Saturday 14 May 2016

ஜீவசமாதி வழிபாடு சூட்சமம்

தமிழ்நாட்டில் இருக்கும் சித்தர்பீடங்கள்
,சூட்சுமமாக இருந்து நம்மைக் காக்கும்
மகான்களின் ஜீவசமாதிகளை வழிபடும்
சூட்சும வழிபாட்டு முறை
சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புவரையிலும்,
ஆவி வழிபாடுதான் நமது தமிழ்நாட்டில்
இருந்துவந்தது.அக்காலத்தில் இருந்த
ஆன்மீக அருளாளர்கள் " கலிகாலத்தில்
மனிதர்களின் வாழ்க்கை,சிந்தனை முறை எப்படி
இருக்கும்?" என்பதை சிந்தித்தன் விளைவாக
ஆவி வழிபாட்டு ஸ்தலங்களான
ஜீவசமாதிகள் மற்றும் சித்தர்களின்
ஜீவசமாதிகளை கோவில்களாக
மாற்றினார்கள்.எந்த மகான் எந்த
கடவுளின் மீது பிரியமாக இருந்தாரோ,
அல்லது எந்த கடவுளை வழிபட்டாரோ அந்த
தெய்வத்தின் சிலை அவரது
ஜீவசமாதியின் மீது அல்லது அருகில்
பிரதிஷ்டை செய்யப்பட்டது.ப
ெரும்பாலான மகான்களும்,சித்
தர்களும் சிவனை வழிபட்டிருக்கின
்றனர்.அபூர்வமான சிலர் விநாயகரையும்,மு
ருகக்கடவுளையும்,சக்தியையும்,முனீஸ்வரரையும்,
கருப்பசாமியையும் வழிபட்டிருக்கின
்றனர்.அதனால்,அந்த ஜீவசமாதிகளின்
மீது அல்லது அருகில்(ஒரே கோவிலுக்குள்) உரிய
தெய்வங்கள் சமைக்கப்பட்டு,க
ோவில்களாக மாற்றப்பட்டுள்ளன.
உதாரணமாக சித்தர் போகரின் வழிபாடு
முருகக்கடவுளின் வழிபாடு
ஆகும்.அதனால்,பழனிமலையில்
முருகக்கடவுளின் கோவில் உருவானது.நாம்
பழனி முருகக்கடவுளை
தொடர்ந்து,முருகக்கடவுளின்
வழிபாட்டுமுறைகளுக்கு ஏற்றவாறு
வழிபட்டால்,போகர் அகமகிழ்ந்து,நமது
கோரிக்கைகளை நிறைவேற்றுவார்;பிரச்னைகளைத்
தீர்ப்பார்;நோய்களைக் குணப்படுத்துவார
்;துன்பங்களை நீக்குவார்;இந்த அரிய
ஆன்மீக ரகசியத்தை சொன்னவர்
நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் ஐயா
அவர்கள் ஆவார்.எனவே,நாம் அவருக்கு
இந்த ஜன்மம் முழுவதும் நன்றிக்கடன்
பட்டிருக்கிறோம்.
ஜீவசமாதிகளை நாம் எப்படி வழிபட
வேண்டும்?
முழுக்க முழுக்க ரோஜாப்பூக்களால்
கட்டப்பட்ட மாலை,ஒருகிலோவுக்கு குறையாமல்
டையமண்டு கல்கண்டு,அரை கிலோவுக்குக்
குறையாமல் விதையில்லாத கறுப்பு
திராட்சைப்பழங்கள்,கொஞ்சம்
விதையில்லாத பேரீட்சைப்பழங்கள் இத்துடன்
கொஞ்சம்
வெற்றிலையும்,கொட்டைப்
பாக்கும்,சந்தனபத்திக் கட்டும்,ஆறு நாட்டு
வாழைப்பழங்களும் கொண்டு வந்து
பத்தி பொருத்தி,தேங்காய்
உடைத்து,கற்பூரம் கொளுத்தி,சிகப்பு
ரோஜாக்களால் கட்டப்பட்ட மாலையை
ஜீவசமாதியில் உள்ள தெய்வச்சிலைக்கு
அணிவிக்க வேண்டும். நெய்தீபம்
ஜீவசமாதியின் முன்பு ஏற்ற வேண்டும்.
எந்த எந்த நாட்களில் ஜீவசமாதி
வழிபாடு செய்யலாம்?
பகைவரோடு போராடி,போராடி களைத்துபோன
நேர்மையாளர்கள், தங்களது நியாயமான
பிரச்னைகள் தீர திங்கட்கிழமை மாலை 5 மணி
முதல் 7 மணிக்குள் இவ்வாறு 8
திங்கட்கிழமைகளுக்கு மட்டும் வழிபாடு
செய்ய வேண்டும்;
குலதெய்வம் தெரியாதவர்கள்,க
ுலதெய்வத்தின் கோபத்துக்கு
ஆளானவர்கள்,குலதெய்வ
வழிபாட்டை மறந்தவர்கள்,குல
தெய்வத்தை அறியாமல் இருந்து
,அதனால் கஷ்டப்படுபவர்கள் அனைவரும்
செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு
மேல் 7 மணிக்குள் இவ்வாறு வழிபாடு
செய்ய வேண்டும்;இப்படி 8
செவ்வாய்க்கிழமைகளுக்கு
தொடர்ந்து ஜீவசமாதி வழிபாடு
செய்ய வேண்டும்;
வேலைக்குப் போய்க்கொண்டிருப்பவர்கள்
மற்றும் சுயதொழில்
செய்பவர்கள்
பொருளாதார முன்னேற்றம் அடைய
விரும்புவோர்,புதன் கிழமைகளில் மாலை 5
மணிக்கு மேல் 7 மணிக்குள் இவ்வாறு ஜீவ
சமாதி வழிபாடு செய்ய
வேண்டும்;இவ்வாறு தொடர்ந்து 8
புதன்கிழமைகளுக்குச் செய்து வர ,நல்ல
பொருளாதாரத் தன்னிறைவை அடைய
முடியும்.
தனது ஆன்மீக முன்னேற்றத்திற்கு தகுந்த
குருவைத் தேடுபவர்கள்,வியாழக்கிழமைகளில்
மாலை 5 முதல் 7 மணிக்குள் இவ்வாறு
ஜீவசமாதி வழிபாடு செய்ய
வேண்டும்.இப்படி 8 வியாழக்கிழமைகளுக்கு
மட்டும் வழிபாடு செய்தாலே
போதுமானது;
பணரீதியான பிரச்னைகள் இருப்போர்,பண
நெருக்கடியில் இருப்பவர்கள் அதிலிருந்து
மீள வெள்ளிக்கிழமை மாலை 5 முதல் 7
மணிக்குள் இவ்வாறு ஜீவசமாதி
வழிபாடு செய்ய வேண்டும்.இப்படி
தொடர்ந்து 8
வெள்ளிக்கிழமைகளுக்கு மட்டும் வழிபாடு
செய்தாலே போதுமானது;
பண நெருக்கடி,தொழில்
மந்தநிலை,குடும்பப் பிரச்னைகள் என
எல்லாவிதமான பிரச்னைகளும் தீர
விரும்புவோர் சனிக்கிழமை மாலை 5 முதல் 7
மணிக்குள் இவ்வாறு ஜீவசமாதி
வழிபாடு செய்துவர
வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து 8
சனிக்கிழமைகளுக்கு மட்டும் வழிபாடு
செய்துவிட்டாலே போதுமானது.
நீண்டகாலமாக வழக்குடன்
போராடிக்கொண்டிருப்பவர்கள்(எந்த
ப் பிரச்னையாக இருந்தாலும் சரி) ஞாயிறு
மாலை 5 முதல் 7 மணிக்குள் மேற்கூறியவாறு
ஜீவசமாதி வழிபாடு செய்ய
வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து 8
ஞாயிற்றுக்கிழமைகளுக்கு வழிபாடு
செய்தால் போதுமானது.
இந்த ஜீவசமாதி வழிபாடு
செய்பவர்கள் யாராக இருந்தாலும்
சரி,அவர்கள் கண்டிப்பாக அசைவம்
சாப்பிடுவதை அடியோடு நிறுத்தியாக
வேண்டும்;இது ரொம்ப
முக்கியம்.முட்டை,முட்டை கலந்த கேக்,புரோட்டா
என மறைமுக அசைவ உணவுகளையும்
தவிர்த்துவிட்டே இந்த ஜீவ சமாதி வழிபாடு
செய்ய வேண்டும்.யார் எந்த ஊரில்
இருக்கிறார்களோ,அந்த ஊரில் இருக்கும்
ஏதாவது ஒரு ஜீவசமாதியில் இந்த
வழிபாடுகளை முடிக்கலாம்;துக்கம்,பிறப்பு
முதலியவற்றால் தொடர்ந்து 8
வாரங்கள் செய்ய
முடியாவிட்டாலும்,விட்டு விட்டு
செய்தாலும் போதுமானது.அதே சமயம்
8 வாரத்துக்கு மேல் இந்த ஜீவ சமாதி
வழிபாடுகளை பின்பற்றக் கூடாது.எச்சரிக்
கை!!!

முகூர்த்த நாள் விதிமுறைகள்

தி௫மண முகூர்த்த நாள், தேதி,
மாத, வ௫டங்களின் மொத்தக்
கூட்டுத்தொகை 4,5,8 ஆக
அமைவது தவிர்க்கப்பட
வேண்டும்...
முகூர்த்த நாளில் லக்னத்திற்கு
8 ல் செவ்வாயோ, 6 ல்
சுக்கிரனோ இ௫க்க
கூடாது...7ம் இடம்
காலியாகவும், லக்கனத்தில்
பாவிகள் இல்லாமலும் இ௫க்க
வேண்டும்.....
பெண்களை பொ௫த்தமட்டில்
முகூர்த்தம் முடிவு
செய்யப்படும் போது தி௫மண
நாள் முதல் எண்ணி வ௫ம் 4
நாட்களுக்குள், அமாவாசை,
பிதுர்களின் திதி ஆகியவை
இ௫த்தல் கூடாது....இதனால்
புத்திர பாக்கியம்,
தம்பதியர்களுக்கு வறுமை
போன்ற நிலைக்கு ஆளாக்கி
விடும்...

Friday 13 May 2016

விதவா யோகங்களும் ------விஷ கன்யா யோகங்களும

சில குறித்த பிறப்புகளை விஷ கன்னிகை என்று
சாஸ்திரம் சொல்கிறது.
-
இந்த விஷ கன்னிகை யோகத்தில் பிறந்த
பெண்கள் விதவை ஆகின்றனர்---
அல்லது திருமணம் ஆகாமல்
கன்னியாகவே வாழ்கின்றனர்
-
திருமணம் ஆனாலும் குழந்தை இல்லாமல்
உள்ளனர் அல்லது கணவன் வெளி
நாட்டில் இருக்க , பெண்
இந்தியாவில் வாழ்கின்றனர்
மொத்ததில்மணவாழ்க்கை
சிறப்பாக அமைவது இல்லை .
-
ஜாதகோத்தமம் என்ற நூலில்
சொல்லியபடி ;;
*********************************************
************************
1. சனிக்கிழமை ,செவ்வாய்க்கிழமை ,
ஞாயிறுக் கிழமை ஆகிய ஏதேனும் ஒரு
நாளில் பிறந்தாலும்
-
2. துவிதியை , சப்தமி , துவாதசி , என்ற பத்தரை
திதிகளில்
ஏதேனும் ஒரு திதியில் பிறந்தாலும் ,
-
3. ஆயில்யம் , சதயம் , கார்த்திகை ஆகிய
ஏதேனும் ஒரு நட்ச்ரத்தில் பிறந்தாலும் ,அந்த
பெண் விஷ கன்னி ஆவாள்.
-
4. அதாவது இந்த கிழமை , திதி , நட்சத்ரம்
மூன்றும் ஒன்று சேர்ந்து இருக்கும் பெண்
27 வகையில் விஷ கன்னியா தோஷம்
உண்டுபண்ணும்.
-
5. இந்த விஷ கன்யா தோஷம்
ஆண்களுக்கும் உண்டு
-
6. புத்ர தோஷம் உள்ளவர்கள் இந்த யோகத்தில்
பிறந்தால்
வம்ச விருத்தி பாதிக்கும்
-
7, இந்த திதிகள் வளர்பிறை ஆனால் அதிக
தோஷம் இல்லை பரிகாரம் செய்து
கொள்ளலாம்
-
8. இந்த திதிகள் தேய்பிறை ஆனால் அதிக
தோஷம் உண்டு
இனி 27 வகையில் விஷ கன்னி தோஷம் பற்றிக்
காண்போம் ;
-
கிழமை ----------------- திதி -------------------நட்சத்ரம்
1 , சனி -------------- துவிதியை------------ ஆயில்யம்
2. செவ்வாய்------- துவிதியை------------
சதயம்
3. ஞாயிறு----------- துவிதியை------------
கார்த்திகை
4 . சனி ----------------சப்தமி --------------- --
ஆயில்யம்
5 செவ்வாய் -------- சப்தமி -----------------
சதயம்
6. ஞாயிறு -----------சப்தமி -----------------
கார்த்திகை
7 சனி ------------------துவாதசி --------------
ஆயில்யம்
8 செவ்வாய் -------- துவாதசி
--------------- சதயம்
9. ஞாயிறு -----------துவாதசி ---------------
கார்த்திகை
10. சனி ----------------துவிதியை ------------ சதயம்
11. செவ்வாய் ------ துவிதியை ------------
கார்த்திகை
12. ஞாயிறு ----------துவிதியை ------------ சதயம்
13 . சனி ---------------சப்தமி -------------------
சதயம்
14. செவ்வாய் ------ சப்தமி ---------------
---- கார்த்திகை
15. ஞாயிறு --------- துவிதியை ------- -----
ஆயில்யம்
16. சனி ------------- ---சப்தமி -------------------
கார்த்திகை
17. செவ்வாய் ------- சப்தமி ---------------
----- ஆயில்யம்
18. ஞாயிறு ---------- சப்தமி ---------------------
ஆயில்யம்
19. சனி -----------------துவாதசி ------------------
சதயம்
20. செவ்வாய் ------ -துவிதியை ---------------
ஆயில்யம்
21. ஞாயிறு ------- ---சப்தமி ----------- -----------
சதயம்
22.. சனி ----------------துவாதசி ----- ---------------
கார்த்திகை
23. செவ்வாய் ------- துவாதசி ------
--------------ஆயில்யம்
24. ஞாயிறு ----------- துவாதசி ----------- --------
ஆயில்யம்
25. சனி ------------------ துவிதியை ---------------
கார்த்திகை
26. செவ்வாய்--------- துவிதியை
--------------- கார்த்திகை
27. ஞாயிறு ------------ துவாதசி --------------
------சதயம

Thursday 12 May 2016

ஜாதக கட்டம் 9 கிரகம்

ஜாதகத்தில் "ல" என்று போடப்பட்ட
வீடுதான் முதல் வீடு எனப் படும்.
அதாவது அதுதான் இலக்கினம்
எனப்படும். நமது உதாரண ஜாதகத்தில்
மகரம் தான் முதல் வீடு ஆகும். அடுத்த வீடு
2-ம் வீடு ஆகும். அதாவது கும்பம் தான் 2-
ம் வீடு ஆகும். இப்படியே எண்ணிக்
கொண்டு வந்தால் தனுசு தான்
12-ம் வீடு ஆகும். அதாவது எந்த
ஜாதகத்தை எடுத்தாலும் இலக்கினத்தை
முதல் வீடாகக் கொண்டு எண்ண
வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் சில
காரகத்துவம் உண்டு. அவைகளை நீங்கள்
தெரிந்து கொள்ள வேண்டும்.
அப்போதுதான் நீங்கள் பலன்
சொல்ல முடியும்.
முதல் வீடு : இதை வைத்து ஜாதகருடைய நிறம்,
உருவம், உயரம், குணாதிசயங்கள்
முதலியவற்றை அறியலாம். ஜாதகர்
ஒல்லியானவரா, இல்லை
பருமனானவரா, கோபம் உள்ளவரா,
இல்லை சாந்தமானவரா என்றும்
அறியலாம். அவர் உடல் நலத்தைப்
பற்றியும் அறியலாம். அவர் வாழ்க்கையில்
உயர்ந்த நிலைக்குப் போவாரா இல்லை
தாழ்ந்த நிலைக்குப் போவாரா, என்பது
பற்றியும் அறியலாம். உடல் பாகத்தில்
தலையைக் குறிப்பது முதல் வீடு தான். ஒருவர்
சொந்த ஊரில் வாழ்வாரா
அல்லது அந்நிய தேசத்தில் வாழ்வாரா
என்பது பற்றியும் முதல் வீட்டை வைத்துத்தான்
சொல்ல வேண்டும். முதல் வீட்டில்
யார், யார் இருக்கிறார்கள், முதல்
வீட்டின் அதிபதி எங்கு இருக்கிறார்
அதாவது இலக்கினாதிபதி எங்கு
இருக்கிறார், முதல் வீட்டை எந்தெந்த
கிரகங்கள் பார்க்கின்றன என்பதை வைத்தும்
பலன் சொல்ல வேண்டும்.
இரண்டாவது வீடு : இது குடும்பத்தைக்
குறிக்கிறது. பணவரவு, செலவு போன்ற
பொருளாதாரத்தையும் இது
குறிக்கிறது. அதைத்தவிர நகைகள்,
வெள்ளிப் பாத்திரங்கள், Securities
போன்ற சொத்துக்களையும் கூறலாம்.
ஆடை, அணிகலன்களையும் இந்த வீட்டை வைத்துக்
கூறலாம். வங்கியில் உள்ள பண நிலைமை,
Promisery Notes, போன்றவற்றையும் இந்த வீட்டை
வைத்துத்தான் கூறவேண்டும். இரண்டாம்
வீட்டை வாக்குஸ்தானம் என்றும்
அழைப்பார்கள். ஒருவர் கனிவாகப்
பேசுவாறா, அல்லது கடினமாகப்
பேசுவாறா, நன்றாகப் பேசுவாறா
அல்லது திக்கிதிக்கிப் பேசுவாறாஎன்றும்
இந்த வீட்டை வைத்துக் கூறலாம்.
கண்பார்வையையும் இந்த வீட்டை வைத்துக்
கூறலாம். ஒருவர் கண்ணாடி
அணிபவரா அல்லது இல்லையா
என்பதையும் இந்த வீட்டை வைத்து கூறலாம்.
பொதுவாக எந்த வீடாக
இருந்தாலும் அந்த வீட்டில் நல்ல
கிரகங்கள் இருந்தால் அந்த வீட்டைக்
குறிப்பன நல்லதையே செய்யும். தீய
கிரகங்கள் இருந்தால் அந்த வீட்டைக்
குறிக்கும் காரகத்துவங்கள் கெட்டு
விடும். உதாரணமாக 2-ம் வீட்டை எடுத்துக்
கொள்ளுங்கள். 2-ம் வீடு குடும்பத்தைக்
குறிக்கிறது. அதில் சனி இருக்கிறது எனக்
கொள்வோம். சனி ஒரு பாவ கிரகம்
அல்லவா! சனி எதையும் குறைவாகவும்,
தாமதமாகவும் கொடுப்பார்.
குடும்பம் சிறியதாக இருக்கும். பணவரவு
குறைவாக இருக்கும். குடும்பத்தில் நிம்மதியும்
குறைவாகவும் இருக்கும். என்ன- புரிகிறதா?
மூன்றாம் வீடு : இந்த வீட்டைக்
கொண்டு ஒருவரின் இளைய சகோதரம்,
ஒருவரின் தைரியம், அண்டை வீட்டிலுள்ளவர்கள்,
குறுகிய பயணம், ஆகியவற்றையும் கூறலாம்.
கடிதப் போக்கு வரத்துக்கள், தகவல்
பரிவர்த்தனைகள், வீடு மாறுதல்
ஆகியவற்றையும் இந்த வீட்டை வைத்துக்
கூறலாம். இந்த வீட்டில் கேது
இருப்பாரேயாகில் அவர் கலகங்களை
விளைவிப்பவை என்றும் கூறலாம். இன்னும்
நகைச்சுவையாகக் கூறப்போனால் அவரைக்
"கலியுக நாரதர்" எனவும் கூறலாம்.
உடல் பாகங்களில் காதுகள்,
தொண்டை, கைகள், நரம்பு மண்டலம்,
ஆகியவற்றை இந்த 3-ம் வீடு குறிக்கிறது. இந்த
வீட்டை தைரிய ஸ்தானம் என்றும்
கூறுவார்கள். இந்த வீட்டில்
செவ்வாய் இருந்தால் அவர் மிக்க
தைரியசாலியாக இருப்பார்.
ஏனெனில் செவ்வாயானவர்
வீரமிக்க கிரகம். ஒருவருக்கு வீரத்தைக்
கொடுப்பவர் செவ்வாய்
தான். அங்கே சனி இருந்தால் அவர்
அவசரப் படாமல் நிதானத்துடன்
செயல் படுவர். யோஜனை செய்து
தான் முடிவு எடுப்பார். அவசரப் பட
மாட்டார்.
நான்காம் வீடு : இது தாயாரைக்
குறிக்கும் வீடு. கல்லூரிவரையிலான படிப்பு,
வீடு, வாசல் போன்ற ஸ்திர
சொத்துக்கள், பூமிக்குள் இருக்கும்
புதையல், கால்நடைகள், பசுக்கள்,
விளைநிலங்கள், அதிலிருந்து கிடைக்கும்
தான்யங்கள் ஆகியவற்றைக் குறிப்பதும்
இந்த நாலாவது வீடுதான். ஒருவருக்கு 4-
ம் வீட்டில் செவ்வாய் இருக்கிறார்
என்க் கொள்ளுங்கள். அவர்
நிச்சயமாக வீடு கட்டுவர். ஏனெனில்
செவ்வாய் பூமிகாரகன். பூமிகார
கனான செவ்வாய் 4-ம் வீட்டுடன்
சம்பந்தப் பட்டதால் அவர் நிச்சயம் வீடு
கட்டுவர். இதே செவ்வாய் 9-ம் வீட்டு
அதிபதி எனக் கொள்வோம். இவருக்கு
தகப்பனாரின் வீடு கிடைக்கும். ஏன்? 9-ம் வீடு
தகப்பனாரைக் குறிக்கிறது. செவ்வாய்
பூமிகாரகனாகி, 9-ம் வீட்டையும் குறித்து ,
ஸ்திரசொத்துக்களைக் குறிக்கும்
வீடான 4-ம் வீட்டில் இருக்கிறார். ஆக
இவருக்கு தகப்பனாரின் வீடு கிடைக்கும்
எனக் கூறலாம். என்ன புரிகிறதா?
5-ம் வீடு : இதை புத்திர ஸ்தானம் என்று
அழைப்பார்கள். இதைப் பூர்வ புண்ணிய
ஸ்தானம் என்றும் அழைக்கல்லாம்.
அதாவது போன ஜென்மத்தில் ஒருவர்
நல்லது செய்தவரா இல்லையா என்று
இந்த வீட்டைக் கொண்டு முடிவு
செய்யலாம். ஒருவருக்குக் குழந்தைகள்
உண்டா அல்லது இல்லயா என்றும்
முடிவு செய்யலாம். ஒருவருக்குக்
கலைத்துறையில் நாட்டம் இருக்கிறதா
அல்லது இல்லயா என்பது பற்றியும் இந்த
வீட்டைக்கொண்டு முடிவு
செய்யலாம். அதே போன்று, சினிமா,
டிராமா, லாட்டரி, குதிரைப்பந்தயம்,
ஆகியவற்றையும் இந்த வீடுதான் குறிக்கும்.
ஒருவர் காதலித்துத் திருமணம்
செய்வாரா இல்லையா என்பது
பற்றியும் இந்த வீட்டைக் கொண்டு
முடிவு செய்யலாம். ஆன்மீக
வாழ்க்கையையும் இந்த வீட்டைக்
கொண்டு தீர்மானம்
செய்யலாம். வேதங்கள், மந்திரங்கள்
ஆகியவற்றையும் இந்த வீட்டைக்
கொண்டு தீர்மானம்
செய்யலாம்.
6-ம் வீடு : கடன், வியாதி, உண்ணும்
உணவு , வேலை செய்யும் இடம்,
ஒருவருடைய வேலைக்காரர்கள் ஆகிய வற்றையும்
இந்த வீட்டைக் கொண்டு
சொல்லலாம். கவலைகள்,
துக்கங்கள் தாய் மாமன் ஆகியவற்றைக்
குறிப்பது இந்த வீடு தான்.
உதாரணமாக ஒருவருக்குக் கன்னியா
இலக்கினம் எனக் கொள்ளுங்கள்.
இலக்கினாதிபதி புதன் 6-ம் வீடான
கும்பத்தில் இருக்கிறார் எனக்
கொள்ளுங்கள். புதன் 1-ம் வீட்டிற்கு
அதிபத்யாகி 6-ம் வீட்டில் இருக்கிறார்.
அவர் உடல் நிலையில் நிச்சயமாகக் கோளாறு
இருக்கும். ஏனெனில் புதன் 1-ம்
வீட்டையும் 6-ம் வீட்டையும் குறிக்கிறார். ஆக
இவர் உடலில் ஏதோகோளாரு இருக்கிறது எனக்
கொள்ள வேண்டும். சரி! 2-ம் வீட்டின்
அதிபதி சுக்கிரன் 6-ம் வீட்டில் இருக்கிறார்
எனக் கொள்ளுங்கள். 6-ம் வீடு
Employment என்று சொல்லுகின்ற
வேலையைக் குறிக்கிறது. 2-ம் வீடு தனத்தைக்
குறிக்கிறது. ஆகவே இவர் வேலைக்குச்
சென்று பணம் சம்பாதிப்பர் எனக்
கொள்ளலாம். இவ்வாறாக 6-
ம் வீட்டிலுள்ள கிரகம் மற்ற எந்த வீட்டுடன்
சம்மந்தம் கொண்டுள்ளதோ அதை
வைத்துப் பலன் சொல்ல வேண்டும்.
7-ம் வீடு : திருமணத்தைக் குறிக்கும் வீடு
இதுதான். வியாபாரத்தைக் குறிக்கும்
வீடும் இது தான். ஒருவர் மரணத்தைக்
குறிக்கும் வீடும் இது தான். பிரயாணத்தைக்
குறிக்கும் வீடும் இது தான். ஒருவர்
ஜாதகத்தில் 7-ம் வீட்டில் சனி இருக்கிறது
எனக் கொள்ளுங்கள். சனிதான்
எதையும் தாமதப் படுத்துபவர் ஆயிற்றே! ஆக
இவருக்குத் திருமணம் தாமதம் ஆகும் எனக்
கூறலாம். உதாரணமாக கடக
இலக்கினக்காரர் ஒருவருக்கு 7-ம்
இடமான மகரத்தில் சனி இருக்கிறது எனக்
கொள்வோம். சனியானவர் 7-ம்
வீட்டிற்கும், 8-ம் வீட்டிற்கும் அதிபதி. 7-ல்
இருக்கிறார். அவர் திருமணத்தைத் தாமதப்
படுத்துவதோடு சில சங்கடங்களையும்
திருமணத்திற்குப் பிறகு
கொடுப்பார். ஏனெனில் சனி
8-ம் வீட்டிற்கும் அதிபதியல்லவா! சரி!
சனிக்குப் பதிலாக 6-ம் வீடு, 9-ம் வீட்டிற்கு
அதிபதியாகிய குரு இருக்கிறார் எனக்
கொள்ளுங்கள். திருமண வாழ்வு
எப்படி இருக்கும்? 6-ம் வீடு என்பது 7-ம்
வீட்டிற்குப் 12-ம் வீடு அல்லவா! திருமண
வாழ்வு சுகப்படாது. பிரச்சனைகள்
நிறைந்ததாக இருக்கும்.
8-ம் வீடு : ஒருவரின் ஆயுளைக் குறிக்கும் வீடு
இது தான். பிதுரார்ஜித
சொத்துக்கள், உயில்கள், இன்ஷ்ஷ
¤ரன்ஸ், கிராட்டுவிட்டி, போனஸ்
ஆகியவைகளைக் குறிக்கும் வீடு இதுதான்.
ஒருவர் மரணம் இயற்கையானதா அல்லது
துர்மரணமா என்பதையும் இந்த வீட்டைக்
கொண்டு அறியலாம். துன்பம்,
துக்கம், தோல்வி, தண்டனை, தடைகள்,
ஜெயில் தண்டனை, இவைகளையும் அறியும்
வீடு இதுதான். இந்த வீட்டை "துஸ்தானம்"
எனக் கூறுவர்கள். 8-ம் வீட்டில் சனி
இருந்தால் ஒருவருக்கு தீர்க்காயுசு எனக்
கொள்ளலாம். குரு இருந்தாலும்
தீர்க்காயுசு எனக் கொள்ளலாம்.
பொதுவாக 8-ம் வீட்டில் உள்ள
கிரகங்களோ, அல்லது 8-ம் வீட்டிற்கு அதிபதியோ
தங்கள் தசா, புக்திகளில் நல்லதைச்
செய்யாதென்பது பலரின்
அபிப்பிராயம்.
9-ம் வீடு : தகப்பனர், போன ஜென்மத்தில்
ஒருவர் செய்த பூர்வ ஜென்ம
புண்ணியங்கள், பாபங்கள், நீண்ட
பயணம், தெய்வ தரிசனம்
செய்தல், உயர்கல்வி, முன்பின்
தெரியாதவர்கள், ஆகியவற்றைக்
குறிப்பது இந்த வீடு தான்.
உதாரணமாக 9-ம் வீட்டில் ஒருவருக்கு
சனி, செவ்வாய் போன்ற பாப
கிரகங்கள் இருக்கிறது எனக்
கொள்ளுவோம். நிச்சயமாக
அவருக்குத் தகப்பனார் அனுசரணையாக
இருக்க மாட்டார். 9-ம் வீட்டைத் தவிர
சூரியனின் நிலையையும் நாம் கணக்கில்
எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஏனென்றால் சூரியன்
பிதுர்காரகனல்லவா? 9-ம் வீட்டில் பாப
கிரகங்கள் இருக்குமேயாகில் அந்த வீட்டின்
காரகத்துவங்கள் எல்லாம் கெட்டு
விடும்.
10-ம் வீடு : ஒருவரின் ஜீவனம்,
கெளரவம், சபைகளில் முக்கியத்துவம்
ஆகியவற்றை 10-ம் வீட்டைக்
கொண்டுதான் சொல்ல
வேண்டும். தொழிலில் முன்னேற்றம்,
பதவி உயர்வு ஆகியவற்றையும் இதைக்
கொண்டேதான் சொல்ல
வேண்டும். ஒருவருக்கு அரசியல்
நல்லபடியாக இருக்குமா அல்லது
இருக்காதா என்றும் இந்த வீட்டைக்
கொண்டுதான் சொல்ல
வேண்டும். இதைக் கர்மஸ்தானம் என்றும்
கூறுவார்கள். தாயார், தகப்பனாருக்குச்
செய்யும் கர்மங்களையும் இந்த வீட்டைக்
கொண்டுதான் சொல்ல
வேண்டும். ஒருவரின் எஜமானர்,
அரசாங்கம் இவைகளையும் இந்த வீடுதான்
குறிக்கிறது.
11-வது வீடு : இதை லாபஸ்தானம் என்று
கூறுவார்கள். நமக்கு வரக்கூடிய
லாபங்களையும், சுகங்களையும் அளிக்கக்
கூடியது இந்த வீடுதான். மூத்த சகோதரத்தைப்
பற்றியும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம்.
நண்பர்களையும் இந்த வீட்டை வைத்துத்தான்
கூற வேண்டும். நல்ல கிரகங்கள் இந்த வீட்டில்
இருந்தால் நல்ல வைத்துத்தான் கூற
வேண்டும். நல்ல கிரகங்கள் இந்த வீட்டில்
இருந்தால் நல்ல நண்பர்கள்
கிடைப்பார்கள். பொதுவாக
வாழ்க்கையில் என்ன மிச்சம் என்பதை இந்த
வீட்டை வைத்துத்தான் கூற வேண்டும். 11-ம்
வீட்டிற்குடைய கிரகம் 5-ம் வீட்டில் இருந்தால்
புத்திரத்தால் லாபம் எனக்
கொள்ளலாம். அதே 11-ம்
வீட்டிற்குடைய கிரகம் 10-ல் இருந்தால் நல்ல
ஜீவனம் எனக் கொள்ளலாம்.
அதே போல் 11-க்குடைய கிரகம் எந்த வீட்டில்
இருந்தாலும் அந்த வீட்டிற்கு நல்லது எனக்
கொள்ள வேண்டும்.
12-வது வீடு: இதை மோட்ச ஸ்தானம் என்று
சொல்லுவார்கள். இதை விரய
ஸ்தானம் என்றும்
சொல்லுவார்கள். நமக்கு
வரக்கூடிய செலவுகள், நஷ்டங்கள்
எல்லாவற்றையும் இந்த வீட்டை வைத்தே
சொல்லவேண்டும். துன்பம்,
பாவங்கள், வறுமை, துரதிஷ்டம், ஆகியவையும்
இந்த வீட்டை வைத்தே சொல்ல
வேண்டும். மறைமுக எதிரிகளையும் இந்த வீட்டை
வைத்தே சொல்ல வேண்டும். ஒருவருக்கு
ஜெயில் வாசம், உள்ளதா அல்லது
இல்லையா என்பதையும் இந்த வீட்டை
வைத்துத்தான் கூறவேண்டும். கடனைத் திருப்பிக்
கொடுத்தலையும், முதலீடு
செய்வதையும் இந்த வீட்டை வைத்துத்தான்
கூற வேண்டும்.

Saturday 7 May 2016

Indian hindu festivals reason பண்டிகைகளின் சூட்சமம்

இந்தியாவில் கொண்டாடப்படும்
அனைத்து முக்கிய பண்டிகைகளும் சூரியன்
சந்திரன் மையமாக வைத்து
கொண்டாடபடுபவைகள் ஆகும்.
உதாரணமாக, சூரியன் உச்சம்
பெற்று சந்திரன் சித்திரை நட்சத்திரத்தில்
இருக்கும் போது வருவது "சித்ரா பௌர்ணமி".
உச்ச வீடான ரிஷபத்தில் சந்திரன்
கார்த்திகை நட்சத்திரத்தில் இருக்க, சூரியன்
விருச்சிகம் ராசியில் இருக்க வருவது,
கார்த்திகை தீபமாகும்.
சூரியன் ஆட்சி பெற்று, சந்திரன்
கும்பத்தில் அவிட்டம் நட்சத்திரத்தில் நிற்க
வருவது "ஆவணி அவிட்டம்".
குருவும் சந்திரனும் சிம்மத்தில் மகம்
நட்சத்திரத்தில் இருக்க, சூரியன் கும்பத்தில்
இருக்க, பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை
வரும் "மகாமகம் " ஆகும்.
ஆட்சி வீடு கடகத்தில் சந்திரன் பூசத்தில்
இருக்க, சூரியன் மகரத்தில் இருக்க வருவது
"தைபூசமாகும்."
கடகத்தில் சூரியனும் சந்திரனும் சேர வருவது
"ஆடி அமாவாசை".
மிதுனத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில்
சந்திரனிருக்க, தனுசில் சூரியன் இருக்க
வருவது, ஆருத்ரா தரிசனம் ஆகும்.
இவ்வாறாக பண்டிகை வரும்
காலங்களில், சக்தி பெற்ற சந்திர
கிரணங்கள் நீர்நிலைகளில் சேர்ந்திருக்கும்
என்பதை முன்னோர்கள் அறிந்திருந்தனர். எனவே
கோயில்களை நீர்நிலைகள் (கடல், குளம், ஆறு, ஏரி,
அருவி) அருகில் அமைத்தனர். அந்த
நீர்நிலைகளில் பண்டிகை காலங்களில் குளித்து
சூரிய நமஸ்காரம் செய்ய, சூரிய
மற்றும் சந்திர கிரணங்களால், உடலும்
மனமும் புத்துணர்ச்சி பெற்று பலம்
பெறும். அதன் பிறகு கோயில் சென்று
கடவுளை வழிபட அங்கிருக்கும் தெய்வீக
அதிர்வலைகள் உடலெங்கும் பரவி
நோய்கள் நீங்கும். இதுதான் பண்டிகைகளின்
சூட்சமம்.
நன்றி,