Monday 20 June 2016

ருத்ராட்சம் அணிவதால் ஏற்படும் நன்மைகள்

ஒருவகையான மரத்தின் விதைதான்
ருத்ராட்சம். இதற்கு தனித்துவமான
சிறப்புகள் பல உண்டு. தன்னைச் சுற்றிலும்
அபூர்வமான அதிர்வலைகளை இது
கொண்டிருக்கிறது. எனவே இதை
அணிவதால் பல நன்மைகள் ஏற்படுகிறது.
நீங்கள் புதுஇடங்களுக்கு செல்லும் போது
அங்கிருக்கும் அதிர்வுகள் உங்களுக்கு
ஏற்றதாக இல்லையென்றால்
உங்களால் அமைதியாக இருக்க முடியாது.
ஆனால்இ ருத்ராட்சம் அணிந்தால்
எவ்விதமான பாதிப்பும் நம்மை தீண்ட
முடியாது.மனநிலை சாந்தமாகவே
இருக்கும். சக்திவட்டம் நம்மைக் கவசம் போல்
பாதுகாக்கும்.
ஐந்துமுகம் கொண்ட ருத்ராட்சம்
உடல் ஆரோக்கியம் தரும். ஆண்பெண்
பேதமின்றி எல்லோரும் அணியலாம். இது ரத்த
அழுத்தத்தை சீராக்கிஇமன அமைதியையும்இ
சுறுசுறுப்பையும் தரும். ஆறுமுகம்
கொண்ட சண்முகி ருத்ராட்சத்தை 14
வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் அணிவதால்
தாயின் பூரண அன்பிற்கு
பாத்திரமாகலாம்
எப்படி ருத்திராட்சம் தோன்றியது ?
ருத்திரன் என்ற பெயரில் இருந்து வந்ததே
ருத்திராட்சம் ஆகும். சிவபெருமானின்
முக்கண்களிலிருந்தும் தெறித்த
ஆனந்தக் கண்ணீர் சொட்டுகளே
ருத்திராட்சங்களாகின. மொத்தம்
முப்பத்தெட்டு விதமான
ருத்திராட்சங்கள் தோன்றின.
வலது கண்ணிலிருந்து மஞ்சள் நிற
ருத்திராட்சங்கள் பன்னிரண்டும்இ இடது
கண்ணில் இருந்து பதினாறு
வெண்ணிற ருத்திராட்சங்களும்
தோன்றின. நெற்றிக் கண்ணிலிருந்து
கருப்பு வண்ணத்தில் பத்து ருத்திராட்சங்கள்
வெளிப்பட்டன.
தோற்றம்
ஒரு முகம் முதல் 16 முகம் வரை
கொண்ட பதினாறு வகை
ருத்திராட்சங்கள் உண்டு. ருத்திராட்சத்தின்
மேல் உள்ள கோட்டின் எண்ணிக்கையைக்
கொண்டு ருத்திராட்சம் எத்தனை
முகம் கொண்டது என்பதை
அறியலாம்.
சாணைக்கல்லில் உரைத்தால் மஞ்சளாக
தங்கம்போல் பிரகாசிப்பதும்இ நல்ல
வர்ணமுள்ளதுமான ருத்திராட்சம்இ த
ண்ணீரில் போட்டால் மூழ்குவதும்இ இரு
செப்புத் தகட்டுக்கு இடையில் வைத்து சோதனை
செய்தால் சுற்றக்கூடியது மான
ருத்திராட்சம் ஆகியவை மிகவும்
விசேஷமானவை.
கழுத்தில் மாலையாக 32 ருத்திராட்சங்கள
ும்இ கை மணிக்கட்டுகளில் 12
ருத்திராட்சங்களும்இ மேல் கையில்
பதினாறும்இ மார்பில் நூற்றியெட்டும்
தரிக்கலாம். ருத்திராட்ச மாலையின்
பெருமை என்று சொன்னால்
இ ஏக முக ருத்திராட்சத்தின் அதி
தேவதையாக தத் பரமசிவனைக் கூறுவார்கள்.
இந்த ஏக முக ருத்திராட்சத்தை அணிவதால்
சிவபெருமான் ப்ரீத்தி அடைந்து
பிரம்மஹத்தி தோஷம் விலகும்.
இரண்டு முக ருத்திராட்சத்தின் அதிதேவதை
ஸ்ரீகண்ட பரமசிவம். இந்த இரண்டு முக
ருத்திராட்சத்தை அணிவதால் சிவசக்தி ப்ரீதி
ஏற்பட்டு பசுவைக் கொன்ற தோஷம்
விலகும்.
மூன்று முக ருத்திராட்சத்தின் அதிதேவதை
அக்னி தேவனாகும். இதை அணிவதால்
மும்மூர்த்திகளும் சந்தோஷம் அடைகிறார்கள்.
ஸ்திரீகளுக்குச் செய்த தோஷம் விலகும்.
நான்கு முக ருத்திராட்சத்தின் அதிதேவதை
பிரம்மாவாகும். இதை அணிவதால்
பிரம்மா ப்ரீதி அடைவதுடன்இ மனிதர்களுக்கு
இழைத்த பாவம் விலகும்.
ஐந்து முக ருத்திராட்சத்தின் அதிதேவதை
காலாக்னி ருத்ரன். இதை அணிவதால்
சதாசிவம் சந்தோஷம் அடைகிறார்.
செய்யக்கூடாத செயல் களைச்
செய்வதால் உண்டாகும் தோஷம்
விலகும்.
ஆறு முக ருத்திராட்சத்தின் அதிதேவதை
சுப்ரமணியராகும். இதை அணிவதால்
ஆறுமுகன் சந்தோஷம் அடைவதுடன்இ
பிரம்மஹத்தி தோஷம் விலகும்.
ஏழு முக ருத்திராட்சத்தின் அதிதேவதையாக
ஆதிசேஷன் சொல்லப்படுகிறது. இதை
அணிவதால் சப்தமாதர்கள் சந்தோஷம்
அடைவதுடன் களவு தோஷமும் கோபத் தீயும்
விலகும்.
எட்டு முக ருத்திராட்சத்தின் அதிதேவதை
விநாயகப் பெருமானாகச்
சொல்லப்படுகிறது. இதை
அணிவதால் அட்டவித்யேச்வரர் சந்தோஷம்
அடைவதுடன்இ செய்யக்கூடாத
பாவங்களைச் செய்த தோஷம்
விலகுகிறது.
ஒன்பது முக ருத்திராட் சத்தின் அதிதேவதை
பைரவர். இதை அணிவதால் நவதீர்த்தங்
களில் குளித்தால் என்ன புண்ணியமோ
அந்தப் புண்ணியம் கிட்டும்; பைசாச
உபாதைகளும் துஷ்டப் பிரயோகங்களும்
விலகும்.
பத்து முக ருத்திராட்சத் தின் அதிதேவதை
விஷ்ணு. இதை அணிவதால் அஷ்டதிக்
பாலகர்களும் சந்தோஷம் அடைவதாகச்
சொல்லப்பட்டுள்ளது. ஜோதிடத் தில்
வரும் நாக தோஷமும்; பூத- பிரேத- பைசாச
தோஷங் களும் விலகும்.
பதினோரு முக ருத்திராட் சத்தின் அதிதேவதை
பதினோரு ருத்ரர்களாகச்
சொல்லப்பட்டுள் ளது. இதை
அணிவதால் 11 ருத்திரர்களும் ப்ரீதி
அடைகிறார்கள். பல அஸ்வமேத யாகம்
செய்த பலன் களும் பல வாஜபேய
யாகம் செய்த பலனும் கிட்டும்.
பலன்?
ருத்திராட்சம் அணிவதால் அனைத்து
நற்குணங்களும் அவர்களால் பிறர்
அனைவரும் பயன்பெறும் வகையிலும
நன்மைகளும் அமையும்.
ருத்திராட்சம் தாம் அணியாவிட்டாலும்
இ அப்படி ருத்திராட்சம் அணிந்தவருக்கு
அன்னமளிப்பவர்களும்இ ருத்திராட்சமரத்
தைப் பராமரிக்கிறவர்களும் புதிய
ருத்திராட்சத்தை தானம்
செய்பவர்களும் சிவபெருமானுக்கு
ருத்திராட்ச ஆபரணம் அணிவிப்பவர்களும்
பல சிறப்பு நலன்களைப் பெற்று
வாழ்வாங்கு வாழ்வார்கள்

No comments:

Post a Comment