Sunday 6 August 2017

நந்திகேஸ்வர் துதி

நந்திகேஸ்வரர் துதியினை பிரதோசவேளைகளில் செபித்து சிவ தரிசனம் கண்டால் நந்தியின் அருளும், சிவபெருமானின் அருளும் ஒருங்கே உண்டாகும்.
-
🍀சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி🍀
சேவித்த பக்தர்களைக் காக்கும் நந்தி🍀
கவலைகளை எந்நாளும் போக்கும் நந்தி🍀
கயிலையிலே நடம் புரியும் கனிந்த நந்தி...🍀
---
🍀பள்ளியறைப் பக்கத்தில் இருக்கும் நந்தி🍀
பார்வதியின் சொல்கேட்டுச் சிரிக்கும் நந்தி🍀
நல்லதொரு ரகசியத்தைக் காக்கும் நந்தி🍀
நாள்தோறும் தண்ணீரில் குளிக்கும் நந்தி...🍀
---
🍀செங்கரும்பு உணவு மாலை அணியும் நந்தி🍀
சிவனுக்கே உறுதுணையாய் விளங்கும் நந்தி🍀
மங்களங்கள் அனைத்தையும் கொடுக்கும் நந்தி🍀
மனிதர்களின் துயர் போக்க வந்த நந்தி...🍀
---
🍀அருகம்புல் மாலையையும் அணியும் நந்தி🍀
அரியதொரு வில்வமே ஏற்ற நந்தி🍀
வரும் காலம் நலமாக வைக்கும் நந்தி🍀
வணங்குகிறோம் எமைக் காக்க வருக நந்தி...🍀
---
🍀பிரதோஷ காலத்தில் பேசும் நந்தி🍀
பேரருளை மாந்தருக்கு வழங்கும் நந்தி🍀
வரலாறு படைத்து வரும் வல்ல நந்தி🍀
வறுமையினை எந்நாளும் அகற்றும் நந்தி...🍀
---
🍀கெட்டகனா அத்தனையும் மாற்றும் நந்தி🍀
கீர்த்தியுடன் குலம் காக்கும் இனிய நந்தி🍀
வெற்றிவரும் வாய்ப்பளிக்க உதவும் நந்தி🍀
விதியினைத்தான் மாற்றிட விளையும் நந்தி...🍀
---
🍀வேந்தன்_நகர் நெய்யினிலே குளிக்கும் நந்தி🍀
வியக்க வைக்கும் தஞ்சாவூர்ப் பெரிய நந்தி🍀
சேர்ந்த திருப்புன்கூரிலே சாய்ந்த நந்தி🍀
செவிசாய்த்து அருள் கொடுக்கும் செல்வ நந்தி...🍀
---
🍀கும்பிட்ட பக்தர் துயர் நீக்கும் நந்தி🍀
குடம் குடமாய் அபிஷேகம் பார்த்த நந்தி🍀
பொன்பொருளை வழங்கிடவே வந்த நந்தி🍀
புகழ்குவிக்க எம் இல்லம் வருக நந்தி...🍀
---
🍀"ஈசன் அருளைப் பெற மக்கள் மெய்வருத்தம் பாராது ஆலயங்களுக்கு செல்ல வேண்டும் என்பதே எங்களது பிரார்த்தனையும், வேண்டுகோளும்!"🍀
-
🍀
-
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
-
காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி!
கயிலை மலையானே போற்றி! போற்றி!
-
|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||