Thursday 31 December 2015

சாப்பிடும் திசைப் பலன்

தனது வீட்டில் கிழக்கு நோக்கி
அமர்ந்து சாப்பிட்டு வந்தால்
அவனது கல்வி வளரும்.மேற்கு நோக்கி
அமர்ந்து சாப்பிட்டுவந்தால்
அவனுக்கு செல்வம்
பெருகும்.வடக்கு நோக்கி அமர்ந்து
சாப்பிட்டுவந்தால் அவனுக்கு
நோய் வளரும்.தெற்கு நோக்கி
அமர்ந்து சாப்பிட்டுவந்தால்
அவனுக்கு அழியாத புகழ்
உண்டாகும்.
இது எப்படி சாத்தியம்?
கிழக்கு திசை இந்திரனுக்கு
உரியது.மேற்கு செல்வத்தின்
அதிபதியாகிய மகாலட்சுமிக்கு
உரியது.வடக்கு சிவனுக்கு
உரியது.தெற்கு யமனுக்கு
உரியது.
தனது வீட்டைத்தவிர,ஒருவன் தனது
உறவினர் நண்பர்கள் வீட்டில் மேற்கு
திசையை நோக்கி அமர்ந்து
சாப்பிடக்கூடாது.அப்படி
சாப்பிட்டால் அந்த நண்பன்
அல்லது உறவினர் நட்பு கெடும

