பாற்கடலை கடைந்தபோது அமிர்தம்
வெளிப்பட்டது என்ற நிகழ்ச்சிகள்
உங்களுக்கு தெரியும். அமிர்தம்
கிடைத்தவுடன் அதனை தேவர்களும் அசுரர்களும்
சரிபாதியாக பங்கிட்டுக்
கொள்ளுவது என்பதே ஒப்பந்தம்.
இந்த நேரத்தில் விஷ்ணு மோகினி வடிவம்
எடுத்தார். அசுரர்களை மயக்கினார்.
அமிர்தகலசம் தன்வந்திரியின் கையில்
இருந்தது. அதனை மோகினி வாங்கிக்
கொண்டாள். அவளது அழகில்
மயங்கிய அசுரர்கள் மோகினியே அனைவருக்கும்
பரிமாரட்டும் என கூறிவிட்டனர். தேவர்களும்
ஒப்புக் கொண்டனர். யாருக்கு
முதலில் அமிர்தத்தை தருவது என்ற பிரச்சனை
எழுந்தது. மேலே தெளிவாக உள்ள நீரை
தேவர்களுக்கும் அடியில் கலங்கி இருக்கும்
திரவத்தை அசுரர்களுக்கும்
கொடுப்பது என்று முடிவாயிற்று.
முதலில் தேவர்களுக்கு அமிர்தம்
வழங்கப்பட்டது. இதில் ஏதோ குளறுபடி
உள்ளது என புரிந்துக் கொண்ட
கஸ்யப மஹரிஷியின் மகனான
ஸ்வர்பானு எங்கே தனக்கு அமிர்தம்
கிடைக்காமல் போய் விடுமோ என அஞ்சி
அசுரவடிவம் மாற்றி தேவர் வடிவம் பூண்டு
தேவர்கள் வரிசையில் அமர்ந்தான். இதனை
சூரியனும் சந்திரனும் பார்த்து விட்டனர்.
இதற்குள் மோகினி தேவன் என்று நினைத்து
ஸ்வர்பானுவுக்கு அமிர்தம் அளித்து
விட்டார். அவனும் அவசர அவசரமாக
பருகி விட்டான். சுந்திர சூரியர்கள்
மோகினியிடம் சென்று நடந்தவற்றை
கூறினர். மோகினி வடிவம் தாங்கிய
விஷ்ணுவுக்கு கடுங்கோபம் உண்டாயிற்று.
அவள் தன் கையில் இருந்த அகப்பையில்
ஸ்வர்பானுவின் தலையில் ஓங்கி
தட்டினார். தலை வேறு முண்டம் வேறு என
இருகூறுகளாயிற்று அமிர்தம் உண்ட
காரணத்தால் உயிர் நீங்கவில்லை
ஒப்பந்தத்தை மீறியதால் அசுரர்களுக்கு
அமிர்தம் வழங்க முடியாது என மோகினி
கூறிவிட்டாள். அமிர்த கலசத்தை பிடுங்க
அசுரர்கள் முயல மோகினி வேகவேகமாக
அனைத்தையும் தேவர்களுக்கு அளித்துவிட்டார்.
ஏமாற்ற மடைந்த அசுரர்கள்
சுவர்பானுவால்தான் தங்களுக்கு
அமிர்தம் கிடைக்கவில்லை என வருந்தி
சுவர்பானுவை தங்கள் குலத்திலிருந்து
விலக்கி வைத்துவிட்டனர். இரு உடலாக
கிடந்தாலும் உடல் இருந்தும் தலை
இல்லாமலும் தலை இருந்தும் உடல்
இல்லாமலும் இருந்த ஸ்வர்பானு
பிரமனிடம் முறையிட்டான். பிரம்மனோ
‘விஷ்ணுவால்தான் ஸ்வர்பானு
வணங்கி பிராயச்சித்தம் செய்யும்படி
கேட்டான். விஷ்ணு பகவான் அருள்
சுரந்து பாம்பு உடலை கொடுத்து
தலையுடன் பொருத்தினார். அதேபோல்
பாம்புத்தலையை மனித உடலுடன்
பொருத்தினார். இப்போது மனித
தலையும் பாம்பு உடலும் கூடியவன் ராகு
எனவும் பாம்பு தலையும் மனித உடலும்
கூடியவன் கேது எனவும் அழைக்கப்பட்டனர்.
ஆனால் இருவருக்கும் உயிர் ஒன்றுதான்.
இருவரும் நேர் எதிர்திசையில் நட்சத்திர
மண்டலத்தில் சஞ்சரிக்கும் படி கூறி அருள்
பாலித்தார்.
Tuesday 1 December 2015
ராகு கேது உருவான வரலாறு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment