Thursday 24 November 2016

ராகு கேது

ராகு & கேது
நவ கிரகங்களில் நிழல் கிரகம் என
வர்ணிக்கப்படும் ராகு&கேது இருவருக்கு
சொந்த வீடு இல்லை. தங்கள்
இருக்கும் இடத்தையே சொந்த வீடாக
கொண்டு பலன் தருவார்கள்.
பொதுவாக ராகு பகவான்
தந்தை வழி தத்தாவிற்கு திடீர் வளர்ச்சி, தீய
பழக்க வழக்கம், வேறு சாதி, வேறு மதம்,
வயிறு கோளாறு, விபத்து, நவீன கரமான
செயல் போன்றவைக்கு காரகன்
ஆவார்.
ஜென்ம லக்கினத்திற்கு 12
பாவங்களில் ராகு&கேது இருந்தால்
உண்டாகும் பலன்கள்;-&
ஜென்ம லக்கினத்தில் ; ராகு
இருந்தால் முன் கோபம், வேகம், விவேகம்,
முரட்டுத்தனம் அகோர முகம் இருக்கும். கேது
இருந்தால் நிதானம், ஆன்மீக,
தெய்வீக எண்ணம், சோம்பேறித்தனம்
ஏற்படும்.
2ல் ராகு இருந்தால் குடும்பத்தில் ஒற்றுமை
இல்லாத நிலை, பேச்சில் முரட்டுத்தனம், தன
நெருக்கடி, களத்திர தோஷம்
உண்டாகும். 2ல் கேது இருந்தால் ; பேச்சில்
நிதானம், குடும்ப வாழ்வில் ஈடுபாடு
இல்லாத நிலை, ஆன்மீக தெய்வீக
செயல்களில் ஈடுபாடு ஏற்படும்.
3ல் ராகு இருந்தால் எடுக்கும் முயற்சியில்
வெற்றி தைரியம் துணிவு
ஏற்படுமென்றாலும் சகோதர தோஷத்தை
தரும் 3ல் கேது இருந்தால் ; ஏற்றம், உயர்வு,
உடன் பிறப்பிற்கு தோஷம் என்றாலும்
பெண் உடன் பிறப்பு ஏற்படலாம்.
4ல் ராகு இருந்தால் கல்வியில் தடை,
தாய்க்கு தோஷம் கண்டம், சொந்த
வீடு வாகனம், அமையத் தடை, சுக வாழ்வு,
சொகுசு வாழ்வு பாதிப்பு
ஏற்படும் 4ல் கேது இருந்தால் ; தாய்க்கு
தோஷம், கல்வியில் தடை என்றாலும் மருந்து
கெமிக்கல் தொடர்புள்ள கல்வி,
பரந்த மனப்பான்மை உண்டாகும்.
ராகு 5ல் இருந்தால் உயர் கல்வியில் தடை,
பூர்வீக தோஷம், புத்திர தோஷம் வயிறு வலி
உண்டாகும். கேது 5ல் இருந்தால் ; வயிறு
கோளாறு, புத்திர தோஷம் என்றாலும்
பெண் குழந்தை யோகம் உண்டாகும்.
ராகு 6ல் இருந்தால் எடுக்கும் முயற்சி
வெற்றி, எதிரிகளை வெல்லும் அமைப்பு
தைரியம் துணிவு உண்டாகும். நிண்ட ஆயுள்
எதிர் பாராத பண வரவு உண்டு. கேது 6ல்
இருந்தால் ; புகழ், பெருமை, எடுக்கும்
முயற்சியில் அனுகூலம், வீண், வம்பு வழக்கு
ஏற்படும்.
ராகு 7ல் இருந்தால் களத்திர தோஷம், வே-று
மதம் பெண்ணை திருமணம்
செய்யும் நிலை, கூட்டாளிகளால்
அனுகூலம் இல்லாத நிலை ஏற்படும் கேது 7ல்
இருந்தால் ; காதல் திருமணம், மண
வாழ்வில் பிரச்சனை உண்டாகும். சுக
வாழ்வு பாதிப்பு.
8ல் இருந்தால் ; ராகு 8ல் இருந்தால்
ஆரோக்கியம் பாதிக்கும் நிலை, விபத்து,
விஷத்தால் கண்டம், களத்திர வழியில்
உறவினர்கள் பகை உண்டாகும்.கேது 8ல்
இருந்தால் ; உடல் நிலை பாதிப்பு,
உறவினர் பகை, விபத்து குடும்ப வாழ்வில்
ஒற்றுமை இல்லாத நிலை உண்டாகும்.
ராகு 9ல் இருந்தால் வெளியூர்
வெளிநாடு மூலம் அனுகூலம், தந்தைக்கு
கெடுதி, தந்தை வழி உறவினர் பகை,
தவறான பழக்க வழக்கம் உண்டாகும்.
பெண்னென்றால் புத்திர தோஷம்
உண்டாடும்.கேது 9ல் இருந்தால் ; தந்தைக்கு
தோஷம், தெய்வீக காரியம்,
பொது காரியங்களில் ஈடுபடும் நிலை,
பொருளாதார நெருக்கடி,
கஷ்டம் உண்டாகும்.
ராகு 10ல் இருந்தால் எதிர்பாராத
உயர்வு, ஏற்றம் நவீனகரமான
செயல் மூலம் சம்பாதிக்கும் அமைப்பு,
திடீர் தன வரவு ஏற்படும். கேது 10ல்
இருந்தால் ; பொதுக்
காரியங்களில் ஈடுபடும் நிலை, எதிலும்
நிதானம், நேர்மை இருக்கும்.
ராகு 11ல் இருந்தால் எதிர்பாராத
உயர்வு ஏற்படும். தொழில் சுய
முயற்சியால் வெற்றி,
ஸ்பெகுலேஷன் மூலம் உயர்வு
உண்டாகும். மூத்த சகோதர தோஷம் ஆகும். கேது
11ல் இருந்தால் ; எடுக்கும் முயற்சியில்
வெற்றி அனுகூலம், தொழில்
ரீதியாக லாபம் உண்டாகும். மூத்த
சகோதர தோஷம், சகோதரி வாய்ப்பு உண்டு.
ராகு 12ல் இருந்தால் கண்களில்
பாதிப்பு, கட்டில் சுக வாழ்வில் பிரச்சனை
என்றாலும் வெளியூர் வெளிநாடு
மூலம் அனுகூலம் உண்டாகும். கேது 12ல்
இருந்தால் ; ஸ்தல தரிசனம் உண்டாகும்.
மறு பிறவி இல்லை. கட்டில் சுக வாழ்வில்
ஈடுபாடு இல்லாத நிலை ஏற்படும்.

Monday 7 November 2016

உங்கள் மனைவி எப்படி?


----------------------------------------
ஜோதிடத்தில் பலன் உரைக்கும் வழி முறைகள் பல
உள்ளன. அத்தகைய வழி முறைகளில் பிருகு
முனிவரால் இயற்றப்பட்ட பிருகு நாடியும்,
நந்திகேஸ்வரரால் இயற்றப்பட்ட நந்தி
நாடியும் ஜோதிட பலன்களை துல்லியமாக
உரைக்கின்றன. இந்த நாடி முறைகள் பலன்
கூறும் வழியை தெளிவாக
எடுத்தியம்புகின்றன. ஜோதிட பலன்கள்
கேட்பவர்கள் பெரும்பாலும் தங்களுடைய
படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம்,
உடல் நலம், சொத்து சுகம்
இவைகளைப்பற்றி முன் கூட்டியே அறிந்து
கொள்ள விரும்புகிறார்கள்.
திருமண விசயம் பற்றி பிருகு-நந்தி நாடி
கூறும் சில விதிகளைப்பார்ப்போம்.
பிருகு-நந்தி நாடி முறைப்படி ஆண்
ஜாதகத்தில் மனைவியைக்குறிக்கும் கிரகம்
சுக்கிரனாகும். ஒருவர் ஜாதகத்தில்
சுக்கிரன் பன்னிரண்டு ராசிகளில் எந்த
ராசியில் நிற்கிறாரோ
அதைக்கொண்டு அந்த ஜாதகருக்கு
வரும் மனைவியைப்பற்றி சில விவரங்களை
தெரிந்துகொள்ளலாம்.
1. மேசத்தில் சுக்கிரன் நின்றால்
ஜாதகருக்கு வரும் மனைவி இளமையான
தோற்றமுடையவள், சுறு சுறுப்பானவள்,
ஜாதகருக்கு வரும் மனைவி
சொந்தக்காரியாகவோ அல்லது
சொந்த ஊர்க்காரியாகவோ
அல்லது சொந்த பந்தங்கள்
வசிக்கும் ஊர்க்காரியாகவோ இருப்பாள்.
ஜாதகருக்கு சரியான உடல்
பொருத்தம் உள்ள மனைவியாக
இருப்பாள். உஷ்ண தேகம்
உடையவளாகவும் கோபக்காரியாகவும்
மனைவி இருப்பாள். மனைவி பிறந்த ஊர்
ஜாதகன் பிறந்த ஊருக்கு கிழக்கு திசையில்
இருக்கும். மனைவியின் வீடு கிழக்கு மேற்கு
வீதியில் வடக்கு பக்கம் வாசல் உள்ள
வீடாக இருக்கும். திருமணத்திற்கு பின்
மனைவி எப்பொழுதும் தன் கணவர்
வீட்டில் இருப்பதையே விரும்புவார், தான்
பிறந்த வீட்டிற்கு செல்வதை
விரும்பமாட்டார். மனைவி ஒரு போதும்
ஜாதகரை விட்டு பிரிய மாட்டார். மனைவி
இருக்கும் வீடு அதிக வெளிச்சம் உள்ள
வீடாக இருக்கும்.
2. ரிசபத்தில் சுக்கிரன் நின்றால்
ஜாதகருக்கு வரும் மனைவி
அழகானவளாகவும், ஆடை
அலங்காரப்பிரியையாகவும்,
சொகுசு விரும்பியாகவும்,
செல்வ செழிப்புடையவளாகவும்
இருப்பாள். மனைவி பக்கத்து
ஊர்க்காரியாக இருப்பதற்கு
வாய்ப்புண்டு. மனைவி பிறந்த ஊர்
ஜாதகன் பிறந்த ஊருக்கு கிழக்கு திசையில்
இருக்கும். மனைவியின் வீடு தெற்கு வடக்கு
வீதியில் கிழக்கு பார்த்த வாசல்
உடையதாக இருக்கும். திருமணத்திற்கு பின்
மனைவி அடிக்கடி தன் தாய் வீட்டிற்கு
செல்ல விரும்புவாள் அல்லது தன்
தாய் வீட்டிலேயே நிரந்தரமாக தங்கி
விடுவதற்கு முயற்சி செய்வாள் அல்லது
தன் தாய் வீட்டிற்கு பக்கத்தில் குடி
பெயர்ந்து செல்ல முயற்சிப்பாள்.