Sunday 27 December 2015

களத்திரஸ்தானம்

மனிதர்களின் ஜாதகங்களிலே மிக
முக்கியமானது
களத்திர ஸ்தானம் ஆகும். இருவரின்
ஜாதகத்தில் ஏழாவது பாவத்தைக்
குறிக்கும். களத்திர ஸ்தானத் தின்
மூலம்.மணமகனின் ஜாதகத்திலிருந்து வரப்
போகும் மனைவியின் நேர்மை, பண்பாடு,குடும்பப்
பாங்கு சமூகத்தில் அவளது அந்தஸ்து,
நற்பெயர் ஆகியவற்றை அறிய முடியும்.
பெண்ணின் ஜாதகத்தில் தனக்கு
வரப்போகும்
மணமகனைப் பற்றிய விபரங்கள் அனைத்தையும்
அறிய முடியும்.கணவனின் நேர்மை,
தொழில் நிலை. குடுபம் பின்னானி,
நற்பெயர் ஆகியவற்றை அறியமுடியும்.
ஏழாம் பாவத்தின்
நிலை,பாவாதிபனின் நிலை, காரகனின்
நிலை,மற்ற கிரகச் சேர்க்கையால் ஏற்படும்
மாறுதல்கள் என்பவைகளை நன்கு
ஆராய்ந்து பார்த்து பலன்
சொல்லவேண்டும்.
  ஆணின்,பெண்ணின்
ஜாதகத்திலோ1-2-4-7-8-12-ல்
பாவக்கிரகங்கள் இருப்பதே அல்லது
பார்ப்பதோ தோஷமாகும். பெண்கள்
ஜாதகத்தில் 8-ல் பாவிகள் இருப்பின்
மாங்கல்ய தோஷம். இவர்களை குரு
பார்த்தால் தோஷம் நிவர்த்தியாகும்.
ஆண் ஜாதகர்களுக்கு ஆண்
ராசிகளிலோயே லக்னம் , லகினாதிபதி
அமைந்து. சூரியன்,குரு பார்த்தால்
ஜாதகர்க்கு உயர்வான வாழ்வு
அமையும். பெண் ஜாதகங்களில்
பெண் ராசி லக்னம், லக்னா
திபதியாக அமைந்து குரு, சந்திரன்,சுக்கிரன்
தொடர்பு இருந்தால்
பதிவிரதையாக வாழ்வர்கள்.
லக்கினத்திற்கு ஏழாம் அதிபதி
மகரம்,கும்பத்தில் இருந்தால் ஜாதகர்/
ஜாதகியின் திருமண வாழ்வில்
நிம்மதியிராது.எந்த விதமன சிறப்பு
இருக்காது. அவமனம் தலைகுனிவும்
ஏற்படும்.
ஏழாம் அதிபதி முதலாம் இடம்
என்னும் லக்னத் திலேயே இருந்தால்.சிரிது
ஒழுக்கம் குறைவு இருக்க்கும். இவர்கள் தனது
கணவன், மனைவியை
தேர்ந்தெடுப்பர்கள்.ஆனால்
பெற்றோர்கள் சம்மதத்துடன் தன்
நடக்கும்.தெரிந்த குடும்பத்தில் திருமணம்
அமைமையும்.உறவியிலேயே அமையக் கூடும்.
அல்லது உறவிராக இல்லாமல்
இருக்கலம்.மணவாழ்கை நன்றாக
அமையும். மனைவி,கணவன் மிகவும் அன்புடன்
இருப்பார்கள் மாமனார் மூலம் உதவி
கிடைக்கும். பிறறை கவரும்
தன்மையுள்ளவர்கள்.மனைவி சொல்லே
மந்திரம் என இருப்பார்கள்.
ஏழாம் அதிபதி இரண்டில் இருந்தால்
இன்பம் தர இயலாத துணைவகள்
அமைவர்கள் , காதல் திருமணமாக
அமையும். சட்ட திட்டங்களையும், சாஸ்திர
சம்பிரதாயங்களையும் மீறிய திருமணமாக
அமையும்.திருமணம் நடக்கும்.பலதாரம்
ஏற்படும். ஆனால் மாரகத்தின் நிலைகளை
பெறுவதால் இவர்களின் தசா
புக்திகளில் மாரகத்தை தரும். நிலை ஏற்படும்.
வாழ்க்கை  சந்தோஷமாக அமைந்தாலும்
பணக் கஷ்டங்கள் ஏற்படும். காமம்
அதிகம், புலன் இன்பத்தில் ஈடுபாடு
உடையவர் சம்பாதிப்பவர்ளகா
இருப்பார்கள். வெளிநாடு
தொடர்பு ஏற்படும். இரண்டாம்
திருமணம் ஏற்படும்.இருவரில் ஓருவர்க்கு
கண்டம் ஏற்படலாம்.
ஏழாம் அதிபதி மூன்றில் இருந்தால் உடன்
பிறந்தவர்கள் போலே உள்ளன்புடன்
இருப்பர்கள்  உடலுறவில் சில பிச்சினைகள்
வரும் .களத்திர தோஷம் உள்ளவர் வசதி
படைத்தர்கள் ஆண்மைக் குறைவு ஏற்படும்
உறவில் கணவன் மனைவி அமை யும் (அ )
நெருங்கிய நண்பர்களின் குடும்பத்தில்
திருமணம் அமையும் .மகிழ்ச்சியாக அமையும்.
ஆனால் சிலருக்கு ஒழுக்கக்குறைவை தரும்.
பெண்களுக்கு அவ்வளவாக
பாதிப்புகள் ஏற்படது.
ஏழாம் அதிபதி நான்கில் இருந்தால்
நிச்சயிக்கப் பட்ட திருமணம்
அமையும்.அழகான மனைவி ,அதிர்ஷ்டமான
மனைவி /கணவன் அமைவர்கள் மணவாழ்வு
மகிழ்சியாக அமையும்.
பொறுப்புள்ளவ@ர்கள்,அதிகம்
சம்பாதிப்பார் பெண்கள் வலிய
வந்து சுகம் தருவார்கள். எல்லோ ரையும்
திருப்திப்படுத்துவார்.
ஏழாம் அதிபதி ஐந்தில் இருந்தால் மக்களை
போல துணைவரை பதுகப்பர்கள் ஆனால்
தொழிலில் பல இடைஞ்சல்கள்
தருவர்கள் இவர்கள் தங்களே தேர்ந்து
எடுப்பார்கள். துணைவரை தேடினாலும்
பெற்றோர்களின் அனுமதியுடன் திருமணம்
அமையும். பிரிவினையும், கருத்து வேறு
பாடுகள்.,விவாகரத்து ஏற்படும். 7-ஆம்
அதிபதி 5-ல் இருப்பது தோஷசம் தரும்.இரண்டு
திருமணம் அமையும்.பிறர் தொடர்பு
ஏற்படும்.
ஏழாம் அதிபதி ஆறில் இருந்தால் துணைவர்
எதிரியயின் நிலையில்
தொல்லைதருவர்கள் பகையாளி
அல்லது விரோதி வீட்டிலிருந்து திருமணம்
அமையும் இரண்டு திருமணம் அமையும்
மதாம் மறி திருமணம் அமையும்.மகிழ்சியுடன்
அமையாது ,ஆரோக்கியம் நிலையாக
இருக்காது. மனைவியால் இன்பமான
வாழ்வை தர முடியாது. கேர்ட்,கேஸ்
விவகாரங்கள் நடைபெறலாம்.
ஏழாம் அதிபதி ஏழில் இருந்தால் காதல்
திருமணம் அமையும்.துணைவர் புகழ் மிக்க
குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
வசதியானவர்.அயல் நாட்டு
தொடர்பு ஏற்படும்.மகிழ்வுடன்
அமையும். உறவுமுறையில் திருமணம் அமையும்.
ஏழாம் அதிபதி எட்டில் இருந்தால்
பிரிவு,இருதார தோஷம் மீகவும்
மோசமான,பயங்கரமான நிலைமை ஏற்படும்.
மணமகனும்,மணமகளும் கதால் என்று
ஏமாந்து,உடல் மயக்கத்தில் முட்டாள்
தனமாக மணம் புறிந்து வாழ்வில்
சொல்லொணத்
துயரத்தையும்.அல்லல்களையும்
அனுபவிப்பார்கள்.
துணைவர்களாலும் கௌரவக் குறைவு ஏற்படும்.
திருமண முறிவு ஏற்படும்.சண்டை சச்சரவுகள்
ஏற்படும்.
ஏழாம் அதிபதி ஒன்பதில் இருந்தால்
பெற்றோர்கள் பார்த்து முடிக்கும்
திருமணமகும். தெரிந்த குடும்பத்தில்,
உறவில் அமையும் சிலருக்கு மணவாழ்வு
சிறப்புடன் மகிழ்சியுடன் அமையும்.
முன்னோற்றம் ஏற்படும். வெளிநாட்டில்
சுக பாக்கியங்கள் ஏற்படும்.ஆச்சாரம்
உள்ளர்கள். மாமனார் உதவி கிட்டும்
.மனைவியை நேசிப்பார் .
ஏழாம் அதிபதி பத்தில் சிறப்பன
துணைவர்கள். வேலையில் உள்ளவர்கள்.
தொழில் செய்யும் மனைவி
அமையும். தன்னுடன் வேலை செய்பவரையோ
திருமணம் செய்யும் நிலை
ஏற்படும்.ஆனால் கணவனை
நம்பமாட்டாள்.
அந்தஸ்தையும்.கௌரவத்தையும் அதிர்ஷ்டத்தை யும்
தருவர்கள்.
  ஏழாம் அதிபதி லாபத்தில் இருந்தால்
குழந்தைகள் மீது அன்புடன் இருப்பார்கள்
துணைவர்களுக்கு நன்மை புறிவர்கள் ஆனால்
துணைவரின் தாயாரை கவணிக்க
மாட்டார்கள்.பெற்றோர்கள் முடித்து
வைக்கும் திருமணமகும். துணைவரால்
ஆதாயம் கிடைக்கும்.நல்ல குணம் அழகும்
உள்ளவர் கள் திருமண வாழ்வில்
முன்னேற்றம் ஏற்படும். மகிழ்சியான
வாழ்வு அமையும்.
ஏழாம் அதிபதி விரையாத்தில் இருந்தால்
கொடுக்கும் இன்பத்தில்
கொண்டவர்களை நஞ்சாக்
கிடுவர்கள் கடனாளியாக் குவர்கள்
குழந்தைகளை கவணிக்க மாட்டர்கள்ள்.
சட்டதிட் டங்கள், சாஸ்திரத்திற்கு புறம்பன
திருமணம் அமையும் வின் விரையங்கள்
ஏற்படும்.வாழ்கை போரட்டமுன் அமையும்.பிற
தொடர்புகள் ஏற்ப்படும்.
வெளிநாட்டுத் தொடர்பு
ஏற்படும்.மகிழ்வு இருக்கது.
ஏழாம் அதிபதியின் நிலையை ஆராய்ந்து
பலன் கூறவேண்டும். சுபர் பார்வை இருப்பின்
சுப பலன் பாவிகள் தொடர்பு
பார்வை இருந்தால் தீய பலனும் . அமையும்.
மோகமாமேழில்பாவர்
மொய்த்திடப்பாபர்நோக்கில்
போகமேசெய்யவேண்டாள்
புருடனையிகழ்ச்சியாக
மேகநீர்நிதம்பத்தில்லாள் விறுவிறுப்புடையார்
பேரில்
தாகமாயிச்சையாவன்
தருபலனெல்லாஞ்சாற்றே
ஏழில் பாவிகள்
இருந்தாலும்,பாவர்கள் பார்தாலும்
ஜாதகருடைய மனைவிக்கு காம சுகம்
அனுபவிக்க
எண்ணமில்லாதவள்.கணவனை மதிக்க
மாட்டாள் இதனால் பெண்குறியை
சுவைப்பவனாக இருப்பன்
இங்கு கூறப்படும் நிளைகலை கவணமுடன்
ஆராய்நந்து கூற வேண்டும். ஜாதகத்தை
மேலோட்டமாக பலன் கூறக் கூடாது.
ஏழாம் அதிபதி சுக்கிரன் 6-8-12-ல்
இருந்தால் (அ) பகைப்
பெற்றிருந்தாலும் நீசம் அடைந்தாலும்
மனைவியால் துண்பம் கண்டம் ஏற்படும்.
ஏழில் லக்னாதிபதி இருந்தால் திருமணம்
இளமை யில் நடக்கும். சகோதரியின் மகளை
மணப்பார்.மனைவி மூலம் மாமனாரின்
சொத்து கிடைக்கும். அதிக காமம்
உடையவர் .குடும்பத்தில் அவ்வளவாக பற்று
இருக்காது .லக்கினாதிபதியால் அல்லது
சந்திரன் பார்வை 7-ஆம் வீட்டைபார்த்தால்
காதல் திருமணம் நடக்க வாய்புள்ளது.
வசதி படைத்த மனைவி அமைவாள். பிறறை
கவரும் வசீகரம் உள்ளவார்கள்
2-ஆம் அதிபதி ஏழில் இருந்தால்
செல்வம். சந்தோ ஷம் நல்ல குடும்ப
வாழ்க்கை அமையும். 2-7-ஆம் வீட்டோடு
தொடர்புள்ள தசாபுத்திகளில்
திருமணம் நடக்கும்.துணைவர்
சம்பாதிக்ககூடியவர்கள். மனைவி மூலம்
வருவாய் கிடைக்கும். திருமணத்திற் குப்பின்
வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் கிடைக் கும்.
மனைவியின் அணுசரனை இருக்காது. காமம்
அதிகம் உள்ளவர், பிறர் தொடர்பு
ஏற்ப்படும்.
   3-ஆம் அதிபதி 7-ல் இருந்தால் எப்போதும்
போகத் தில் நாட்டம் குறையுள்ளவர்.சுகமே
பெரிது என
நினைப்பவர். தைரியம், சாயன சுகம் கிட்டும்.
மறு மணம்ஏற்ப வாய்புள்ளளது.
துணைவரால் பெரிய குடும்பத்தைச்
சேர்ந்தவர்கள்.பெண் குழந்தை
பிறக்கும்.சொந்தமாகத்
தொழில் அமையும்.
