---------------------------
மகாமகத்தின் சிறப்பு. அன்று
தேவகுருவான பிரகஸ்பதியின் பிறந்தநாள்
ஆகும்.
உத்திரம் நட்சத்திரத்தில் குரு பகவான்
பிறந்தார் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
சூரியன் கும்பத்தில் சஞ்சரிக்க, சந்திரன்
சிம்மத்தில் (மகம் நட்சத்திரத்தில்)
இருக்கும்போது சூரியனுக்கு நேரேதிரே வரும்,
அச்சமயம் பௌர்ணமி உருவாகும். அப்போது குரு
உத்திரம் நட்சத்திரத்தில் இருப்பார். அப்போது
குருவின் கதிர்கள் உலகத்தில் இரட்டிப்பாக
படரும். பெரும்பாலும் கிரக கதிர்களை
தேக்கி வைக்கும் வல்லமை நீர்நிலைகளுக்குண்டு.
எனவே மகாமகத்தன்று, குரு அஸ்தங்கம்,
குரு ராகுவால் கிரகணம், குருவின் மேல்
பலம் பெற்ற சனிபார்வை மற்றும்
பிரம்மஹத்தி தோசம் போன்ற அமைப்பு
ஜாதகத்தில் கொண்டவர்கள்,
குருவின் காரக சக்தியை புனித நீர்நிலைகளில்
குளித்து பெறலாம் என்பது நிதர்சனம்.
இந்த கிரகநிலை பன்னிரண்டு வருஷத்துக்கு
ஒருமுறை வருவதால், மிக சிறப்பான
பௌர்ணமியாகும். .
Saturday 30 January 2016
பிரகஸ்பதியின் பிறப்பு _மகாமகம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment