Tuesday 21 June 2016

108 நற்பண்புகள்-நட்சத்திரபாதப்படி

27 நட்சத்திரங்களும் 4 பாதங்களைக்
கொண்டுள்ளது. ஆக
மொத்தம் 108 நற்பண்புகள்
உள்ளன. அவை 12 வகைகளாக
பிறிக்கப்படுகிறது. அதுவே 12 இராசி
மண்டலமாகும். அவை :
👆 மேஷம்
✋ ரிஷபம்
✌ மிதுனம்
✊ கடகம்
💪 சிம்மம்
👋 கன்னி
👍 துலாம்
👇 விருச்சிகம்
☝ தனுசு
👌 மகரம்
👏 கும்பம்
👊 மீனம்
🔎 ஒவ்வொரு இராசி மண்டலமும்
தனித்துவம் வாய்ந்தவை. அதன்
சிறப்பம்சங்களை பட்டியலாக கீழே
கொடுக்கப்பட்டுள்ளது.
👆 மேஷம் :
1. வைராக்கியம் (Assertiveness)
2. தேசநலன் (Citizenship)
3. நிறைவேற்றுதல் (Chivalry)
4. துணிச்சல் (Courage)
5. கீழ்படிதல் (Obedience)
6. வெளிப்படையாக (Openness)
7. ஒழுங்குமுறை (Order)
8. ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance)
9. ஆன்மிகம் (Spirituality)
🎯 மேஷராசி மண்டலமானது ஜீரண
மண்டலத்தின் ஆதாரமாகும்
✋ ரிஷபம் :
1. கருணை (Mercy)
2. இரக்கம் (Compassion)
3. காரணம் அறிதல் (Consideration)
4. அக்கறையுடன் (Mindfulness)
5. பெருந்தன்மை (Endurance)
6. பண்புடைமை (Piety)
7. அஹிம்சை (Non violence)
8. துணையாக (Subsidiarity)
9. சகிப்புத்தன்மை (Tolerance)
🎯 ரிஷபராசி மண்டலமானது சிறுநீரக
மண்டலத்தின் ஆதாரமாகும்
✌ மிதுனம் :
1. ஆர்வம் (Curiosity)
2. வளைந்து கொடுத்தல் (Flexibility)
3. நகைச்சுவை (Humor)
4. படைப்பிக்கும் கலை (Inventiveness)
5. வழிமுறை (Logic)
6. எழுத்து கற்க பிரியம் (Philomathy)
7. காரணம் (Reason)
8. தந்திரமாக (Tactfulness)
9. புரிந்து கொள்ளுதல்
(Understanding)
🎯 மிதுனராசி மண்டலமானது நரம்பு
மண்டலத்தின் ஆதாரமாகும்.
✊ கடகம் :
1. பிறர் நலம் பேணுதல் ( Altruism )
2. நன்மை செய்ய விரும்புதல்
(Benevolence)
3. அறம் (Charity)
4. உதவுகின்ற (Helpfulness)
5. தயாராக இருப்பது (Readiness)
6. ஞாபகம் வைத்தல் (Remembrance)
7. தொண்டு செய்தல் (Service)
8. ஞாபகசக்தி (Tenacity)
9. மன்னித்தல் (Forgiveness)
🎯 கடகராசி மண்டலமானது ஐம்புலன்
மண்டலத்தின் ஆதாரமாகும்.
💪 சிம்மம் :
1. வாக்குறுதி (Commitment)
2. ஒத்துழைப்பு (Cooperativeness)
3. சுதந்திரம் (Freedom)
4. ஒருங்கிணைத்தல் (Integrity)
5. பொறுப்பு (Responsibility)
6. ஒற்றுமை (Unity)
7. தயாள குணம் (Generosity)
8. இனிமை (Kindness)
9. பகிர்ந்து கொள்ளுதல் (Sharing)
🎯 சிம்மராசி மண்டலமானது தசை
மண்டலத்தின் ஆதாரமாகும்.
👋 கன்னி :
1. சுத்தமாயிருத்தல் (Cleanliness)
2. அருள் (Charisma)
3. தனித்திருத்தல் (Detachment)
4. சுதந்திரமான நிலை (Independent)
5. தனிநபர் உரிமை (Individualism)
6. தூய்மை (Purity)
7. உண்மையாக (Sincerity)
8. ஸ்திரத்தன்மை (Stability)
9. நல்ஒழுக்கம் (Virtue ethics)
🎯 கன்னிராசி மண்டலமானது தோல்
மண்டலத்தின் ஆதாரமாகும்.
👍 துலாம் :
1. சமநிலை காத்தல் (Balance)
2. பாரபட்சமின்மை (Candor)
3. மனஉணர்வு (Conscientiousness)
4. உள்ளத்தின் சமநிலை (Equanimity)
5. நியாயம் (Fairness)
6. நடுநிலையாக (Impartiality)
7. நீதி (Justice)
8. நன்னெறி (Morality)
9. நேர்மை (Honesty)
🎯 துலாராசி மண்டலமானது சுவாச
மண்டலத்தின் ஆதாரமாகும்.
👇 விருச்சிகம் :
1. கவனமாக இருத்தல்(Attention)
2. விழிப்புணர்வுடன் இருத்தல் (Awareness)
3. எச்சரிக்கையாக இருத்தல் (Cautiousness)
4. சீரிய யோசனை (Consideration)
5. பகுத்தரிதல் (Discernment)
6. உள் உணர்வு (Intuition)
7. சிந்தனைமிகுந்த (Thoughtfulness)
8. கண்காணிப்பு (Vigilence)
9. அறிவுநுட்பம் (Wisdom)
🎯 விருச்சகராசி மண்டலமானது நிணநீர்
மண்டலத்தின் ஆதாரமாகும்.
☝ தனுசு :
1. லட்சியம் (Ambition)
2. திடமான நோக்கம் (Determination)
3. உழைப்பை நேசிப்பது (Diligence)
4. நம்பிக்கையுடன் (Faithfulness)
5. விடாமுயற்சி (Persistence)
6. சாத்தியமாகின்ற (Potential)
7. நம்பிக்கைக்குரிய (Trustworthiness)
8. உறுதி (Confidence)
9. ஊக்கத்துடன் முயற்சி (Perseverance)
🎯 தனுசு ராசி மண்டலமானது எலும்பு
மண்டலத்தின் ஆதாரமாகும்.
👌 மகரம்:
1. கண்ணியம் (Diginity)
2. சாந்த குணம் (Gentleness)
3. அடக்கம் (Moderation)
4. அமைதி (Peacefulness)
5. சாதுவான (Meekness)
6. மீளும் தன்மை (Resilience)
7. மௌனம் (Silence)
8. பொறுமை (Patience)
9. செழுமை (Wealth)
🎯 மகரராசி மண்டலமானது
நாளமுள்ள சுரப்பி மண்டலத்தின்
ஆதாரமாகும்.
👏 கும்பம் :
1. சுய அதிகாரம் (Autonomy)
2. திருப்தி (Contentment)
3. மரியாதை (Honor)
4. மதிப்புமிக்க (Respectfulness)
5. கட்டுப்படுத்துதல் (Restraint)
6. பொது கட்டுப்பாடு (Solidarity)
7. புலனடக்கம் (Chasity)
8. தற்சார்பு (Self Reliance)
9. சுயமரியாதை (Self-Respect)
🎯 கும்பராசி மண்டலமானது
நாளமிள்ளா சுரப்பி மண்டலத்தின்
ஆதாரமாகும்.
👊 மீனம் :
1. உருவாக்கும் கலை (Creativity)
2. சார்ந்திருத்தல் (Dependability)
3. முன்னறிவு (Foresight)
4. நற்குணம் (Goodness)
5. சந்தோஷம் (Happiness)
6. ஞானம் (Knowledge)
7. நேர்மறை சிந்தனை (Optimism)
8. முன்யோசனை (Prudence)
9. விருந்தோம்பல் (Hospitality)
🎯 மீனராசி மண்டலமானது இரத்த ஒட்ட
மண்டலத்தின் ஆதாரமாகும்.

