Wednesday 24 February 2016

இந்து தர்மம் அறியலாம் வாங்க

- இந்து
தர்ம சாஸ்திரம்...
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
'''''''''''''''''''''''''''''''''''''''''''''"""""""
§ இடது கையால் ஆசனம் போட்டால் ஆயுள்
குறைவு; இடது கையால் எண்ணெய்
தேய்த்துக் கொண்டால் புத்திர
நாசம்; இடது கையால் சாப்பாடு போட்டுக்
கொண்டால் செல்வம்
அழியும்; இடது கையால் படுக்கையை போட்டால்
இருப்பிடம் சேதமாகும்.
ஜோதிடர், குரு, நோயாளி, கர்ப்பிணி, மருத்துவர்,
சந்நியாசி முதலியவர்களுக்கு, அவர்களுடைய
ஆபத்துக் காலத்தில் கண்டிப்பாக உதவ
வேண்டும். இது மிகவும் புண்ணியம்.
§ சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த
நிலையிலிருந்தால், அவர்களுக்கு உதவ
வேண்டும்.
§ அண்ணியை தினசரி வணங்க வேண்டும்.
§ பசு, தேர், நெய்குடம், அரச மரம்,
வில்வம், அரசுடன் சேர்ந்த வேம்பு இவைகள்
எதிரில் குறுக்கிட்டால், வலது புறம் சுற்றி
செல்ல வேண்டும்.
§ குடும்பஸ்தன் ஒரு ஆடை மட்டும் அணிந்து
உணவு உட்கொள்ள கூடாது. ஒரு
கையை தரையில் ஊன்றி சாப்பிடக் கூடாது.
துணியில்லாமல் குளிக்கக் கூடாது.
சூரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக்
கூடாது.
§ கன்றுக் குட்டியின் கயிறை தாண்டக்
கூடாது. மழை பெய்யும் போது ஓடக்
கூடாது. தண்ணீரில் தன் உருவத்தை
பார்க்கக் கூடாது.
§ நெருப்பை வாயால் ஊதக் கூடாது.
§ கிழக்கு, மேற்கு முகமாக உட்கார்ந்து
மலஜலம் கழிக்கக் கூடாது.
§ எதிர்பாராத விதத்திலோ, தவறு என்று
தெரியாமலோ, பெண்கள் கற்பை
இழந்து விட்டால், புண்ணிய நதியில், 18
முறை மூழ்கிக் குளித்தால் தோஷம் நீங்கும்.
§ திருமணம் ஆகாமலே ஒரு
பெண்ணுடன் வாழ்பவனை
சுபகாரியங்களில் முன்னிறுத்தக் கூடாது.
§ சாப்பிடும் போது, முதலில் இனிப்பு, உவர்ப்பு,
புளிப்பு, கசப்பு பதார்த்தங்களை வரிசையாக
சாப்பிட்டு, பின் நீர் அருந்த வேண்டும்.
§ சாப்பிடும் போது தவிர, மற்ற நேரத்தில் இடது
கையால் தண்ணீர் அருந்தக் கூடாது.
§ கோவணமின்றி, வீட்டின் நிலைப்படியை
தாண்டக் கூடாது.
§ இருட்டில் சாப்பிடக் கூடாது. சாப்பிடும்
போது விளக்கு அணைந்து விட்டால், சூரியனை
தியானம் செய்து, மீண்டும் விளக்கேற்றி
விட்டு சாப்பிட வேண்டும்.
§ சாப்பிட்டவுடன் குடும்பஸ்தன்
வெற்றிலை போட வேண்டும். வெற்றிலை
நுனியில் பாவமும், முனையில் நோயும், நரம்பில்
புத்திக் குறைவும் உள்ளதால் இவற்றை கிள்ளி
எறிந்து விட வேண்டும்.
§ சுண்ணாம்பு தடவாமல்
வெற்றிலையை வெறுமனேயோ,
வெறும் பாக்கை மட்டுமோ போடக் கூடாது.
வெற்றிலையின் பின்பக்கம் தான்
சுண்ணாம்பு தடவ வேண்டும்.
§ (அறிவுரை) மனைவி, கணவனுக்கு
வெற்றிலை மடித்துக்
கொடுக்கலாமே தவிர, கணவன்,
மனைவிக்கும், மகன், தாய்க்கும், பெண்,
தந்தைக்கும் மடித்துத் தரக் கூடாது.
§ குரு, ஜோதிடர், வைத்தியர், சகோதரி, ஆலயம்
இங்கேயெல்லாம் செல்லும் போது
வெறுங்கையுடன் செல்லக் கூடாது.
§ தலையையோ, உடம்பையோ வலக்கையினால் மட்டும்
சொறிய வேண்டும். இரண்டு
கைகளாலும் சொறியக் கூடாது.
§ இரு கைகளாலும் தலைக்கு எண்ணெய்
தேய்க்க கூடாது. வலது உள்ளங்கையில்
எண்ணெய் ஊற்றி தலையில் தேய்க்க
வேண்டும்.
§ தலைவாசலுக்கு நேரே கட்டில் போட்டோ, தரையிலோ
படுக்கக் கூடாது.
§ வானவில்லை பிறருக்கு காட்டக் கூடாது.
§ மயிர், சாம்பல், எலும்பு, மண்டையோடு, பஞ்சு,
உமி, ஒட்டாஞ்சில்லி இவற்றின் மீது நிற்கக்
கூடாது
§ பேசும் போது துரும்பைக் கிள்ளிப் போடக் கூடாது.
§ ஈரக்காலுடன் படுக்கக் கூடாது.
§ வடக்கிலும், கோணத் திசைகளிலும் தலை வைத்து
படுக்கக் கூடாது. நடக்கும் போது முடியை
உலர்த்த கூடாது.
§ ஒரு காலால், இன்னொரு
காலை தேய்த்துக் கழுவக் கூடாது.
§ (அறிவுரை) தீயுள்ள பொருட்களை தரை
மேல் போட்டு காலால் தேய்க்கக் கூடாது.
பூமாதேவியின் சாபம் ஏற்பட்டு, பூமி, மனை
கிடைக்காமல் போய் விடும்.
§ பகைவன், அவனது நண்பர்கள், கள்வன்,
கெட்டவன், பிறர் மனைவி இவர்களுடன்
உறவு கொள்ளக் கூடாது
§ பெற்ற தாய் சாபம்,
செய்நன்றி கொல்லுதல், பிறன்
மனைவி கூடுதல் இவை மூன்றுமே
பிராயச்சித்தமேயில்லாமல் அனுபவித்தே
தீர வேண்டிய பாவங்கள்.
§ (அறிவுரை) அங்கஹீனர்கள், ஆறு விரல்
உடையவர்கள், கல்வியில்லாதவர்கள்,
முதியோர், வறுமையிலுள்ளவர்கள் இவர்களது
குறையை குத்திக் காட்டிப் பேசக் கூடாது
§ ரிஷி, குரு, ஜோதிடர், புரோகிதர், குடும்ப வைத்தியர்,
மகான்கள், கெட்ட ஸ்திரியின் நடத்தை
இவர்களைப் பற்றி வீண் ஆராய்ச்சியில்
ஈடுபடவோ, அவர்களிடம் உள்ள தவறுகளை
விளம்பரப்படுத்துவதோ கூடாது.
§ பிறர் தரித்த உடைகள், செருப்பு, மாலை,
படுக்கை இவற்றை நாம் உபயோகிக்கக் கூடாது.
§ பிணப்புகை, இளவெயில், தீபநிழல் இவை
நம் மீது படக் கூடாது.
§ (அறிவுரை) பசுமாட்டை காலால் உதைப்பது,
அடிப்பது, தீனி போடாமலிருப்பது பாவம்
§ பசு மாட்டை, "கோமாதா வாக எண்ணி,
சகல தேவர்களையும் திருப்திப்பட வைப்பதற்கு,
அம்மாட்டுக்கு, புல், தவிடு, தண்ணீர்,
புண்ணாக்கு, அகத்திக்கீரை
கொடுப்பது புண்ணியம்.
§ தூங்குபவரை திடீரென்று எழுப்பக்
கூடாது; தூங்குபவரை உற்றுப் பார்க்கக்
கூடாது.
§ பகலில் உறங்குவது, உடலுறவு
கொள்வது கூடாது.
§ தலை, முகம் இவற்றின் முடியை காரணம்
இல்லாமல் வளர்க்கக் கூடாது.
§ அண்ணன் - தம்பி; அக்காள் - தங்கை;
ஆசிரியர் - மாணவர்; கணவர் - மனைவி;
குழந்தை- தாய்; பசு - கன்று இவர்களுக்கு
இடையில் செல்லக் கூடாது.
§ வீட்டுக்குள் நுழையும் போது, தலைவாசல்
வழியாகத் தான் நுழைய வேண்டும்.
§ நம்மை ஒருவர் கேட்காதவரையில், நாம்
அவருக்கு ஆலோசனை கூறக் கூடாது...

No comments:

Post a Comment