Friday 15 July 2016

குழல்வாய்மொழி அம்பாள்-விக்கிரபாண்டீசுவரர் ஆலயம் சோழாபுரம்

ஒரே நாளில் வரம் தரும் அருள்மிகு
குழல்வாய்மொழி அம்பாள் சமேத
விக்கிரபாண்டீஸ்வரர் திருக்கோவில்,சோ
ழாபுரம்!!!
கலியுகத்தில் ராகுவின் உச்சம் ஆகும்
கால கட்டத்தில் நாம் வாழ்ந்து
வருகின்றோம்;
இதனால்,நிம்மதியாக வாழ்ந்து
வருபவர்களின் எண்ணிக்கையும்,ஒற்றுமையுடன்
வாழ்ந்து வரும் தம்பதிகளின்
எண்ணிக்கையும் படுவேகமாக குறைந்துவருகின்
றது;
வேலை கிடைப்பதில்லை;கிடைத்தால் பிடிப்பதில்லை;
பிடித்த வேலையாக இருந்தால் சம்பளம்
போதவில்லை;
தொழில் செய்தால்
எதிர்பார்க்கும் வருமானம் கிடைப்பதில்லை;
குடும்பத்தில் ஒற்றுமை இல்லை;
தினசரி செய்தித்தாளை வாசித்தாலே
வீட்டைவிட்டு வெளியே செல்லவே
பயமாகத் தான் இருக்கின்றது;
ஒவ்வொரு குடும்பமும் கடன்
அல்லது நகைக்கடன் அல்லது நோய் அல்லது
சொத்துத் தகராறு அல்லது
மாந்திரீகப் பிரச்சினை அல்லது
பொறாமை அல்லது குழப்பத்தில்
ஆழ்ந்து யாருமே நிம்மதியாக
வாழ்ந்துவருவதாகத் தெரியவில்லை;
இந்த சூழ்நிலையை மாற்றிட சித்தர்
பெருமக்களை வழிபடுவதே சிறந்தது;
தமிழ்நாடு முழுவதுமே சித்தர்
பெருமக்கள் ஆங்காங்கே ஜீவசமாதி
ஆகி உள்ளார்கள்;
பூர்வபுண்ணியம் உள்ளவர்களுக்கே சித்தர்
ஜீவசமாதிகளுக்குச் செல்லும்
பாக்கியம் உண்டாகும்;
போராடி முயற்சி செய்தால்
மற்றவர்களுக்கும் சித்தர் பெருமானின்
அருளாசி கிடைக்கும்;
இன்றைய காலகட்டத்தில் உடனே ஒரு நல்லது
நடக்க வேண்டும் என்று எண்ணுகின்றோம்;
அப்படி உடனே அருளாசியை அள்ளித்தரும்
சித்தர் பீடம் ஒன்று விருதுநகர்
மாவட்டம்,ராஜபாளையம் தாலுகாவில்
சோழாபுரம் கிராமத்து சிவாலயத்தினுள்
அமைந்திருக்கின்றது.
நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்;
ராஜபாளயம் புது பேருந்து நிலையத்தில்
இருந்து சங்கரன் கோவில் செல்லும்
சாலையில் 8 கி.மீ.தூரம் பயணிக்க
வேண்டும்;சோழாபுரம் என்ற கிராமம் வரும்;
ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில்
இருந்து முறம்பு வழியாகச் செல்லும்
அனைத்து டவுண் பஸ்களும் சோழாபுரம்
நிற்கும்;(இதற்கு அடுத்த ஸ்டாப் தான்
முறம்பு)
ராஜபாளையத்திற்குத் தெற்கே இருந்து
வருபவர்கள் சங்கரன் கோவிலுக்கு வருகை தந்து
அங்கே இருந்து முறம்பு வர வேண்டும்;அங்கே
இருந்து ஒரு கி.மீ.ராஜபாளையம் சாலையில்
இந்த ஆலயம் அமைந்திருக்கின்றது;
சாலையானது எஸ் வளைவாக
திரும்பும்.அந்த திருப்பம் ஒரு ஆற்றுப்
பாலமாக இருக்கின்றது;அந்த ஆற்றுப்
பாலத்தில் இருந்து பார்த்தால் மேற்கே ஒரு
கோபுரம் தெரியும்;ஒரு நிலை மட்டுமே
கட்டப்பட்ட கோபுரம் அது;
இந்த ஆலயம் தான் அருள்மிகு
விக்கிரபாண்டீஸ்வரர் + குழல்வாய்
மொழி அம்மையார் திருக்கோவில்