Monday 20 June 2016

ருத்ராட்சம் அணிவதால் ஏற்படும் நன்மைகள்

ஒருவகையான மரத்தின் விதைதான்
ருத்ராட்சம். இதற்கு தனித்துவமான
சிறப்புகள் பல உண்டு. தன்னைச் சுற்றிலும்
அபூர்வமான அதிர்வலைகளை இது
கொண்டிருக்கிறது. எனவே இதை
அணிவதால் பல நன்மைகள் ஏற்படுகிறது.
நீங்கள் புதுஇடங்களுக்கு செல்லும் போது
அங்கிருக்கும் அதிர்வுகள் உங்களுக்கு
ஏற்றதாக இல்லையென்றால்
உங்களால் அமைதியாக இருக்க முடியாது.
ஆனால்இ ருத்ராட்சம் அணிந்தால்
எவ்விதமான பாதிப்பும் நம்மை தீண்ட
முடியாது.மனநிலை சாந்தமாகவே
இருக்கும். சக்திவட்டம் நம்மைக் கவசம் போல்
பாதுகாக்கும்.
ஐந்துமுகம் கொண்ட ருத்ராட்சம்
உடல் ஆரோக்கியம் தரும். ஆண்பெண்
பேதமின்றி எல்லோரும் அணியலாம். இது ரத்த
அழுத்தத்தை சீராக்கிஇமன அமைதியையும்இ
சுறுசுறுப்பையும் தரும். ஆறுமுகம்
கொண்ட சண்முகி ருத்ராட்சத்தை 14
வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் அணிவதால்
தாயின் பூரண அன்பிற்கு
பாத்திரமாகலாம்
எப்படி ருத்திராட்சம் தோன்றியது ?
ருத்திரன் என்ற பெயரில் இருந்து வந்ததே
ருத்திராட்சம் ஆகும். சிவபெருமானின்
முக்கண்களிலிருந்தும் தெறித்த
ஆனந்தக் கண்ணீர் சொட்டுகளே
ருத்திராட்சங்களாகின. மொத்தம்
முப்பத்தெட்டு விதமான
ருத்திராட்சங்கள் தோன்றின.
வலது கண்ணிலிருந்து மஞ்சள் நிற
ருத்திராட்சங்கள் பன்னிரண்டும்இ இடது
கண்ணில் இருந்து பதினாறு
வெண்ணிற ருத்திராட்சங்களும்
தோன்றின. நெற்றிக் கண்ணிலிருந்து
கருப்பு வண்ணத்தில் பத்து ருத்திராட்சங்கள்
வெளிப்பட்டன.
தோற்றம்
ஒரு முகம் முதல் 16 முகம் வரை
கொண்ட பதினாறு வகை
ருத்திராட்சங்கள் உண்டு. ருத்திராட்சத்தின்
மேல் உள்ள கோட்டின் எண்ணிக்கையைக்
கொண்டு ருத்திராட்சம் எத்தனை
முகம் கொண்டது என்பதை
அறியலாம்.
சாணைக்கல்லில் உரைத்தால் மஞ்சளாக
தங்கம்போல் பிரகாசிப்பதும்இ நல்ல
வர்ணமுள்ளதுமான ருத்திராட்சம்இ த
ண்ணீரில் போட்டால் மூழ்குவதும்இ இரு
செப்புத் தகட்டுக்கு இடையில் வைத்து சோதனை
செய்தால் சுற்றக்கூடியது மான
ருத்திராட்சம் ஆகியவை மிகவும்
விசேஷமானவை.
கழுத்தில் மாலையாக 32 ருத்திராட்சங்கள
ும்இ கை மணிக்கட்டுகளில் 12
ருத்திராட்சங்களும்இ மேல் கையில்
பதினாறும்இ மார்பில் நூற்றியெட்டும்
தரிக்கலாம். ருத்திராட்ச மாலையின்
பெருமை என்று சொன்னால்
இ ஏக முக ருத்திராட்சத்தின் அதி
தேவதையாக தத் பரமசிவனைக் கூறுவார்கள்.
இந்த ஏக முக ருத்திராட்சத்தை அணிவதால்
சிவபெருமான் ப்ரீத்தி அடைந்து
பிரம்மஹத்தி தோஷம் விலகும்.
இரண்டு முக ருத்திராட்சத்தின் அதிதேவதை
ஸ்ரீகண்ட பரமசிவம். இந்த இரண்டு முக
ருத்திராட்சத்தை அணிவதால் சிவசக்தி ப்ரீதி
ஏற்பட்டு பசுவைக் கொன்ற தோஷம்
விலகும்.
மூன்று முக ருத்திராட்சத்தின் அதிதேவதை
அக்னி தேவனாகும். இதை அணிவதால்
மும்மூர்த்திகளும் சந்தோஷம் அடைகிறார்கள்.
ஸ்திரீகளுக்குச் செய்த தோஷம் விலகும்.
நான்கு முக ருத்திராட்சத்தின் அதிதேவதை
பிரம்மாவாகும். இதை அணிவதால்
பிரம்மா ப்ரீதி அடைவதுடன்இ மனிதர்களுக்கு
இழைத்த பாவம் விலகும்.
ஐந்து முக ருத்திராட்சத்தின் அதிதேவதை
காலாக்னி ருத்ரன். இதை அணிவதால்
சதாசிவம் சந்தோஷம் அடைகிறார்.
செய்யக்கூடாத செயல் களைச்
செய்வதால் உண்டாகும் தோஷம்
விலகும்.
ஆறு முக ருத்திராட்சத்தின் அதிதேவதை
சுப்ரமணியராகும். இதை அணிவதால்
ஆறுமுகன் சந்தோஷம் அடைவதுடன்இ
பிரம்மஹத்தி தோஷம் விலகும்.
ஏழு முக ருத்திராட்சத்தின் அதிதேவதையாக
ஆதிசேஷன் சொல்லப்படுகிறது. இதை
அணிவதால் சப்தமாதர்கள் சந்தோஷம்
அடைவதுடன் களவு தோஷமும் கோபத் தீயும்
விலகும்.
எட்டு முக ருத்திராட்சத்தின் அதிதேவதை
விநாயகப் பெருமானாகச்
சொல்லப்படுகிறது. இதை
அணிவதால் அட்டவித்யேச்வரர் சந்தோஷம்
அடைவதுடன்இ செய்யக்கூடாத
பாவங்களைச் செய்த தோஷம்
விலகுகிறது.
ஒன்பது முக ருத்திராட் சத்தின் அதிதேவதை
பைரவர். இதை அணிவதால் நவதீர்த்தங்
களில் குளித்தால் என்ன புண்ணியமோ
அந்தப் புண்ணியம் கிட்டும்; பைசாச
உபாதைகளும் துஷ்டப் பிரயோகங்களும்
விலகும்.
பத்து முக ருத்திராட்சத் தின் அதிதேவதை
விஷ்ணு. இதை அணிவதால் அஷ்டதிக்
பாலகர்களும் சந்தோஷம் அடைவதாகச்
சொல்லப்பட்டுள்ளது. ஜோதிடத் தில்
வரும் நாக தோஷமும்; பூத- பிரேத- பைசாச
தோஷங் களும் விலகும்.
பதினோரு முக ருத்திராட் சத்தின் அதிதேவதை
பதினோரு ருத்ரர்களாகச்
சொல்லப்பட்டுள் ளது. இதை
அணிவதால் 11 ருத்திரர்களும் ப்ரீதி
அடைகிறார்கள். பல அஸ்வமேத யாகம்
செய்த பலன் களும் பல வாஜபேய
யாகம் செய்த பலனும் கிட்டும்.
பலன்?
ருத்திராட்சம் அணிவதால் அனைத்து
நற்குணங்களும் அவர்களால் பிறர்
அனைவரும் பயன்பெறும் வகையிலும
நன்மைகளும் அமையும்.
ருத்திராட்சம் தாம் அணியாவிட்டாலும்
இ அப்படி ருத்திராட்சம் அணிந்தவருக்கு
அன்னமளிப்பவர்களும்இ ருத்திராட்சமரத்
தைப் பராமரிக்கிறவர்களும் புதிய
ருத்திராட்சத்தை தானம்
செய்பவர்களும் சிவபெருமானுக்கு
ருத்திராட்ச ஆபரணம் அணிவிப்பவர்களும்
பல சிறப்பு நலன்களைப் பெற்று
வாழ்வாங்கு வாழ்வார்கள்

Friday 17 June 2016

வன்னிமரத்தின் சிறப்பு✰ ✰

வன்னிமரம்
ஜெயதேவதையின் வடிவமாக
போற்றப்படுகிறது. அது துர்க்கை கோயில்
கொண்டிருக்கும் இடமாகும்.
✰ வன்னிமரம் பூக்காது. காய்
காய்க்காது. இது ஒரு அற்புதமான
மரம். இது வெற்றியை தேடி தரும் மரம்.
இது சிவாலயங்களில் இருக்கும். நம்மை
ஆளும் உமாதேவி வன்னி மரத்தடியில்
தான் வாசம் செய்கிறாள்.
✰ வன்னி மரத்தடியில் விநாயகர் இருப்பது
சிறப்பு வாய்ந்தது. பால், பன்னீர்,
இளநீரால் அபிஷேகம் செய்து,
வஸ்திரம் சாற்றி வழிபட்டால் கணவன்,
மனைவி கருத்து வேறுபாடு மறைந்து, குடும்பம்
ஒற்றுமை பெறும். குழந்தை பேறு கிட்டும்.
வன்னி மரத்து விநாயகரை வழிபட அனைத்து
செல்வங்களும் கிடைக்கும்.
✰ ராமபிரான், இராவணுடன் போருக்கு
செல்லும் முன், வன்னி மரத்தை வணங்கி
விட்டு, சென்றதாக புராணத்தில்
கூறப்படுகிறது. வன்னிமரம் சிவ
பெருமானின் அம்சம். இந்த
மரத்தடியில் தியானம் செய்தால்
கேட்டது கிடைக்கும்.
✰ வில்வத்திற்கு அடுத்தது வன்னிமரம்
தான் சிவனுக்கு உரியது. வில்வ மரம் எந்த
அளவுக்கு சிறப்பு வாய்ந்ததோ அந்த
அளவுக்கு வன்னி மரமும் சிறப்பு
வாய்ந்தது. சிவனுக்கு பிடித்த மரங்களில்
வன்னி மரமும் ஒன்று.
✰ வன்னிமர இலையை வடமொழியில்
சமிபத்ரம் என்று கூறுவார்கள். இது
விநாயகருக்கும், சனீஸ்வரனுக்கும்
விருப்பத்திற்குரிய இலையாகும்.
விஜயதசமியின் போது துர்க்காதேவி மகிஷனை
அழிக்க வேல் வாங்கும் நிகழ்ச்சி வன்னி
மரத்தடியில் நடக்கும். வன்னி வெற்றியை
தரும் மரம் என்பதால் அந்த மரம்
இருந்தால் அங்கு வேல் வாங்குவது
விஷேசம்.

Wednesday 15 June 2016

ஏகாதசி விரதங்கள்

வருடத்தில் 12
மாதங்களிலும் 24 ஏகாதசிகள்
வருகின்றன. இந்த 24 ஏகாதசிகளுக்கும்
தனித்தனிப் பெயர்களும்,
அதற்கான பலன்களும்
குறிப்பிடப்பட்டுள்ளன. அது குறித்த
விவரங்கள்...
மார்கழி
மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசிக்கு
வைகுண்ட ஏகாதசி என்று பெயர்.
இதற்கு மோட்சதா என்று வேறு ஒரு
பெயரும் உண்டு. இறைவன்
அனுக்கிரகம் செய்து காட்டும்
அத்யயனோத்ஸவம் இந்த நாளில்
கொண்டாடப்படும்.
தை
தை மாதக் கிருஷ்ணபட்ச ஏகாதசிக்கு
சபலா என்று பெயர். இது பல
மடங்கு பலன் தரவல்லது.தை மாத
சுக்லபட்ச ஏகாதசிக்கு புத்ரதா என்று
பெயர். இந்நாளில் விரதம்
இருப்பவர்களுக்கு பித்ருசாபம் விலகும்.
நல்ல குழந்தைகள் பிறக்கும்.அன்றைய
தினம் எள் கலந்த நீரில் நீராடித்
தலையில் கொஞ்சம் எள்ளைப்
போட்டுக் கொண்டு எள்ளால்
ஹோமம் செய்து எள்ளையே
ஆகாரமாகக் கொண்டு,
எள்ளைத் தானம் செய்வது போன்ற
காரியங்களை எள்ளினால்
செய்வார்கள்.
மாசி
மாசி மாத சுக்லபட்ச ஏகாதசிக்கு
ஐயா என்று பெயர். இது
எல்லாவிதமான பாவங்களையும்
நீக்க வல்லது.
பங்குனி
பங்குனி மாதக் கிருஷ்ணபட்ச
ஏகாதசிக்கு விஜயா என்று பெயர்.
ஸ்ரீராமபிரான் கடலைக் கடக்க இந்த
விரதம் அனுஷ்டித்ததாகப்
பத்மபுராணம் கூறுகிறது.பங்குனி மாத
சுக்லபட்ச ஏகாதசிக்கு குமலீக என்று
பெயர்.
சித்திரை
சித்திரை மாத சுக்லபட்ச ஏகாதசிக்கு
காமதா என்று பெயர்.இது
வேண்டுவோருக்கு வேண்டியதைக்
கொடுக்க
வல்லது.வைகாசிவைகாசி மாதக்
கிருஷ்ணபட்ச ஏகாதசிக்கு வருதீனீ என்று
பெயர்.வைகாசி மாத சுக்லபட்ச
ஏகாதசிக்கு மோகினி என்று பெயர்.
இந்த வைகாசி தினத்தில் புண்ணிய
நதிகளில் நீராடினால் புண்ணியமும்,
பத்ரீதர்சன பலனும் கிடைக்கும்.
ஆனி
ஆனி மாத சுக்லபட்ச ஏகாதசிக்கு
நிர்ஜலா என்று பெயர்.இதை
அனுஷ்டிப்பவர்கள் யமலோகம்
காணமாட்டார்கள்.
ஆடி
ஆடி மாதக் கிருஷ்ணபட்ச ஏகாதசிக்கு
யோகினி என்று பெயர். இது இலட்ச
பிராம்மண போஜன பலனைத்
தரவல்லது.ஆடி மாத சுக்லபட்ச
ஏகாதசிக்கு தேவஜைனீ என்று பெயர்.
இன்றுதான் மகாவிஷ்ணு ஆதிசேஷன்
மீது அரிதுயில் கொள்வதால்
இதை “சயனம்” என்றும்
சொல்வார்கள்.
ஆவணி
ஆவணி மாத சுக்லபட்ச ஏகாதசிக்கு
புத்ரா என்று பெயர்.
புரட்டாசி
புரட்டாசி மாதக் கிருஷ்ணபட்ச
ஏகாதசிக்கு அஜா என்று
பெயர்.புரட்டாசி மாத சுக்லபட்ச
ஏகாதசிக்கு பரிவர்தீனி என்று
பெயர்.இதை வாமன ஜயந்தி
ஏகாதசி என்றும் சொல்வர்.
இது சிரவண நட்சத்திரம் கூடியவர்களுக்கு
ஏற்றமுடையது.
ஐப்பசி
ஐப்பசி மாதக் கிருஷ்ணபட்ச
ஏகாதசிக்கு இந்திரா என்று
பெயர்.ஐப்பசி மாத சுக்லபட்ச
ஏகாதசிக்கு பராங்குசா என்று
பெயர்.கார்த்திகைகார்த்திகை
மாதக் கிருஷ்ணபட்ச ஏகாதசிக்கு
பிரபோதீனி என்று பெயர். இதை
உத்தான ஏகாதசி என்றும்
சொல்வர். இதைக் கைசிக ஏகாதசி
என்றும், துளசி கல்யாண வைபவத்தால்
பிருந்தாவன ஏகாதசி என்றும்
கூறுவர்.பலன்கள்ஏகாதசியன்று பட்டினி
இருந்து வைகுண்டவாசனைத் தரிசித்து,
விரதமிருப்பவர்களுக்கு இறப்பிற்குப் பின்
வைகுண்டம் கிடைக்கும் என்பது வைணவ
நம்பிக்கை.
மாதமிரண்டு ஏகாதசி வீதம் 24
ஏகாதசிகள் உண்டு. 24 ஏகாதசிகளும்
விரதமிருக்க முடியாதவர்கள்
பரந்தாமனின் உதயகாலத்தில்
வைகுண்ட வாசல் திறக்கும் மார்கழியில்
வரும் வைகுண்ட ஏகாதசி அன்று
மட்டுமாவது பட்டினி கிடந்து இரவு
கண்விழித்து நாராயணனை பூஜிக்க
வேண்டும். அப்படிச் செய்தால் 24
ஏகாதசிகளுக்கான பலன்களும் கிட்டும

Saturday 11 June 2016

ஐஸ்வர்யக் கோலம் (ஈஸ்வரக்கோலம்)

ஐஸ்வர்யக் கோலம் என்பது செல்வத்தை
அளிக்கும் கோலம் மட்டுமல்ல; அது கோலம்
என்பதையும் தாண்டி ஸ்ரீசக்கரம் போன்ற ஒரு
எந்திரம்! அதில் பல அற்புதமான
தத்துவங்கள் அடங்கியுள்ளன. "ஐஸ்வர்யம்
கொழிக்கும் வாழ்வை- அனைத்து
வசதிகளையும் உள்ளடக்கிய உன்னதமான
வாழ்க்கையை உனக்குத் தருவேன்'' என்று சக்தி
தேவியே கூறும் வகையில் அமைந்துள்ளது
ஐஸ்வர்யக் கோலம்.
சக்தியின் ரூபமான லக்ஷ்மியை மட்டும்
அல்ல; ஈஸ்வரனின் கோலத்தையும் நமக்குக்
காட்டுகின்றது
ஈ(ஐ)ஸ்வர்யக் கோலம். அந்தக் கோலத்திலுள்ள
முக்கோண நாற்கோணங்கள் ஒன்றுக்குள்
ஒன்று அடங்கியுள்ளதன் சூட்சுமம்
அதுதான். மேலும், கீழும் (ஆகாயம் முதல்
பாதாளம் வரை) சிவசக்தியாக ஈஸ்வரர்
நின்றிருக்க, இருபுறமும் மற்ற
இருமூர்த்திகளான பிரம்மாவும்,
விஷ்ணுவும் தத்தம் பத்தினிகளுடன் நிற்பதைக்
குறிப்பது அது.
அவர்களைச் சுற்றி கங்கை, காவேரி, யமுனை,
நர்மதா, கோதாவரி மற்றும் கிருஷ்ணா
போன்ற புண்ணிய நதிகளின் தேவியர்
பக்தர்களுக்கு சக்தியையும், செல்வ
வளத்தையும், மனதில் தூய்மையையும்
தந்தவண்ணம் உள்ளனர்.
சக்தியைக் காத்து நிற்கும் பன்னிரண்டு
பரிவார யோகினிகள், தேவி சந்நிதியின்
துவாரபாலர்களான தெய்வங்கள்,
காவல் தெய்வங்கள், காமேஸ்வரி,
மோதினி, விமலா போன்ற எட்டு சித்திகளைக்
கொண்ட எட்டு ஆவரண தேவதைகள்,
சந்திரன், சூரியன் ஆகியோரும் இந்தக் கோலத்தில்
அடங்கியுள்ளனர்.
ஐஸ்வர்யக் கோலத்தைப் பிரார்த்திக்கும் முறை
பூஜையறையில் அல்லது வேறு எந்த இடத்திலும்
ஐஸ்வர்யக் கோலப் படத்தை மாட்டி வைத்து,
அதன்முன் நெய் விளக்கேற்றி வைத்து
பிரார்த்தனை செய்தால் நினைத்தது
நடக்கும். பௌர்ணமியில் வேண்டுதலைத் துவக்கி,
அமாவாசை, அடுத்த பௌர்ணமி, மீண்டும்
அடுத்த அமாவாசைக்கு முதல் நாளன்று
வேண்டுதலை முடிக்கும்பொழுது 45
நாட்கள் ஆகிவிடும். வேண்டுதல் முடிந்த
மறுநாள் முதல் தேய்பிறைபோல நம்முடைய
பிரச்சினைகள் மறையத் துவங்கும்.
பௌர்ணமியன்று நம் பிரார்த்தனையை ஒரு
காகிதத்தில் எழுதி அதை மடித்து, அந்தக்
காகிதத்தினால் ஐஸ்வர்யக் கோலத்தை
ஒருமுறை தொட்டுவிட்டு, சாமி
பீடத்தில் ஒரு இடத்தில் வைத்துவிட வேண்டும்.
அதன்பின் ஒரு நெய்விளக்கை ஏற்றி,
ஐஸ்வர்யக் கோலத்திற்குமுன் அதைக்
காட்டிவிட்டு (கற்பூர தீபாராதனை போல)
சாமியறையில் வைத்துவிட வேண்டும். ஹாலில்
மாட்டப்பட்ட படத்திற்கும் அதைச்
செய்யலாம். பிறகு நமக்குத்
தெரிந்த லட்சுமி அஷ்டோத்திரம் போன்ற
ஏதாவது ஒரு துதியைச் சொல்லி
நம்மாலியன்ற ஒரு சிறிய நிவேதனத்தைச்
செய்யலாம்.
தொடர்ந்து 45 நாட்களும்
இவ்வாறே பிரார்த்தனை எழுதப்பட்டுள்ள
காகிதத்தால் ஐஸ்வர்யக் கோலத்தை ஒருமுறை
தொட்டுவிட்டு, நெய் விளக்கை
ஏற்றி அதை ஐஸ்வர்யக் கோலத்திற்குமுன்
காட்டிவிட்டு வைத்து விடவேண்டும்.
அசௌகர்ய நாட்களிலும் முடியாத
தினங்களிலும் வீட்டிலுள்ள வேறு எவர்
வேண்டுமானாலும் அதைத்
தொடர்ந்து செய்யலாம்.
ஆலயத்தில் அர்ச்சகர்கள்
தெய்வத்திற்கு அர்ச்சனை செய்வது
போன்றதே இதுவும். அட்சய திரிதியையன்று
இப்பூஜையை செய்வது மிகவும் விசேஷம்.
அன்று மட்டுமோ அல்லது அன்றிலிருந்து
தொடர்ந்து 45 நாட்களுக்குமோ
செய்யலாம்.
ஐஸ்வர்யக் கோலத்தினால் என்ன
பயன்?
இந்தக் கோலத்தை பூஜையறையில் மட்டுமல்ல;
வீட்டில் எங்கு வேண்டுமானாலும்
மாட்டலாம்.
வீட்டில் செல்வம் பெருகும்; மகிழ்ச்சி
தாண்டவமாடும்; மனம் அமைதி
பெறும். காவல் தேவதைகள் தீயசக்தி களை
வீட்டிற்குள் நுழையவிடாது.
இப்படி பல நன்மைகளும் அந்தக் கோலத்தை
முறையாகப் பிரார்த்திப்பவர்களுக்குக்
கிடைக்கும்.
இத்தனை தெய்வங்களும் (தேவதைகளும்)
கொலுவிருக்கும் சக்திவாய்ந்த
ஐஸ்வர்யக் கோலம், மாட்டக்கூடிய படமாக
கடைகளில் கிடைக்கிறது. அதனை வாங்கிக்
கொள்ளலாம். அல்லது வீட்டிலேயே
செய்யலாம். ஐஸ்வர்யக் கோலம்
ஸ்டிக்கராகவும் கிடைக்கிறது. அதை வாங்கி
கெட்டியான அட்டையில் ஒட்டி
அலங்கரித்தும் பூஜிக்கலாம்.

நரசிம்மர் ஆலயங்கள்

தமிழகத்தில் உள்ள மிகவும் சிறப்பு
வாய்ந்த நரசிம்மர் கோவில்களை
பார்க்கலாம்.
இரண்யகசிபுவை அழிப்பதற்காக நரசிம்மர்
தூணில் இருந்து வெளிப்பட்ட இடம்,
ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள அகோபிலம் ஆகும்.
அந்த நரசிம்ம மூர்த்தி தமிழகத்திலும் 8
தலங்களில் தன் பக்தர்களுக்குக் காட்சி தரு
கிறார். இவை‘அஷ்ட நரசிம்மர்’
தலங்களாக போற்றப்படுகின்றன.
பூவரசங்குப்பம், சிங்கிரிக்குடி, பரிக்கல்,
அந்திலி, சோளிங்கர், சிங்கப்பெருமாள்
கோவில், நாமக்கல், சிந்தலவாடி ஆகியவை
அஷ்ட நரசிம்மர் தலங்கள். இதில்
முதன்மையானதும், அஷ்ட நரசிம்மர்
தலங்களில் நடுநாயகமாகமானது
மாக உள்ளது பூவரசங்குப்பம். இதன்
கிழக்கில் சிங்கிரிக்குடியும், மேற்கில் பரிக்கல்
மற்றும் அந்திலியும், வடக்கில் சோளிங்கர்
மற்றும் சிங்கப்பெருமாள் கோவிலும்,
தெற்கில் நாமக்கல் மற்றும்
சிந்தலவாடியும் உள்ளன.
பூவரசங்குப்பம் :
இரண்யகசிபுவை வதம் செய்த பிறகும்,
கோபம் தணியாத நரசிம்மர், காடுகளிலும்,
மலைகளிலும் சுற்றித் திரிந்தார். அப்போது
இரண்யகசிபுக்கு பயந்து காடுகளில்
ஒளிந்தபடி தன்னை வழிபட்ட முனிவர்களுக்கு
அவர் காட்சியளித்தார். அந்தத் தலமே
இதுவாகும். தட்சிண அகோபிலம் என்ற
புராணப்பெயரைக் கொண்டது.
தூணிலிருந்து நரசிம்மர் வெளிப்பட்ட
வரலாற்றின் அடிப்படையில், ஒரு தூணையே
நரசிம்மராகக் கருதி இங்கு வழிபாடு
மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
அதன்பின்னர் பல்லவ மன்னர்கள்
காலத்தில் ஆலயம் எழுப்பி, சிலையும்
பிரதிஷ்டை செய்யப்பட்டது. மூலவர்
லட்சுமிநரசிம்மர், உற்சவர்
பிரகலாதவரதன், தாயார்
அமிர்தவல்லி.
பொதுவாக நரசிம்மருக்கான
ஆலயங்களில் அவர் உருவம்
பெரியதாகவும், தாயாரின் உருவம்
சிறியதாகவும் அமைந்திருக்கும். ஆனால்
இந்த ஆலயத்தில், ஆணுக்குப் பெண்
சரிசமம் என்பதை உணர்த்தும் விதமாக
பெருமாளின் உருவத்திற்கு
தகுந்தாற்போல, தாயாரின் திருஉருவமும்
அமைக்கப்பட்டிருக்கிறது.
பண்ருட்டியிலிருந்து விழுப்புரம் செல்லும்
சாலையில் சின்னக்கள்ளிப்பட்டு என்ற
ஊரிலிருந்து 3 கிலோமீட்டர் தூரத்திலும்,
புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் செல்லும்
சாலையில் சிறுவந்தாடு என்ற ஊரிலிருந்து 2
கிலோமீட்டர் தொலைவிலும் இந்த
ஆலயம் இருக்கிறது.
சிங்கிரிக்குடி :
பிரகலாதன் வேண்டுகோளுக்கிணங்கி, 16 கரங்
களுடன் உக்கிரமூர்த்தியாக காட்சியளித்த
தலம் இது. ராஜராஜ சோழன் மற்றும்
விஜயநகர மன்னர்களால் திருப்பணி
செய்யப்பட்ட இவ்வாலயம், 5 நிலை
ராஜ கோபுரத்துடன் மேற்கு நோக்கி உள்ளது.
இரண்யகசிபுவை நரசிம்மர் மேற்கு நோக்கி நின்று
வதம் செய்ததால், இந்தக் கோவிலும்
மேற்கு நோக்கிய நிலையில் உள்ளது. நரசிம்மரின்
இடதுபுறம் இரண்ய கசிபுவின் மனைவி
நீலாவதி, வலதுபுறம் தரிசனம் வேண்டி 3
அசுரர்கள், பிரகலாதன், சுக்ரன், வசிஷ்டர்
ஆகியோர் உள்ளனர். கருவறையின் உள்ளே
வடக்கு நோக்கிய நிலையில் சிறுவடிவில்
யோகநரசிம்மர், பால நரசிம்மர் ஆகியோரும்
இடம்பெற்றுள்ளனர். ஒரு கருவறையில்
மூன்று நரசிம்மர்கள் அருள்பாலிப்பது
அரிதான காட்சியாகும்.
கடலூர்–புதுச்சேரி சாலையில் தவளகுப்பத்தில்
இருந்து அபிஷேகபாக்கம் செல்லும்
சாலையில் 2 கிலோமீட்டர் தொலைவில்
இந்தக் கோவில் இருக்கிறது.
பரிக்கல் :
இதுவும் பிரகலாதனுக்காக நரசிம்மர்
காட்சி கொடுத்த தலம் தான்.
நரசிம்மர் மீது மாறாத
பக்திக்கொண்ட விஜயராஜன்
என்னும் மன்னன் இங்கு ஆலயம்
எழுப்பியுள்ளான். மேலும் ஆலயத்தில் தன்
குரு வாமதேவ மகரிஷி உதவியுடன் மூன்று
நாட்கள் தொடர் வேள்வி நடத்த
ஏற்பாடு செய்தான்.
யாகத்தில் கலந்து கொள்ளுமாறு
பல்வேறு தேச அரசர்களுக்கு அழைப்பு
விடுத்திருந்தான். இந்த நேரத்தில்
பரிகாலன் என்னும் அசுரன், வேள்வியை
தடுத்து நிறுத்த அங்கு வந்தான். அசுரன்
வருவதை அறிந்த குலகுரு, மன்னனை
அருகிலுள்ள புதரில் ஒளிந்துக்
கொள்ளுமாறு கூறினார்.
இருப்பினும் அசுரன் கோடரியால் மன்னனின்
தலையை தாக்கினான். இதையடுத்து நரசிம்மர்,
‘உக்கிர நரசிம்மராக’ தோன்றி, பரிகாலனை
அழித்து மன்னனுக்கு காட்சியளித்தார்.
சென்னை– திருச்சி தேசிய
நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டைக்கு
வடக்கில் இருந்து இந்த ஆலயத்தை
அடையலாம். விழுப்புரம் மாவட்ட
எல்லைக்குள் இருக்கிறது இந்தக் கோவில்.
சோளிங்கர் :
சப்த ரிஷிகளின் வேண்டுகோளின்படி, நரசிம்மர்,
யோக நிலையில் காட்சியளித்த தலம் இது.
மூலவர் யோக நரசிம்மர், உற்சவர்
பக்தவச்சலம் சுதாவல்லி, தாயார்
அமிர்தவல்லி.
விசுவாமித்திரர் இங்குள்ள நரசிம்மரை
வழிபட்டு பிரம்ம ரிஷி பட்டம் பெற்றார்.
கடிகாசலம் எனப்படும், 500 அடி உயரமும்,
1305 படிக்கட்டுகளும் கொண்ட
பெரிய மலையில் மூலவர்
அருள்பாலிக்கிறார். உற்சவருக்கு
மலையிலிருந்து நான்கு கிலோமீட்டர் தள்ளி
ஊருக்குள் தனிக்கோவில் உள்ளது.
தமிழ்நாட்டிலேயே மூலவருக்கு தனியாகவும்,
உற்சவருக்கு தனியாகவும் கோவில் இருப்பது
இங்கு மட்டுமே. பெரிய மலைக்கு அருகில்
406 படிக்கற்களைக் கொண்ட சிறிய
மலையில் யோக ஆஞ்சநேயர் நின்ற கோலத்தில்
அருள்பாலிக்கிறார்.
வேலூர் மாவட்டம் அரக்கோணம்– சோளிங்கர்
சாலையில் இந்த மலைக்கோவில் இருக்கிறது.
சிங்கப்பெருமாள் கோவில் :
ஜாபாலி என்னும் மகரிஷி, நரசிம்மரை
வேண்டி தவம் செய்து, அவரது தரிசனம்
பெற்ற தலம் இது. இவர் ‘பாடலாத்ரி
நரசிம்மர்’ என்று அழைக்கப்படுகிறார்.
(பாடலம் என்றால் சிவப்பு, அத்ரி
என்றால் மலை) என்று பொருள்.
சிவந்த கண்களுடன் மலைமீது
அமர்ந்திருப்பதால், இந்த பெயர்
ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பொதுவாக நரசிம்மருக்கான
ஆலயங்களில், அவர் இடதுகாலை
மடித்துவைத்தும், வலதுகாலை
தொங்கவிட்ட நிலையிலும் காட்சி
தருவார். ஆனால் இந்த ஆலயத்தில்
வலதுகாலை மடித்துவைத்தும், இடதுகாலை
தொங்கவிட்ட நிலையில்
மிகப்பெரிய மூர்த்தியாக
காட்சியளிக்கிறார்.
காஞ்சீபுரம் மாவட்ட எல்லைக்குள்,
தாம்பரம் – செங்கல்பட்டு இடையில்
சிங்கப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது.
நாமக்கல் :
திருமகள், தன் கணவரான மகாவிஷ்ணு
எடுத்த நரசிம்மர் அவதாரத்தை காண
வேண்டி, தவம் செய்து தரிசனம்
பெற்ற தலம் இது. நரசிம்மரை காண
வேண்டி இத்தலத்தில் திருமகள் தவம்
செய்து கொண்டிருந்தார்.
அப்போது ஆஞ்சநேயர், கண்டகி நதியில் இருந்து
சாளக்கிராம கல்லை (திருமாலின்
அனுக்கிரகம் பெற்றது)
எடுத்துக்கொண்டு வான்வழியே
பறந்து சென்றார். இந்த தலத்தின்
அருகே வந்தபோது, இங்குள்ள தீர்த்தத்தில்
நீராட விரும்பினார் அனுமன்.
கையிலிருந்த சாளக்கிராமத்தைக் கீழே
வைக்கமுடியாத நிலையில், என்ன
செய்வதென யோசித்தவருக்கு
தீர்த்தக் கரையில் தவம் செய்த திருமகள்
தெரிந்தார். மகிழ்ச்சியுடன் அவரிடம்
அந்த சாளக்கிராமத்தைத் தந்து விட்டு
நீராடச் சென்றார். அதை கையில்
வாங்கிய திருமகள் குறித்த நேரத்திற்குள்
வராவிட்டால் கீழே வைத்துவிடுவேன் என்று
கூறினார்.
அதுபோலவே அனுமன் வராதிருக்க திருமகள்
அக்கல்லை கீழே வைத்தார். அது
பெரியதாக விசுவரூபம் பெற்று
பெருமலையானது. அதிலிருந்து நரசிம்மர்
தோன்றி திருமகளுக்கும் ஆஞ்சநேயருக்கும்
காட்சியளித்தார். சாளக்கிராமத்தைக்
கொண்டுவந்த ஆஞ்சநேயர் 18 அடி
உயரத்தில், கையில் ஜெபமாலை,
இடுப்பில் கத்தியுடன் நரசிம்மர் ஆலயத்துக்கு
எதிரில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறா
ர்.
நாமக்கல்லில் இந்த ஆலயம்
அமைந்துள்ளது.
சிந்தலவாடி :
ஒரு பக்தனின் கனவில் தோன்றிய நரசிம்மர்,
தனக்கு ஒரு ஆலயம் எழுப்புமாறு கூறி,
அந்த பக்தனுக்கு காட்சியளித்த தலம் இது.
ஹரியாச்சார் என்பவர் கரூர் மாவட்டம்
திருக்காம்புலியூரில் வசித்துவந்தார். அவர்
கனவில் ஒருநாள் நரசிம்மர் தோன்றி, தான்
கருப்பத்தூர் காவிரிக்கரையில் ஒரு கல்லாக
கவிழ்ந்து கிடப்பதாகவும், தன்மீது ஒரு
சலவையாளர் அனுதினமும் துணி துவைத்துக்
கொண்டிருப்பதாகவும் கூறினார்.
இதுகேட்டு வேதனையுற்ற ஹரியாச்சார்
கருப்பத்தூர் சென்றார். இதேபோல்
சலவையாளரின் கனவிலும் தோன்றி
சொல்லியிருக்கவே, இருவரும் சேர்ந்து
நரசிம்மரை கண்டுபிடித்து, அதை தூக்கிக்
கொண்டு திருக்காம்புலியூர்
புறப்பட்டனர். பாரம் அதிகமாக இருக்கவே
திருக்காம்புலியூருக்கும், கருப்பத்தூருக்கும்
இடைபட்ட சிந்தலவாடியில் இருந்த
வெங்கட்ரமண ஆலயத்தில் இறக்கி
வைத்தனர். பகவான் அங்கேயே பிரதிஷ்டை
ஆனதுடன், ஹரியாச்சாருக்கும்,
சலவையாளருக்கும் காட்சித் தந்தார்.
திருச்சி– கரூர் நெடுஞ்சாலையில்
காட்டுப்புத்தூர் அருகில் அமைந்துள்ளது இந்த
ஆலயம்.
அந்திலி :
நரசிம்மர், தன் வாகனமான கருடனுக்கு
காட்சி தந்த திருத்தலம் இது. பிரகலாதனை
காப்பாற்ற வேண்டிய அவசரத்தில்
தன்னிடம் சொல்லாமல்
பகவான் புறப்பட்டுச் சென்றதை
அறிந்த கருடன், மிகுந்த வேதனை அடைந்தார்.
பகவானைத் தேடி பூலோகம் வந்து நிம்மதியின்றி
தவித்தார்.
எங்குச் சென்றாலும் தன்மீது
ஏறிச்செல்லும் பகவான், தன்னை
மறந்துவிட்டுப் போனதை எண்ணி வருந்தியவர்
இந்த தலம் இருக்கும் இடத்திற்கு வந்து தவம்
இருந்தார். இதனால் அவர் உடல்
இளைத்தது. அவரது உடலிலிருந்து
வெளிப்பட்ட வெப்பம், கயிலாயம்
வரை சென்று தாக்கியது. இதையடுத்து
தேவர்கள், நாராயணரிடம் சென்று
கருடனை காக்க வேண்டி பிரார்த்தித்தனர்.
கருடனிடம் முன்பாக சென்றார்
நாராயணர். அப்போது தனக்கும்
நரசிம்மராக காட்சியளிக்க வேண்டும