மனைவி உறவினர்கள், நண்பர்கள் என
யார் வீட்டிற்கும் செல்வதை விரும்ப
மாட்டாள். எல்லோரும் தன் வீட்டிற்கு தன்னை
தேடி வந்து பார்க்கட்டும் என நினைப்பாள்.
யாரையும் உபசரிக்கமாட்டாள். வீட்டை
அழகாக வைத்திருப்பாள். அதிகம்
வெளியே செல்லமாட்டாள்.
தான் பிறந்த வீட்டில் வந்து நிரந்தமாக
தங்கிவிடும்படி ஜாதகரை நிர்பந்திப்பாள்.
3. மிதுனத்தில் சுக்கிரன் நின்றால்
ஜாதகருக்கு வரும் மனைவி நட்பு
விரும்பியாகவும், புத்திசாலியாகவும்,
இளமையான தோற்றமுடையவளாகவும், சுறு
சுறுப்பானவளாகவும் ,
இரட்டைப்பெயர் அல்லது இரண்டு
பெயர்கள் உடையவளாக இருப்பாள்.
தோற்றத்தில் ஜாதகனை விட மிகவும்
இளையவள் போன்றோ அல்லது வயதில் மிகவும்
இளையவளாகவோ இருப்பாள்.
ஜாதகனுக்கும் அவன் மனைவிக்கும் வயது
வித்தியாசம் அதிகமாக இருக்கும்.
ஜாதகனுக்கு இரண்டு மனைவிகள் அமைய
வாய்ப்புண்டு. ஜாதகரின் மனைவி
பெண் தோழிகளின் வீட்டிற்கு அடிக்கடி
சென்று வருவாள். மனைவி பிறந்த ஊர்
ஜாதகன் பிறந்த ஊருக்கு தென்
கிழக்கு திசையில் இருக்கும்.மனைவியின் வீடு
கிழக்கு மேற்கு வீதியில் தெற்கு பக்கம்
வாசல் உள்ள வீடாக அமைந்திருக்கும்.
மனைவியின் வீடு தெரு முனையில்
அமைந்திருக்கும்.
4. கடகத்தில் சுக்கிரன் நின்றால்
ஜாதகருக்கு வரும் மனைவி தாய்மை உணர்வு
அதிகம் உடையவளாக இருப்பாள். மனைவி
அழகானவளாகவும்,மன சஞ்சலம்
உடையவளாகவும், பாசத்திற்கு
அடிமையாகவும் இருப்பாள். மனைவிக்கு
அவள் பிறந்த வீட்டில் மரியாதை இருக்காது.
பிறந்த வீட்டில் அவளை அன்னியப்பெண்
போன்று நடத்துவார்கள். இதனால்
காலப்போக்கில் தன் தாய் வீட்டிற்கு
செல்வதை விரும்பாமல் நிரந்தரமாக
நிறுத்திவிடுவாள். மாமியார் வசிக்கும்
வீட்டிலும் இவள் இருக்க மாட்டாள்,
தனிக்குடித்தனம் செல்வதையே
பெரிதும் விரும்புவாள். மாமியார் ,
தாய் , அக்கா, அண்ணி இவர்களின்
வீடுகளுக்கு செல்வதை தவிர்ப்பாள்.
அடுத்தவர் வீடுகளில் தங்குவதை
அவமானமாக நினைப்பாள். மனைவி
பிறந்த ஊர் ஜாதகன் பிறந்த ஊருக்கு
தெற்கு திசையில் இருக்கும். மனைவியின்
வீடு தெற்கு வடக்கு வீதியில் மேற்கு பக்கம்
வாசல் உள்ள வீடாக அமைந்திருக்கும்.
மனைவி சொந்தமில்லாமல்
அன்னியப்பெண்ணாக இருப்பாள்.
மனைவி இருக்கும் வீட்டின் தளம் தெருவை
விட சற்று பள்ளமாக இருக்கும்.
5. சிம்மத்தில் சுக்கிரன் நின்றால்
ஜாதகருக்கு வரும் மனைவி நிர்வாக திறமை
உடையவளாகவும், பிறந்த வீட்டில் ராணி
போலவும் இருப்பாள். மனைவி தந்தை வழி
உறவினளாக இருக்க வாய்ப்புண்டு.
பிறந்த வீட்டில் உள்ளவர்களை நன்றாக வேலை
வாங்குவாள். பெற்ற பிள்ளைகளை
பராமரிக்க மாட்டாள், பிள்ளைகளை தாய்
வீட்டில் விட்டு வளர்ப்பாள். தன்னை எல்லோரும்
தலைவி போல் பாவிக்கவேண்டும் என
விரும்புவாள். தந்தை வழி
சொத்துக்கள் தனக்கே
கிடைக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பாள்
அல்லது தாய் வீட்டிலிருந்து
எப்பொழுதும் எதையாவது
எடுத்துக்கொண்டு போவதை
வழக்கமாக வைத்திருப்பாள். மனைவி பிறந்த
ஊர் ஜாதகன் பிறந்த ஊருக்கு தெற்கு
திசையில் இருக்கும். மனைவியின் வீடு கிழக்கு
மேற்கு வீதியில் வடக்கு பக்கம் வாசல் உள்ள
வீடாக அமைந்திருக்கும்.
6. கன்னியில் சுக்கிரன் நின்றால்
ஜாதகருக்கு வரும் மனைவி இளமையான
தோற்றமுடையவளாகவோ அல்லது ஜாதகனை
விட வயதில் மிகவும் இளையவளாக
இருப்பாள். மனைவி தன் தோழிகள் வீடுகளுக்கு
செல்லாதவரை எந்த பிரச்ச்சினையும்
இல்லை, ஒரே ஒரு முறை சென்று வந்தால்
போதும் அவர்கள் தன்னை கவனிக்கவில்லை,
அவமானப்படுத்தி விட்டார்கள் என்று
நட்பை துண்டித்துக்கொள்வாள். ஆடை
அலங்காரத்தில் மனைவிக்கு அக்கரை
இருக்காது. தனது உடமைகளை பிறருக்கு
விட்டுக்கொடுப்பாள். எளிமையாக
இருப்பாள். மனைவிக்கு இரட்டைப்பெயர்
அல்லது இரண்டு பெயர்கள் இருக்க
வாய்ப்புண்டு. மனைவி பிறந்த ஊர்
ஜாதகன் பிறந்த ஊருக்கு தென்மேற்கு
திசையில் இருக்கும். மனைவியின் வீடு
தெற்கு வடக்கு வீதியில் கிழக்குப்பக்கம்
வாசல் உள்ள வீடாக அமைந்திருக்கும்.
அந்த வீடு தெரு முனையில் அமைந்திருக்கும்.
7. துலாத்தில் சுக்கிரன் நின்றால்
ஜாதகருக்கு வரும் மனைவி
அழகானவளாகவும், ஆடை
அலங்காரப்பிரியையாகவும், எதையும் சீர்
தூக்கிப்பார்த்து சரியான முடிவுகளை
எடுக்கும் திறமை உள்ளவளாகவும்
இருப்பாள். மனைவி பக்கத்து ஊரை
சேர்ந்தவளாக இருப்பதற்கு வாய்ப்புண்டு.
மனைவி பிறந்த ஊர் ஜாதகன் பிறந்த
ஊருக்கு மேற்கு திசையில் இருக்கும். மனைவியின்
வீடு கிழக்கு மேற்கு வீதியில் தெற்கு பக்கம்
வாசல் உள்ள வீடாக அமைந்திருக்கும்.
மனைவியின் வீட்டை ஒட்டி கடையோ அல்லது அந்த
வீடு கடைத்தெருவில் இருக்கும்.
திருமணத்திற்கு பின் மனைவி அடிக்கடி தன்
தாய் வீட்டிற்கு செல்ல விரும்புவாள்
அல்லது தன் தாய் வீட்டிலேயே நிரந்தரமாக
தங்கி விடுவதற்கு முயற்சி செய்வாள்
அல்லது தன் தாய் வீட்டிற்கு பக்கத்தில் குடி
பெயர்ந்து செல்ல முயற்சிப்பாள்.
மனைவி உறவினர்கள், நண்பர்கள் என
யார் வீட்டிற்கும் செல்வதை விரும்ப
மாட்டாள். எல்லோரும் தன் வீட்டிற்கு தன்னை
தேடி வந்து பார்க்கட்டும் என நினைப்பாள்.
யாரையும் உபசரிக்கமாட்டாள். வீட்டை
அழகாக வைத்திருப்பாள். அதிகம்
வெளியே செல்லமாட்டாள்.
தான் பிறந்த வீட்டில் வந்து நிரந்தமாக
தங்கிவிடும்படி ஜாதகரை நிர்பந்திப்பாள்.
மனைவி இருக்கும் வீடு அதிக வெளிச்சம்
இல்லாமல் இருட்டாக இருக்கும்.
8. விருச்சிகத்தில் சுக்கிரன் நின்றால்
ஜாதகருக்கு வரும் மனைவி இளமையான
தோற்றமுடையவள், சுறு சுறுப்பானவள்,
ஜாதகருக்கு வரும் மனைவி
சொந்தக்காரியாகவோ அல்லது
சொந்த ஊர்க்காரியாகவோ
அல்லது சொந்த பந்தங்கள்
வசிக்கும் ஊர்க்காரியாகவோ இருப்பாள்.
ஜாதகருக்கு சரியான உடல்
பொருத்தம் உள்ள மனைவியாக
இருப்பாள். உஷ்ண தேகம்
உடையவளாகவும் கோபக்காரியாகவும்
மனைவி இருப்பாள். மனைவி பிறந்த ஊர்
ஜாதகன் பிறந்த ஊருக்கு மேற்கு திசையில்
இருக்கும். மனைவியின் வீடு தெற்கு வடக்கு
வீதியில் மேற்கு பக்கம் வாசல் உள்ள
வீடாக இருக்கும். திருமணத்திற்கு பின்
மனைவி எப்பொழுதும் தன் கணவர்
வீட்டில் இருப்பதையே விரும்புவார், தான்
பிறந்த வீட்டிற்கு செல்வதை
விரும்பமாட்டார். மனைவி ஒரு போதும்
ஜாதகரை விட்டு பிரிய மாட்டார்.
9. தனுசு ராசியில் சுக்கிரன் நின்றால்
ஜாதகருக்கு வரும் மனைவி சாந்தமான,
அமைதியான தோற்றத்தில் இருப்பாள்.
தோற்றத்தில் ஜாதகனை விட மூத்தவள் போன்று
இருப்பாள் அல்லது வயதில்
மூத்தவளாகவும் இருக்க வாய்ப்புண்டு.
அல்லது மனைவி உடல் பருத்தவளாக
இருப்பாள். மனைவி
சொந்தக்காரியாக இருக்க
வாய்ப்புண்டு. மனைவி தன் வீட்டிற்கு
யாரும் வந்து போவதை விரும்ப மாட்டாள் .
தனிக்குடித்தனம் செல்வதையே
விரும்புவாள். மனைவி பிறந்த ஊர் ஜாதகர்
பிறந்த ஊருக்கு வட மேற்கு திசையில் இருக்கும்.
மனைவியின் வீடு கிழக்கு மேற்கு வீதியில் வடக்கு
பக்கம் வாசல் உள்ள வீடாக
அமைந்திருக்கும். மனைவியின் வீடு தெரு
முனையில் அமைந்திருக்க வாய்ப்புண்டு. அவள்
விட்டிற்கு அருகே கோயில் ஒன்று இருக்க
வாய்ப்புண்டு. மனைவிக்கு
இரட்டைப்பெயர் அல்லது இரண்டு
பெயர்கள் இருக்க வாய்ப்புண்டு.
மனைவி அவசியம் இல்லாமல், காரணம்
இல்லாமல் எந்த ஒரு செயலிலும்
ஈடுபட மாட்டாள்.
10. மகரத்தில் சுக்கிரன் நின்றால்
ஜாதகருக்கு வரும் மனைவி நல்ல உடல்
உழைப்பாளியாக இருப்பாள்.
அடக்கமானவளாகவும்,
எளிமையானவளாகவும் இருப்பாள்.
முதிர்ச்சியான தோற்றம் இருக்கும். அவள்
காரியவாதியாகவும் இருப்பாள்.
மனைவி சொந்தமில்லாமல்
அன்னியப்பெண்ணாக இருப்பாள்.
மனைவி பிறந்த ஊர் ஜாதகன் பிறந்த
ஊருக்கு வடக்கு திசையில் இருக்கும். மனைவியின்
வீடு தெற்கு வடக்கு வீதியில் கிழக்கு
பக்கம் வாசல் உள்ள வீடாக
அமைந்திருக்கும். மனைவி இருக்கும் வீட்டின்
தளம் தெருவிலிருந்து அதிக உயரத்தில்
இருக்கும். மனைவி அடிக்கடி தோழிகளின்
வீட்டிற்கு சென்று வருவதை விரும்புவாள்.
மனைவி அடுத்தவர்களுக்கு சேவகம் புரிந்து
காரியம் சாதிப்பாள்.
11. கும்பத்தில் சுக்கிரன் நின்றால்
ஜாதகருக்கு வரும் மனைவி
காரியவாதியாக இருப்பாள்.
ஆதாயம் தேடாமல் எந்த ஒரு
காரியத்திலும் ஈடுபடமாட்டாள்.
யாரிடமிருந்து எதைப்பெறலாம்
என்பதிலியே குறியாக இருப்பாள்.
அடுத்தவர்களிடம் உதவி கேட்பதற்கு
கூச்சப்படமாட்டாள். அமர்ந்த இடத்தை
விட்டு நகராமல் எல்லோரையும் வேலை
வாங்குவாள். தனது பணிகளை பிறர் மீது
திணிப்பாள். முதிர்ச்சியான
தோற்றமுடையவளாக இருப்பாள். மனைவி
பிறந்த ஊர் ஜாதகர் பிறந்த ஊருக்கு
வடக்கு திசையில் இருக்கும். மனைவியின் வீடு
கிழக்கு மேற்கு வீதியில் வடக்கு பக்கம்
வாசல் உள்ள வீடாக அமைந்திருக்கும்.
மனைவி தோழிகளை தன் வீட்டிற்கு வரவழைத்து
அரட்டை அடிப்பாள். மனைவி
சொந்தமில்லாமல்
அன்னியப்பெண்ணாக இருப்பாள்.
12. மீனத்தில் சுக்கிரன் நின்றால்
ஜாதகருக்கு வரும் மனைவி சாந்தமான,
அமைதியான தோற்றத்தில் இருப்பாள்.
தோற்றத்தில் ஜாதகனை விட மூத்தவள் போன்று
இருப்பாள் அல்லது வயதில்
மூத்தவளாகவும் இருக்க வாய்ப்புண்டு.
அல்லது மனைவி உடல் பருத்தவளாக
இருப்பாள். மனைவி
சொந்தக்காரியாக இருக்க
வாய்ப்புண்டு. மனைவி பிறந்த ஊர்
ஜாதகர் பிறந்த ஊருக்கு வட கிழக்கு திசையில்
இருக்கும். மனைவியின் வீடு தெற்கு வடக்கு
வீதியில் மேற்கு பக்கம் வாசல் உள்ள
வீடாக அமைந்திருக்கும். மனைவியின் வீடு
தெரு முனையில் அமைந்திருக்க
வாய்ப்புண்டு. மனைவிக்கு
இரட்டைப்பெயர் அல்லது இரண்டு
பெயர்கள் இருக்க வாய்ப்புண்டு.
மனைவி அடுத்தவர்களிடம் அதிகம் உரிமை
எடுத்துக்கொள்வாள்.
அடுத்தவர்கள் வீட்டிற்கு சென்று
அதிகாரம் செய்வாள். மனைவி
ஆடம்பர பிரியையாகவும் ,
பேராசைக்காரியாகவும் இருப்பாள். பிறர்
பொருளை அபகரிப்பாள்.

Sunday 6 November 2016

தமிழ் அளவீடுகள்

வாழ்க தமிழ்
*******************
1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு --> 6,0393476E-9 -->
nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்.
இவ்வளவு நுண்ணியமான கணிதம்
அந்தக் காலத்தில் பயன்பாட்டில

27 நட்சத்திரக் கோயில்கள்

*27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள்நம
து ஆன்மீக அன்பர்களின் நலம் கருதி ,
ஒவ்வொரு நட்சத்திரத்தில்
பிறந்தவர்களுக்கும் உரிய திருத் தலங்களைப்
பற்றி இங்கே கொடுத்துள்ளோம்.*
இங்கு உள்ள ஸ்தலங்கள் அனைத்தும் ,
பலப்பல யுகங்கள் வரலாறு
கொண்டவை. இடையில் அழிவு
ஏற்பட்டாலும், அதன் பிரதி பிம்பங்களாய்
தன்னையே புதுப்பித்துக் கொண்டவை.
எத்தனையோ மகான்களும், ரிஷிகளும்,
தேவர்களும் வழிபட்ட, இன்றளவும் நல்ல
ஆன்மீக அதிர்வுகளைக் கொண்டு,
தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள்
பாலிப்பவை.
இவையெல்லாவற்றையும் விட
முக்கியமான ரகசியம் - இந்த
நட்சத்திரங்களுக்குரிய தேவதைகள் , சூட்சும
ரீதியாக இங்கே தினமும் ஒரு தடவையாவது
தங்களுக்குரிய ஆலயம் சென்று
வழிபாடு செய்கின்றன.
மனிதராய் பிறந்த அனைவர்க்கும், அவரவர்
கர்ம வினையே - லக்கினமாகவும்,
ஜென்ம நட்சத்திரமாகவும்,
பன்னிரண்டு வீடுகளில் நவக் கிரகங்கள்
அமர்ந்து - பெற்றெடுக்கும்
பெற்றோர்களையும், பிறக்கும் ஊரையும்,
வாழ்க்கை துணையையும் , அவர் வாழ்வில்
நடக்கும் முக்கிய சம்பவங்களையும் ,
வாழ்க்கையையுமே தீர்மானிக்கிறது.
நமது பூர்வ ஜென்ம
தொடர்புடையஆலயங்களுக்கு, நம்மை
அறியாமலே நாம் சென்று
வழிபடும்போது, நமது கர்மக்கணக்கு
நேராகிறது. அப்படி நிகழும்போது நம்
வாழ்வில் ஏற்படும் பல தடைகளும், தீராத
பிரச்னைகளும் தீர்ந்து , மனதளவில் நமக்கு
பலமும், மாற்றமும் ஏற்படுகின்றன.
கீழே கொடுக்கப்பட்டுள்ள
அவரவர்க்குரிய நட்சத்திர தலத்தை - உங்கள்
ஜென்ம நட்சத்திரம் வரும் தினத்தன்று ,
ஆத்ம சுத்தியுடன், நம்பிக்கையுடன் வழிபட்டு
வாருங்கள். அதன் பிறகு உங்கள்
வாழ்வில் நிச்சயம் ஒரு புது வெளிச்சம்
பிறக்கும்.
உங்களால் முடிந்தவரை வாய்ப்பு
கிடைக்கும்போதெல்லாம் சாதாரண
தினங்களில் கூட இந்த ஆலயங்களில்
சென்று வழிபட்டு வர , உங்கள்
கஷ்டங்கள் வெகுவாக மட்டுப்படும்.
*ஆலயங்களும், அமைவிடங்களும்
*அஸ்வினி - அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர்
திருக்கோயில்*
*இருப்பிடம்:* திருவாரூரில் இருந்து
30கி.மீ.தூரத்தில் திருத்துறைப் பூண்டிஉள்ளது.
பஸ் ஸ்டாண்டில் இருந்து ஒருகி.மீ. தூரத்தில்
கோயில் உள்ளது.
*பரணி - அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில்*
*இருப்பிடம்:* மயிலாடுதுறையிலிருந்து(15
கி.மீ.)நெடுங்காடுவழியாக
காரைக்கால் செல்லும்
வழியில்நல்லாடை என்னும் ஊரில் உள்ளது.
*கார்த்திகை - அருள்மிகு காத்ர
சுந்தரேஸ்வரர் திருக்கோயில்*
*இருப்பிடம்:* மயிலாடுதுறையிலிருந்து
பூம்புகார் செல்லும் வழியில் 8 கி.மீ.,
தூரத்தில் கஞ்சாநகரம் அமைந்துள்ளது.
மெயின் ரோட்டிலிருந்து பிரியும் ரோட்டில் அரை
கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம்.
*ரோஹிணி - அருள்மிகு
பாண்டவதூதப்பெருமாள் திருக்கோயில்*
*இருப்பிடம்:* காஞ்சிபுரம் ஏகாம்
பரேஸ்வரர் கோயில் எதிரில் உள்ள சாலையில்
கோயில் அமைந்துள்ளது.
*மிருக சீரிஷம் - அருள்மிகு
ஆதிநாராயணப்பெருமாள்
திருக்கோயில்*
*இருப்பிடம் தஞ்சாவூரிலிருந்து திருவாரூர்
செல்லும் வழியில் 50 கி.மீ., தூரத்தில்
முகூந்தனூர் உள்ளது. இந்தஸ்டாப்பில்
இருந்து, ஒரு கி.மீ. தூரம் சென்றால்
கோயிலை அடையலாம்.
*திருவாதிரை - அருள்மிகு அபய வரதீஸ்வரர்
திருக்கோயில்*
*இருப்பிடம் தஞ்சாவூரில் இருந்து 70 கி.மீ.,
தூரத்திலுள்ளபட்டுக்கோட்டை சென்று,
அங்கிருந்து 12 கி.மீ. சென்றால்
அதிராம்பட்டினத்தில் உள்ள இந்த
ஆலயத்தை அடையலாம்.
*புனர் பூசம் - அருள்மிகு அதிதீஸ்வரர்
திருக்கோயில்*
*இருப்பிடம் வேலூரிலிருந்து கிருஷ்ணகிரி
செல்லும் வழியில், 67 கி.மீ., தூரத்தில்
வாணியம்பாடி உள்ளது. பஸ்ஸ்டாண்
டில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ள பழைய
வாணியம் பாடியில் கோயில் உள்ளது.
*பூசம் - அருள்மிகு அட்சய புரீஸ்வரர்
திருக்கோயில்*
* *
*இருப்பிடம்: *பட்டுக்கோட்டையிலிருந்து
ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரை
சாலையில் 30 கி.மீ., சென்றால்
விளங்குளம் விலக்கு வரும். அங்கிருந்து
தெற்கே 2 கி.மீ. சென்றால் கோயிலை
அடையலாம். புதுக்கோட்டையில் இருந்து
பேராவூரணி வழியாகவும் விளங்குளத்தை
அடைய வழியிருக்கிறது.
*ஆயில்யம் - அருள்மிகு கற்கடேஸ்வரர்
திருக்கோயில்*
*இருப்பிடம்: *கும்பகோணத்தில் இருந்து
சூரியனார் கோவில் செல்லும் ரோட்டில் 11
கி.மீ., தூரத்தில் உள்ள திருவிசநல்லூர்
சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில்
2கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம்.
திருவிசநல்லூரில் இருந்து ஆட்டோ வசதி உண்டு
*மகம் - அருள்மிகு மகாலிங்கேஸ்வரர்
திருக்கோயில்*
*இருப்பிடம்:* திண்டுக்கல்லில் இருந்து நத்தம்
செல்லும் ரோட்டில் 12 கி.மீ., தூரத்தில்
விராலிப்பட்டி விலக்கு உள்ளது. இங்கிருந்து
2 கி.மீ., மினிபஸ்சில் சென்றால் கோயிலை
அடையலாம். ஆட்டோ வசதியும் உண்டு.
*பூரம் - அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர்
திருக்கோயில்*
*இருப்பிடம்:* புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டை
செல்லும் வழியில் 7 கி.மீ.,
சென்றால் வரும் திருவரங்குளம்
என்னும் ஊரில் ஆலயம் உள்ளது.
*உத்திரம் - அருள்மிகு மாங்கல்யேஸ்வரர்
திருக்கோயில்*
*இருப்பிடம் திருச்சி சத்திரம்
பஸ்ஸ்டாண்டிலிருந்து 22 கி.மீ. தூரத்திலுள்ள
லால்குடி சென்று அங்கிருந்து 5 கி.மீ.
தூரத்திலுள்ள இடையாற்று மங்கலம் என்னும்
ஊரில் உள்ளது.
*ஹஸ்தம் - அருள்மிகு கிருபா கூபாரேச்வரர்
திருக்கோயில்*
* *
*இருப்பிடம்:* கும்பகோணத்திலிருந்து
மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ள
குத்தாலத்திலிருந்து பிரியும் ரோட்டில் 8 கி.மீ.
தூரத்தில் கோமல் என்னும் ஊரில்
உள்ளது.குத்தாலத்திலிருந்து பஸ், ஆட்டோ
வசதி உள்ளது.
*சித்திரை - அருள்மிகு சித்திரரத
வல்லபபெருமாள் திருக்கோயில்*
*இருப்பிடம்:* மதுரையில் இருந்து 23 கி.மீ.,
தூரத்திலுள்ள குருவித்துறைக்கு மதுரை
பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்து பஸ்
உள்ளது. குருவித்துறையில் இருந்து 3 கி.மீ.
தூரத்தில் கோயில் உள்ளது. வியாழன்,
பவுர்ணமி தினங்களில் கோயில் வரை பஸ்கள்
செல்லும். மற்ற நாட்களில் ஆட்டோவில்
செல்ல வேண்டும்.
*சுவாதி - அருள்மிகு தாத்திரீஸ்வரர்
திருக்கோயில்*
* *
*இருப்பிடம்:* சென்னை பூந்தமல்லியில்
இருந்து தண்டுரை என்ற ஊருக்கு
செல்லும் வழியில் 8 கி.மீ., தூரத்தில்
சித்துக்காடு என்ற ஊரில் இத்தலம்
உள்ளது. குறித்த நேரத்தில் மட்டுமே பஸ் உண்டு
என்பதால், பூந்தமல்லியில் இருந்து
வாகனங்களில் சென்று திரும்பலாம்.
*விசாகம் - அருள்மிகு முத்துக்குமாரசு
வாமி திருக்கோயில்*
*இருப்பிடம் மதுரையில் இருந்து 155 கி.மீ.,
தொலைவிலுள்ள செங்கோட்டை
சென்று, அங்கிருந்து 7 கி.மீ.,
தூரத்திலுள்ள திருமலைக்கோவிலை பஸ் மற்றும்
வேன்களில் அடையலாம்.இவ்வூரைச் சுற்றி
பிரபல ஐயப்ப ஸ்தலங்களான
ஆரியங்காவு, அச்சன் கோவில், குளத்துப்புழை
ஆகியவை உள்ளன
*அனுஷம் - அருள்மிகு மகாலட்சுமிபுரீஸ
்வரர் திருக்கோயில்*
*இருப்பிடம்: *மயிலாடுதுறையில் இருந்து
சீர்காழி செல்லும் வழியில் 7 கீ.மீ.
தூரத்தில் திரு நின்றியூர் என்னும் ஊரில்
இத்தலம் அமைந்துள்ளது.
*கேட்டை - அருள்மிகு
வரதராஜப்பெருமாள் திருக்கோயில்*
*இருப்பிடம்:* தஞ்சாவூரில் இருந்து
கும்பகோணம் செல்லும் வழியில் 13 கி.மீ.,
தூரத்திலுள்ள பசுபதிகோயில் பஸ் ஸ்டாப்பில்
இருந்து அரை கி.மீ., தூரத்தில் கோயில் உள்ளது.
*மூலம் - அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில்*
*இருப்பிடம்:* சென்னை கோயம்பேட்டில்
இருந்து தக்கோலம் செல்லும் வழியில் 45
கி.மீ., தூரத்தில் மப்பேடு என்ற ஊரில் உள்ளது.
(பூந்தமல்லியிலிருந்து (22 கி.மீ.)
பேரம்பாக்கம் செல்லும் வழியில் மப்பேடு
உள்ளது.)
*பூராடம் - அருள்மிகு ஆகாசபுரீஸ்வரர்
திருக்கோயில்*
*இருப்பிடம்:* தஞ்சாவூரில் இருந்து (13
கி.மீ.,) திருவையாறு சென்று, அங்கிருந்து
கல்லணை செல்லும் வழியில் 4 கி.மீ.,
தூரம் சென்றால் கடுவெளியை
அடையலாம். பஸ் ஸ்டாப் அருகிலேயே கோயில்
அமைந்துள்ளது.
*உத்திராடம் - அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர்
திருக்கோயில்*
*இருப்பிடம்: *சிவகங்கையில் இருந்து
காரைக்குடி செல்லும் வழியில் உள்ள (12
கி.மீ.,) ஒக்கூர் சென்று, அங்கிருந்து
பிரியும் ரோட்டில் 3 கி.மீ., சென்றால்
பூங்குடி என்ற ஊரில் உள்ளது. ஆட்டோ உண்டு.
மதுரையில் இருந்து (45 கி.மீ.,) இரண்டு மணி
நேரத்திற்கு ஒருமுறை நேரடி பஸ் வசதி உண்டு.
*திருவோணம் - பிரசன்ன
வெங்கடேசப்பெருமாள் கோயில்*
*இருப்பிடம்:* வேலூரிலிருந்து சென்னை
செல்லும் வழியில் 20 கி.மீ., தூரத்திலுள்ள
காவேரிப்பாக்கத்தில் இறங்கி, அங்கிருந்து
பிரியும் ரோட்டில் 2 கி.மீ. சென்றால்
திருப்பாற் கடலை அடையலாம். ஆற்காடு,
வாலாஜா விலிருந்தும் பேருந்துகள்
உள்ளன. இவ்வூரில் இரண்டு
பெருமாள் கோயில்கள் இருப்பதால்,
பிரசன்ன வெங்கடேசப்பெருமாள்
கோயில் என கேட்டு செல்லவும்
*அவிட்டம் - அருள்மிகு பிரம்மஞான
புரீஸ்வரர் திருக்கோயில்*
*இருப்பிடம் கும்பகோணம் மகாமகக்குளம்
மேற்குக் கரையிலிருந்து 4 கி.மீ. தூரத்தில்
கோயில்அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து
தாராசுரம், முழையூர் வழியாக
மருதாநல்லூர் செல்லும் பஸ்களில்
கொருக்கை என்னும் இடத்தில்
உள்ளது..
*சதயம் - அருள்மிகு அக்னிபுரீஸ்வரர்
திருக்கோயில்*
*இருப்பிடம்:* திருவாரூர் மாவட்டம்,
நன்னிலத்திலிருந்து நாகப்பட்டினம்
செல்லும் வழியில் 10 கி.மீ.
தொலைவில் திருப்புகலூர் என்னும்
ஊரில் உள்ளது.
*பூரட்டாதி - அருள்மிகு திருவானேஷ்வர்
திருக்கோயில்*
*இருப்பிடம்: *திருவையாறிலிருந்து 17 கி.மீ.
தூரத்தில் உள்ள திருக் காட்டுப்பள்ளி
சென்று, அங்கிருந்து அகரப் பேட்டை
செல்லும் ரோட்டில் 2 கி.மீ. தூரம்
சென்றால் ரங்கநாதபுரம் என்னும்
ஊரில் உள்ளது.
*உத்திரட்டாதி - அருள்மிகு
சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோயில்*
*இருப்பிடம்:* புதுக்கோட்டையில் இருந்து 40
கி.மீ.தூரத்திலுள்ள ஆவுடையார்கோவில்
சென்று, அங்கிருந்து திருப்புவனவாசல்
செல்லும் வழியில் 21 கி.மீ தூரத்தில்
தீயத்தூர் உள்ளது. மதுரையில் இருந்து
செல்பவர்கள், அறந்தாங்கி
சென்று, அங்கிருந்து திருப்புவனவாசல்
செல்லும் பஸ்களில் சென்றால்
தீயத்தூர் என்னும் இடத்தில் உள்ளது. தூரம்
120 கி.மீ.
*ரேவதி - அருள்மிகு கைலாசநாதர்
திருக்கோயில்*
*இருப்பிடம்:* திருச்சியிலிருந்து முசிறி
(40கி.மீ)சென்று, அங்கிருந்து வேறு
பஸ்களில் தாத்தய்யங்கார் பேட்டை(21 கி.மீ)
செல்ல வேண்டும். இங்கிருந்து 5
கி.மீ.தூரத்திலுள்ள காருகுடி என்னும்
இடத்தில் உள்ளது
எல்லாம் வல்ல எம்பெருமான் ஈசன்
திருத்தாள் போற்றி..