Thursday 13 October 2016

நோய் தீர்க்கும் அமிர்த நாழிகை


🌼 நோயற்ற வாழ்வே குறைவற்ற
செல்வம் என்பார்கள். மனிதனுக்கு
தேவையான 16 பேறுகளில் ஆரோக்கியமும்
ஒன்று. அதனால்தான்
🌼 கலையாத கல்வியும், குறையாத
வயதுமோர்
கபடு வாராத நட்பும், கன்றாத
வளமையுங்
குன்றாத இளமையும், கழுபிணி யிலாத
உடலும்
சலியாத மனமும், அன்பகலாத
மனைவியும்
தவறாத சந்தானமும், தாழாத
கீர்த்தியும்
மாறாத வார்த்தையும், தடைகள்
வாராத கொடையும்
தொலையாத நிதியமும் என்று
அம்பிகையையிடம் கேட்கும் அபிராமிபட்டரின்
வேண்டுதலில்
கழுபினியிலாத உடலும் என்ற வார்த்தை
இடம் பெறுகிறது.
🌼 இந்த ஆரோக்கியத்தை தரவல்லவர்
தன்வந்திரிபகவான். கல்விக்கு சரஸ்வதி,
செல்வத்திற்கு மகாலக்ஷ்மி,
வீரத்திற்கு பார்வதி என்று
சொல்வது போல், மருத்துவ கடவுள்
தன்வந்திரி பகவான்.
🌼 பாற்கடலில் அவரித்த பார்கவியோடு
தோன்றியவர். இறப்பே இல்லாத அமிர்தத்தோடு
அவதரித்தவர். நோய்க்கு மருதுண்ணும் போது,
தன்வந்திரி பகவானை மனதில் எண்ணி
அவர் திருநாமத்தை ஜெபித்தபடியே
மருந்துண்டால், வெகுவிரைவில் நோய்
குணமாகும்.
🌼 அதுமட்டுமல்ல, மருந்துண்ணவும் நேரம்
இருக்கிறது. மனித இனத்திற்கு மகான்கள்
கொடுத்த மகத்தான
கொடைதான் பஞ்சாங்கம். அது
வெறும் நல்லநேரம், கெட்ட நேரத்தை
சொல்வதோடு நின்று விடவில்லை, இந்த
காலக்கணிதத்தின் வாயிலாக சகலமும்
அறியலாம்.
🌼 அந்த ஆழ்கடலில் இருந்து நாம் எடுக்க
நினைக்கும் முத்து அமிர்தகடிகை அல்லது அமிர்த
நாழிகை. குறிப்பாக சொல்லப்
போனால் வியாதிக்கு மருந்துண்ணும் நேரம்.
இதை சற்று விளக்கமாக பார்ப்போம்.
🌼 மொத்தம் இருப்பது 27
நட்சத்திரங்கள். நாள் ஒன்றுக்கு ஒரு
நட்சத்திரம் வீதம் உதயமாகிறது. ஒரு
நட்சத்திரம் நாள் ஒன்றுக்கு தோராயமாக
60 நாழிகைக்கு கூடுதலாகவோ அல்லது
குறைவாகவோ நடப்பில் இருக்கும். ஒரு நாழிகை
என்பது 24 நிமிடங்கள். ஒரு நாளின்
துவக்கம் என்பது சூரிய உதயத்தில் இருந்து
தொடங்குகிறது.
🌼 அந்த வகையில் அமிர்த நாழிகையை
கணக்கிட அன்றைய சூரிய உதயம்
தெரிந்திருக்க வேண்டும். அதில் இருந்து
அமிர்த நாழிகை துவங்கும் நேரத்தை
மணிக்கணக்காக மாற்றி அதை பின்பற்ற
வேண்டும்.
🌼 அவ்வாறு சரியான அமிர்த
நாழிகையில் நோய்க்கான மருந்தை
உண்பதால் பூரண குணமடைய முடியும்
என்பது கவிகாளிதாசர் எழுதிய
உத்திரகாலாமிர்தத்தில்
சொல்லப்பட்டிருக்கும் சூட்சுமம்.
🌼 உங்கள் வசதிக்காக
இன்னொறு சுலப கணக்கை
சொல்கிறேன். மலேசியாவைப்
பொருத்தவரை சூரிய உதயம் என்பது
கிட்டத்தட்ட காலை 7.00 மணி என்றே வைத்துக்
கொள்ளலாம். இதில் முன்பின்
நேரங்களில் உதயநேரம் இருக்கிறது.
என்றாலும் 7.00 என்பது ஒத்துப் போகும்.
🌼 மருந்துண்ணும் நேரம் பெரும்பாலும்
நான்கு நாழிகைக்கு குறைவில்லாமல்
இருக்கிறது என்பதால் அமிர்த நாழிகை
துவக்கம் முதல் முடிவு வரை ஒன்னரை மணிநேரம்
இருக்கிறது. முன் பின் சூரிய உதயத்தை ஒதுக்கி
விட்டால் கூட அதன் மத்திம நேரத்தில் மருந்து
உண்ணலாம் என்பதை நினைவில் வைத்துக்
கொள்ளுங்கள்.
🌼 இந்த இடத்தில் இன்னொறு
விஷயத்தையும் கணக்கில் எடுத்துக்
கொள்ள வேண்டும். அவசரகால
நிவாரணத்திற்கு இது
பொருந்தாது. ஒரு பாம்பு
தீண்டிவிட்டது.
🌼 அதற்கு மருத்துவம் செய்ய அமிர்த
நாழிகைக்காக காத்திருக்க முடியாது.
அதைப்போல் இன்றைய நவீன மருத்துவத்தில்
காலை, மதியம், இரவு என்று மூன்று வேளைகள்
மருந்து எடுத்துக் கொள்ளும் வழக்கம்
இருக்கிறது.
🌼 இதில் எந்த நேரத்தில் அமிர்த நாழிகை
வருகிறதோ அந்த நேரத்திற்கு மருந்து உண்டால்
அந்நோய் பூரணமாக குணமாகும்.
🌼 இனி அந்த நேரத்தைப் பார்ப்போம்.
உதாரணமாக மருந்துண்ணும் நாளில்
அசுவினி நட்சத்திரம் நடப்பில் இருந்தால் 21
நாழிகை முதல் 25 நாழிகைக்குள் மருந்து
உண்ண வேண்டும்.
🌼 1.அஸ்வினி 21 முதல் 25 நாழிகைக்குள்
2.பரணி 30 முதல் 34 நாழிகைக்குள்
3.கிருத்திகை 50 முதல 54 நாழிகைக்குள்
4.ரோகிணி 15 முதல் 18 நாழிகைக்குள்
5.மிருகசீரிடம் 30 முதல் 34 நாழிகைக்குள்
6.திருவாதிரை 40 முதல் 44 நாழிகைக்குள்
7.புனர்பூசம். 14 முதல் 18 நாழிகைக்குள்
8.பூசம். 16 முதல் 20 நாழிகைக்குள்
9.ஆயில்யம். 40 முதல் 44 நாழிகைக்குள்
10. மகம் 20 முதல் 24 நாழிகைக்குள்
11.பூரம். 30 முதல் 34 நாழிகைக்குள்
12.உத்திரம். 33 முதல் 37 நாழிகைக்குள்
13.அஸ்தம். 07 முதல் 11 நாழிகைக்குள்
14.சித்திரை 16 முதல் 24 நாழிகைக்குள்
15.சுவாதி 22 முதல் 26 நாழிகைக்குள்
💞16.விசாகம் 20 முதல் 24 நாழிகைக்குள்
💞17.அனுசம். 14 முதல் 18 நாழிகைக்குள்
💞18.கேட்டை 31 முதல் 35 நாழிகைக்குள்
💞19.மூலம். 14 முதல் 18 நாழிகைக்குள்
💞20.பூராடம். 10 முதல் 14 நாழிகைக்குள்
💞21.உத்ராடம் 14 முதல் 18
நாழிகைக்குள்
💞22.திருவோணம். 20 முதல் 24 நாழிகைக்குள்
💞23.அவிட்டம் 14 முதல் 18 நாழிகைக்குள்
💞24.சதயம். 20 முதல் 24 நாழிகைக்குள்
💞25.பூரட்டாதி 10 முதல் 14 நாழிகைக்குள்
💞26.உத்திரட்டாதி 18 முதல் 22
நாழிகைக்குள்
💞27.ரேவதி 12 முதல் 16 நாழிகைக்குள்
🌼மருந்து உண்பதால் நோய்கள் பூரண
குணமாகிவிடும் சித்தர்கள் கண்ட ராஜ
வைத்தியம்.
🌼நீங்களும் இதை கடைபிடித்து
நோய்தாக்கத்தில் இருந்து விடுபட எல்லாம்
வல்ல தன்வந்திரி பகவானை
தொழுகிறோம். வாழ்க வளமுடன்,
வாழ்க நலமுடன்.

சனி நீராடு ஏன் எதற்கு??

"சனி நீராடு? ஏன்?, எதற்கு?"
சனி நீராடு!,
தலைமுறை தலைமுறையாய் நம் சமூகத்தில்
தொட்டுத் தொடரும் ஒரு
வாசகம்.
நம்மைப் போல உஷ்ணமான சீதோஷ்ன நிலை
பகுதியில் வாழ்வோருக்கு தலைக்கு எண்ணை
வைத்துக் குளிப்பது உடல் நலத்துக்கு
ஆரோக்கியமானது என இன்றைக்கு அறிவியல்
ஆய்வுகள் சொல்வதை,
என்றைக்கோ நம் முன்னோர்கள்
சொல்லிச் சென்றிருக்கின்ற
னர்.
இதன் பின்னால் இருக்கும் அநேக
விஷயங்கள் இன்னமும் ஆய்வு
செய்யப் படாமல் இருக்கிறது
என்பதுதான் உண்மை.
இந்த வகையில் குறிப்பாக "புதன், சனி
நீராடு" என்பது பிரபலமான
சொல்லாடல், ஏன் புதன் சனி
நீராடு என்கிறார்கள்?
எந்த நாளில் தலை முழுகினால் என்ன
பலன் கிடைக்கும் என்பதை தேரையர் ஒரு
பாடலில் விளக்குகிறார்.
"கேளு அருக்கன் பலன் தான் அழகை
மாற்றும்
கெடியான திங்கள் பலன்தான்
பொருளுண்டாகும்
பாலு செவ்வாய் பலன் தான்
உயிரை மாய்க்கும்
பாங்கான புதன் பலன் தான்
மதியுண்டாகும்
தாளு வியாழன் பலன் தான் கருத்தை
போக்கும்
தப்பாது வெள்ளி பலன் கடனே
செய்யும்
நாளு சனியின் பலன்தான்
எண்ணெய் மூழ்க
நட பொருளும் சகதனமும் வரும்
சாதிப்பாயே."
- தேரையர் -
ஞாயிற்று கிழமைகளில் தலை முழுகினால்
உடல் அழகை மாற்றிவிடும்,
திங்கள் கிழமைகளில் தலை முழுகினால்
பொருள் சேரும்,
செவ்வாயில் முழுகினால் உயிரை
மாய்க்கும் நிலை ஏற்படலாம்.
புதன் கிழமைகளில் தலை முழுகினால் சிறந்த
அறிவு வளர்ச்சி உண்டாகும்.
வியாழன் முழுகினால் அறிவு
மந்தமாகும்.
வெள்ளிக்கிழமைகளில் தலை முழுகினால்
கடன் உண்டாகும்.
சனிக்கிழமைகளில் தலை முழுகினால் நற்
பெயரும் நல்ல நண்பர்களும்
உண்டாகும் என்கிறார்.
இவற்றை அனுபவமோ அல்லது ஆராய்வோ
இல்லாமல் எழுதியிருக்க முடியாது.
இவற்றின் பின்னால் இருக்கும்
சூட்சுமங்களும், அறிவியல் நுட்பங்கள்
இன்னமும் ஆராயப் பட வேண்டியுள்ளது...
"நவகோடி சித்தர்கள் திருவடிகளே சரணம்"

வாழையும் பரிகாரமும்

வாழை மரத்தின் மூலம் செய்ய வேண்டிய
எளிமையான பரிகாரங்கள்:
நீங்களாக செய்துக் கொள்ளும்
சுய பரிகாரங்களின் விவரங்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ளன.
இவற்றை முறையாக செய்தால்
உங்களுக்கு சகல ஐஸ்வர்யமும்
உண்டாகும்.
1. தரித்திர பிணிகள் விலக
அமாவாசை திதி அல்லது தேய்பிறை அஷ்டமி
திதிகளில் மூன்று வாழை பூக்களை எடுத்து
சூரியன் மறையும் வேளையில் இரண்டு மணிக்கு
மேற்பட்டு கடலில் குளித்து விட்டு, தம் உடலில்
உள்ள அனைத்து பகுதிகளிலும் படும்படி
தடவிவிட்டு, தாம் அணிந்திருக்கும் சட்டை
அல்லது பனியன், பெண்ணாக
இருப்பின் ஜாக்கெட், புடவை போன்ற
துணியில் மூன்று பூக்களையும் கட்டி கடலில்
வீசிவட வேண்டும். இப்படி செய்தால்
நம்மை பிடித்த தரித்திர பிணிகள் விலகிவிடும்.
2. திருமணம் தடை விலக
திருமணம் தடைப்பட்ட பெண்கள்
வாழைப்பூ இதழில் மூன்று குண்டு மஞ்சளை
வைத்து முடித்து, வாழை நாரினால் கட்டி ,
வாழை மரத்தின் இலை, குலை தள்ளும் இடத்தில்
வைத்து கட்டிவிட வேண்டும்.
இது போன்று மூன்று சஷ்டி திதி அன்று
செய்துவர, விரைவில் திருமணம்
நடைபெறும், அதைப்போல் ஆண்கள்,
குண்டுமஞ்சளுக்கு பதில்
கொட்டைப்பாக்கு வைத்து கட்ட வேண்டும்.
3. சர்வ தரித்திரங்கள் விலக:
ஞாயிற்றுக்கிழமைகளில் பிரம்ம முகூர்த்த
வேளையில் வாழை மரத்தின் வேர் பகுதியில்
இருந்து (1/2 ) அரை அடிக்கு மேலே ஒரு மூங்கில்
குச்சியில் குத்தினால் வாழை நீர் ( கங்கை
நீர்) வழியும் .
அந்த நீரை மண் பாத்திரத்தில் பிடித்து கடல்
நீருடன் கலந்து வீடுகளில்,
தொழில்கூடங்களில், நம்மீதும்
தெளித்துக் கொண்டு வந்தால்
சர்வ தரித்திரங்களும் விலகும்.
( வாழை மரத்தை வெட்டினலோ அல்லது
குத்தினாலோ அதிலிருந்து வடியும் நீர் கங்கை
நதி நீருக்கு சமமானது)
4. குழந்தை பாக்கியம் பெற:
குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள்
கடவுளுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம்
செய்வித்து, வாழைமரக்கன்றை
தானமாகக் கொடுக்கவேண்டும்.
பின்பு கோயிலுக்கு வரும் பெண்களுக்கு
வாழைப்பழங்களை தானமாகக்
கொடுக்கவேண்டும்.
ஒன்பது செவ்வாய்க்கிழமைகளில்
இரட்டை வாழைப்பழத்தை கோவிலில் உள்ள
தெய்வத்திற்கு படைத்து, பின்பு வீட்டிற்கு
எடுத்து வந்து அந்த பழத்தின் தோலில்
உள்ள சதயை நகம் படாமல் சுரண்டி எடுத்து
காய்ச்சிய பாலில் போட்டு சுத்தமான
தேன் கலந்து கணவன், மனைவி இருவரும்
பருகிய பின் இல்லறத்தில் ஈடுபட்டால்
குழந்தை பாக்கியம் கிட்டும்.
5. பித்ரு தோஷம் விலக
100 கிராம் கருப்பு எள்ளை வாங்கி அதை
வெல்லத்துடன் கலந்து ஐந்து
பாகங்களாக பிரிந்து, ஐந்து வெள்ளை
துணியில் மூட்டை போல் கட்டிக் கொள்ள
வேண்டும்.
பின்பு ஐந்து வாழைக்காய் எடுத்து,
ஒவ்வொரு வாழைக்காயில் உள்ள
காம்பில் ஒவ்வொரு எள் மூட்டையை
மஞ்சள் நூலினால் கட்டி பித்ருக்களை வேண்டி
அமாவாசை திதியில் கடலில் விட்டால்
பித்ரு தோஷம் விலகும்.
6. செல்லவம் மேலும் பெருக
சம்பள பணத்தையோ அல்லது சுப
காரியய்த்திற்கு பயன்படுத்தப்பட இருக்கும்
பணத்தையோ, வாழைப்பூ இதழில் வைத்து,
வீட்டின் பூஜை அறையில் பூஜை செய்து பின்
பயன்படுத்தினால் வீண் விரையம் மற்றும்
செலவுகள் வராது.
அதேபோல் புதிய தங்க நகை அல்லது
வெள்ளி பொருட்களை வாங்கி
வந்து, அதையும் வாழைப்பூ இதழில் வைத்து
பூஜித்து எடுத்து கொண்டால்
செல்வம் மேலும் பெருகும்.
7. அன்ன தரித்திரம் விலக
அட்சய சக்தி மிகுந்த இந்த வாழை மரத்திற்கு
மற்றொரு மகத்தான பெருமையும்
உண்டு.
அட்சயதிதி அன்று புதிய ஆபரணதங்கம்
வாங்கி மஞ்சள் கலர் துணியில் முடிந்து,
கிழக்கு முகமாக நின்று, ஆபரண மூட்டையை
வாழை மரத்தில் கட்டி தீபம் காட்டி,
சாம்பிராணி புகையிட்டு, பூஜை முடிந்த பின்பு
எடுத்து அணிந்து கொண்டால்
ஆபரணங்கள் பெருகும்.
அதைப்போல் நெல்மணி்களை கட்டி பூஜித்து
அரிசி மூட்டையில் போட்டு வைத்தால் அன்ன
தரித்திரம் விலகும்.
8. வியாபார விருத்தி பெருக
பெளர்ணமி நிலவு ஒளியில், சுக்கிர ஓரை
வேளையில், வடக்கு பக்கமாக உள்ள வாழை
மரத்தின் வேரை நகமும். இரும்பு கத்தியும்
படாமல் எடுத்து கஸ்தூரி மஞ்சளில் சேர்த்து,
சிகப்பு நூல் கட்டி கருப்பு வெற்றிலையில்
மடித்து, தொழில் நடக்கும் இடத்தில்,
பணம் வைக்கும் பெட்டியில் வைத்து
சாம்பிராணி புகையிட்டுவந்தால்
வியாபார விருத்தி பெருகும்.
9. வேண்டிய காரியங்கள் விரைவில்
நடைபெற
வாழை பழத்தை குலையாக தள்ளும் வாழை
மரத்தை தேர்ந்தெடுத்து முகுர்த்த நாளில்
சுபவேலையில் அதன் வேர்ப் பகுதியில் சிறு குழி
எடுத்து வலம் புரி சங்கை கிழக்கு முகமாக
புதைத்துவிட வேண்டும்.
பின்பு வாழை மரத்தின் வேர்பகுதியில் சங்கு
இருக்கும் இடத்தில் தினம் சிறிது பாலை
ஊற்றி நாற்பத்தியைந்து (45) நாட்கள்
வாழைமரத்திற்கு இஷ்ட தெய்வத்தை
நினைத்து தூப தீபம் காட்டி பூஜித்து
வரவேண்டும்.
பின்பு ஒரு முகூர்த்த நாளில் சுப வேளையில்
சங்கை எடுத்து மூன்று வித அபிஷேகங்கள்
செய்து தூப தீபம் காட்டி பூஜை அறையில்
வைத்து வழிபட்டு வந்தோமானால். நாம்
வேண்டிய காரியங்கள் விரைவில்
நடைபெறும்.
குடும்பம் சுபிக்ஷ்ம் பெருகும், பணம்
வீண்விரையம் ஆகாது, தெய்வகுறைகள்
விலகும், குலவிருத்தி அடையும்.

Tuesday 11 October 2016

அர்ச்சனை பூக்களின் மகிமை

*அர்ச்சனைப் பூக்களின் அருமையான
பலன்கள் தெரிந்து கொள்வோம்*
*அல்லிப்பூ* செல்வம் பெருகும்
*பூவரசம்பூ* உடல் நலம் பெருகும்
*வாடமல்லி* மரணபயம் நீங்கும்
*மல்லிகை* குடும்ப அமைதி
*செம்பருத்தி* ஆன்ம பலம்
*காசாம்பூ* நன்மைகள்
*அரளிப்பூ* கடன்கள் நீங்கும்
*அலரிப்பூ* இன்பமான வாழ்க்கை
*செம்பருத்தி* ஆன்ம பலம்
*ஆவாரம் பூ* நினைவாற்றல் பெருகும்
*கொடிரோஜா* குடும்ப ஒற்றுமை
*ரோஜா பூ* நினைத்தது நடக்கும்
*மருக்கொழுந்து* குலதெய்வம்
அருள்
*சம்பங்கி* இடமாற்றம் கிடைக்கும்
*செம்பருத்தி பூ* நோயற்ற வாழ்வு
*நந்தியாவட்டை* குழந்தை குறை நீங்கும்
*சங்குப்பூ (வெள்ளை)* சிவப்பூஜைக்கு
சிறந்தது
*சங்குப்பூ (நீலம்)* விஷ்ணு பூஜைக்கு சிறந்தது
*மனோரஞ்சிதம்* குடும்ப ஒற்றுமை, தேவ
ஆகர்¬ணம்
*தாமரைப்பூ* செல்வம் பெருகும்
அறிவு வளர்ச்சி பெறும்
*நாகலிங்கப்பூ* லட்சுமி கடாட்சம்,
ஆரோக்யம்
*முல்லை பூ* தொழில் வளர்ச்சி, புதிய
தொழில்கள் உண்டாகும்
*பட்டிப்பூ (நித்திய கல்யாணி பூ)*
முன்னேற்றம் பெருகும்
*தங்க அரளி (மஞ்சள் பூ)* குருவின் அருள் ,
பெண்களுக்கு மாங்கல்ய பலம்
கடன்கள் நீங்கும் , கிரக பீடை நீங்கும்
*பவள மல்லி* இது தேவலோக புஷ்பமாகும்.
இந்த செடியினை வீட்டில் வளர்ப்பது மிக
அவசியமாகும். இதன்மூலம் தேவர்
களினதும், ரிஷிகளினதும் அருளும், ஆசியும்
கிடைக்கும்.
பழைய புஷ்பங்கள், மலராத
மொட்டுக்கள், தூய்மை இல்லாத
பூக்களைக் கொண்டு இறைவனிற்கு
அர்ச்சனை செய்யக்கூடாது.
அரச்சனை செய்த பூக்கள் கோவிலில்
சாமிக்கு போட்ட மாலைகள் காலில்
மிதிபடாதவாறு போட வேண்டும். முடிந்தால்
தூய்மையான ஓடுகின்ற தண்ணீரில்
விடலாம். அல்லது தூய்மையான இடத்தில்
குழி தோண்டி போட்டு மூடிவிடலாம்.
கோவிலில் சாமிக்கு போட்ட மாலைகளை
வாகனங்களில் முன்பக்கம் கட்டுவது
மிகபெரிய சாபம். இதனால் தீமைகள்
உண்டாகும் நன்மைகள் கிடைக்காது.
*பூசைக்கு சிறப்பான பூக்கள்*
திருமாலுக்கு -- பவளமல்லி ,
மரிக்கொழுந்து துளசி
சிவன் -- வில்வம் செவ்வரளி
முருகன் -- முல்லை, செவ்வந்தி, ரோஜா
அம்பாளுக்கு -- வெள்ளை நிறப்பூக்கள்
ஆகியவை பூசைக்கு சிறப்பானவை.
*ஆகாதபூக்கள்*
விநாயகருக்கு -- துளசி
சிவனுக்கு -- தாழம்பூ
அம்பாளுக்கு -- அருகம்புல்
பெருமாளிற்கு -- அருகம்புல்
பைரவர் -- நந்தியாவட்டை ,
சூரியனுக்கு -- வில்வம்
ஆகியவை பூஜைக்கு ஆகாதவை

Sunday 9 October 2016

நெருப்பில் முடியை போடலாமா???

நெருப்பில் முடி பொசுங்க
கூடாது என்று கூறுவதின் ரகசியம்:
இன்றளவும் கிராமப்புரங்களி
ல்நெருப்பில் முடி பொசுங்க
கூடாது எனக்கூறுவார்கள்.
அதுவும் வீட்டினுள் நெருப்பில்
தெரிந்தோ, தெரியாமலோ
வெட்டப்பட்ட உதிர்ந்த முடிகள்
எரியக்கூடாது, மகா தரித்திரம் அப்போதே
பிடிக்கும் எனபார்கள்.
இதன் ரகசியம்தான் என்ன?
கைமுடியானாலும். தலைமுடியானாலும்.
பறவைகள். மிருகங்கள்
முடியானாலும்,வெட்ட வெட்ட
வளரக்கூடியது .
அதில் ரத்தம் உண்டு, பார்ப்பதற்கு
தெரியாது.
ஆனால் அது தீயில் பொசுங்கும்
போது தெரியும், அதன் வாடையே அதற்கு
சாட்சி .
ஒரு உயிரை எரிக்கும் போதும். முடியை எரிக்கும்போதும்
ஒரே வாசனை (வாடை) வரும்.
இந்த துர்நாற்றம் லட்சுமி வாசம்
செய்வதற்கு ஏற்றதல்ல .
அதனால்தான் அக்காலத்திலேயே
பிணத்தை எரிப்பதானாலும் ஊரின் மேற்கே
(காற்று திசையில்) கொண்டு
சென்று எரித்தார்கள்.
இந்த வாடையை முகர்ந்தவர்
யாரானாலும் 16-நாள்
தொடர்ந்து தலைக்கு குளித்து வர
வேண்டும், இல்லையேல் தரித்திரம் தான்
பிடிக்கும்.
முடியானாலும் இதே நிலைதான்,
அதுமட்டுமல்ல கருவாடு. இறைச்சி எந்த
வீட்டில் தீய்ந்து போகிறதோ அந்த வீடும்
வெகுவிரைவில் கீழ்நிலைக்கு வரும்.
தீப்புண் பட்ட குடும்பமும் தரித்திரத்திற்கு
ஆட்பட்டு பின்புதான் மீளும்.
அதே போல் கொசுவானாலும்
வீட்டில் இறக்கலாம், ஆனால் தீய்ந்து
போகக்கூடாது.
இப்போது நவீனமாக கொசுவை
கொள்ள எலக்ட்ரானிக் பேட்
வந்துள்ளது .
இதை பலரும் பயன்படுத்துகிறார்கள், இந்த
பேட்டில் கொசு தீய்ந்து போகிறது, குடும்ப
சுகமோ செல்வமோ குறைந்து
கொண்டே வருகிறதை ஆய்வு மூலம்
பலரிடம் கண்டுபிடிக்கபட்டுள்ளது.
ஓட்டல்களில் ஈ தொல்லை தீர ஒரு
நீலவண்ண மின்சார குழல் விளக்கு எரியும்
.
அதன் ஈர்ப்பு ஈ. கொசு. சிறு
வண்டுகளை கவர்ந்து ,அந்த விளக்கை சுற்றி
சுற்றி வரும் .
அதற்காகவே அந்த குழல் (டியூப் லைட்)
விளக்கின் பக்க வாட்டில் மின்சார
ஹீட்டர் பொருத்தி இருப்பார்கள்.
அதில் அகப்பட்டு அனைத்தும்
பொசுங்கும் .
அதை பொருத்தி இருந்த பல ஓட்டல்
உரிமையாளர்கள் அழிந்து போய்
இருக்கிறார்கள்.
அதாவது செல்வமற்று. சுகமற்று.
கடன்பட்டு. தொழில் கைமாறி ஓடும்
அளவிற்கு தரித்திரம் ஆட்கொண்டதை
ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
நரிக்குறவர்களை கடந்த காலங்களில்
கவனித்திருந்தீர்களேயானால் எந்த
இறைச்சியாகட்டும் தீயில் பொசுக்கி
சாப்பிடுவார்கள்.
அதனால் அவர்கள் நாடோடி
வாழ்க்கையுடன் யாசகம் பெற்றே
உயிரையும். உடலையும் வளர்க்க
வேண்டியதாயிருந்தது .
அந்த அளவிற்கு தரித்திரம் அவர்களை
ஆட்கொண்டது .
அதே நேரத்தில் இன்றைக்கு அவர்களை
பார்த்தீர்களேயானால் இறைச்சியை சுட்டு
பொசுக்கி தின்னும் பழக்கத்தை
நாட்டு சூழ்நிலையால் விட்டு விட்டார்கள்.
இப்போதைக்கு அவர்கள் நன்றாகவே வளர்ச்சி
கண்டிருக்கிறார்கள்.
அன்றைக்கு செய்த அதே
தொழில்தான் இன்றைக்கும்
செய்கிறார்கள்.
அன்றைக்கு அவர்களுடைய பழக்கம் இறைச்சியை
சுட்டு பொசுக்கி தீய்த்து
சாப்பிட்டார்கள், தரித்திரம் பிடித்திருந்தது.
அதை மாற்றிக் கொண்டு கிடைத்த
இறைச்சியை சமைத்து சாப்பிடுகிறார்கள்,
பெரும் தரித்திரத்தில் இருந்து மீண்டு
சாதாரண தரித்திர நிலையில்
உள்ளார்கள்.
இதுதான் வித்தியாசம் .
ஆக முடி. நகம். இறகு , உரோமம். சதைகள் தீயில்
கருகினால் அது வீடாக இருந்தால்
மகா தரித்திரம் பிடிக்கும்.
காடாக இருந்தாலும் இவைகள்
பொசுங்குவதை அடிக்கடி முகரும்படி
ஆட்படாதீர்கள் ,கவனமாக இருங்கள்.
சாதாரண சைவ சமையல் செய்யும்போது
கூட கடாய் தீயக்கூடாது என்பார்கள்.
கடாயில் அடியில் தீய்ந்து போனதில்
சாப்பாடு சாப்பிடக்கூடாது, தரித்திரம்
பிடிக்கும் என்பார்கள்.
இவைகளெல்லாம் மறுக்க முடியாத
உண்மையே .
நெருப்பில் முடி பொசுங்குதல் ,
கடாய் தீய்ந்து போகுதல் போன்ற சூழலில்
ஏழைகள் இயல்பாகவே ஆட்படுகிறார்கள்.
இதன் காரணமாகவே அவர்கள் கடைசி வரை
ஏழையாய் இருக்க வேண்டிய சூழ்நிலையில்
இருக்கின்றார்கள்.
யாகம் வளர்க்கும் போதும் கூட யாக தீயில்
முடியோ,பூச்சிகளோ விழுந்து தீய்ந்து போனால்
நிச்சயம் முழு பலன் கிடைப்பதில்லை .
இது தெரியாமல் நிகழக்கூடிய
நிகழ்வானாலும் அதன் துர்நாற்றம்
(வாடை) லட்சுமி கடாட்சத்தை விலக்கி விடும் .
நம் கையில் உள்ள ரோமம் தீ பட்டு லேசாக
பொசுங்கினாலும் உடனே
அவ்விடத்தில் மஞ்சள்தூள் குழப்பி பூசி
விடவேண்டும்.அப்போதுதான் தரித்திரம்
பிடிக்காது.
எந்த ஒரு தரித்திர தீட்டிற்கும் மஞ்சள் நீர்
சிறந்த பரிகாரமாகும் .
அசைவம் சாப்பிடுபவர்கள் அக்காலத்திலேயே
இதை நன்கு உணர்ந்திருந்தனர்.
அதனால் கோழியை,பன்றியை இறைச்சியுண்பதற்
காக கொன்று அதன் ரோமத்தை
முதலில் தீயில் பொசுக்குவார்கள்.
பொசுக்கிய பின்னர் அந்த
தரித்திரம் பாதிக்காதிருக்க மஞ்சள் தூள்
அதன் உடல் முழுக்க பூசுவார்கள்.
பிற்காலத்தில் வந்தவர்கள் தீய்ச்சல்
வாடை போவதற்காகவும்,உணவின்
ருசிக்காகவும்மஞ்சள் பூசுவதாக
கருதினார்கள்.உண்மையில்
அவ்வாறுஇல்லை.
தலையில் எண்ணெய் தேய்க்கும் பழக்கம்
உள்ளவர்கள் பயன்படுத்தும் தலையணையிலோ
அதன் உறையிலோ மேற்புறத்தில்
எண்ணெய் படிவம் படிந்துஇருக்கும்.
மற்ற எண்ணெய்க்கும் முடியில் ஊறிய
எண்ணெய்க்கும் முகர்ந்து
பார்த்தால் வாடையில் வித்தியாசம்
தெரியும்.
( சிக்கு வாசனை என்பார்கள்)
அந்த தலையணையை நெருப்பில்
எரிக்கக்கூடாது, பயன்படுத்திய பின்
பழுதானால் தூக்கி போட்டு விடலாம்,
ஆனால் நெருப்பில் போடக்கூடாது,
மகா தரித்திரம் பிடிக்கும் .
நம் முடி எண்ணெய் பட்ட எந்த துணியும்
எரியவிடக்கூடாது .
போகி பண்டிகை அன்று சிலர் பழைய துணி
தலையணை இவைகளை எரிப்பதுண்டு .
அதில் இதுபோல எண்ணெய் துணி
எரிந்தால் மகா தரித்திரம் அவரை வந்து
அடையும்.
எனவே கவனமாக இருக்கவும