Tuesday 1 December 2015

சதுரகிரி மலை

நோய் தீர்க்கும் மலை: சதுரகிரி மலையில் ஓடுகின்ற
தீர்த்தங்களும்,
மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது.
இந்த மலை ஏறி
இறங்கினால் உடலில் உள்ள வியர்வை
வெளியேறி, மூலிகை
கலந்த காற்றுபட்டு பல நோய்கள்
குணமாவதாகச்
சொல்கிறார்கள். சித்த
மருத்துவர்கள் பலர் மூலிகைகளை
இங்கிருந்து சேகரித்து செல்கின்றனர்.
திசைக்கு நான்கு கிரிகள் (மலை)வீதம்
பதினாறு கிரிகள் சமமாக
சதுரமாக அமைந்த காரணத்தால்
சதுரகிரி என்ற பெயர்
ஏற்பட்டது. மலையின் பரப்பளவு 64 ஆயிரம்
ஏக்கர்.
தாணிப்பாறை அடிவாரம் - கருப்பர்
சந்நிதி அருகே உள்ள தீர்த்தம்
* மகாலிங்கம் கோயிலுக்கு வடக்கில் உள்ள
மூலிகைகள் நிறைந்த குன்றை
"சஞ்சீவி மலை' என்கின்றனர்.
*சந்தன மகாலிங்கம் கோயில் அருகே 18
சித்தர்கள் சன்னதி உள்ளது.
*ஆடி அமாவாசை முக்கிய விழா. தை
அமாவாசை, மகாளய
அமாவாசை, மகா சிவராத்திரி, சித்ரா
பவுர்ணமி, மார்கழி
முதல் நாள் ஆகிய நாட்களிலும் அதிக
கூட்டம் இருக்கும்.
* பழநியிலுள்ள நவபாஷாண முருகன்
சிலையை போகர் சதுரகிரி
மலையில் தங்கியிருந்தபோதே செய்ததாக
கூறப்படுகிறது.
*இங்குள்ள ஜோதிப்புல்லை பகலில் நீரில் நனைத்து
விட்டு, இரவில்
பார்த்தால் தீபம் ஏற்றியது போல் இருக்கும்.
பழங்காலத்தில்
சித்தர்கள் வெளிச்சத்திற்காக இந்த
புல்லை
உபயோகித்துள்ளார்கள்.
*மகாலிங்கம் கோயிலின் வடக்கே "ஊஞ்சல்
கருப்பண சாமி' கோயில்
உள்ளது.
* சுந்தர மகாலிங்கத்திற்கு அமாவாசை
நாட்களில் மதியம் 1
மணிக்கு அபிஷேகம் துவங்கும்.
* ஆடி அமாவாசை தவிர மற்ற
அமாவாசை நாட்களில் தேனும்,
தினைமாவும் பிரசாதமாக தரப்படுகிறது.
* சதுரகிரி மலைக்கு மின்சார வசதி கிடையாது.
ஜெனரேட்டர்
பயன்படுத்துகின்றனர்.
இருப்பிடம்:
மதுரை மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில்
இருந்து
வத்திராயிருப்பு செல்லும் பஸ்களில்
சென்றால்,
தாணிப்பாறை விலக்கில் இறங்கலாம்.
இங்கிருந்து 7 கி.மீ., தூரம்
சென்றால் சதுரகிரி மலை
அடிவாரமான தாணிப்பாறை
வரும். அங்கிருந்து மலை ஏறி, 10 கி.மீ.,
நடந்தால் மகாலிங்கத்தை
தரிசிக்கலாம்.
அல்லது , மதுரையிலிருந்து ஒவ்வொரு
அரை மணி நேரத்திற்கும் -
செங்கோட்டை செல்லும் பஸ் உள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ராஜபாளையம் , செங்கோட்டை
செல்லும் பஸ்ஸில் ஏறி -
கிருஷ்ணன் கோவில் நிறுத்தத்தில் இறங்கி -
அங்கிருந்து
வத்திராயிருப்பு செல்லுங்கள்.
ஒவ்வொரு ஐந்து
நிமிடத்திற்கும் பேருந்து வசதி உள்ளது.
அங்கிருந்து தாணிப் பாறைக்கு - மினிபஸ்
அல்லது ஆட்டோவில்
சென்று விடுங்கள்.
திறக்கும் நேரம்:
காலை 6- 12 மணி, மாலை 4- இரவு 9 மணி.
விசேஷ நாட்களில் நடை
திறக்கும் நேரம் மாறுபடும்.போன்: 98436
37301, 96268 32131
மலைக்கு மேலே - சாப்பாடு பற்றிய கவலை
வேண்டாம். எந்த நேரமும்,
உங்கள் வயிறை குளிரவைக்க " கஞ்சி மடம் '
உள்ளது. உங்களுக்கு
குறைந்த பட்சம், கஞ்சியோ , கூழோ , பழைய சோறோ -
நிச்சயம் கிடைக்கும். 24 மணி
நேரமும் என்பதுதான் விசேஷம். மிகப்
பெரிய குழுவாக
சென்றால், முன்கூட்டியே
சொல்லி விடுங்கள். சுடச்சுட
சாதம் கிடைக்கும்.
சதுரகிரி தல வரலாறு : சதுரகிரி மலை
அடிவாரத்திலுள்ள கோட்டையூரில்
பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை
மேய்த்து பிழைத்தான்.
இவனது பெற்றோர் தில்லைக்கோன்-
திலகமதி. மனைவி சடைமங்கை.
இவள் மாமனார் வீட்டில் பாலைக்
கொடுத்து விட்டு
வருவாள். ஒருமுறை, பால்
கொண்டு சென்ற போது
எதிரில் வந்த துறவி அவளிடம் குடிக்க பால்
கேட்டார். சடைமங்கையும்
கொடுக்கவே, தினமும் தனக்கு பால்
தரும்படி கேட்டார்.
சடைமங்கையும் ஒப்புக்கொண்டாள்.
வழக்கத்தை விட சற்று பால் குறைவதைக்
கவனித்த சடைமங்கையின்
மாமனார், இதுபற்றி மகன்
பச்சைமாலுக்கு தெரிவித்து
விட்டார். பச்சைமால் தனது மனைவியை பின்
தொடர்ந்து
சென்று, அவள் துறவிக்கு பால் தந்ததை
அறிந்து கோபம்
கொண்டு அடித்தான். தனக்கு
பால்
கொடுத்ததால் அடி வாங்கிய
சடைமங்கை மேல் இரக்கம்
கொண்ட அவர், அவளுக்கு
"சடதாரி' என்று
பெயரிட்டு காக்கும் தேவியாக
சிலையாக்கி விட்டு மறைந்தார்.
மனைவியை பிரிந்த பச்சைமால், மனம் திருந்தி,
சதுரகிரிக்கு வந்த
அடியவர்களுக்கு பால் கொடுத்து
உதவி செய்தான்.
சுந்தரானந்த சித்தர் என்பவர் செய்த
பூஜைக்கும் பால்
கொடுத்து உதவினான். சித்தர்கள்
செய்த பூஜையில்
மகிழ்ந்த சிவன் இத்தலத்தில் அவர்களுக்கு
காட்சி
கொடுத்தார். பச்சைமாலுக்கும்
சிவதரிசனம் கிடைத்தது.
ஒருநாள், சிவன் ஒரு துறவியின் வேடத்தில்,
சிவபூஜைக்கு பால்
கொடுக்கும் காராம்பசுவின்
மடுவில் வாய்வைத்து பால்
குடித்து கொண்டிருந்தார்.
இதைக்கண்ட பச்சைமாலுக்கு
கடும் கோபம் ஏற்பட்டு, துறவியின் தலையில்
கம்பால் அடித்தான்.
அப்போது, சிவன் புலித்தோல் அணிந்து காட்சி
கொடுத்தார்.
சிவனை அடித்துவிட்டதை அறிந்த பச்சைமால்
மிகவும் வருந்தி
அழுதான்.
சிவபெருமான் அவனை தேற்றி, "" நீ
தேவலோகத்தை சேர்ந்தவன். உன்
பெயர் யாழ்வல்லதேவன். நீ யாழ்
மீட்டி என்னை பாடி
மகிழ்விப்பாய். சிற்றின்ப ஆசை
காரணமாக என்னால்
சபிக்கப்பட்டு பூலோகத்தில் மனிதனாக
பிறந்தாய். உன்னை மீட்டு
செல்லவே வந்தேன்,'' என்று கூறி
அவனுக்கு முக்தி அளித்தார்.
அத்துடன் அங்கிருந்த சித்தர்களின்
வேண்டுகோளின்படி "மகாலிங்கம்'
என்ற திருநாமத்துடன் அங்கேயே
எழுந்தருளினார். இது
லிங்கங்களிலேயே பெருமை வாய்ந்தது
என சதுரகிரி புராணம்
கூறுகிறது. இன்றும் கூட மகாலிங்கம்
சாய்ந்த நிலையில்
இருப்பதையும், தலையில் அடிபட்ட தழும்பையும்
காணலாம்.
சதுரகிரி மலை ஏறுவது கடினமானது. மலையே
சிவமாக இருப்பதால்
பக்தர்கள் காலில் செருப்பு
இல்லாமல் ஏறுவதை
வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து மலையேற
வேண்டும்.
மலையடிவாரத்தில் ஆசீர்வாத விநாயகரை
வணங்கியபின்
சிவசிந்தனையுடன் மலை யாத்திரையைத்
தொடங்க வேண்டும்.
செல்லும் வழியில் ராஜயோக காளி,
பேச்சியம்மன்,
கருப்பணசாமி கோயில்கள் உள்ளன. இதனை
அடுத்து குதிரை ஊற்று,
வழுக்குப்பாறைகள் வருகின்றன.
இந்தப்பாறைகளில் மழைக்காலங்களில்
செல்வது கடினம்.
சிறிது தூரம் சென்றதும் அத்திரி மகரிஷி
பூஜித்த லிங்கத்தை
தரிசிக்கலாம். அடுத்து வருவது காராம்
பசுத்தடம். இந்த
இடத்தில் தான் சிவன் துறவி வேடம்
கொண்டு காராம்
பசுவின் மடுவில் பால் அருந்தியதாக
வரலாறு.
இதனையடுத்து கோரக்க சித்தர் தவம்
செய்த குகையும், பதஞ்சலி
முனிவரின் சீடர்கள் பூஜித்த லிங்கமும்
உள்ளது. இந்த லிங்கத்தை
தரிசிக்க வேண்டுமானால், ஆகாய கங்கை
தீர்த்தத்துக்கு மேல்
உள்ள விழுதுகளைப் பிடித்து தொங்கி
ஏறித்தான்
செல்ல வேண்டும். இது ஆபத்தான
இடம். இதன் பவித்திரம்
உணராமல் இங்கே குளிக்கவோ, தண்ணீர்
எடுக்கவோ பக்தர்கள்
முயற்சிக்கக் கூடாது. இதை ஒட்டிய குகையில்
உள்ளே ஒரு சிறிய லிங்கம்
உள்ளது. இதை நீங்கள் காணும்போது ,
மெய் சிலிர்க்கும்
அனுபவம் உங்களுக்கு ஏற்படுவது உறுதி.
கோரக்கர் மலைக்கு நேர் மேலே செங்குத்தான
மலையில் சற்று மேலே
ஏறினால் ஒரு லிங்கம் உள்ளது.
கொஞ்சம் இளவட்ட
ஆளுங்க போக முடியும். ரொம்பவே
செங்குத்தான
பாதை. அதனால் , அனைவரும் முயற்சிக்க
வேண்டாம்.
இதையடுத்து இரட்டை லிங்கத்தை தரிசிக்கலாம்.
சற்று தூரத்தில் சின்ன
பசுக்கடை என்ற பகுதியை கடந்தால் நாவல்
ஊற்று வருகிறது. இந்த
ஊற்று நீருக்கு சர்க்கரை நோயைக் குணமாக்கும்
மகிமை இருப்பதாக
கூறப்படுவதால், பக்தர்கள் இதைப்
பருகுகிறார்கள்.

No comments:

Post a Comment