Tuesday 15 March 2016

மாந்தி சேர்க்கை பலன்கள்

ஸ்ரீசனீஸ்வரரைப்போல் வல்லமை
பெற்றவர்தான் மாந்தி. சனிக்கு
நிகரானவர் எனலாம். அதனால்
ஜாதகத்தில் மாந்தியின் பலன்களையும்
நிர்ணயித்து அறிய வேண்டும். மாந்தி
கடிகாரச் சுற்று முறையில் வலம் வரும்
கிரகமாகும்.
மகரம், கும்பம் ஆகிய ராசிகளை ஆட்சி
வீடாகப் பெற்ற ஸ்ரீசனீஸ்வரரிடம
ிருந்து கும்ப ராசியை ஆட்சி வீடாகப்
பெற்றவர்தான் மாந்தி. இவருக்கு
உச்ச வீடு, நீச வீடு இல்லை. மாந்தி தான்
அமர்ந்திருக்கும் இடத்தி-ருந்து 2, 7, 12 ஆகிய
இல்லங்களைப் பார்ப்பார் என நூல்கüல்
கூறப்பட்டுள்ளது.
லக்னத்திற்கு 6, 8, 12-ல் சந்திரன் அமர்ந்து
ஆவியுலகத் தலைவன் மாந்தி சேர்க்கை
பெற்றால், ஜாதகர்
துர்ஆவிகüனால் பீடிக்கப்பட்டு மரண
வேதனை அடைவார். ஸ்ரீஆஞ்சனேயரை
வழிபட்டால் துர்ஆவிகள் விலகும்.
மாந்தியினால் ஏற்பட்ட தோஷம் விலகும்.
மாந்திக்கு 7-ல் புதன் அமர்ந்து
சுபர்களால் பார்க்கப்பட்டால்,
ஜாதகர் தந்தை செய்த
தொழில் மூலம் நிரம்ப வருமானம்
பெற்று எல்லா ஐஸ்வர்யங்களுட னும்
வாழ்வார்.
ஆண் ஜாதகருக்கு, மாந்திக்கு 3-ல் சனி
அமர்ந்தால், ஜாதகரின் சகோதரர் தீய
பழக்கங்கள் மிகுந்தவராவார்.
குலப்பெருமை கெடும். அரச
தண்டனைக்கு உள்ளாவார்.
பெண் ஜாதகத்தில், மாந்திக்கு 3-ல்
சனி அமர்ந்து ஜென்ம நட்சத்திரம்
ரோகிணி என்றால், ஜாதகிக்கு இல்லற
வாழ்க்கையில் சிறிதும் நிம்மதியிராது.
வாழ்க்கையில் பெரும் பகுதி
போராட்டமாக இருக்கும். பிறந்த வீட்டிற்கும்
புகுந்த வீட்டிற்கும் துரதிர்ஷ்டமா கும். தோஷம்
மிகுதி.
மாந்திக்கு 5-ல் ராகு அல்லது சனி
இருந்தால், ஜாதகர்
ஆண்மையில்லாதவரா வார். பெண்
ஜாதகம் என்றால் பிரசவத்தில் துன்பம்
ஏற்படும். பெண் ஜாதகத்தில்
செவ்வாய், சூரியனோடு மாந்தி சேர்க்கை
பெற்றால் நெறியற்ற வாழ்க்கை
வாழ்வாள்.
லக்னத்திற்கு 5, 9-ஆம் இடங்கள் கன்னி,
மிதுனம், மகரம், கும்பம் போன்ற ராசிகüல்
ஒன்றாக அமைந்து, சனி- மாந்தி சேர்க்கையோ,
பார்வையோ 5, 9-ஆம் இடங்களுக்கு
ஏற்பட்டால் ஜாதகி மலடியாவாள்.
லக்னத்திற்கு 3-ல் சனி உச்சம் பெற்று
மாந்தியின் சேர்க்கை பெற்று சுக்கிரன்
பார்த்தால், ஜாதகர் பெண்
பித்தனாவான். பெண் நோயால்
அவதியுறுவான்.
லக்னத்திற்கு 4-ல் கேதுவும் மாந்தியும் சேர்க்கை
பெற்றால் மிகுந்த துரதிர்ஷ்ட மாகும்.
வாழ்க்கையில் எல்லா விஷயங்கü லும்
அதிருப்தி காணப்படும். ஒரு இடத்திலும்
நிலையாக வாழ முடியாது. நாடோடி போல்
வாழ்க்கை அமையும். தாய்க்கும்
தோஷமாகும்.
பெண்ணின் ஜாதகத்தில் சுக்கிரனுக்கு
4-ல் மாந்தி நின்றால் புத்திரதோஷம் மிகுதி.
கணவன் நோயாü ஆவான். 4-ல் உள்ள
மாந்தியுடன் சனி சேர்க்கை பெற்றாலோ
பார்த்தாலோ ஜாதகி மிகுந்த
துரதிர்ஷ்டசா-. லக்னத்திற்கு 2, 8-ல் சர்ப்ப
கிரகங்கள் அமையப் பெற்று மாந்தி
சேர்க்கை பெற்றால், நாக தோஷத்தால்
மாங்கல்ய தோஷமாகும்.

2 comments:

  1. மாந்திக்குரிய பரிகாரங்களை கூறுங்கள்

    ReplyDelete
  2. 12ஆம் இடத்தில் கேதுவும் சாந்தியும் இருந்தால்?

    ReplyDelete