Friday 11 December 2015

செல்வம் பெறலாம்

*உங்கள் வீட்டுக்குள் வடகிழக்குப் பகுதி எது
என்பதைக் கண்டுபிடித்து,அந்தப் பகுதியில்
ஒன்பது மீன்கள் கொண்ட மீன்
தொட்டி ஒன்றை வையுங்கள்.
* இதிலும் முக்கியமான ஒரு விஷயத்தில்
கவனம் செலுத்த வேண்டும். அதாவது
தொட்டியில் இருக்கும் மீன்களின்
எண்ணிக்கை {ஒன்பதாகத்தான்} இருக்க
வேண்டும்.
* அதில் எட்டு மீன்கள் கோல்பிஷ் என்று
சொல்லப்படும் மீன்களும் (சிவப்பு
அல்லது பொன்நிறம்) ஒரு மீன்
கருப்பு நிறத்திலும் இருக்க வேண்டும்.
* இப்படிச் செய்வதன் மூலம் பணமும்
அதிர்ஸ்டமும் உங்களை நோக்கி பாசக்கரம்
நீட்டும்
* வீட்டில் உள்ள கிழக்குப் பகுதியில் எந்த
இடத்திலாவது சில்லறை காசுகள் போட்ட
பானை ஒன்றை வையுங்கள்.
* இதற்காக சிறுவர்கள் கூட்டாஞ்சோறு
ஆக்கும் பானை ஒன்றை நீங்கள்
பயன்படுத்துவதுதான் சிறப்பு.
* இந்த பானை நிறைய மாற்றப்பட்ட
சில்லறைக் காசுகளைப் போட்டு அதன் வாயை
மூடாமல் கிழக்கு பக்கத்தின் ஒரு பகுதியில்
வையுங்கள்.
* முக்கியமான ஒரு விஷயம்
என்னவென்றால், இப்படி ஒரு பானை
அந்தப் பகுதியில் இருப்பது எவருக்கும்
தெரியக்கூடாது.
*, அதாவது, யாருடைய பார்வையிலும்
படாத ஓர் இடத்தில் தான் இந்தப்
பானையை வைக்க வேண்டும்.
* சாதாரண அறைகளில் குடியிருப்பவர்கள்
கிழக்கு பக்கத்தில் உள்ள ஓர் இடத்தில்
இந்தப் பானையை வைக்கலாம்.
* இப்படி செய்வதன் மூலம் உங்களுக்கு
மேலதிகமாக பணம் வந்து சேருவதை நீங்கள்
அனுபவ ரீதியாக பார்த்துக்
கொள்ளலாம்.*#*
* திருவோணம் அன்று விஷ்ணுவை துளசி மாலை
போட்டு துவரம் பருப்பு பாயசத்தினால்
நிவேதனம் செய்து அதை தானம்
செய்து வர நிலம் வாங்கும் யோகம்
உண்டாகும்--
* சாப்பாட்டு அறையில் பிரேம் போட்ட வட்ட
வடிவமான கண்ணாடி ஒன்றை மாட்டி
வையுங்கள். இதிலும் முக்கியமான ஒரு
விஷயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும்.
அதாவது, சாப்பாட்டு அறை சுவற்றில்
மாட்டப்படும் அந்தக் கண்ணாடியில்
மேசைமீதுள்ள உணவுவகைகள் தெரிய
வேண்டும். இப்படி செய்வதன் மூலம்,
உங்களுக்குக் கிடைக்கும் பணம் இரண்டு
மடங்காக அதிகரிக்கும் வாய்ப்பு
ஏற்படும்.பணம் அதிகமாக கைமாறும்
காரியம் ஒன்றில் நீங்கள்
கலந்துகொள்ளச் செல்லும்
போது,,காணி விற்றல், வீடு கட்டல்,
,
* சிகப்பு அல்லது இளம் சாம்பல் நிற
உடைகளை அணிந்து செல்லுங்கள்.
* உடைகள் இல்லையென்றால் இந்த
நிறத்தில் கைக்குட்டை ஒன்றையாவது எடுத்துச்
செல்லுங்கள். இதனால் சில
அதிசயங்களும் நடப்பதற்கு வாய்ப்பு
இருக்கிறது
* நீங்காத உடல் பிரச்னை இருந்து வந்தால்,
காரணம் தெரியாமல் இருந்தால்
பப்பாளி பழம் ஒன்று எடுத்து தலையை வலது
புறமாக { 27 } முறை சுற்றி பின்பு அதை
பசுவிற்க்கு கொடுக்க, உடலில் நல்ல
முன்னேற்றம் தெரியும்.
* குழந்தைகள் திருஷ்டியால் அழுது
கொண்டே இருந்தால் பப்பாளி
மரத்தின் இலையை சிறிது நேரம் குழந்தையின்
நெற்றியிலோ அல்லது வயிற்றிலோ
வைத்திருக்க, திருஷ்டி நீங்கி அழுகை நிற்கும்.
* மன நிம்மதி இல்லாமல் அவதிப்படுவோர்
வெள்ளை அரளியை தன்னோடு வைத்திருக்க
மனம் அமைதி பெரும்.
* முடிவுகள் எடுக்க முடியாமல் தடுமாறும்
சமயங்கள் மற்றும் தன்னம்பிக்கை குறைவான
சமயங்களில் ¤ சிவப்பு அரளியை தம்மோடு
வைத்திருக்க மேற்கண்டவை நீங்கும்...
* அரசு வேலை மற்றும் வேலை கிடைக்க சனிக்கிழமை
அன்று ஊர வைத்த எள்ளை மதியம் 1-2 க்குள்
எருமைக்கு வழங்கி வரவும்...
* வாகன விபத்து அடிக்கடி நடக்கும் தன்மை
உடையோர், நில மற்றும் மனை கட்டி தருதல் போன்ற
வியாபாரம் செய்வோர் கடுகு
எண்ணையில் மாதம் ஒரு முறை உடல் முழுதும்
தடவி குளிக்க நன்மை பெருகும்.
* மேலும் செவ்வாய் தோஷம்
உள்ளோர்களும்,கணவன்-மனைவி சண்டை
அடிக்கடி நடக்கும் குடும்பங்களும் இதை
செய்யலாம். திருமணம் தாமதம்
ஆகும் இளைஞ்ச இளைஞ்சிகளும் இப்படி
செய்யலாம்.
* வேலை தேடி இன்டர்வ்யூ செல்லுமுன்
,ஏதேனும் சிறிதளவு இனிப்புடன் பச்சை
ஏலக்காய் சேர்த்து உண்டுவிட்டு ஒரு டம்ப்ளர்
மிதமான சூட்டில் நீரை அருந்தி விட்டு
செல்ல, காரியம் நிறைவேறும்.
* வியாபாரம் தொழில்
செல்வ நிலை மேலோங்க வியாழக்கிழமைகளி
ல் ஊர வைத்த கருப்பு உளுந்தை
தொடர்ந்து 11 வாரங்கள்
குரங்குகளுக்கு இட்டு வர, செல்வ நிலை
உயரும். தொடர்ந்து செய்ய
முடியாதவர்கள் முடிந்த வியாழக்கிழமைகளி
ல் எல்லாம் செய்து வந்தாலும்
பலன் உண்டு
* கடன் கொடுத்தோ, பெற்றோ
அவதிப்படுவோர் கட்டாயம் கடுகு எண்ணையில்
உணவு சமைத்து சாப்பிட நன்மை
உண்டாகும்.
* புதிய வீடு அல்லது கடைகளுக்கு : முழு மஞ்சள்
7, கொட்டை பாக்குகள் 7, சிறிய
வெள்ளி தகடு,உலோகத்தால்ஆன
நாகர்-2, இவற்றை எல்லாம் மூடியுடன்
கூடிய வெண்கல கலசத்தில் இட்டு மேற்கு
புறமாக வைத்திருக்க சகல நன்மைகளும்
உண்டாகும்.
*வீட்டில் உள்ளவர்க்கு ஏதேனும்
தொற்று நோய் வந்து
அவதிப்பட்டால்-சிறிய மண் சட்டியில்
மஞ்சள் லட்டு,ஒரு முட்டை, 2 நாணயங்கள்
மற்றும் சிறிது குங்குமம் வைத்து
நோய்வாய்பட்டவரின் தலையை 3 முறை வலமாக
மட்டும் சுற்றி 4 ரோடுகள் சேரும் இடத்தில் மதியம்
12 மணிக்கு எறிந்து விட, நோய் விலகும்..
*கடன்களால் வெகு காலம்
துன்பப்படும் நபர்களுக்கு : ஒன்னேகால் அடி
வெள்ளை துணியை எடுத்து அதில் நான்கு
பக்கங்களிலும் சிகப்பு ரோஜாவை வைத்து கட்டி,
பின்பு நடுவிலும் ஒரு ரோஜாவை வைத்து அதை 3
நதிகள் சங்கமிக்கும் இடத்தில் விட, கடன்கள்
அடியோடு அழியும்..,
* தொடர்ந்து வரும் பண
பிரச்சனைகளுக்கு
சிறிய மூடியுடன் கூடிய செம்பு கிண்ணம்
அல்லது பாத்திரத்தில் பச்சை பாசிப்பருப்பை
நிரப்பி ஓடும் நீரோடையில் விடவும். சுத்தமான
நீரோடையாக இருக்க வேண்டும்...!!!

No comments:

Post a Comment