மஞ்சள் நிறத்தின் தன்மை
இது தசைகளின் ஆற்றலைத் தூண்டும் அற்புத சக்தி படைத்தது. உடலின் எந்தப் பகுதியிலாவது மஞ்சள் அதிர்வு தடைப்பட்டால் உடலின் இயக்கம் நிறுத்தப்படும் அல்லது பக்கவாதம்கூட ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த மஞ்சள் நிறம் சிகப்பு, பச்சை நிறக் கதிர்களின் கலவையாகும். இரத்த நாளங்களின் இரத்த ஓட்டத்தை சுத்திகரிக்கிறது. ஆரோக்கியத்திற்குச் சிறந்தது. பொலிவுடைய ஒரு கவர்ச்சியைத் தரும்.
இளமஞ்சள் எல்லோருடனும் ஒத்துழைத்து இணக்கமாக வாழத்தூண்டும். திருமணங்களில் தங்க நிறமான இந்த இளமஞ்சள் நிற உடைகளை மணமக்கள் அணிவது இதனால்தான். துக்கமான சோகநிலையை மாற்றி புத்திகூர்மையுடன் சிந்திக்கத் தூண்டும்.
மஞ்சள் நிறத்தின் தீமை
மிக பிரகாசமான பளீர் என்று கண்ணைப் பறிக்கும் எலுமிச்சை நிற மஞ்சள், மனநலம் பாதித்தவர்களை மிகவும் கிளர்ச்சியூட்டி பாதிக்கச் செய்யும். மேலும் அவர்கள் மூளையையும், மன அமைதியையும் பாதித்து, மரணப்படுகுழியிலும் தள்ளி நம்மை வேதனைக்குள்ளாக்கும். சக்தி படைத்தது. கோழைத்தனம், பயந்த சுபாவம், கெட்ட எண்ணங்களை உறுவாக்கித் தற்கொலை எண்ணம் முதலியவற்றை ஏற்படுத்தும். பிரகாசமான எலுமிச்சை நிறம் கொண்ட மஞ்சள் எதிர்மறை அதிர்வுகளை உண்டாக்கும் வல்லமை படைத்தது.
அரக்கு மஞ்சள், டல் மஞ்சள் என்ற வெந்தய நிற மஞ்சள் பூசப்பட்ட வண்ணத்தை குழந்தைகள் விரும்பாமல் அவர்களை மனம் பிடிக்காமல் செய்து சண்டை போடவும் கவலை கொள்ளவும் வைக்கும். இதை சுவரில் அடிக்கக் கூடாது. குழந்தைகளின் மனதைப் பாதிக்கச்செய்யும். குழந்தைகளை திருப்திப்படுத்த முடியாத ஓர் உணர்வை தூண்டவல்லது இந்த நிறம். பசியாறிய குழந்தையை அழும் மனப்பான்மையோடு இருக்கும்படி செய்து வீட்டில் சுற்றியுள்ள அடுத்தவர்களது வேலை, கவனம் முதலியவற்றைப் பாதிக்கச்செய்யும். அதனால் சிறு குழந்தைகளாக (5 வயது வரையே உள்ள குழந்தைகள்) இருப்போர் வீடுகளில் இந்த வண்ணத்தைச் சுவரில் பூசவேண்டாம்.
ஆன்மீகத்தில் மஞ்சள் நிறம்
பொன்னிற மஞ்சள் – தெய்வீக உணர்வை ஏற்படுத்தவும், வளர்க்கவும், முழுவதுமாக மனதில் நிறைந்து அமைதி, பக்தி, ஞானம் ஏற்படுத்தவல்லது. மேலும், அமைதியுடன் கூடிய ஒரு நல்ல ஓய்வு நேரங்களை சந்தோஷத்தோடு அனுபவிக்கும் உணர்வை ஏற்படுத்தும்.
ஆழ்ந்த தெய்வீக உணர்வுக்கு பொன்னிற மஞ்சள் உகந்தது. மேலும் புதிய படைப்புக்கள், புது முயற்சிகள், இறக்க சுபாவம், தயாள குணம், தரும காரியங்களை நிறைவேற்றும் மனப்பாங்கை வளர்க்கும் சக்தி படைத்தது. பொன்னிற மஞ்சளின் சின்னம் சூரியன். கடவுளின் சக்தியைக் காட்டும் இந்நிறம், தெய்வீக சக்தியுடையது.
கோயில்களில் கடவுளுக்கு லேசான மஞ்சள் நிறமுடைய சந்தனக்காப்பு மனதிற்குள் பக்தியை நிறைவாகத் தந்து மனச்சாந்தியை அளிப்பதைக் கண்டிருப்பீர்கள். அதன் வாசனை மட்டுமல்ல, முக்கியமாக சந்தனம் (லைட்டான) மஞ்சள் நிறம் உடையதுதான் அதன் காரணம். அதேபோல் அதிக வண்ணம் சேர்த்த சந்தனப்பொட்டு வைத்திருப்போரைப் பார்த்தால், அவர்பால் உங்களுக்கு ஒரு அந்நோன்யமும் மதிப்பும் ஏற்பட்டு, அவர் ஒரு தெய்வீகக்களை நிறைந்திருப்பவராக தோன்றுவார்.
உங்கள் மனதில் மஞ்சள் பூசிய நம்குலப் பெண்களின்மேல் தனி மரியாதையும் ஒரு பயபக்தியும் தோன்றுவதும் கடவுளிடம் நமக்கு ஏற்படும் ஒரு பக்தி கலந்த உணர்ச்சிகளின் அடக்கமும் ஆகும். மேலும் பொன் வண்ண ஆடையுடுத்திய குருபகவானின் நிறமான தங்க நிற மேனியின் சிறப்பும் நாம் அந்தக் கடவுளை வணங்கச் செல்லும்போது பொன் வண்ண ஆடையுடுத்திச் செல்வது (கடவுளைத் தன்பால் இழுத்து) அவரை சாந்தப்படுத்தி நமக்கு அருள் கிடைக்கச் செய்யும் ஏதுவான ஓர் அம்சம்.
மஞ்சள் மகிமை என்ற வார்த்தையே ஒரு தனிச்சிறப்பு வார்த்தையாக நம் நாட்டில் பாராட்டிப் போற்றுவதாக அமைந்துவிட்டது.
மாலை நேரங்களில் பொன்னிற மஞ்சளாடை உடுத்தி பொது நிகழ்ச்சிகளுக்கோ, கோயில்களுக்கோ செல்வது மிகப் பொருத்தமான ஆடை அலங்காரமாகவும் உங்களுக்கு ஒரு தனிக்கவர்ச்சியையும் மதிப்பையும் தருவனவாகவும் அமையும்.
மஞ்சள் கலந்த நீரை நம் வீட்டு விசேஷங்களில் சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாட உபயோகிப்பதும் வழிமுறையாக இருந்து வருகிறது. திருவிழாக்கள் முடிந்ததும் தெய்வீக நிறமான மஞ்சளைக் கலந்துதான் ஒருவருக்கொருவர் ஊற்றி மஞ்சள் நீராட்டம் என்று விழாவை இனிதே கொண்டாடி முடிக்கிறோம்.
மஞ்சளில் நனைத்து கடவுளுக்கு வேண்டி, காசு வைத்து முடிந்தால் எல்லாம் சுபமாக நடக்கும் என்ற ஐதீகமும் மஞ்சள் நிறத்தின் சிறப்பு. பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு வாசலில் மஞ்சள் வர்ணக்கோலம்தான் அத்தனையிலும் மிகச்சிறப்பாகக் கண்ணைக் கவர்ந்திழுக்கும்படி அமையப்பெற்றிருக்கும். மஞ்சள் நிறமில்லாத கோலம் அழகாயிராது, கலையாகவும் இருக்காது.
எல்லாவற்றுக்கும் மேலாகத் தங்கமே மஞ்சள் நிறந்தானே! இதற்கு ஈடு இணை எதாகிலும் உண்டா? எல்லோரையும் காந்தம் போல் (திருடனையும் சேர்த்து!) கவர்ந்து இழுப்பது, பொன் அணிந்த ஆடவர், பெண்டிர்களைத்தானே! அழகுக்கு அழகு சேர்ப்பது தங்க நிற மஞ்சள் நகைகள்தன். அதற்கு இந்த உலகமே அடிமை. அது இதுதானே நம் வாழ்க்கைக்கு அஸ்திவாரம், ஆட்டி படைப்பது எல்லாம்.
மஞ்சள் நிற வாழைப்பழங்கள் வைத்து கடவுளுக்கு நைவேத்யம் செய்தால் தனிச்சிறப்புடன் பக்தியின் பழமாக கருதுகிறோம். மாங்கனியும் இதன் காரணமே. மாம்பழக்கலர் என்றாலே மஞ்சள் நிறத்தைத்தான் குறிக்கிறது. மஞ்சள் நிறமான மாங்கனியைப் பார்த்தாலே சுவைக்கத் தோன்றுவதும் அதன் நிறத்தாலேதான்.
மஞ்சள் நிற உடைகள்
இந்த வண்ணம் கறுத்த மேனியருக்காகட்டும், மாநிறத்தவருக்காகட்டும், நல்ல சிவந்த மேனியருக்காகட்டும் அழகைத் தரவல்லது. பகல், இரவு எந்த நேரத்திற்கும் ஏற்ற வண்ணம்
கவனத்தில் கொள்ளவேண்டியது: எலுமிச்சை மஞ்சளோ, நல்ல பிரகாசமான மஞ்சளையோ கறுத்த மேனியர் உடுத்துவதைத் தவிர்க்கவேண்டும். கறுத்த மேனியருக்கு வெந்தய வண்ணம் எனும், (மஸ்டர்டு) வெளிர் மஞ்சள் பொருத்தமாக இருக்கும், மாம்பழக்கலர், பொன்னிற மஞ்சள் எல்லாம் இவர்களின் கறுத்தமேனிக்கு கவர்ச்சியூட்டி அவர்களை அழகான பெண்களாகக் காட்டும்.
ஆண்களுக்கும் இந்த நிறங்கள் நிரம்பவே பொருந்தும். பகல் நேரத்தில் இவர்களுக்கு இது எடுப்பாகக் காட்டி அழகைக் கூட்டவல்லது. இரவு நேரத்திற்கு இது அத்தனை பொருத்தமாக இருக்காது. இந்த வெந்தயக் கலரான டல் மஞ்சள் இவர்கள் உடுத்தியிருக்கும்போது இவர்கள்மேல் பொது இடங்களில் தனிமரியாதையை ஏற்படுத்தும் தன்மை பெற்றது. நல்ல எண்னங்களை இவர்கள்மேல் மற்றவர்கள் கொண்டிருக்கும்படி செய்யும்.
மாநிறத்தவரும், சிவந்த மேனியரும் செந்நிறம் கலந்த மஞ்சள் வண்னத்தையும் மேலே குறிப்பிட்ட மஸ்டர்டு கலர் புடவைகளையும் உடுத்தும்போது இவர்களின் நிறத்தையும் அழகையும் மேலும் மெருகேற்றி இவர்களைப் பொன்னாக ஜொலிக்க வைக்கும். பகல், இரவு எந்த நேரத்திற்கும் இந்த நிற உடை அலங்காரத்துடன் நீங்கள் வெளியே கிளம்பலாம். பொன் மஞ்சளைப்போல் ஒரு சரியான பொருத்தமான வண்ணம் சிவந்த மேனியருக்கும் மாநிறத்தவருக்கும் சோபிப்பதுபோல் வேறு நிறம் சோபிக்காது என்றே சொல்லலாம். இந்த நிறத்தால் இவர்கள் நிறம் அதிகமாகத் தெரிகிறதா இல்லை இவர்களால் இந்த நிறத்திற்கே அழகா என்ற கணக்கில் பார்ப்பவருக்கும், உடுத்தியிருப்போருக்கும் தெரியும்.
Wednesday 20 June 2018
பணம் வரவை தரும் மஞ்சள் நிறம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment