"லிங்காஷ்டகம்!"
*நான்முகன் நாரணன் போற்றிடும் லிங்கம்*
*நிர்மலமாய் குறை ஏதிலா லிங்கம்*
*பிறவிப் பிணிதனைப் போக்கிடும் லிங்கம்*
*அனுதினம் பணியும் சதாசிவ லிங்கம்*
தேவரும் முனிவரும் வணங்கிடும் லிங்கம்
காமனை எரித்த கருணாகர லிங்கம்
ராவணன் உள்ளம் உறைந்திடும் லிங்கம்
அனுதினம் பணியும் சதாசிவ லிங்கம்
மணமிகு திரவியம் அணிந்திடும் லிங்கம்
மதிவளர் பிறையினைச் சூடிய லிங்கம்
சித்தரும் தேவரும் பூஜிக்கும் லிங்கம்
அனுதினம் பணியும் சதாசிவ லிங்கம்
பொன்னார் மேனியாய் ஒளிர்ந்திடும் லிங்கம்
தன்னுடல் நாகம் தழுவிய லிங்கம்
தட்சனின் யாகம் தடுத்திட்ட லிங்கம்
அனுதினம் பணியும் சதாசிவ லிங்கம்
குங்குமம் களபம் பூசிய லிங்கம்
பங்கஜ மாலையைச் சூடிய லிங்கம்
சிந்திப்பவர் வினை தீர்த்திடும் லிங்கம்
அனுதினம் பணியும் சதாசிவ லிங்கம்
விண்ணவர் யாவரும் வேண்டிடும் லிங்கம்
மண்ணவர் மனத்துறை மகேஸ்வர லிங்கம்
கோடி சூரியப் பிரகாச லிங்கம்
அனுதினம் பணியும் சதாசிவ லிங்கம்
அஷ்டதளங்களில் அருளிடும் லிங்கம்
அஷ்ட தரித்திரம் போக்கிடும் லிங்கம்
சகலமும் ஆகிய சங்கர லிங்கம்
அனுதினம் பணியும் சதாசிவ லிங்கம்
தேவர்கள் தொழுதிடும் தெய்வீக லிங்கம்
பூவலர் பொழுதென பொலிந்திடும் லிங்கம்
பாவலர் நாவலர் பரவிடும் லிங்கம்
அனுதினம் பணியும் சதாசிவ லிங்கம்
எட்டென ஆகிய இச்சிவன் துதியை
இட்டமுடன் சொல்வோர் கஷ்டங்கள் தீரும்
விருப்புடன் விடையவன் காட்சி கிட்டும்
அருள் பெற்று அவனுடன் அருகிலும் இருப்பர்.
திருச்சிற்றம்பலம்!
No comments:
Post a Comment