Saturday 6 February 2016

சகல நன்மைகளும் பெற இதை செய்யுங்க

1.மேஷ ராசி: மேஷ ராசியில் பிறந்தவர்கள்
கீழ்க்கண்ட சுலோகத்தை 27 முறை கூறி முருகனுக்கு
சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால்
துன்பங்கள் நீங்கும் !
ஷண்முகம் பார்வதீ புத்ரம்க்ரௌஞ்ச ஸைவ
விமர்த்தனம்தேவஸேனாபதிம் தேவம்
ஸ்கந்தம்வந்தே ஸிவாத் மஜம்
2.ரிஷப ராசி: ரிஷப ராசியில்
பிறந்தவர்கள் மகாலட்சுமி பூஜை
செய்தும், வெள்ளிக்கிழமை விரதம்
இருந்து கீழ்க் கண்ட சுலோகத்தைத் தினசரி 11முறை
கூறி வந்தால் சகல செல்வங்களும்
கிடைக்கும்.
ஸ்ரீ லக்ஷிமீம் கமல தாரிண்யை ஸிம்ஹ
வாஹின்யை ஸ்வாஹ
3.மிதுன ராசி: மிதுன ராசியில்
பிறந்தவர்கள் விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம
அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை
54முறை தினசரி கூறி வந்தால் நல்ல பலன்
கிடைக்கும்.
ஓம் க்லீம் ஸ்ரீ கிருஷ்ணாய நம:
4.கடக ராசி: கடக ராசியில் பிறந்தவர்கள்
பவுர்ணமி தோறும் அம்பாளுக்கு சகஸ்ரநாம
அர்ச்சனை செய்து விரதம் இருந்து,
கீழ்க்கண்ட மந்திரத்தை 21முறை
பாராயணம் செய்து வந்தால்
நல்ல பலன் ஏற்படும்.
ஓம் ஐம் க்லீம் ஸோமாய நம:
5.சிம்ம ராசி: சிம்ம ராசியில் பிறந்தவர்கள்
மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு
சகஸ்ரநாம அர்ச்சனை செய்து,
கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம்
செய்து வந்தால் நல்ல பலன்
ஏற்படும்.
ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சூர்யாய நம:
6.கன்னி ராசி: கன்னி ராசியில்
பிறந்தவர்கள் மாதம் ஒரு புதன்கிழமை
விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை
செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை
பாராயணம் செய்தால் நல்ல
பலன் ஏற்படும்.
ஓம்-ஐம்-ஸ்ரீம்-ஸ்ரீம்-புதாய நம:
7.துலா ராசி: துலா ராசியில்
பிறந்தவர்கள் மாதம் ஒரு முறை பவுர்ணமி
நாள் அன்று விரதம் இருந்து
சத்யநாராயண பூஜை செய்து,
கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம்
செய்து வந்தால் நல்ல பலன்
ஏற்படும்
ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சுக்ராய நம:
8.விருச்சிக ராசி: விருச்சிக ராசியில்
பிறந்தவர்கள் செவ்வாய்க்கிழமை
விரதம் இருந்து துர்க்கையை பூஜித்து வணங்கி
கீழ்க்கண்ட சுலோகத்தை பாராயணம்
செய்து வந்தால் நல்ல பலன்
ஏற்படும்.
தரணி கர்ப்ப ஸம்பூதம்வித்யுத் காந்தி
ஸமப்ரதம்குமாரம் சக்தி
ஹஸ்தம்சமங்களம் ப்ரணமாம்யஹம்.
9.தனுசு ராசி: தனுசு ராசியில்
பிறந்தவர்கள் வியாழக்கிழமை
தட்சிணாமூர்த்தி கடவுளுக்கு அர்ச்சனை
செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை
பாராயணம் செய்து வந்தால்
சகல நன்மைகள் உண்டாகும்.
ஓம் ஐம் க்லீம் பிரஹஸ்பதயே நம:
10மகர ராசி: மகர ராசியில் பிறந்தவர்கள்
சனிக்கிழமை விரதம் இருந்து சனீஸ்வர
பகவானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை
செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை
பாராயணம் செய்து வந்தால்
சகல காரியங்களும் சித்தி அடையும்.
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் சனீஸ்வராய நம:
11.கும்ப ராசி: கும்ப ராசியில்
பிறந்தவர்கள் ஒவ்வொரு வாரமும்
சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை
செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை
பாராயணம் செய்து வந்தால்
நல்ல பலன்கள் உண்டாகும்.
ஓம் ஸ்ரீம் ஸ்ரீ உபேந்திராய அச்சுதாய
நமோநம:
12.மீன ராசி: மீன ராசியில் பிறந்தவர்கள்
ஒவ்வொரு வியாழக்கிழமை
சிவபெருமானுக்கு சகஸ்ரநாம
அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை
பாராயணம் செய்து வந்தால்
துன்பங்கள் நீங்கும்.
ஓம் க்லீம் ஸ்ரீ உத்ராய உத்தாரணே நம:

No comments:

Post a Comment