Friday 11 December 2015

அமாவாசை மகிமைகள்

அமாவாசையும் நமது முன்னோர்களும்...
பைபிள் (பழைய ஏற்பாடு) காலத்திலிருந்தே
அமாவாசையை மாதாமாதம் சிறந்த
முறையில் கொண்டாடியதாகச்
சரித்திரம் கூறுகிறது. குறிப்பாக அரசர்கள்
அமாவாசையன்று விருந்து
கொடுத்து ஆட்டம், பாட்டம்,
கொண்டாட்டம்
நடத்தியுள்ளனா்.
இந்த அமாவாசை தினம் அனேக
மதங்களிலும் முக்கியத்துவத்தைப்
பெற்றது.
இந்துக்களில் தை அமாவாசை, ஆடி
அமாவாசை மற்றும் புரட்டாசி
அமாவாசை மிகவும் சிறப்புடையது.
அமாவாசையன்று உலகை இயக்கும்
சூரியனும் சந்திரனும் ஒன்று சோ்வதால் ஒரு
காந்த சக்தி ஏற்படுகிறது.
அமாவாசையன்று பிறக்கும் குழந்தைகளின்
மூளை பிற்காலத்தில் அதீதமாக வேலை
செய்யும். இது விஞ்ஞான ரீதியாக
நிரூபிக்கப்பட்டுள்ளது.
அமாவாசையன்று விபத்துகள் கூடுதலாக
ஏற்படுவதாக ரஷ்ய விஞ்ஞானிகள்
கூறுகின்றனா்.
அமாவாசைப் பிறவிகளில் அனேகருக்கு
தலையில் இரண்டு சுழி இருப்பதை நானே
கண்டிருக்கிறேன்.
சோதிட ரீதியாக அமாவாசை நிறைந்த நாள்
எனக் கூறுகின்றனா். அனேகா்
அமாவாசையில் மோதிரம் செய்து
போடுகின்றனா்.
சூரிய கலையும், சந்திர கலையும் சேருவதால்
சுழுமுனை என்னும் நெற்றிக்கண்
பலப்படுகிறது. அதனால் அமாவாசையில்
சாஸ்திரிகள் மந்திர ஜெபம்
ஆரம்பிக்கின்றனா். கடலில் நீராடி
தங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தைப்
போக்குகின்றனா்.
அமாவாசையன்று ஜீவ சமாதிகள் புதிய
உத்வேகத்தைப் பெறுகின்றன. அனேக குரு
பூஜைகள் அதிஷ்டான பூஜைகள்
அமாவாசையன்று நடத்துகின்றனா்.
முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த
நாள் அமாவாசை! இது அனைத்து
மதத்திற்கும் பொருந்தும்.
சாதாரணமாக
இறந்த ஆவிகள் சந்திரனின் ஒளிக்கற்றையில்
உள்ள அமிர்தத்தைப் புசிக்கும். அதுதான்
அதற்கு உணவு. அமாவாசையன்று
சந்திரனின் ஒளிக்கற்றை ஆவிகளுக்குக்
கிடைக்காது. அதனால் ஆவிகள்
உணவுக்குத் திண்டாடும். பசி தாங்க
முடியாமல் இரத்த சம்பந்தமுடைய வீடுகளுக்கு
வரும்.
நம்மை யாராவது எண்ணுகிறார்களா?
நமக்குத் தா்ப்பணம், படையல்
செய்கிறார்களா என்று பார்க்கும்.
நாமெல்லாம் இறந்த முன்னோர்களின்
இரத்த சம்பந்தமான கொடி
வழியைச் சோ்ந்தவா்கள். மேலும் அவா்கள்
பாடுபட்டுத் தேடிய சொத்தை நாம்
பாடுபடாமல் அனுபவிக்கிறோம்.
அமாவாசையன்று முன்னோர்களை நினைக்க
நேரமில்லை. ஆனால் டி.வியில் கிரிக்கெட்
பார்க்க நேரம் இருக்கிறது. பசியால்
அமாவாசையன்று வந்த பிதுா்கள்
என்னும் நம் முன்னோர் ஆவிகள் நமக்குச்
சாபம் இட்டுச் செல்லும். இப்படிப்
பிதிர்கள் என்னும் ஆவிகள் இட்ட சாபம்
நாளாவட்டத்தில் கூடும். பின்னா் நம்
குடும்பத்தை நிச்சயம் பாதிக்கும்.
இதனால் குடும்பத்தில் அகால
மரணங்கள், மனக்கோளாறுகள், கணவன்
மனைவி பிரிவு, குழந்தை இல்லாமை ஆகியவை
உண்டாகும். இதனை மந்திர யந்திர தந்திர
சாதனங்களால் தீா்க்க முடியாது.
அன்னதானம் செய்வதால் மட்டுமே
தீா்க்கக் கூடியது.
வீடு வாசல் இல்லாத ஏழைகளுக்கு
அமாவாசையன்று அன்னதானம்
செய்ய வேண்டும். ஒவ்வொரு
அமாவாசையன்றும் தங்களால் இயன்ற
அளவு உணவை அன்னதானம்
செய்யலாம். பசு, காகம், நாய்,
பூனை மற்றும் இதர ஜீவராசிகளுக்கும் அன்று
அன்னம் அளிக்கலாம். வள்ளலார்
வலியுறுத்தும் ஜீவகாருண்யம் இதுதான்!
அமாவாசை பிதுா் தா்ப்பணம் மற்றும்
அன்னதானம் ஆகியவற்றைக் குல
தெய்வம் இருக்கும் இடத்தில்
செய்வது நல்லது. முடியாதவா்கள்
தங்கள் இஷ்ட தெய்வம் இருக்கும்
இடத்தில் செய்யலாம்.
வீட்டிலும் செய்யலாம்.
அமாவாசையன்று தலையில்
எண்ணெய் தடவக் கூடாது.
புண்ணியத் தலங்களில் கடலில்
நீராடலாம். அல்லது நதியில்
நீராடலாம். அமாவாசையன்று காலை
சூரிய உதயத்தின் போது கடலில் எடுக்கப்பட்ட
நீரை வீட்டுக்குக் கொண்டுவந்து
தீா்த்மாகத் தெளிக்கலாம்.
அதனால் வீட்டிலுள்ள தோஷங்கள் நீங்கும்.
நமக்கு அன்னம் இடுபவள் அன்னபூரணி!
ஆவிகளுக்கு அன்னம் இடுபவள் ஸ்வதா
தேவி! நாம் ஆவிகளை நினைத்துக்
கொடுக்கும் அன்னத்தை மற்றும்
யாகத்தில் போடும் ஆவுதிகளை ஸ்வதா
தேவிதான் சம்பந்தப்பட்ட ஆவிகளிடம்
சோ்ப்பிக்கிறாள்.
உற்றார், உறவினா் தொடா்பு
இல்லாத ஆவிகள் மரம், செடி
கொடிகளில் அமாவாசையன்று
மட்டும் தங்கி, அவற்றின் சாரத்தைச்
சாப்பிடும். அதனால் அமாவாசையன்று
மட்டும் மரம், செடி, கொடிகளையோ
காய்கறிகளையோ புல் பூண்டுகளையோ
தொடக்கூடாது. பறிக்கக் கூடாது.
ஒவ்வொரு மாதம் அமாவாசை
அன்னதானம் செய்ய
முடியாதவா்கள் தை, ஆடி, புரட்டாசி
அமாவாசையில் அன்னதானம்
செய்ய வேண்டும். புரட்டாசி
அமாவாசையில் செய்தால் 12
ஆண்டுகளாக அன்னதானம்
தா்ப்பணம் செய்யாத தோஷம்
நீங்கும்.
நகரங்களில் வசிப்பவா்கள்
அமாவாசையன்று ஏழைக் குழந்தைகளுக்கு
அல்லது ஆதரவற்றவா்களுக்கு முன்னோர்களை
நினைத்து அன்னதானம் செய்ய
வேண்டும். இதர தானங்கள் தருவது
அவரவா் வசதியைப் பொறுத்தது.
அன்னதானம் கஞ்சியாகவோ,
சாதமாகவோ, இட்லியாகவோ
இருக்கலாம். ஆனால் எள்ளு சட்னி
அல்லது எள் உருண்டை கண்டிப்பாக இருக்க
வேண்டும்.
எதுவும் செய்ய முடியாமல்
இருப்பவா்கள் ஒரு பசு மாட்டிற்கு ஒன்பது
வாழைப்பழங்கள் அமாவாசை அன்று
கொடுக்க வேண்டும்.இதற்குச் சாதி,
மதம், இனம் என்ற வேறுபாடு இல்லை.
முன்னோர்கள் ஆத்மா
சாந்தியடைய ஒவ்வொரு மனிதப்
பிறவியும் இதைச் செய்ய வேண்டும்.
மாமிச ஆகாரம் தவிர்ப்பது பெரும்
ஜீவகாருண்யமாகும்.

No comments:

Post a Comment