Sunday 20 March 2016

பொருத்தம் marriage matching

பத்து பொருத்தங்கள்
இல்லாவிட்டால் பதறுவது ஏன்?
தினபொருத்தம் இல்லாவிட்டால்
ஆரோக்கிய குறைவு ஏற்படும்.
கணபொருத்தம் இல்லாவிட்டால்
மங்களம் குறைந்து வருத்தம் ஏற்பட்டுவிடும்.
மகேந்திரபொருத்தம்
குறைந்துவிட்டால் புத்திர உற்பத்தியை
பாதித்து விடும்.
ஸ்திரிதீர்க்கம் பொருத்தம்
இல்லாவிட்டால் தீர்கசுமங்கலி
யோகத்துடன் சகலசம்பத்துக்கள் வராமல்
போய்விடும்.
யோனிப்பொருத்தம்
இல்லாவிட்டால் தம்பதிகளின்
அன்யோன்ய உறவில் விரிசல் ஏற்பட்டு விடும்.
ராசிபொருத்தம் வம்ச விருத்தியை
தருகின்றது.
ராசி அதிபதி பொருத்தம் ஒருவரை
ஒருவர் முழுவதுமாக
புரிந்துகொள்ள வழிவகுக்கின்றது.
வசியம்பொருத்தம்
இல்லாவிட்டால் ஒருவர் பேச்சை ஒருவர்
கேட்கமாட்டார்கள்.
ரஜ்ஜு பொருத்தம்
இல்லாவிட்டால் திருமணமே செய்ய
கூடாது, மீறி செய்ய நேர்ந்தால்
பிரிவுகளை சந்திக்க வாய்ப்பு உள்ளது.
வேதைபொருத்தம் இல்லாவிட்டால்
எட்டிக்கி போட்டி யாக தம்பதிகள்
இருப்பார்கள்.

No comments:

Post a Comment