குலதெய்வம் பற்றி கீதையில் விளக்கம்
குலதெய்வம் வழிபாட்டின் மூலம்
மணமாகாதவர்களுக்கு திருமணம்
அமைவது, குழந்தை வரம் பெறுவது, தீராத
நோய்களுக்கு பரிகாரம் பெறுவது, கல்வி,
தொழில் விருத்தி கிடைப்பது,
வழக்குகளில் நீதி கிடைப்பது முதலிய பயன்கள்
பெறப்படுகிறது.
அடிப்படையில் இந்துமதம் பற்றற்ற தன்மையை
போதிக்கிறது. அதாவது அனைத்தையும் துறந்து
தியானம், தவம் மூலம் இறை நிலையை அடைவது.
ஆனால் இந்த குலதெய்வம் மனிதன்
லௌகீக வாழ்க்கைக்கு தேவையான பலன்களையே
அளிக்கிறது. அப்படியானால்
குலதெய்வமும் இறை நிலையும் வேறு
வேறா? இல்லை. இதற்கு அருமையான
விளக்கத்தை பகவான் பகவத்கீதையில்
சொல்லி இருக்கிறார்.
யார் என்னை எப்படி வழிபடுகிறார்களோ
அவர்களை அப்படியே நான் வழிநடத்துகிறேன்.
செயல்களின் பயனை விரும்புபவர்கள்
இங்கே தேவதைகளை வழிபடுகிறார்கள்.
அதாவது இறைவனை லட்சியமாகக்
கொள்வதும் உலக இன்பங்களை
ஒதுக்கிவிட்டு இறை நெறியில்
செல்வதும் எல்லோராலும் முடியாது.
உலகம் மற்றும் அதன் இன்பங்கள் வேண்டும்
என்று நினைப்பவர்களுக்காக இறைவன்
தேவதைகளைப் படைத்துள்ளார் அல்லது அவரே
அப்படி அவதரிக்கிறார். வேத காலத்தில்
இந்திரன், வருணன் முதலிய தேவர்கள்
வழிபட்டனர். இக்காலத்தில் உள்ள
தேவதைகள் தான் குலதெய்வங்கள்.
எனவே குலதேவதை ஒருவர் முறையாக
வழிபட்டாலே உலக இன்பங்களைப்
பெற்றுக்கொண்டே இறைநிலை
அடையும் வாய்ப்பு உள்ளது.
Monday 28 March 2016
கீதையில் குலதெய்வ வழிபாடு பற்றி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment