Thursday 13 October 2016

வாழையும் பரிகாரமும்

வாழை மரத்தின் மூலம் செய்ய வேண்டிய
எளிமையான பரிகாரங்கள்:
நீங்களாக செய்துக் கொள்ளும்
சுய பரிகாரங்களின் விவரங்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ளன.
இவற்றை முறையாக செய்தால்
உங்களுக்கு சகல ஐஸ்வர்யமும்
உண்டாகும்.
1. தரித்திர பிணிகள் விலக
அமாவாசை திதி அல்லது தேய்பிறை அஷ்டமி
திதிகளில் மூன்று வாழை பூக்களை எடுத்து
சூரியன் மறையும் வேளையில் இரண்டு மணிக்கு
மேற்பட்டு கடலில் குளித்து விட்டு, தம் உடலில்
உள்ள அனைத்து பகுதிகளிலும் படும்படி
தடவிவிட்டு, தாம் அணிந்திருக்கும் சட்டை
அல்லது பனியன், பெண்ணாக
இருப்பின் ஜாக்கெட், புடவை போன்ற
துணியில் மூன்று பூக்களையும் கட்டி கடலில்
வீசிவட வேண்டும். இப்படி செய்தால்
நம்மை பிடித்த தரித்திர பிணிகள் விலகிவிடும்.
2. திருமணம் தடை விலக
திருமணம் தடைப்பட்ட பெண்கள்
வாழைப்பூ இதழில் மூன்று குண்டு மஞ்சளை
வைத்து முடித்து, வாழை நாரினால் கட்டி ,
வாழை மரத்தின் இலை, குலை தள்ளும் இடத்தில்
வைத்து கட்டிவிட வேண்டும்.
இது போன்று மூன்று சஷ்டி திதி அன்று
செய்துவர, விரைவில் திருமணம்
நடைபெறும், அதைப்போல் ஆண்கள்,
குண்டுமஞ்சளுக்கு பதில்
கொட்டைப்பாக்கு வைத்து கட்ட வேண்டும்.
3. சர்வ தரித்திரங்கள் விலக:
ஞாயிற்றுக்கிழமைகளில் பிரம்ம முகூர்த்த
வேளையில் வாழை மரத்தின் வேர் பகுதியில்
இருந்து (1/2 ) அரை அடிக்கு மேலே ஒரு மூங்கில்
குச்சியில் குத்தினால் வாழை நீர் ( கங்கை
நீர்) வழியும் .
அந்த நீரை மண் பாத்திரத்தில் பிடித்து கடல்
நீருடன் கலந்து வீடுகளில்,
தொழில்கூடங்களில், நம்மீதும்
தெளித்துக் கொண்டு வந்தால்
சர்வ தரித்திரங்களும் விலகும்.
( வாழை மரத்தை வெட்டினலோ அல்லது
குத்தினாலோ அதிலிருந்து வடியும் நீர் கங்கை
நதி நீருக்கு சமமானது)
4. குழந்தை பாக்கியம் பெற:
குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள்
கடவுளுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம்
செய்வித்து, வாழைமரக்கன்றை
தானமாகக் கொடுக்கவேண்டும்.
பின்பு கோயிலுக்கு வரும் பெண்களுக்கு
வாழைப்பழங்களை தானமாகக்
கொடுக்கவேண்டும்.
ஒன்பது செவ்வாய்க்கிழமைகளில்
இரட்டை வாழைப்பழத்தை கோவிலில் உள்ள
தெய்வத்திற்கு படைத்து, பின்பு வீட்டிற்கு
எடுத்து வந்து அந்த பழத்தின் தோலில்
உள்ள சதயை நகம் படாமல் சுரண்டி எடுத்து
காய்ச்சிய பாலில் போட்டு சுத்தமான
தேன் கலந்து கணவன், மனைவி இருவரும்
பருகிய பின் இல்லறத்தில் ஈடுபட்டால்
குழந்தை பாக்கியம் கிட்டும்.
5. பித்ரு தோஷம் விலக
100 கிராம் கருப்பு எள்ளை வாங்கி அதை
வெல்லத்துடன் கலந்து ஐந்து
பாகங்களாக பிரிந்து, ஐந்து வெள்ளை
துணியில் மூட்டை போல் கட்டிக் கொள்ள
வேண்டும்.
பின்பு ஐந்து வாழைக்காய் எடுத்து,
ஒவ்வொரு வாழைக்காயில் உள்ள
காம்பில் ஒவ்வொரு எள் மூட்டையை
மஞ்சள் நூலினால் கட்டி பித்ருக்களை வேண்டி
அமாவாசை திதியில் கடலில் விட்டால்
பித்ரு தோஷம் விலகும்.
6. செல்லவம் மேலும் பெருக
சம்பள பணத்தையோ அல்லது சுப
காரியய்த்திற்கு பயன்படுத்தப்பட இருக்கும்
பணத்தையோ, வாழைப்பூ இதழில் வைத்து,
வீட்டின் பூஜை அறையில் பூஜை செய்து பின்
பயன்படுத்தினால் வீண் விரையம் மற்றும்
செலவுகள் வராது.
அதேபோல் புதிய தங்க நகை அல்லது
வெள்ளி பொருட்களை வாங்கி
வந்து, அதையும் வாழைப்பூ இதழில் வைத்து
பூஜித்து எடுத்து கொண்டால்
செல்வம் மேலும் பெருகும்.
7. அன்ன தரித்திரம் விலக
அட்சய சக்தி மிகுந்த இந்த வாழை மரத்திற்கு
மற்றொரு மகத்தான பெருமையும்
உண்டு.
அட்சயதிதி அன்று புதிய ஆபரணதங்கம்
வாங்கி மஞ்சள் கலர் துணியில் முடிந்து,
கிழக்கு முகமாக நின்று, ஆபரண மூட்டையை
வாழை மரத்தில் கட்டி தீபம் காட்டி,
சாம்பிராணி புகையிட்டு, பூஜை முடிந்த பின்பு
எடுத்து அணிந்து கொண்டால்
ஆபரணங்கள் பெருகும்.
அதைப்போல் நெல்மணி்களை கட்டி பூஜித்து
அரிசி மூட்டையில் போட்டு வைத்தால் அன்ன
தரித்திரம் விலகும்.
8. வியாபார விருத்தி பெருக
பெளர்ணமி நிலவு ஒளியில், சுக்கிர ஓரை
வேளையில், வடக்கு பக்கமாக உள்ள வாழை
மரத்தின் வேரை நகமும். இரும்பு கத்தியும்
படாமல் எடுத்து கஸ்தூரி மஞ்சளில் சேர்த்து,
சிகப்பு நூல் கட்டி கருப்பு வெற்றிலையில்
மடித்து, தொழில் நடக்கும் இடத்தில்,
பணம் வைக்கும் பெட்டியில் வைத்து
சாம்பிராணி புகையிட்டுவந்தால்
வியாபார விருத்தி பெருகும்.
9. வேண்டிய காரியங்கள் விரைவில்
நடைபெற
வாழை பழத்தை குலையாக தள்ளும் வாழை
மரத்தை தேர்ந்தெடுத்து முகுர்த்த நாளில்
சுபவேலையில் அதன் வேர்ப் பகுதியில் சிறு குழி
எடுத்து வலம் புரி சங்கை கிழக்கு முகமாக
புதைத்துவிட வேண்டும்.
பின்பு வாழை மரத்தின் வேர்பகுதியில் சங்கு
இருக்கும் இடத்தில் தினம் சிறிது பாலை
ஊற்றி நாற்பத்தியைந்து (45) நாட்கள்
வாழைமரத்திற்கு இஷ்ட தெய்வத்தை
நினைத்து தூப தீபம் காட்டி பூஜித்து
வரவேண்டும்.
பின்பு ஒரு முகூர்த்த நாளில் சுப வேளையில்
சங்கை எடுத்து மூன்று வித அபிஷேகங்கள்
செய்து தூப தீபம் காட்டி பூஜை அறையில்
வைத்து வழிபட்டு வந்தோமானால். நாம்
வேண்டிய காரியங்கள் விரைவில்
நடைபெறும்.
குடும்பம் சுபிக்ஷ்ம் பெருகும், பணம்
வீண்விரையம் ஆகாது, தெய்வகுறைகள்
விலகும், குலவிருத்தி அடையும்.

No comments:

Post a Comment