த விஞ்ஞானிகள் அதிர்ந்து போனார்கள். காரணம், அது அறிந்து கொள்ளப்பட்ட அனைத்து விஞ்ஞான மற்றும் எலக்ட்ரானிக்ஸ் விதிகளுக்கு சவாலாக உள்ளது என்றார்கள். (psychic discoveries Behind Iron Curtain) புத்தகத்தில் பிரமிட்டின் உட்பகுதியில் இருக்கும் மின்காந்த சக்தி அதனுள் இருக்கும் பொருட்களின் சிதைவடைதலை தடுக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. (பிரமிடில் வைக்கபட்ட உடல் சிதைவுறாது. துர்நாற்றம் வீசாது)

தாமிர பாத்திரத்தில் உலர்ந்த பசுஞ்சாண விராட்டியில் நோய் பரவுதலை தடுக்கும் மூலங்கள் உள்ளதை ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. பசுஞ்சாணத்தில் மென்தால், அம்மோனியா, பீனால், இன்டால், பார்மலின் முதலிய ரசாயனங்களும் முக்கிய நோய்க்கிருமிகளை அழிக்கும் சக்தியும் உள்ளது.  யாக மரங்கள் என்று கூறப்படும் ஆல் (Ficul Bengalnesis), அத்தி (Ficus Glometra), புரசு (Butea Prondosa), அரசு (Ficus Religiosa), வில்வம் (Aegle Marmelos) ஆகிய மரங்களில் உலர்ந்த குச்சிகள் மருத்துவ சக்தி கொண்டது. இவற்றை பசுஞ்சாணத்துடன் பயன்படுத்தும் போது நன்மைகள் அதிகரிக்கும்.

செய்முறை
************

பசுஞ்சாண விராட்டியையும் உலர் மரக்குச்சிகளையும் பிரமிட் உருவ தாமிர பாத்திரத்தில் உள்ளே காற்றோட்டத்துடன் சரியாக எரிய வைக்க வேண்டும். அதிகாலையில் மற்றும் மாலையில் அக்னி ஹோத்ர நேரத்தில் (சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம்) தீ கொளுந்து விட்டு எரியவேண்டும். புகை உண்டாக்கக்கூடாது. ஜுவாலை நெருப்பாக இருக்க வேண்டும். உடையாத முழுமையான பச்சரிசி – கைக்குத்தல் அரிசியை ஒவ்வொரு நேரத்திற்கு இரண்டு சிட்டிகைகளாக இந்த நெருப்பில் போட வேண்டும். சுத்தமான பசுநெய்யை இந்த நெருப்பில் சொட்டு சொட்டாக  விட வேண்டும். இந்த நெய், உப்பு சேர்க்காத பதப்படுத்தும் பொருள் அல்லது ரசாயனங்கள் சேர்க்காத சுத்தமான பசு நெய்யாக இருப்பது  முக்கியம். இப்படி வேள்வி தீயை வீட்டில், சரியாக சூரியோதத்திலும், சூரிய அஸ்தமனத்திலும் முறையே இரு தடவை செய்ய வேண்டும்.

இப்படி உருவாக்கும் வேள்வித் தீயிலிருந்து 4 வகையான வாயுக்கள் உற்பத்தியாகின்றன.

1 எத்திலின் ஆக்சைடு

2, புரேப்பலின் ஆக்சைடு

3. பார்மால்டிஹைடு

4. ப்யூட்டோ பயோலேக்டோன்.

இந்த வேள்வி தீயால் என்ன நடக்கிறது என்பதற்கு ஒரு உதாரணத்தை மட்டும் பார்க்கலாம். நெய்யை தீயில் சொட்டு சொட்டாக விடும் போது நெய்யானது உஷ்ணத்தைக் கொண்ட அசிட்டிலின் வாயுவை உற்பத்தி செய்கிறது. இது நம்மை சுற்றி இருக்கும் அசுத்தம் அடைந்த காற்றை உறிஞ்சி சுற்றுப்புறத்தை சுத்தம் செய்கிறது.

மந்திரங்கள்
**************

அதிகாலையில் உச்சரிக்கப்பட வேண்டிய அக்னிஹோத்ர மந்திரம்

சூர்யாய ஸ்வாஹா சூர்யாய இதம் நம: |
பிரஜாபதயே ஸ்வாஹா பிரஜாபதயே இதம் நம: ||

மாலையில் உச்சரிக்கப்பட வேண்டிய அக்னிஹோத்ர மந்திரம்

அக்நயே ஸ்வாஹா அக்நயே இதம் நம: |
பிரஜாபதயே ஸ்வாஹா பிரஜாபதயே இதம் நம: ||

இந்த வேள்வி தீ எரியும்  போது நாம் அதன் அருகில் அமர்ந்து மந்திரங்களை சொல்லலாம். இந்த அக்னியானது தாமிரப்பாத்திரத்தில் எரியும் போது முடிந்த வரை குடும்ப உறுப்பினர்களுடன் இந்த மந்திரங்களை உச்சரித்து தியானம் செய்யுங்கள். மன இறுக்கத்திலிருந்து மீண்டு ஓய்வாக இருப்பதை உணர்வீர்கள்.

என்ன  நடக்கிறது?
********************

இந்த ஜுவாலையின் அனல் நம்மை சுற்றி இருக்கும் நச்சுக்கிருமிகளை எல்லாம் கிரகித்து அழித்து விடும். ஒரு வீட்டில் தொடர்ந்து செய்யப்படும் போது அந்த வீட்டிலும் சுற்றுப்புறத்திலும் நோய்க்கிருமிகள் உலாவுவதற்கான வாய்ப்புகள் குறைவு. எனவே உங்கள் உடல் நலனை காக்க அக்னிஹோத்ரத்தை செய்து வரலாம்.

பொது  இடங்களில் செய்யலாம்
**********************************

இந்த செயலை பல ஆயிரக்கணக்கான நோயாளிகள் குவிந்து வரும் அரசு மருத்துவமனைகள், மிக அதிக மக்கள் குழுமும் இடங்களில் எல்லாம் கடைப்பிடித்தால் அந்த இடங்களில் உள்ள நச்சுக்கிருமிகள் அழிக்கப்பட்டு சுற்றுப்புறக்காற்று சுத்தமானதாக மாறிவிடும். நோயாளிகளை பார்க்க வரும் நல்ல ஆரோக்கியமுள்ள பலர் இந்த நோய்க்கிருமிகளால் பாதிப்புள்ளாகாமல் தடுக்கும் ஒரு முயற்சியாக இந்த யாகத்தீ அமையக்கூடும். மேலும் நோயாளிகளின் நோய்க்கிருமிகளும் எளிதில் அவர்களை விட்டு விலகி குணமடைய வாய்ப்பிருக்கிறது. முயற்சிக்கலாமே!

அக்னி ஹோத்ரத்தின் நன்மைகள்
*************************************

ஒருவரிடம் இருக்கும் போதைப் பொருள் பழக்கத்தின் தீவிரத்தன்மையை குறைக்கும்.

அதிசயிக்கத்தக்க அளவில் குழந்தைகளிடமும் பெரியவர்களிடமும் ஒரு அமைதியான மனதை ஏற்படுத்தும்.

முன்தலைவலி, சைனஸ், தோல் படை, மைக்ரேன் தலைவலி உள்பட சில நோய்களை குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. விவசாயத்தில் விதைகள் சீக்கிரமே முளை கிளம்பி தளிர் விடும். விளைச்சலை அதிகப்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.

பசுஞ்சாணத்தால் மெழுகப்பட்ட வீட்டின் சுவர் அணுக்கதிர் வீச்சுக்களை கூட தடுக்கும் சக்தி வாய்ந்ததாக ஒரு ரஷிய விஞ்ஞானி சொல்லியிருக்கிறார்.

நாசா விஞ்ஞானிகளின் கூற்றுப்படி பிரமிட் என்ற உருவத்தின் சக்தி சூரிய சக்தியைவிட புரட்சிகரமானதாக இருக்கும்.

பிரமிட் உருவ கட்டிடங்களில் இருக்கும் போது மனவியாதி நோயாளிகள் அபூர்வமான மன அமைதியை அடைகிறார்கள்.

பிரமிட்டில் மின்காந்த கதிர்களும், காஸ்மிக் கதிர்களும் குவிகின்றன.

இப்படி இதனை பற்றி பல தகவல்கள் தரப்பட்டுள்ளன. இங்கு சுருக்கப்பட்டிருக்கிறது.

                                          சுபம்

- *சித்தர்களின் குரல் shiva shangar*