Wednesday 2 December 2015

அரசு வேலை கிடைக்க

அரசு வேலை கிடைக்க பரிகாரம் !
ஒவ்வொரு ஞாயிற்று கிழமை காலை
6 மணியில் இருந்து 7 மணிக்குள் ( 6 am to 7
am ) வீட்டு மாடியில ( மாடி
இல்லாதவர்கள் வெட்ட
வெளியிலும் ) ஒரு விளக்கு போட்டு சூரியனை
நோக்கி சாஷ்டங்கமாக விழுந்து வணங்க
வேண்டும். விளக்கு போடும் பொது கூடவே
நைவேத்தியமாக கல்கண்டு, மற்றும் ஏதாவது
ஸ்வீட் நைவேத்தியமாக வைக்க வேண்டும்.
(கடவுளுக்கு நிவேதனமாக படைத்த எதையும்
வீணாக்க கூடாது. அதை நாமே சாப்பிட
வேண்டும் ) அப்போது சூரிய காயத்ரி அல்லது
சூரியனுக்குரிய ஸ்லோகம் அல்லது ஆதித்ய
ஹ்ருதயம் ஸ்தோத்திரம்
சொல்லலாம். இந்த வழிபாட்ட
செய்ய அதிக பட்சம் 20 நிமிடம் போதும்.
இந்த வழிபாட்ட செஞ்ச கண்டிப்பா
அரசு வேலை கிடைக்கும். யார்
வேண்டுமென்றாலும் இந்த
பரிகாரத்தை செய்யலாம். மேலும்..
1) ஜாதகத்துல சூரிய திசை நடப்பவர்கள்,
சூரியன் நீசமாக இருந்தால் , நீச
கிரகத்தோட சேர்ந்து இருந்தால், பகையாக
இருந்தால், மறைந்து இருந்தால்
2) அதிகாரமிக்க பதவியில இருப்பவர்க்கள்,
அதற்க்கு முயற்சி செய்பவர்கள்
3) ஆளுமை திறன் வேண்டுவோர் ( அடிமைபடுத்தல்
அல்ல )
4) தந்தை மகன் உறவு சரியில்லதவர்கள்
( யாரேனும் ஒருத்தர் இந்த வழிபாடு
செய்யலாம் )
5) அரசு வேலைக்கு முயற்சி செய்வோர் , அரசு
சம்பந்த பட்ட விசயங்களில் இறங்குவோர்
6 ) கண் பார்வை குறைபாடு உடையவர்கள்
அரசு வேலைக்கு கடுமையாக முயற்சி
செய்யும், வழிபாட்டில் நம்பிக்கை
உள்ளவர்கள் இந்த வழிபாட்டினை
செய்து பார்க்கலாம்.
(7) தினசரி சிவாலய வழிபாடும், சூரிய
நமஸ்காரமும் நல்ல பலன் தரும். தினசரி
ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம் படிக்கலாம்.
கோதுமையில் செய்த சப்பாத்தி, கோதுமை ரவை
போன்றவற்றை இல்லாதோர், நோயாளிகளுக்கு
தரலாம். கோதுமை பலகாரத்துடன் பழங்கள்,
கீரை சேர்த்து பசுவுக்கு
கொடுக்கலாம். தினசரி சூரிய
காயத்ரி மந்திரம் 108 முறை சொல்லி
வரலாம்.

No comments:

Post a Comment