4-ம் அதிபதி 7-ல் இருந்தால் நல்ல
திறமைசாலியாக
இருப்பார்.கேந்திராதிபத்ய தோஷத்தால்
வீடு,வாகனம்,கல்வி,இல்லறம் சுகம் தனம்
ஆகியவை தடைபடும்.தாய் வழியில் மனைவி
அமைவாள்.4-7-ஆம் அதிபதி பலமுடன்
இருந்தால் சுகமுடன் வாழ்வு
அமையும்.வாகன யோகம் கிடைக் கும்
.மனைவியின் நடத்தையில் சுகமில்லை.
5-ஆம் அதிபதி 7-ல் இருப்பதை அனைத்து
ஆசான்
களும் வரவேற்பதில்லை. மனைவி பிரிவினை.
புத்திரபாக்கியம் தடை ஏற்படும்.கட்டாயத்
திருமணம்
நல்ல மனைவி அமையும்.காதல் திருமணம்
ஏற்படும் திருமணம் தாமதமாகக் கூடும்.
6-ஆம் அதிபதி 7-ல் இருந்தால்
மனைவியால் கலகம் விரோதம்
ஏற்படும்.துணைவரின் உடல் நலம் அடிக் கடி
பதிக்கப்படும்.மனைவி வீட்டாருடன் உறவு
நலமுன் இருக்காது .திருமண வாழ்கை
சுகமுடன் அமையாது.துணைவரால் கடன்பட
நேரும். ரத்த தொடர்புடைய நோய்கள்
ஏற்படும். அத்தை, மாம னின் வீட்டில்
திருமணம் அமையும்.
  7-ஆம் அதிபதி 7-ல் இருந்தால் வீட்டோடு
மாப்பிள்ளை ஆவார்கள்.மனைவிக்கு
அடிபனிவார் கள். மனைவி
வசதியுள்ளவார். சுபக் கிரகமாக
இருந்தால் வாழ்வில் நலம்
உண்டகும்.பாவியனால் அடிமை வாழ்கை
தான்அமையும்.வாத நோய் வரும்,
8-ஆம் அதிபதி 7-ல் இருந்தால் திருமண
வாழ்வில் குழப்பங்களும்,
விவாகரத்தும்,துணைவரால் நலம்
இருக்காது.இருமணம்
ஏற்படலாம்.துணைவரின் ஆயுள்
பதிக்கும்.துணைவராலும் பிற
பெண்களா லும் கௌரவக் குறைவு ஏற்படு.
வசதியுள்ளவர்கள்.
9-ஆம் அதிபதி 7-ல் இருந்தால்
செல்வம்,அலகு,அன்பு டைய மனைவி
அமைவாள்,அயல் நாடு தொடர்பு
ஏற்படும்.பிற தொடர்பு
ஏற்படும்.சதா பெண்களின் சிந்தனை
இருக்கும்.இளமையில் திருணம் நடக்கும்.
கட்டுபடையா மனைவி
அமைவாள்.வசதியுள்ளவார் ஒற்றுமையுடன்
வாழ்வர்கள்.திருமணத்திற்கு பின் வளமன
வாழ்வு அமையும்.மாமனார்
அந்தஸ்துள்ளவார்.
10-ஆம் அதிபதி 7-ல்இருந்தால்
உத்தியோகத்தில் இருப்பவார்.நல்ல மனமும்
குணமும் உள்ளவார்கள் ஆனால்
சந்தேகப்படுவர்கள்.நடத்தையில் சந்தேகம்
இருக்கும்.சுபக்கிரகமனால் பிரச்சினையில்லை.
11-ஆம் அதிபதி 7-ல் இருந்தால் ஆசைகள்
அனைத்தும் பூர்த்தி அடையும். சிற்றின்பத்தில்
ஈடுபாடு அதிகம் இருக்கும். மனைவியால்
அனுகூலம் உண்டு.நல்ல குகுணம்
உள்ளவார் வசதியுள்ளவார்.காதல்
திருமணம் அமையும்.திருமணத்திற்கு பின்
வாழ்வு சிறப்பு அடையும். புத்திர தோஷம்
ஏற்படும்.பெண் குழந்தை அதிகம் பிறக்கும்
வாய்புள்ளது.ஆதாயம் கிட்டும் வெளி
நாட்டு தொடர்பால் ஆதாயம்
கிடைக்கும்
12-ஆம் அதிபதி 7-ல் இருந்தால்
துணைவாரல் நலம் இல்லை.அதனால் பிறர்
தொடர்பு ஏற்படுத்திகொள்
வார்கள் பொருள் இழப்பு
ஏற்படும்,கடன் வாங்கி செலவு
செய்வான் வெளியுரில் வசிக்கும்
நிலை ஏற்படும்.
  7-ல் பல கிரகங்கள் இருப்பின் அவைகளின்
பலம் ஏற்ப பலர் தொடர்பு
ஏற்படும்.
7-ல் சுபர்,பாவர் இணைந்திருப்பின்
மறுமணம் ஏற்படும்.

Saturday 26 December 2015

27 நட்சத்திரங்களும், மரங்களும்;

27 நட்சத்திரங்களும், மரங்களும்;

---------------------------------------------------
ஒருவர் பிறந்த நாள் தேதி, நேரம், விநாடி
அடிப்படையிலும், பஞ்சாங்க அடிப்படையிலும்
ஜாதகம் உருவாக்கப்படுகிறது. 12
ராசிகள், 27 நட்சத்திரங்கள் உள்ளன.
ஒவ்வொரு ராசிக்கும் அதற்குரிய
எண், நிறம், கல், அதிதேவதை, பரிகார மரம்
என அனைத்தும் உண்டு அதுபோல் மரங்களும்
உண்டு
27நட்சத்திரத்திற்குரிய மரங்கள்அஸ்வதி -
எட்டிமரம், பரணி-நெல்லி, கார்த்திகை -
அத்தி, ரோகிணி - நவ்வல், மிருகசீர்ஷம் -
கருங்காலி, திருவாதிரை -
செங்கருங்காலி, புனர்பூசம் - மூங்கில்,
பூசம் - அரசு, ஆயில்யம் - புன்னை, மகம் -
ஆல், பூரம்- பலாசம், உத்திரம் - அலரி,
ஹஸ்தம் - அத்தி, சித்திரை - வில்வம், ஸ்வாதி
- மருது, விசாகம் - விளா, அனுஷம் - மகிழ்,
கேட்டை - பிராய், மூலம் - மரா, பூராடம் -
வஞ்சி, உத்திராடம் - பிலா, திருவோணம் -
எருக்கு, அவிட்டம் - வன்னி, சத்யம் - கடம்பு,
பூரட்டாதி - தேவா, உத்திரட்டாதி - வேம்பு,
ரேவதி- இலுப்பை என 27 நட்சத்திரங்களுக்குரிய
மரங்களாகும்.
அந்தந்த
நட்சத்திரகாரர்கள்,அவர்களுக்குடைய
மரங்களை நட்டால்,அவர்களுக்குடைய
கர்மவினைகள் தீரும்.ஜாதகத்தில் தோசங்கள்
இருந்தால் குறையும்.
பொதுவாகவே மனிதர்களுக்கு சிலரை
பிடிக்கும்,பலரை பிடிக்காமல் போகும்.அவர்கள்
செய்யும் செயல்களோ,சேவைகளோ
பெரும்பாலும் சுயநலத்தின்
வெளிப்பாடு இருக்கும்.ஆனால் மரமோ
நல்லவர்கள்,தீயவர்கள் அனைவருக்கும்
காற்றையும்,நிழலையும் தருகிறது.பறவைகளுக்கு
புகலிடமாக இருக்கிறது.எத்தனையோ மனங்களை
குளிரவைக்கிறது.ஆதலால் அந்தந்த
நட்சத்திரகார்கள் நடும் மரம் மேலும்,மேலும்
புண்ணியத்தை கொடுக்கும்.

Sunday 20 December 2015

லக்ன பாவத்தில் கிரகங்கள் நின்ற பலன்கள்

லக்னத்தில் கிரகம் நின்ற பலன்..
சூரியன்:-
உடல் உஷ்ணம்.
லக்ன பாவத்தில் சூரியன் இருப்பின்
ஏற்படும் பலன்
தலைமயிர் குறைந்திருத்தல், தொழில்
தேக்கம், சினம், கொடூர குணம்,
ஏளனம் செய்தல், எனினும் சிலருக்கு
விருப்பமானவர், கொடூரமான
பார்வை, கடின உடல் வாகு, வீரம்
நிறைந்தவர், பொறுமையற்றவர்,
தயவின்மை கொண்டவர்.
சந்திரன்:-
லக்ன பாவத்தில் சந்திரன் இருப்பின்
ஏற்படும் பலன்:அழகா இருப்பார்கள்.கு
ளிர்ச்சியான தேகம்
கடகம், மேஷம், ரிஷபம் இவை லக்னமாக
இருந்தால் பிற மனிதரின் மனதை அறியும்
தன்மை உள்ளவர், அழகு, செல்வம்
அனுபவிக்கும் குணம் இருக்கும், தேய்பிறை
சந்திரனாக இருந்தால் முற்கூறிய
பலன்கள் குறைவுபடும்.
மற்ற ராசிகள் லக்னமாக வந்தால்
அதில் சந்திரன் இருப்பின் பித்தனாகவோ,
நீசனாகவோ, உடலில் குறையுள்ளவர்களா
கவோ, தகுதியற்ற பேச்சுடையவராகவோ
இருப்பார். தேய்பிறை சந்திரனாக
இருந்தாலும் வலுகுன்றிய நிலையில்
இருந்தாலும் மேற்கூறிய பலன்கள்
கண்டிப்பாக நடைபெறும்.
செவ்வாய்:;-
லக்ன பாவத்தில் செவ்வாய்
இருப்பின் ஏற்படும் பலன்:
சிவந்த தேகமுடையவர்.
கொடூர தன்மை உடையவன், எவரும்
செய்ய முடியாத செயல்களை
செய்தல், இரக்கமின்மை, செல்வம்,
வீரம், பற்றும் பாசமும் உடையவர்.
மிடுக்கான உடலமைப்பு, உடலில் தழும்பு
உள்ளவர், சபலப்படுபவர்.
லக்ன பாவத்தில் புதன் இருப்பின் ஏற்படும்
பலன்:
எப்பொழுதும் கேடில்லாத உடல்,
வலிமையுடன் இருத்தல், அறிவும், ஆற்றலும்,
காலத்தை உணர்த்துதல்,
பொதுவிஷயங்கள் பற்றிய
தெளிவு, குலத்தின் ஒழுக்கம், ஞான
சிந்தனை, காவியம், சோதிடம் மற்றும் கணித
அறிவுகளை தெரிந்து
கொள்பவர்.
குரு:-
லக்ன பாவத்தில் குரு இருப்பின் ஏற்படும்
பலன்:அமைதியானவர்.
ஆன்மிகவாதி
அழகான கட்டுடல், கூடுதல் வலிமை, முழு
ஆயுள், நன்கு ஆராய்ந்து செயல்களை
செய்பவர், ஆற்றலும், கல்வியும்,
திறமையும், அறிவும், வீரமும் உடையவர், மதிக்க
தகுந்தவர்.
சுக்கிரன்:-
லக்ன பாவத்தில் சுக்கிரன் இருப்பின்
ஏற்படும் பலன்:
அழகுள்ள கண்கள், முகம் மற்றும்
அழகான உடலமைப்பு உடையவர், இன்பம்,
முழு ஆயுள், வீரமின்மை உள்ளவர்,
பார்ப்பவர்களின் கண்களுக்கு அமிர்தமழை
பொழிபவராவர், கவர்ச்சி
உடையவர்.
சனி:-
லக்ன பாவத்தில் சனி இருப்பின் ஏற்படும்
பலன்:
சோம்பலாக இருப்பார்கள்.
மந்த புத்தி உடையவர்.
துலாம், மகரம், கும்பம், ஆகியவற்றில்
லக்னமாகி அதில் சனி இருந்தால்
அரசருக்கு இணையாக இருத்தல் அல்லது
நாடு, நகரங்களுக்கு
முக்கியமானவராகவும் உயர்ந்த
பதவியிலும் இருப்பார். மற்ற ராசிகள்
லக்னமாக இருந்து அதில் சனி இருந்தால்
இளமையில் நோய், ஏழ்மை, துக்கம், சிற்றின்ப
தாக்கம், தூய்மையின்மை, சோம்பல், தனுசு, மீனம்
லக்னமானால் சில நற்பலன்கள்
நடைபெறும்.
ராகு::-
லக்ன பாவத்தில் ராகு இருப்பின் ஏற்படும்
பலன்:
யார் பேச்சையும் கேட்க மாட்டார்கள்..மூ
ர்க்க குணம்
நீண்ட ஆயுள், வலிமை, தலை, முகம் போன்ற
இடங்களில் நோய் உள்ளவர்.
கேது:-
லக்ன பாவத்தில் கேது இருப்பின் ஏற்படும்
பலன்:
ஆன்மீகத்தில் ஈடுபாடு
நன்றி மறப்பவர், இன்பம் இல்லாதவர்.
புறம் கூறுபவர். பிறரை இருக்கும் நிலையிலிருந்து
கீழே தள்ளுபவர். உடலில் ஊனமும், வஞ்சகர்
நட்பும் உடையவர்.

Saturday 19 December 2015

அசுரகுரு சுக்ரன்

ஜென்ம லக்கினத்திற்கு 12
பாவங்களில் சுக்கிரன்
இருந்தால் ஏற்படும் பலன்கள்
ஜென்ம லக்கினத்தில்
சுக்கிரன் ஜென்ம
லக்கினத்தில் இருந்தால் அழகு,
கவர்ச்சியான உடல் அமைப்பு,
வசதி, வாய்ப்பு, நல்ல உடல்
அமைப்பு, தைரியம் துணிவு,
சுக போக
வாழ்வு, நல்ல குடும்பம், ஆடை,
ஆபரண சேர்க்கை, உண்டாகும்.
சுக்கிரன் பலம் இழந்தால் நல்லது
அல்ல.
2ல் இருந்தால்
சுக்கிரன் ஜென்ம லக்னத்திற்கு
2ல் இருந்தால் வசதி வாய்ப்பு,
நல்ல குடும்பம் அழகான
கண்கள், பொன்
பொருள் சேர்க்கை சுக
வாழ்வு சொகுசு வாழ்வு
உண்டாகும். கவர்ச்சியான
பேச்சால் மற்றவர்களைக் கவரும்
நிலை உண்டாகும். பாவிகள்
சேர்க்கை பெற்று பலம்
இழந்தால் கண்களில் பாதிப்பு,
தவறான பெண்
தொடர்பு தீய பழக்க
வழக்கம் உண்டாகும்.
3ல் சுக்கிரன்
சுக்கிரன் 3ல் இருந்தால் எடுக்கம்
முயற்சியில் அனுகூலம், கலை,
இசை
ஆர்வம், வசதி வாய்ப்பு
உண்டாகும். குறிப்பாக இளைய
உடன் பிறப்பு ஸ்தானம்
என்பதால் இளைய சகோதரி
பிறப்பு
உண்டாகும். சந்திரன் சேர்க்கை
பெற்றால் கலை, இசைத்துறையில்
சாதனை செய்ய நேரிடும்.
சுக்கிரன் 4ல்
சுக்கிரன் 4ல் இருந்தால் நல்ல
அறிவாற்றல், கல்வி, அசையும்
அசையா சொத்து, சுக
வாழ்வு, சொகுசு
வாழ்வு தாராள தன வரவு
உண்டாகும்.
பொதுவாக சுபர்
பார்வையும் இருந்தால் வாழ்வில்
ஏற்றம் தாய்க்கு நீண்ட ஆயுள்
உண்டாகும். பெண்ணுக்கு
4ம் வீடு கற்பு ஸ்தானம்
என்பதால் பாவிகள் சேர்க்கை
பெற்றால் கற்பு நெறி
தவறிய பெண்ணாக
இருப்பாள்.
5ம் வீடு
சுக்கிரன் 5ல் இருந்தால் வசதி
வாய்ப்பு, பூர்வீக சொத்து,
கல்வியில் மேன்மை,
மகிழ்ச்சியான
மண வாழ்வு, பெண் குழந்தை
யோகம் உண்டாகும். சுக்கிரன்
பாவிகள் சேர்க்கை பெற்றால்
கலப்பு திருமணம் காதல்
திருமணம் உண்டாகும்.
6ல் இருந்தால்
சுக்கிரன் 6ல் இருந்தால்
உறவினர்களால் அனுகூலம்,
தேவையற்ற செலவுகள், வீண்
செலவுகள், திருமணம்
காலதாமதமாக நடக்கும் நிலை,
சுக வாழ்வு பாதிப்பு
உண்டாகும். பலம் இழந்து
பாவிகள் சேர்க்கை பெற்றால்
திருமண வாழ்வில் பிரச்சனை, கண்
களில் பாதிப்பு, பெண்கள்
வழியில் எதிர்ப்பு, ரகசிய நோய்கள்
உண்டாகும்.
7ல் இருந்தால்
சுக்கிரன் சுப பார்வையும் கிரக
சேர்க்கை இல்லாமல் இருந்தால்
மண வாழ்வில் மகிழ்ச்சி,
சந்தோஷம் வசதி, வாய்ப்பு
ஏற்படும். கிரக சேர்க்கை
பெற்றால் எத்தனை கிரகமோ
அத்தனை தாரம். சுபர் சேர்க்கை
நல்லது. பாவிகள் சேர்க்கை
பெற்றால் கலப்பு திருமணம்
காதல் திருமணம், பலம்
இழந்தால் திருமண வாழ்வில்
பிரச்சனைகளும் பிரிவு
உண்டாகும்.
8ல் இருந்தால்
சுக்கிரன் 8ல் இருந்தால் சுக
வாழ்வு பாதிக்கும், தாமத
திருமணம், வீடு, வாகனம் அமையத்
தடை உண்டாகும். பாவிகள்
சேர்க்கை
பெற்றோ, அஸ்தங்கம்
பெற்றோ சூரியன் இருந்தால்
ரகசிய நோய், உடல் உறவில் ஈடுபட
முடியாத நிலை, கண்களில் நோய்
உண்டாகும்.
9ல் இருந்தால்
சுக்கிரன் 9ல் சுபர் கிரக பார்வை
மற்றும் சேர்க்கையுடன் இருந்தால்
தந்தைக்கு நீண்ட ஆயுள்,
செல்வம், செல்வாக்கு,
வசதி, வாய்ப்பு பூர்வீகத்தால்
அனுகூலம், மனைவி மூலம்
சொத்துக்கள் சேரும் யோகம்,
சந்தோஷமான குடுமுப வாழ்வு,
பொதுக் காரியங்களில்
ஈடுபட்டு சமுதாயத்தில்
நற்பெயர் உண்டாகும்.
பாவிகள் சேர்க்கை பெற்றால்
வெளியூர் வெளிநாடு
யோகம், பெண் சேர்க்கை
உண்டாகும்.
10ல் இருந்தால்
சுக்கிரன் 10ல் இருந்தால் கலை,
இசை, பெண்கள் உபயோகிக்கும்
பொருட்கள் மூலம் லாபம்,
பெண் தொடர்புள்ள
தொழில் உத்தியோகம் மூலம்
உயர்வு உண்டாகும். ஆடை,
ஆபரணம், வண்டி வாகனம்
மூலம் நற்பலன் உண்டாகும். சிலர்
மனைவியுடன் கூட்டு தொழில்
செய்யும் யோகம் உண்டாகும்.
பாவிகள் சேர்க்கை பெற்றால்
சில தவறான செயல்களில்
ஈடுபட நேரிடும்.
11ல் இருந்தால்
சுக்கிரன் 11ல் இருந்தால் நல்ல
அறிவாற்றல், வசதி, வாய்ப்பு,
எதிர்பாராத தன சேர்க்கை
அசையும்,
அசையா சொத்து சேர்க்கை,
உடன் பிறப்பு மூலம் அனுகூலம்,
பெண், மூத்த உடன் பிறப்பு
யோகம் உண்டாகும். சுக்கிரன்
பாவிகள் சேர்க்கை பெற்றால்
நிறைய பெண்
தொடர்பு, தவறான
வழியில் சம்பாதிக்கும் நிலை
உண்டாகும். பலம் இழந்தால்
தவறான பெண்
தொடர்பு உண்டாகும்.
12ல் இருந்தால்
சுக்கிரன் சுபர் பார்வை மற்றும்
சேர்க்கை உடன் 12ல் இருந்தால் சுக
வாழ்வு, சொகுசு
வாழ்வு, உடல் உறவில் எல்லை
இல்லாத மகிழ்ச்சி சுகத்திற்காக
நிறைய செலவு செய்ய
நேரிடும். சுக்கிரன் பாவிகள்
சேர்க்கை
பெற்று பலம் இழந்தால்
தவறான பெண்
தொடர்பால் இழப்பு, தீய
பழக்க வழக்கம்  ஏற்படும்