எல்லா நாட்களும் மாலை 4 மணி முதல் 7
மணி வரை திறந்திருக்கின்றது;
நீங்கள் ஒரு லிட்டர் பஞ்சதீப
எண்ணெய்யும்,ஐந்து கிலோ பச்சரிசி
அல்லது புழுங்கலரிசியும் சிறு மாலை
மூன்றும்,ஐந்து மண் விளக்குகளும் வாங்கிக்
கொண்டு 19.7.16
செவ்வாய்க்கிழமை மாலை சரியாக 4
மணிக்கு வந்து விடுங்கள்;சாயரட்சை பூஜையை
தரிசித்துவிட்டு,அன்னதானத்தை
சிறப்பித்துவிட்டு இரவு 7 மணிக்குப் புறப்படும்
விதமாக திட்டமிட்டு வருவது அவசியம்;
எண்ணெயும்,அரிசியும் கூட வாங்க
முடியாத அளவுக்கு கஷ்டமா? கவலை
வேண்டாம்! இந்த சித்தர் பீடத்தைத்
தரிசித்தால் போதும்;வாருங்கள் வரங்களை
சித்தர் பெருமானிடம் பெறுங்கள்;
இங்கே அன்னை குழல்வாய்மொழி
சன்னதியில் அருகில் இருக்கும் சித்தர் பீடம்
சுமாராக 1000 ஆண்டுகள்
பழமையானது;இந்த சித்தர் பீடத்தின் அருகில்
அமர்ந்து உங்கள் கஷ்டங்களை முறையிடுங்கள்;
முறையிட்டு உங்களுக்கு என்னதேவை என்பதை
வேண்டிக் கொள்ளுங்கள்;(பு
லம்பாதீர்கள்;பிறரின் அழிவுக்காக
வேண்டுவது மாபெரும் தவறு;அவர்களை
விடவும் இங்கே வந்த முதல் தடவையிலேயே
நீங்கள் சக்திவாய்ந்தவராக
மாறிவிடுவீர்கள்)
ஆடிப்பவுர்ணமியை குருபூர்ணிமாவாக
கொண்டாடுகின்றோம்;எனவே,இங்கே
வருகை தந்து சித்தர் பிரானிடம் பின்வருமாறு
வேண்ட வேண்டும்;
உதாரணமாக,எனது கடன் ரூ.5 லட்சம்
தீரவேண்டும் என்று கேட்பதற்குப்
பதிலாக,எனது கடன் ரூ.5 லட்சம்
தீர்த்தமைக்கு நன்றிகள் சித்தர்பிரானே! என்று
வேண்டவேண்டும்;
எனது மகளுக்கு ஆயில்யம் நட்சத்திரம்
இன்னும் கல்யாணம் நடக்கவில்லை;இனி
யாவது நடக்கவேண்டும் என்று அரைகுறை
அவநம்பிக்கையோடு வேண்டுவது தப்பு;
எனது மகளுக்கு சிறந்தவரன் அமைந்து
திருமணம் அமைத்துக் கொடுத்தமைக்கு
நன்றிகள் சித்தர்பெருமானே! என்று
வேண்டவேண்டும்;
எனது தொழிலில் மீட்சி வேண்டும்
என்று கெஞ்சக்கூடாது;எனது
தொழில் இப்போது அபாரமாக
இயங்குகின்றது;ர
ொக்கவியாபாரமாகவே
ஒடுகின்றது;இந்த உதவியை எப்போதும் மறக்க
மாட்டேன் சித்தர்குருவே! உங்களுக்கு ஆயிரம்
கோடி நன்றிகள்!!! என்று வேண்டவேண்டும்;
அதாவது,ஒரு வேண்டுதல் நிறைவேறியது போலவே
வேண்டிக் கொள்ளவேண்டும்;ஆடி
பவுர்ணமி என்ற குரு பவுர்ணமியன்று சித்தர்
பெருமானிடம் எதை வேண்டினாலும்
வரம் கிட்டும்;
இந்த சித்தர் பெருமானிடம் எதை
வேண்டினாலும்,மறுநாளே வரமாகக்
கிட்டிவிடும்;(ஆடி மாதம் எப்படி திருமண
வ்ரன் அமையும் என்று அறிவுபூர்வமாக
கேட்கக் கூடாது;ஆவணி பிறந்ததும்
அருமையான வரன் அமையும்)
மறுநாள் முதலே உங்கள் வாழ்க்கை
ஸ்பீடாக இருக்கும்;வளமாக
இருக்கும்;நலமாக இருக்கும்;அனைத்தும்
பெற்று வளமோடும்,சீரோடும் சிறப்போடும்
வாழ சித்தர் பெருமானின் அருள்
பெற அழைக்கின்றோம்;
ஓம் ரீங் சிவசிவ

No comments:

Post a Comment