காலபைரவர் வழிபாடு
சனி பகவானுக்கு குரு பைரவர். ஆகவே
சனிக்கிழமை அன்று இவரை பிரத்யேகமாக
வழிபடுவதால் அஷ்டமச்சனி, ஏழரைச்சனி,
அர்த்தாஷ்டமச் சனி விலகி நல்லவை
நடக்கும்.
கால பைரவர் உடலில் பூமியை தாங்கும் எட்டு
நாகங்களும் மாலையாக இருந்து
அலங்கரிப்பதால் இவரை வழிபட்டால்
சர்ப்ப தோஷங்களும் நீங்கும்.
சனி பிரதோஷத்தன்று பைரவருக்கு சகஸ்ரநாம
அர்ச்சனை செய்து அவரவர் வசதிக்கேற்ப
தேங்காய், தேன், தயிர் அன்னம் படைத்து
வழிபட்டு பிரசாதமாக பக்தர்களுக்கு
விநியோகிக்க வழக்குகளில் வெற்றி,
வியாபாரத்தில் லாபம் கிட்டும்.
எதிரிகளால் ஏற்படும் தொல்லை
மற்றும் பில்லி, சூனியம் போன்ற மந்திர
தொல்லைகளும் அடியோடு அகலும்.
அஷ்டமி திதியில் மற்றும் பிரதி தமிழ் மாதம்
எல்லா தேதியிலும் ஆயில்யம், சுவாதி,
மிருகசீரிஷம் நட்சத்திர தினங்களிலும் பைரவரை
வழிபட்டால் உத்தியோகத்தில் மதிப்பும், பதவி
உயர்வும் தேடி வரும்.
தொழிலில் லாபம் கிடைக்கும்.
தை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை
தொடங்கி ஒவ்வொரு
செவ்வாய் தோறும் பைரவரை வணங்கி
கால பைரவ அஷ்டகம் படித்து வந்தால்
எதிரிகளை அழித்து, கடன்கள் தீர்ந்து, எம பயம்
மட்டுமில்லாது எவர் பயமுமின்றி நீண்ட
நாள் வாழலாம்.
தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி
வழிபட்டால் காலத்தினால் தீர்க்க
முடியாத தொல்லைகள் நீங்கும்.
நல்லருள் உண்டாகும். பஞ்ச தீபம் என்பது
இலுப்பை எண்ணெய்,
விளக்கெண்ணெய், தேங்காய்
எண்ணெய்,
நல்லெண்ணெய், பசு நெய்
ஆகும்.
இவற்றை தனித்தனி தீபமாக ஏற்ற வேண்டும்.
அகல் விளக்கில் ஏற்றலாம். பைரவருக்கு
இந்த பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால்
எண்ணிய செயல்கள் நிறைவேறும் என்பது
ஐதீகம்.
Tuesday 19 January 2016
கால பைரவர் வழிபாடு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment