சப்தகன்னியர் :
---------------------
1 - பிராம்மி (பிராம்மணி)
2 - மாகேசுவரி
3 - கௌமாரி
4 - வைஷ்ணவி (நாராயணி)
5 - வராகி
6 - இந்திராணி
7 - சாமுண்டி (காளி)
-----------------------
சப்த கன்னிகள் :
-----------------------
பிராம்மி
பிராம்மி படைப்பின் கடவுளான
பிரம்மாவின் அம்சமாவார். இவர்
நான்கு கரங்களை உடையவர்.
அன்னப்பறவையை வாகனமாக
கொண்டவர். வெண்ணிர ஆடை
அணிந்தவராகவும், ஸ்படிக மாலையை
ஆபரணமாக தரித்தவராகவும்
உள்ளார்.
மகேசுவரி
மகேசுவரி என்பவர் மகேசுவரானாகிய
சிவபெருமானின் அம்சமாவார்.
இவர் சிவபெருமானைப் போன்று
முக்கண்ணும், ஐந்து திருமுகமும் உடையவர்.
கரங்களில் பாசம், அங்குசம், மணி, சூலம்,
பரசு என்ற ஐந்து ஆயுதங்களை தரித்தும்,
ரிசபத்தினை வாகனமாக
கொண்டவர்.
கௌமாரி
கௌமாரி என்பவர் கௌமாரனாகிய
முருகனின் அம்சமாவார். இவர் நான்கு
கரங்களையும், பின் இரு கைகளில் வஜ்ரம்
மற்றும் சக்தி ஆயுதங்களையும் தரித்து
காணப்படுகிறார். மயில் பறவையினை
வாகனமாக கொண்டவர்.
சேவல்கொடியினை கைகளில்
தாங்கியிருப்பவர்.
நாராயணி
நாராயணி என்பவர் விஷ்ணு என்று
அழைக்கப்பெறும் திருமாலின்
அம்சமாவார். இவருக்கு வைஷ்ணவி என்ற
மறுபெயருண்டு. இவர் நான்கு
கரங்களையும், பின் இரு கைகளில்
சக்கரத்தினையும், சங்கினையும் தரித்துக்
காணப்படுகிறார்.
வராகி
வராகி திருமாலின் வராக
அம்சமாவார். இவர் வராகமெனும்
பன்றி முகமும், நான்கு கரங்களையும்
உடையவர். பின் இரு கரங்களில்
தண்டத்தினையும், கலப்பையையும்
கொண்டவராவார். இவர் கருப்பு
நிற ஆடையுடுத்தி சிம்மம் வாகனத்தில்
அமர்ந்திருக்கிறார்.
இந்திராணி
இந்திராணி தேவலோகத்து அரசனான
இந்திரனின் அம்சமாவார். நான்கு
கரங்களை கொண்ட இவர், பின் இரு
கரங்களில் சக்தியையும், அம்பினையும்
ஆயுதமாக கொண்டு
காட்சியளிக்கிறார். ரத்தின கிரீடம் தரித்து
வெண் யானை வாகனத்தில்
அமர்ந்திருப்பவர்.
சாமுண்டி
சாமுண்டி என்பவர் ருத்திரனின்
அம்சமாவார். நான்கு கரங்களும்,
மூன்று நேத்திரங்களும், கோரைப்பற்களும், கரு
மேனியும் உடையவர். இவர் புலித்தோல் உடுத்தி
கபால மாலையை அணிந்திருக்கிறார்.
முத்தலைச் சூலம், முண்டம், கத்தி, கபாலம்
ஆகிய ஆயுதங்களை தரித்தும், பிணத்தின் மீது
அமர்ந்தும் காட்சியளிக்கிறார். இவர்
சண்டர் முண்டர் என்ற அரக்கர்களை
அழிப்பதற்காக அவதாரம் எடுத்தார்.
Sunday 28 February 2016
சப்த கன்னியர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment