Saturday 6 February 2016

புத்ர தோசம் சந்தான தோசம்

ஒரு பெண்ணிற்குத்
திருமணமானவுடன் குழந்தை பிறக்க
வேண்டும். அதுதான் அவளுக்குத்
தனிப்பட்ட மகிழ்ச்சியையும்,
இருவீட்டாரிடமும் பரஸ்பரம் ஒரு
நெருக்கத்தையும் உண்டு பண்ணும்.
திருமணமான அடுத்த ஆண்டே அது நிகழ
வேண்டும். அல்லது குறைந்த பட்சம் மூன்று
ஆண்டுகளுக்குள்ளாவது அந்நிகழ்வு
ஏற்பட வேண்டும்.
அம்மணிக்குக் குழந்தைகள் உண்டா
அல்லது இல்லையா? குழந்தை உண்டு
என்றால் உடனே பிறந்ததா? அல்லது
தாமதமாகப் பிறந்ததா? குழந்தை இல்லை
என்றால், ஏன் இல்லை? குழந்தை பிறக்க
வேண்டுமானால். அந்த குழந்தை
உருவாகி வளரத் தேவையான தோல் மற்றும்
நரம்பு சத்துக்கள், எலும்புச்
சத்துக்கள்,இதயம் உருவாக மற்றும்
இயங்கத் தேவையான சத்துக்கள்,மூளை
உருவாகத் தேவையான சத்துக்கள்,
இரத்தமும் இரத்தநாளங்களும்
உருவாகத்தேவையான சத்துக்கள் என பல
சத்துக்களும் தாய்மார்களுக்கு
தேவையான அளவில் உடம்பில் இருக்க
வேண்டும். அவர்கள் உண்ணும்
உணவிலிருந்து இந்த சத்துக்களை
உருவாக்கும் வல்லமை அவர்களது
உடம்பிற்கு இருக்க வேண்டும். இந்த
உருவாக்கத்திறனில் ஏதேனும் ஒன்றில்
குறையிருந்தாலும் தேவையான சத்துக்களில்
ஏதேனும் ஒன்றில் பற்றாக்குறையாக
இருந்தாலும் குழந்தை உருவாகுவதில்
சிக்கல் ஏற்படத்தானே செய்யும்.
1. சுக்ரன் பலம்: - சூரியனுடன் சேர்ந்து
அஸ்தங்கம் ஆகியிருக்கும் பெண்கள்
மூளைக்கு அதிக வேலை தருபவர்கள். இத்தகைய
பெண்களுக்கு இவர்கள் சாப்பிடும்
உணவுச் சத்துக்கள் பெரும்பாலனவை
மூளைக்கே சென்றுவிடுகின்றன.
இதனால் சுக்கிரபலம் குறைந்த பலமற்ற
கருவகங்கள் உருவாகின்றன. இதன்
காரணமாக குழந்தையின்மை ஏற்படுவதும்
உண்டு.
2. சனி பலம் :- சிலருக்கு சனியினால்
உடல் வலு முழுவதும் கடின வேலைக்கு
சென்றுவிடலாம்.
அப்படிப்பட்டவர்களுக்கு உண்ணும்
உணவுச் சத்துக்களில் பெருமளவு
இந்த சனி ஆற்றலை நிறைவு செய்ய
செல்லும். இதனாலும் பலமற்ற
கருவகங்கள் உருவாகும்
3. செவ்வாய் பலம் :-
குறைந்திருந்தால் இத்தகைய
தாய்மார்களுக்கு போதிய இரத்த
அணுக்கள் இருப்பதில்லை. இரத்த சோகையால்
பீடிக்கப்பட்டிருப்பார்கள். இவர்களுக்கே
இரத்தம் போதாத நிலையில் கருவகங்களுக்கு
சரியான அளவில் இரத்தம் கிடைக்குமா?
4. குரு பலம்:- நாள்தோறும் இயங்கிவரும்
இதயத்திற்கும் அது
செயல்படும்திறனுக்கும் நிறைய
அதுசார்ந்த சத்துக்கள் தேவைப்படும்.
இத்தகைய சத்துக்ளை உடம்பில் குறைவாக
பெற்றுள்ளவர்களுக்கு குருபலம் குறைந்த
கருவகங்களே உருவாகும். இப்படியாக
உற்பத்தியாகும் கருக்கள் சத்துக்கள்
குறைவுகளால்
பாதிக்கப்ட்டிருக்குமானால் எப்படி
குழந்தை உருவாகும்?
மேலே சொல்லப்பட்டவைகள் சில
உதாரணங்களே.
ஒருவரின் ஜாதக அமைப்பில் பூர்வ
புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் ,
எதிரி ஸ்தானம் எனும் ஆறாம்
பாவகத்துடன் சம்பந்தம் பெற்று,
ஆறாம் பாவகம் சர ராசியாக
இருந்தால் , ஜாதகனுக்கு பிறக்கும்
குழந்தையால் ஜாதகன் அதிக
இன்னல்களை அனுபவிக்க வேண்டி வரும் .
ஒருவரின் ஜாதக அமைப்பில் பூர்வ
புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் ,
ஆயுள் ஸ்தானம் மற்றும் திடீர் இழப்பு
எனும் எட்டாம் பாவகத்துடன்  சம்பந்தம்
பெற்று எட்டாம் பாவகம் சர
ராசியாக இருந்தால் , ஜாதகன்
தனது குழந்தையை இழக்கும் தன்மையையோ
அல்லது நிரந்தரமாக பிரியும் தன்மையையோ
பெற கூடும் .
ஒருவரின் ஜாதக அமைப்பில் பூர்வ
புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம்
,விரைய ஸ்தானம் எனும் 12 ம்
பாவகத்துடன் சம்பந்தம் பெற்று
எட்டாம் பாவகம் சர ராசியாக
இருந்தால் , ஜாதகன் தனது குழந்தையின்
அமைப்பில் இருந்து அதிக வீண்
விரயங்களையும் , மன நிம்மதி இழப்பினையும்
சந்திக்க வேண்டி வரும் .
சுக்கிரனும் செவ்வாயும் பலமாக
இருந்தால் நிச்சயம் சந்ததி உண்டு.
சுமாரான பலத்துடன் இருந்தாலும்
குழந்தை பாக்கியம் தாமதமாகவாது
கிடைத்துவிடும். இரண்டு கிரகங்களும் 6, 8, 12
ஆக அமைந்து அல்லது நீசம் பெற்று பகை
பெற்று இருந்தாலும் குரு,
இலக்கிணம், 5ம் பாவாதிபதி
இவர்களில் யாராவது ஒருவர்
பலமாகிஇருந்தால் கூட மருத்துவத்திற்கு
பிறகு பாக்கியம் உண்டு. இதையும்
தாண்டி, 99.9999 சதவீதம்
வாய்ப்பில்லாத நிலையில் சூரியன்,
ஒன்பதாம் பாவம் 5ம் பாவம், 3ம்
பாவம் சரியாக அமைந்த குழந்தையை தத்து
எடுத்து உடன் வளர்த்து வர வாய்ப்புகள்
பிரகாசமாகும். சூரியன் சுக்கிரன்
தாக்கத்திற்கு உடலிற்கும், சந்திரன்
சுக்கிரன் தாக்கத்திற்கு மனதிற்கும்
இயற்கை வைத்தியமளித்தால் மிக விரைவில்
தகுதியுள்ள அனைவரும்
பெற்றோராகிவிடலாம்.
5-ஆம் இடத்தில் பாவ கிரகங்கள் ( ராகு,
செவ்வாய், சனி) அல்லது சூரியன்
அமர்ந்தால், ஒரு சிலருக்கு குழந்தை
பாக்கியம் கிடைக்காது.
5-ஆம் இடத்தில் உள்ள
பாவக்கிரகங்களை,சுபகிரகங்கள்
பார்த்தால் (ஒவ்வொரு
லக்னத்திற்கும் சுபக் கிரகங்கள் வேறுபடும்)
குழந்தை பாக்கியம் கிடைக்கும். 5-ஆம்
இடத்திற்கு உரிய கிரகம், பாவக் கிரகங்
களுடன் சேர்ந்தாலும் புத்திர தோஷம்
ஏற்படும்.5-க்கு உரியகிரகம், 8-இல்
மறைந்திருந்தாலும் தோஷம் ஏற்படும்.
லக்கினத்திற்கு 5-க்கு உரிய கிரகம்,
லக்னத்திற்கு 3-இல் இருந்தால் சந்தான
தோ`ம் உண்டாகும். 5-க்கு உரிய கிரகம்
6,7,8-இல் 4 இருந்தாலும் புத்திர தோஷம்
உண்டு.12-இல் இருந்தால் மனைவிக்கு
கருச்சிதைவு ஏற்படும். சுருக்கமாகச்
சொன்னால், 5-க்கு உரியவன்
3,6,7,8,12- இல் இருந்தால், புத்திரதோஷம்
ஏற்படும்.
லக்கினத்திற்கு 10-க்கு உடையவன். 8-இல்
இருந்தாலும் சந்தான தோஷம்
உருவாகும். லக்னாதிபதி புதனாக
இருந்து சந்திரன் 10-இல் இருந்து, சுக்கிரன்
7-லிலும், 4-ஆம் இடத்தில் ஏதாவது ஒரு
பாவக்கிரகம் இருந்தால்,வம்சம்
விருத்தியாகாது.
குழந்தை பாக்கியம் உண்டா
இல்லையா?
புத்திர தோஷம் அறிவது எப்படி?
தம்பதியரின் சுய ஜாதக அமைப்பில்
ஒருவருக்கு புத்திர ஸ்தானம் கடுமையாக
பாதிக்க பட்டு இருந்தாலும் , ஒருவருக்கு
வலிமையுடன் இருந்தால் நிச்சயம்
பெண் குழந்தைக்கு கிடைப்பதற்கு
உண்டான வாய்ப்பு நிச்சயம் உண்டு .
இதிலிருந்து ஒருவருக்காவது புத்திர
ஸ்தானம் நல்ல நிலையில் இருப்பது
அவசியம் . இருவருக்கும் புத்திர
ஸ்தானம் நல்ல நிலையில் இருந்து ஆண்
குழந்தை இல்லத்திற்கு காரணம் தம்பதியர்
தங்களுக்கு உகந்த திசை வாயிற்படி
கொண்ட வீடுகளில்
குடியிருக்காமல் , பாதகத்தை தரும்
வாயிர்ப்படி கொண்ட வீடுகளில்
குடியிருப்பது மட்டுமே காரணமாக
இருக்கும்
சில தம்பதிகளுக்கு ஆண்குழந்தைகளே
பிறக்கின்றன ஏன்?
தம்பதியரின் ஜாதக அமைப்பில் புத்திர
ஸ்தானம் 100 சதவிகிதம் நல்ல நிலையில்
இருக்கும் , அதாவது புத்திர ஸ்தானம் சர
ராசியுடன் சம்பந்தம் பெற்று 100
சதவிகிதம் நல்ல நிலையில் இருக்கும் அல்லது
, புத்திர ஸ்தானம் சர ராசியாக இருந்து
புத்திர ஷ்தானதுடன் சம்பந்தம்
பெற்று 100 சதவிகிதம் நல்ல நிலையில்
இருந்து , ஜாதகர் தனது பூர்வீகத்திலேயே
குடியிருந்தால் , நிச்சயம் ஆண்
குழந்தைகளாக பிறக்கும் . மேற்கண்ட
அமைப்பில் இருந்து அதாவது ஜாதகர்
பூர்வ புண்ணியம் வலிமை பெற்று
இருந்து, தனது பூர்விகத்தை விட்டு வெளியே
சென்று குடியிருந்தால் , ஜாதகருக்கு
பெண் குழந்தைகளாகவே பிறக்க கூடும் ,
தனது பூர்வீகத்திற்கு திரும்ப வந்தவுடன்
ஆண் வாரிசு நிச்சயம் அமையும் ,
இதையெல்லாம்  சுய ஜாதகம்
கொண்டே பலன் நிர்ணயம்
செய்ய முடியும் .
சில தம்பதிகளுக்கு பெண்
குழந்தைகளே பிறக்கின்றன.ஏன்?
தம்பதியரின் ஜாதக அமைப்பில் புத்திர
ஸ்தானம் 100 சதவிகிதம் நல்ல நிலையில்
இருக்கும் , அதாவது புத்திர ஸ்தானம்
உபய ராசியுடன் சம்பந்தம் பெற்று
100 சதவிகிதம் நல்ல நிலையில் இருக்கும்
அல்லது , புத்திர ஸ்தானம் உபய
ராசியாக இருந்து புத்திர ஷ்தானதுடன்
சம்பந்தம் பெற்று 100 சதவிகிதம்
நல்ல நிலையில் இருந்து , ஜாதகர் தனது
பூர்வீகத்திலேயே குடியிருந்தால் , நிச்சயம்
பெண்  குழந்தைகளாக பிறக்கும் .
சில தம்பதிகளுக்கு இரட்டை குழந்தைகள்
பிறக்கின்றன.ஏன்?
இது மேற்கண்ட அமைப்பில் புத்திர ஸ்தானம்
நல்ல நிலையில் இருந்து , கருத்தரித்த நேரமும் ,
இடமும் இரட்டை குழந்தைகளுக்கு உண்டான
அமைப்பை நிர்ணயம் செய்யும் .
சிலபேருக்கு குழந்தைகளே இல்லை.ஏன்?
இதற்க்கு ஒரே காரணம்தான் இருக்க
முடியும் ,  தம்பதியரின் ஜாதக அமைப்பில்
இவருடைய பூர்வ புண்ணியம் எனும் புத்திர
ஸ்தானம் பாதக ஸ்தானதுடன்
சம்பந்தம் பெற்று இருக்கும் , பூர்வ
புண்ணியம் எனும் பாவகம் பாதக
ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்றால்
ஜாதகனுக்கு இப்பிறவியில் தத்து புத்திர
யோகம் மட்டுமே உண்டு அதுவும் ஜாதகர்
செய்யும் குல தேவதை வழிபாட்டை
பொறுத்து அமையும்
புத்திர தோஷங்கள் எத்தனை வகை?
மொத்தம் எட்டுவிதமான புத்திர
தோஷங்கள் இருக்கின்றன.
1.சர்ப்பசாபத்தால் ஏற்படும் புத்திர
தோஷம்
2.பித்ரு சாபத்தால் ஏற்படும் புத்திர
தோஷம்
3.மாத்ரு சாபத்தால் ஏற்படும் புத்திர
தோஷம்
4.சகோதர சாபத்தால் ஏற்படும் புத்திர
தோஷம்
5.மாதுல சாபத்தால் ஏற்படும் புத்திர
தோஷம்
6.பிராம்மண சாபத்தால் ஏற்படும்
புத்திர தோஷம்
7.பத்தினி சாபத்தால் ஏற்படும் புத்திர
தோஷம்
8.மந்திர சாபம்,பிரேத சாபத்தால்
ஏற்படும் புத்திர தோஷம்
பூர்வீக சொத்துப் பிரச்சனையில்,
அதற்கு உரிய உறவுகளுக்கு உரிய பங்கைத்
தராமல் போனாலும், உறவுப்பகை,
புத்திரர்களால் பகை, அவமரியாதை
உருவாகும். இதன் விளைவாக,
இப்பிறவியில் தான் பெற்ற
பெண், கண்முன்னே
வாழாவெட்டியாக வந்த
நிற்பதையும், விவாகரத்து பெற்று
வாழ்க்கையில் இருந்து விலகி நிற்பதையும்
வேதனையுடன் பார்க்க வேண்டிவரும்.
புத்திர தோஷம் நீங்க - கோயில்கள்
அமரபணீஸ்வரர் திருக்கோயில், பாரியூர்,
ஈரோடு
பாடகப்பிள்ளையார் திருக்கோயில்,
மலையான்குளம், திருநெல்வேலி
பேராத்துச்செல்வி திருக்கோயில்,
வண்ணார்பேட்டை, திருநெல்வேலி
பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில்,
சிவகிரி, திருநெல்வேலி
தொண்டர்கள் நயினார்
திருக்கோயில், திருநெல்வேலி,
திருநெல்வேலி
தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில்,
இலுப்பைக்குடி, சிவகங்கை
வீரசேகரர் திருக்கோயில், சாக்கோட்டை,
சிவகங்கை
கைலாசநாதர் திருக்கோயில், ராசிபுரம்,
நாமக்கல்
ஆழிகண்டீஸ்வரர் திருக்கோயில்,
இடைக்காட்டூர், சிவகங்கை
கல்யாண வீரபத்திரர் திருக்கோயில்,
சென்னிவாக்கம், திருவள்ளூர்
பிரளயகால வீரபத்திரர் திருக்கோயில்,
குட்டஹள்ளி, பெங்களூர்
கல்யாணசுந்தர வீரபத்திரர்
திருக்கோயில், மாநெல்லூர்,
திருவள்ளூர்
வெக்காளி அம்மன் திருக்கோயில்,
உறையூர், திருச்சி
ஆஞ்சநேயர் திருக்கோயில், பாலாற்றின்
கரை, கோயம்புத்தூர்
கைலாசநாதர் திருக்கோயில், வேம்பத்தூர்,
சிவகங்கை
மாசாணியம்மன் திருக்கோயில்,
பொள்ளாச்சி, ஆனைமலை,
கோயம்புத்தூர்
சோமநாதர் திருக்கோயில், நீடூர்,
நாகப்பட்டினம்
யாழ்மூரிநாதர் திருக்கோயில், தருமபுரம்,
புதுச்சேரி
திருநேத்திரநாதர் திருக்கோயில், திருப்பள்ளி
முக்கூடல், திருவாரூர்
கோணேஸ்வரர் திருக்கோயில், குடவாசல்,
திருவாரூர்
சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில்,
திருப்பரங்குன்றம், மதுரை
கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில்,
வெஞ்சமாங்கூடலூர், கரூர்
மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில்,
வடதிருமுல்லைவாயில், சென்னை
ஞானபுரீஸ்வரர் திருக்கோயில்,
திருவடிசூலம், காஞ்சிபுரம்
செல்லாண்டியம்மன் திருக்கோயில்,
உறையூர், திருச்சி
சிவந்தியப்பர் திருக்கோயில்,
விக்கிரமசிங்கபுரம், திருநெல்வேலி
பரிகாரம்
உங்கள் நட்சத்திரமும் அமா வாசையும்
கூடும் ஒருநாளில் கணவர்- மனைவி இருவரும்
இராமேஸ்வரம் கடலில் 21 தடவை மூழ்க
வேண்டும். ஒவ்வொரு தடவையும்
ஒம்பவசிவ என்று 10 தடவை செபித்து
மூழ்க வேண்டும். பின்பு கோவில் பிரகாரத்தில்
உள்ள 21 தீர்த்தத்திலும் மூழ்கி சுவாமி
தரிசனம் செய்ய வேண்டும். பின்பு
புத்திர பாக்கியம் வேண்டி சுவாமியை
மனதில் நிறுத்தி ஒரு மணி நேரம் தியானம்
செய்ய வேண்டும். பின்பு அடுத்து வரும்
அமாவாசை அன்று தனது சாதகம்
சம்பந்தப்பட்ட கோவில் களுக்கு சென்று
தரிசனம் செய்ய வேண்டும்.
எந்தக்கிரகம் புத்திர தோஷத்தை
உருவாக்கியதோ அந்த கிரகத்தின் திசை
அல்லது புக்திகாலத்தில் அந்தக்
கிரகத்தின் அதிதேவதைக்கு அர்ச்சனை
செய்யலாம்.குலதெய்வம்
கோவிலில் அவரவர் ஜன்ம நட்சத்திரம்
அல்லது பவுர்ணமி அல்லது தமிழ்
மாதப்பிறப்பு அல்லது தமிழ் வருடப்பிறப்பு
அன்று அன்னதானம் ஒரு வருடம் வரை
அல்லது ஆயுள் முழுவதும்
செய்துவரலாம்.
ஐந்தாம் இடத்தில் ராகு இருந் தால்
அல்லது கேது இருந்தால் திருநாகேஸ் வரம்
சென்று அங்குள்ள தீர்த்தத்தில் நீராடி
இராகுவை தரி சனம் செய்து அங்கு
இராகுவை ஒரு மணி நேரம் தியானம்
செய்ய வேண்டும். இப்படி
செய்தால் உடனே குழந்தை பிறக்கும்.
ராகு, கேதுவால் புத்திரதோஷம்
ஏற்பட்டிருந்தால், வெள்ளியில் சிறிய
நாகம் செய்து, மாரியம்மன் மற்றும்
அம்மன், கோவில்களில் உள்ள
உண்டியல்களில் போட்டால், தோஷம் நீங்கும்
சனி ஈஸ்வரன் 5-ம் இடத்தில் இருந்தால்
திருநள்ளாறு சென்று அங்கு
தீர்த்தமாடி சனி பகவானை தியானித்து
ஒரு மணி நேரம் கோவிலில் தியானம்
செய்ய வேண்டும். செவ்வாய்
பகவான் 5-ம் இடத்தில் இருந்தால்
வைத்தீஸ்வரன் கோவில் சென்று
தீர்த்தமாடி அங்கு கோவிலில் ஒருமணி நேரம்
தியானம் செய்ய வேண்டும்.
புத்திர தோஷம் – 51 தீபங்கள் தீபங்களை
உங்கள் வீட்டில் நாக படம் உள்ள எந்த
தெய்வத்தின் முன்பும் ஏற்றி
வாருங்கள்.நவதானிய சுண்டல்
செய்து சிறுவர்களுக்கு
அளியுங்கள்.நல்லது நடக்கும்.
குருபகவானுக்கு வியாழக்கிழமையன்று
அர்ச்சனை செய்யலாம். குருவாலும்,
சந்திரனாலும் புத்திரதோஷம்
உண்டானால், குருவிற்கு உரிய
தலத்திற்குச் சென்று வழிபாடு
செய்ய வேண்டும். இங்கு ஒரு
விஷயத்தைச் சொல்ல வேண்டும். குரு
வேறு தட்சிணாமூர்த்தி வேறு,
தட்சிணாமூர்த்தியை வழிபட்டால், அது
குருவிற்குச் செய்ததாகக் கருத
முடியாது
வியாழக்கிழமை திருச்செந்தூரில்
அன்னதானம் செய்யலாம்.
திருவெண்காடு, திருக்கருகாவூர்
தலங்களுக்குச் சென்று, உரிய
வழிபாடு, பூஜைகள் செய்தால்
சந்தான பாக்கியம் கிட்டும்.
சந்தானகோபாலரும் சந்தான
பாக்கியம் தரவல்லவர். , புதன்,
சுக்கிரனால் புத்திர தோஷம்
ஏற்பட்டிருந்தால் சிவனை வழிபடலாம்.
செவ்வாய், சனியால் ஏற்படும்
புத்திரதோஷத்திற்கு முருகனுக்கும், சிவனுக்கும்
அபிஷேகங்கள் செய்யலாம். குரு
பகவானுக்கு வியாழன்று அர்ச்சனை
செய்வது சிறப்பு, வியாழக்கிழமை,
திருச்செந்தூரில் அன்னதானம்
செய்தால் புத்திர தோஷத்திற்கு மிகவும்
நல்லது.
முக்கியமான சிறப்பு நாட்களில்,
பௌர்ணமி, தமிழ்மாதம் பிறப்பு,
தமிழ்வருடப் பிறப்பு அன்று
அன்னதானம் செய்வதின்
மூலமாகவும் வம்சவிருத்தி கிடைக்கும்.
பரிகாரம் செய்யவேண்டுமெனப்
பணம் செலவு
செய்யாதீர்கள்.அன்னதானம்
செய்யுங்கள். உடை தானம்
செய்யுங்கள்.
பொதுவாக ஜாதகத்தில் எந்த
தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் எல்லா
தோஷமும் நீங்கிவிடும். காக்கைக்கு தினமும்
உணவு தந்துகொண்டு இருந்தால்
எந்த தோஷமும் நீங்கிவிடும்.

No comments:

Post a Comment