Monday 8 February 2016

வராகி வழிபாடு Varagi Worship

யாருக்கெல்லாம் வராகி வழிபாடு
சுலபமாகக் கைகூடும்?
மனதால் பிறருக்கு தீங்கு
நினைக்காமல்,தான் உண்டு;தன்னுடைய
வேலை/தொழில் உண்டு என்று
இருப்பவர்களுக்கு
திருவாதிரை,சுவாதி,சதயம் நட்சத்திரத்தில்
பிறந்துள்ளவர்களுக்கு
தற்போது ராகு மஹாதிசை நடப்பில்
உள்ளவர்களுக்கு
பரணி நட்சத்திரத்தில் பிறந்துள்ளவர்களுக்கு
பஞ்சமி திதியில் பிறந்துள்ளவர்களுக்கு
இனி ஒரு பிறவியே வேண்டாம்;என்று மனம்
வெறுத்துள்ளவர்களுக்கு
ராகுவுடன் எந்தக் கிரகமாகவது இணைந்து
அந்தக் கிரகத்தின் திசை நடப்பில்
உள்ளவர்களுக்கு
நிம்மதியாக வாழ விரும்புவோர்களுக்கு
அன்னை அரசாலை(வராகி)யின் வழிபாடு
சுலபமாகக் கைகூடும்;
ஆமாம்!
பின்வரும் அன்னை அரசாலை(வராகி)யின்
12 பெயர்களை தினமும் (காலையில் 15
நிமிடமும்,இரவில் 15 நிமிடமும்) ஜபித்து
வந்தால் போதும்;மூன்றாவது நாளில்
இருந்தே உங்களுக்கு அன்னை அரசாலை
(வராகி)யின் அருட்பாதுகாப்பு
கிட்டிவிடும்;
4 ஆம் நாளில் இருந்து,கூடவே இருந்து பழகி
நமக்கு துரோகம் செய்தவர்கள்
படிப்படியாக நம்மைவிட்டு விலகிச்
சென்றுவிடுவார்கள்;
7 ஆம் நாளில் இருந்து,நாம்
அறியாமையால் கஷ்டப்படுவதை நினைத்து
வருத்தப்படும் நல்ல ஆத்மாக்கள் நம்மோடு
பழக ஆரம்பிப்பார்கள்;எதிர்பாராத
உதவிகள் செய்ய ஆரம்பிப்பார்கள்;
30 ஆம் நாளில் இருந்து
எதெற்கெடுத்தாலும்
புலம்புவதும்,பயப்படுவதும் நம்மைவிட்டு
விலகிச் சென்றுவிடும்;
60 ஆம் நாளில் இருந்து நமது வராகி
மந்திர ஜபத்தின் பலன் நமது குடும்பத்தின்
உறுப்பினர்கள் அனைவருக்கும் பாதுகாப்புக்
கவசமாக பாதுகாக்கத் துவங்கும்;
நமது குடும்ப உறுப்பினர்கள் நம்மோடு ஒரே
வீட்டில் வாழ்ந்து வந்தாலும் சரி;அல்லது
தொழில் நிமித்தமாக அடிக்கடி
வெளியூருக்குச் சென்று வந்தாலும்
சரி;அல்லது நாம் ஒரு ஊரிலும் நமது
குடும்பத்தார் ஒவ்வொரு ஊரிலும்
வாழ்ந்து வந்தாலும் சரி;அவர்களுக்கு
சூட்சுமமான பாதுகாப்பை அன்னை
அரசாலை(வராகி) வழங்குவாள்;இப்படி
வழங்கும் பாதுகாப்பை எந்த ஒருவராலும்
வழங்க முடியாது;
எனவே,பின்வரும் அன்னை அரசாலை
(வராகி)யின் 12 பெயர்களை தினமும்
ஜபிக்கத் துவங்குங்கள்;
சந்தர்ப்பம் கிடைக்கும்
போதெல்லாம்,அருகில் இருக்கும்
பழமையான ஆலயத்தில்
மூலவர்,அம்பாள்/தாயார் சன்னதியின்
முன்பாக 30 நிமிடத்துக்குக் குறையாமல்
ஜபிக்கவும்;
60 நாட்கள் இப்படி தினமும் இருமுறை
ஜபித்தப் பின்னர்,வராகி பரணி என்ற
வராகி மாலை என்ற வராகி அந்தாதியை
ஜபிக்கத் துவங்கலாம்;
அசைவம் தவிர்த்துவிட்டு,ஜபிக்க ஆரம்பிப்பது
அவசியம்;
பஞ்சமீ
தண்டநாதா
சங்கேதா
சமேஸ்வரீ
சமயசங்கேதா
வராகி
போத்ரிணீ
சிவா
வார்த்தாளீ
மஹாசேனா
ஆக்ஞாசக்ரேஸ்வரீ
அரிக்நீ
இவைகளை ஒருமுறை ஜபித்தாலே,வராகி
பரணியை ஒருமுறை பாடியமைக்கான பலன்
கிட்டும்;
ஓம் வராகி சிவசக்தி ஓம

No comments:

Post a Comment